Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1432

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது......

$
0
0
முகம் ஏன் வாடி இருக்கு? சிரிப்பையே காணோம்? எதுக்கு இவ்ளோ டென்ஷன்? சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருங்க இப்படி ஆளாளுக்கு வந்து சொல்லிட்டுப் போறாங்க. வேர்த்து விருவிருத்துக் கிடக்குறேன்.... கண்ணில் திரையிடும் கண்ணீர் வேற! இருக்காதா பின்னே.... புருசனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னா சும்மாவா?

 போதாக்குறைக்கு இன்னைக்கு பந்த் ன்னு ஒரு அறிவிப்பு. அழைப்பை ஏற்று வர்றோமுன்னு சொன்ன மக்கள்ஸ் வந்து சேரணுமே என்ற கூடுதல் கவலை வேற இப்போ...... காலையில் இருந்து செல்பேசி விடாம அலறிக்கிட்டே இருக்கு. உள்ளுர் தோழியிடம் என்னப்பா...உங்க ஊர்லே பந்துன்னு சொல்றாங்கன்னபோது.... நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே பந்த் அது பாட்டுக்கு நடக்குமுன்னு சொல்லி இருந்தாங்க.

 நம்ம வீட்டில் ஒரு விழா கொண்டாடணும். கொண்டாடியே தீரணும் என்ற வெறியில் நான் இருந்தப்ப......... சொல்லிவச்சதுபோல் ஒரு பெரிய இழப்பு சம்பவிச்சுப்போனதும்..... மனசில் திகில்தான். வெறியெல்லாம் கலஞ்சு போய் நடத்தலாமா வேணாமான்னு ஒரு யோசனை. இவ்வளோ நடந்துருக்கு.... இப்பப்போய்..... பேச்சு வருமோன்னு கலக்கம்.

 ஆனால் மனுச வாழ்க்கையில் ஒருமுறை வரும் சமாச்சாரத்தை எதுக்காக வேணாமுன்னு விடணும். இதுக்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து வரணுமா? அப்படியே வேற ஜென்மம் எடுத்து பிறக்கும்போது வேற ஒரு ஜீவராசியா இருந்துட்டா? சான்ஸே இல்லை.... ஊஹூம்..... பேசாம இப்பவே சின்ன அளவில் கொண்டாடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

 நல்லவேளையா இந்த விழாவுக்கு மட்டும் ஓராண்டு கெடு இருக்கு. அதுக்குள்ளே எப்பவாவது நடத்திக்கலாம் என்றதன் பேரில் கொஞ்சம் ஆறப்போட்டேன். பஞ்சாங்கத்தை எடுத்து வச்சுக்கிட்டு எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சுக்கலாமுன்னு ஆராய்ச்சி ஒரு பக்கம்!

 பேசாம ஊர்லே கல்யாணம் வச்சோமுன்னா சொந்தபந்தங்களுக்கு லகுவா இருக்கும். நமக்கோ குடும்பம் ரொம்பப்பெருசு.. அவ்ளோபேரும் ப்ளேன்காரனுக்குக் காசைக்கொட்டணுமா?

 இந்தப் பக்கங்களில் நிகழ்ச்சிகளையோ விழாக்களையோ நடத்த ஒரு ஈவண்ட் ஆர்கனைஸரைப் பிடிச்சால் போதும். நம்ம விருப்பம் எல்லாத்தையும் கேட்டுட்டு, அவுங்க மனசு சொல்றதுபோல் அவுங்களுக்குத் தோதான முறையில் நிகழ்ச்சியை நடத்தி முடிச்சுடுவாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு மால்(ஹிந்திச் சொல்) வெட்டணும். பட்ஜெட்டில் பாதி இதுக்கே போயிரும்:-( 

 நிற்க,

 நெருங்கிய நண்பர்களுடன் விவாதிச்சபோது பேசாமக் கிளம்பி வா. எல்லாத்துக்கும் நானாச்சுன்னாங்க ஒரு தோழி. ஆக்ச்சுவலா இவுங்களே ஒரு ஈவண்ட் ஆர்கனைஸர் என்றது முதலில் எனக்குப் புரிபபடலை. காலையில் கல்யாணம். மாலையில் ஒரு வரவேற்புன்னு முடிவாச்சு. ரெண்டு நிகழ்ச்சிக்கும் ஹால் புக் பண்ணிட்டேன்னு வயித்துலே பால் வார்த்தாங்க.

 வைதீகச் சடங்குகளுக்கு வாத்தியார் ஸ்வாமிகளையும் விருந்துக்கு கேட்டரரையும் ஏற்பாடு செஞ்சுட்டேன். நீ வந்ததும் மற்றவைகளை விவாதிச்சு முடிவு செஞ்சுக்கலாம். இன்னொரு டோஸ் பால்.

 மற்ற ஏற்பாடுகளை முக்கியமா ஷாப்பிங் எல்லாம் முடிக்கணுமேன்னு ஒரு பத்து நாள் இருக்கும்போதே கிளம்பிப் போய்ச் சேர்ந்தோம். ஆர்கனைஸர் ஏற்பாடு செஞ்சுருந்தபடி அவுங்க வீட்டிலேயே வாத்தியார் ஸ்வாமிகளுடன் ஒரு சந்திப்பு. சடங்குக்கு என்னென்ன சாமான்கள் நாம் வாங்கிவைக்கணும் என்றதுக்கான ஒரு பட்டியலை அவர் சொல்லச் சொல்ல, ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதிக்கிட்டே இருந்தாங்க. சின்னதா ஒரு ஹனுமன் வால்.

 விருந்து சமையலுக்கானவர் வந்து சேர்ந்தார். காலைவேளை நிகழ்ச்சி என்பதால் ப்ரேக்ஃபாஸ்ட்டும், மதியம் லஞ்சுக்குமான மெனு அவர் ஒப்பிக்க, அதில் சில திருத்தங்களோடு ஆரம்பிச்சு அதையும் ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதி முடிச்சாங்க. ரொம்பவே சிம்பிளான காலை உணவு போதுமுன்னு நினைச்சோம்.

 வைதீகப்பட்டியலில் உள்ள பொருட்களில் பூ, பழம், வெற்றிலை, வாழை இலை தவிர மற்றவைகளை புடவை, நகைன்னு  ஷாப்பிங் செய்யும் நாட்களிலே சைடு பை சைடா வாங்கிக்கிட்டே போகலாம். பேசாம கிரி ட்ரேடர்ஸ்லே லிஸ்டைக் கொடுத்தால் ஆச்சு. அதே போல் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவை அங்கேயே கிடைச்சுருச்சு.

 கும்பம் வைக்கும் குடத்துக்குக் கொஞ்சம் அலைய வேண்டியதாப்போச்சு. மனசுக்குப் பிடிச்சமாதிரி ஒன்னும் மயிலையில் அமையலை. சரி. நாளைக்கு வேற இடத்தில் தேடலாமுன்னு, அதுவரை சேகரிச்ச பொருட்களைத் தோழியின் வீட்டில் வச்சுட்டு, அறைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். அப்போதான் பார்க்கிறேன்.... கையில் இருந்த வளை ஸ்டைல் ப்ரேஸ்லெட்டைக் காணோம்...... மனசு திக்! தங்கம் விற்கும் விலையில் நாலு பவுனை இப்படித் தொலைச்சுட்டேனேன்னு பதைக்கிறேன். வண்டியில் விழுந்ததோன்னு சீட்டையெல்லாம் புரட்டிப் பார்த்தாச்சு. பாதி மயிலாப்பூர் சுத்துனதில் எங்கே விழுந்ததோ..... இப்படி கவனம் இல்லாம இருந்துட்டமேன்னு என்னையே நொந்துக்கறேன்.

 ஐயோ..... நேயுடு... நல்ல காரியம் நடத்த ஆரம்பிக்கும்போது இப்படி ஆகிப்போச்சே.... எப்படியாவது கண்டு பிடிச்சுக் கொடுப்பா. ..... 

 தோழி வீட்டுக்கு ஃபோன் பண்ணி சேதி சொல்லலாமுன்னா.... அந்த எண்ணுடன் தொடர்பு இல்லை. இந்த செல்லில் இருந்து லேண்ட் லைனுக்குப் பேசமுடியாது போலன்னு சொல்றார் இவர். (வெளியே காமிச்சுக்காட்டியும் மனப் பதற்றத்தில் தப்புத்தப்பா எண்களை அமுக்கிட்டு இப்படி.....)

 அறைக்குப்போய் அங்கிருந்து ஃபோன் செய்யலாமுன்னு கட்டிட வாசலில் இறங்கி வரவேற்பில் நுழையும்போதே..... " உங்க வளையல் அங்கெ இருக்குன்னு உங்க ஃப்ரெண்ட் ஃபோன் பண்ணினாங்க" வரவேற்பில் இருக்கும் பெண்ணின் குரல், பாலோடு தேனையும் சேர்த்து வார்த்தது.

 நேயுடு கண்ணா.....தேங்க்ஸ்டா,என் செல்லமே! அம்மாவை அழவைக்காமக் காப்பாத்திட்டே....

 " புதுப்புடைகள் நல்லா இருக்கான்னு இன்னொருமுறை பார்க்க வெளியில் எடுத்தப்ப.... வளையல் புடவைப் பைக்குள் கிடந்துச்சு. "  எப்படி? எப்படி? தோழி சொல்லச் சொல்ல ..... மிரக்கிள்!!!!

 காணாமப்போகணுமுன்னு கீழே விழுந்தது எப்படிச் சரியா புடவைப் பைக்குள் விழுந்துச்சுன்றது இந்த நிமிசம் வரை அதிசயமாத்தான் இருக்கு! சம்பவம் பற்றி இன்னொரு தோழியிடம் சொல்லி வியந்தபோது, நான் நல்லவள் என்பது உறுதியாச்சு:-))))

 "இதைத்தான் சூப்பர் ஸ்டார் அன்னிக்கே சொன்னார் - “கண்ணா, ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும் கடைசில கைவிட்டுடுவான்” அப்படின்னு. :))))))))))) "

 நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படி நேரில் போய் அழைக்கவேண்டியவர்களை அழைப்பதிலும், மின்மடல், அலைபேசின்னு அழைப்பு அனுப்புவதும், மாலை விருந்துக்கான மெனுவை முடிவு செய்வதிலும், துணிமணி வாங்க, தைக்கக் கொடுக்க நம்ம தையற்கடைக்கு போய்வரவுமுன்னு ஒரு மாதிரி பிஸி. இதுக்கிடையில் விழாவுக்கு நாலுநாட்கள் இருக்கும்போது மகள் நியூஸியில் இருந்து வந்திறங்கினாள்.

Viewing all articles
Browse latest Browse all 1432

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>