நம்ம நம்பள்கியின் பின்னூட்டம் பார்த்ததும் நம்மூர் ஆஸ்பத்திரியைப் பற்றி(யும்) கொஞ்சம் விஸ்தரிக்கலாமேன்னுதான் தோணுது. 1850 வருசம். இங்கிலாந்தில் இருந்து நாலு கப்பல்களில் மக்கள்ஸ் புது நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வர்றாங்க. நாலு கப்பலுக்கும் சேர்த்து மொத்த பயணிகள் எண்ணிக்கை 753.
இங்கே லேண்ட் ஆஃபீஸில் பதிவு செஞ்சுக்கறாங்க. வரப்போகும் நகரத்தில் கால் ஏக்கரும், நகருக்கு வெளியில் விவசாயம்/பண்ணைகளுக்கு 20 ஏக்கர் நிலமும் ஒவ்வொருத்தருக்கும் அலாட் ஆகுது. நகர வடிவமைப்பு உருவாக்கி நட்டநடுவில் ஒரு தேவாலயமும் அதைச் சுற்றி நாலு பக்கமும் அவ்வஞ்சு தெருக்களும் இதையெல்லாம் சுத்தி நாலு பக்கமும் பார்டர் போட்டது போல் மரங்கள் வரிசையாக நட்ட அவென்யூகளுமா இருக்கணுமுன்னு முடிவாச்சு. அவென்யூக்களுக்கு உள்புறம்தான் நகரம். இதுக்கு ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கினாங்க. ஆளில்லாத காலியிடத்துலே எல்லாமே நம்ம இடம்தான். ஆத்துலே போறதை அள்ளிக் குடிக்கிற மாதிரி......... யாரைக் கேக்கணும்? நகருக்குள் நாலு சதுக்கங்கள் வேற அங்கொன்னு இங்கொன்னுன்னு. இதுலே தேவாலயத்துக்கு மேற்கே அஞ்சு தெருதாண்டி வரும் அவென்யூவுக்கு வெளியிலே ஒரு பெரிய தோட்டம் திட்டத்தில் இருக்கு. அதுக்கு ஒரு எழுபத்தினாலு ஏக்கர்!
தென்கோடிக்குப்போக சாலை போட்டப்ப இந்த தோட்டத்தின் குறுக்காலே அதைப் போடும்படி ஆச்சு.இல்லைன்னா மேற்குப் பகுதி கடக்க சுத்த வேண்டியதாப் போயிரும் பாருங்க. நார்த் ஹேக்ளி பார்க், சௌத் ஹேக்ளி பார்க்ன்னு ரெண்டாப் பிரிஞ்சதுஅப்போதான்.
மக்கள்ஸ் வீடுகட்டி, பண்ணைகள் வச்சு நிம்மதியான வாழ்க்கையை ஆரம்பிச்சதும் நோய்நொடிகள் வர ஆரம்பிச்சது. அதுவும் குளிர்காலங்களில் அதிகம். ஊருக்கு ஒரு மருத்துவ மனை வேணும் என்ற நினைப்பில் 1861 வது ஆண்டு திட்டம்போட்டு, 1862இல் புதுசா மருத்துவமனைக் கட்டிடங்கள் ரெண்டு பெரிய Barn மாதிரி ரெண்டடுக்கு வந்துச்சு. செலவு £1,500. புது சாலை போட்டாங்க பாருங்க அந்தஓரத்தில். அவ்ளோதான், 'அது என்னமா தோட்டத்தில் கட்டிடம் கட்டப்போச்சு'ன்னு மக்கள்ஸ் கொஞ்சம்பேர் "Hands off Hagley"குமுறிட்டாங்க. Provincial Government ஆட்சி செய்யும் காலக்கட்டம்.
அப்ப மிஞ்சிப்போனா நகரின் மக்கள்தொகை ஒரு பதினைஞ்சாயிரம் இருக்கலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு கொஞ்சநாளில் இதை எடுத்துருவோமுன்னு சொல்லி இந்தா அந்தான்னு 1917 இல் தான் அதை இடிச்சாங்க. அதுக்குள்ளே கொழும்புத் தெருவில் பெண்களுக்கான பேறுகால மருத்துவமனை ஒன்னு தனியாக் கட்டினாங்க. ஹேக்ளியை ஒட்டுன மாதிரி புது மருத்துவமனை ஒன்னும் உருவாச்சு.
அப்போ நர்ஸ்களின் சீருடைகள், ஆஸ்பத்திரி அறைகள் , மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் விதமா இப்போதைய ஃபோயரில் ஒரு பொம்மைக்கொலு இருக்கு.
ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு அரைக் கிலோமீட்டரில் அதே ஹேக்ளி பார்க்கிலொரு ஹெலிபேட் அமைப்பு இருக்கு. மலை ஏற்றம், காடுகளுக்குள்ளே போய் சுத்தி வர்றது போன்ற செயல்களால் ஆபத்தில் மாட்டிக்கிட்டவங்களை மருத்துவமனைக்குச் சீக்கிரமாக் கொண்டுவர ஹெலிக்காப்டர் தேவையாத்தானே இருக்கு.
இப்போது இருக்கும் 550 படுக்கை வசதி போதலையேன்னு நானூறு மில்லியன் செலவில் புதுக் கட்டிடம் 450 படுக்கை வசதிகளோடு கட்டஒரு திட்டம் இருக்கு. மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதிகளோடு வருதாம். 2009 வது ஆண்டு ஆரம்பிச்சு அடுத்த வருசம் முடியவேண்டியது. நிலநடுக்கம் காரணம் வேலையில் கொஞ்சம் தொய்வு. நகரை மீண்டும் நிர்மாணிக்கும் வேலையும் சேர்ந்துருச்சு பாருங்க.
இங்கே தனியார் மருத்துவமனைகள் கிடையாது. இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில் அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான் இங்கேயும் வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.
மத்தபடி கேண்டர்பரி ஹெல்த் போர்டு நடத்தும் மருத்துவமனைகள் தான் ஊருக்கே!. இதுலே அஞ்சு மருத்துவமனைகள் அடங்கும். இப்போ நாம் பார்க்கும் பொது மருத்துவமனை, ரெண்டாவதாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை, மூணாவதாக, ஸர்ஜரி நடந்தவுடன் ஆஃப்டர் கேர் என்ற வகையிலும், உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கஷ்டமில்லாமல் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள ஆக்குபேஷனல் தெரபி கொடுப்பது, இடுப்பு, முழங்கால் ரீப்ளேஸ்மெண்ட் செஞ்சுக்கிட்டவங்களுக்கு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பயிற்சின்னு சேவைகள். ஒவ்வொரு ஆஸ்பத்திரியா மாறி,இப்போ இங்கே தான் நம்ம தோழி வேலை செய்யறாங்க. இந்தக் கட்டிடமும் நிலநடுக்கத்தில் ஆப்டுக்கிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இடிச்சுட்டு நானூறு படுக்கை வசதிகளுடன் தனித்தனி அறைகளும், அட்டாச்ட் பாத்ரூமோடும் கட்டஆரம்பிச்சு இருக்காங்க.
நாலாவது மருத்துவமனை மனநலம் குறைந்தவர்களுக்கு. பயங்கர செக்யூரிட்டி உள்ள இடம். இந்த ரெண்டாவது, மூன்றாவது நாலாவது மருத்துமனைகள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைச்சுருக்காங்க.
அஞ்சாவது மட்டும் பொது மருத்துவமனையின் பக்கத்துலேயே புதுக் கட்டிடம் கட்டிக்கிட்டு வந்துருக்கு பெண்களுக்கானது. நம்ம பொது மருத்துமனை அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் போல என்றால் இந்த பெண்கள் பேறுகால மருத்துவமனை ஸெவன் ஸ்டார் ஸ்பெஷல்! பளபளன்னு ஜொலிக்குது. இங்கே பேறுகாலத்துக்கு முற்றிலும் இலவசம்தான். தனித்தனி அறைகளும் அட்டாச்ட் பாத்ரூமுமாய் சூப்பர் போங்க.
எங்க ஜில்லா முழுசுக்குமான சுத்துவர பதினெட்டு பட்டிக்குமான மருத்துவ வசதிகள் இந்த ஹெல்த் போர்டால் கொடுக்கப்படுது. அஞ்சரை லட்சம் மக்கள் பயனடைவர். இதுலே எங்க நகர மக்கள் தொகை மூணரை லட்சம் முழுசுக்கும் பொதுமருத்துவமனையே கதி. ஆனா.... சும்மா சொல்லக்கூடாது...... அருமையான கேஃபே, புக்ஷாப், ஸலூன், போஸ்ட் ஆஃபீஸ், பேங்க், கிஃப்ட் ஷாப், ஃபார்மஸின்னு தரைத்தளத்தில் வச்சுருக்காங்க. ப்ளவர் பொக்கே கடையும் உண்டு. வார்டுகளில் ஒரு அறையில் இருக்கும் ஃப்ளவர் வாஸை நாம் பயன்படுத்திக்கலாம். ஒரு சில வார்டுகளில் மட்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை.
ஒரு Chapel தரைதளத்தில் உண்டு. நல்ல இருக்கைகள்போட்டு வச்சுருக்காங்க. ஆல்டர் மாதிரி ஒரு மேஜை. அதில் பூக்கள் மட்டும். யார் யாருக்கு என்ன சாமியோ அதை மனதில் நினைச்சு சாமி கும்பிட்டுக்கலாம்.
ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!
சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான். பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(
என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே அதற்கேற்ற வரிகள் கட்ட வேணும். யாரும் வரி கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும். நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு கொடுக்கும் வெல்ஃபேர் பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))
நம்மூர் ஆஸ்பத்திரி எமெர்ஜன்ஸி பகுதி, அஸ்ட்ராலாசியாவிலேயே மிகப் பெரியது. இங்கேயே 55 படுக்கை வசதிகள் உண்டு. பெரும்பாலும் நோயாளிகளை எட்டுமணி நேரத்தில் இங்கிருந்து அனுப்பிருவாங்க. ஆபத்தில் இல்லாதவர்களை வீட்டுக்கும் மற்றவர்களை வேறு வார்டுகளுக்கும் அனுப்புவதுதான். 24 மணி நேரமும் பயங்கரபிஸியான இடம் இது. வீக் எண்டுகள் என்றால் சொல்லவே வேணாம்...... ரக்பி விளையாடி முகத்தை ஒடைச்சுக்கிட்டு வர்றவங்கதான் அதிகம். நாட்டின் மதம் ஸ்போர்ட்ஸ் என்றால் அதுக்கேத்த மதக்கலவரம், கேஷுவல்டி இருக்காதா?
![]()
இங்கே லேண்ட் ஆஃபீஸில் பதிவு செஞ்சுக்கறாங்க. வரப்போகும் நகரத்தில் கால் ஏக்கரும், நகருக்கு வெளியில் விவசாயம்/பண்ணைகளுக்கு 20 ஏக்கர் நிலமும் ஒவ்வொருத்தருக்கும் அலாட் ஆகுது. நகர வடிவமைப்பு உருவாக்கி நட்டநடுவில் ஒரு தேவாலயமும் அதைச் சுற்றி நாலு பக்கமும் அவ்வஞ்சு தெருக்களும் இதையெல்லாம் சுத்தி நாலு பக்கமும் பார்டர் போட்டது போல் மரங்கள் வரிசையாக நட்ட அவென்யூகளுமா இருக்கணுமுன்னு முடிவாச்சு. அவென்யூக்களுக்கு உள்புறம்தான் நகரம். இதுக்கு ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கினாங்க. ஆளில்லாத காலியிடத்துலே எல்லாமே நம்ம இடம்தான். ஆத்துலே போறதை அள்ளிக் குடிக்கிற மாதிரி......... யாரைக் கேக்கணும்? நகருக்குள் நாலு சதுக்கங்கள் வேற அங்கொன்னு இங்கொன்னுன்னு. இதுலே தேவாலயத்துக்கு மேற்கே அஞ்சு தெருதாண்டி வரும் அவென்யூவுக்கு வெளியிலே ஒரு பெரிய தோட்டம் திட்டத்தில் இருக்கு. அதுக்கு ஒரு எழுபத்தினாலு ஏக்கர்!
தென்கோடிக்குப்போக சாலை போட்டப்ப இந்த தோட்டத்தின் குறுக்காலே அதைப் போடும்படி ஆச்சு.இல்லைன்னா மேற்குப் பகுதி கடக்க சுத்த வேண்டியதாப் போயிரும் பாருங்க. நார்த் ஹேக்ளி பார்க், சௌத் ஹேக்ளி பார்க்ன்னு ரெண்டாப் பிரிஞ்சதுஅப்போதான்.
மக்கள்ஸ் வீடுகட்டி, பண்ணைகள் வச்சு நிம்மதியான வாழ்க்கையை ஆரம்பிச்சதும் நோய்நொடிகள் வர ஆரம்பிச்சது. அதுவும் குளிர்காலங்களில் அதிகம். ஊருக்கு ஒரு மருத்துவ மனை வேணும் என்ற நினைப்பில் 1861 வது ஆண்டு திட்டம்போட்டு, 1862இல் புதுசா மருத்துவமனைக் கட்டிடங்கள் ரெண்டு பெரிய Barn மாதிரி ரெண்டடுக்கு வந்துச்சு. செலவு £1,500. புது சாலை போட்டாங்க பாருங்க அந்தஓரத்தில். அவ்ளோதான், 'அது என்னமா தோட்டத்தில் கட்டிடம் கட்டப்போச்சு'ன்னு மக்கள்ஸ் கொஞ்சம்பேர் "Hands off Hagley"குமுறிட்டாங்க. Provincial Government ஆட்சி செய்யும் காலக்கட்டம்.
அப்ப மிஞ்சிப்போனா நகரின் மக்கள்தொகை ஒரு பதினைஞ்சாயிரம் இருக்கலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு கொஞ்சநாளில் இதை எடுத்துருவோமுன்னு சொல்லி இந்தா அந்தான்னு 1917 இல் தான் அதை இடிச்சாங்க. அதுக்குள்ளே கொழும்புத் தெருவில் பெண்களுக்கான பேறுகால மருத்துவமனை ஒன்னு தனியாக் கட்டினாங்க. ஹேக்ளியை ஒட்டுன மாதிரி புது மருத்துவமனை ஒன்னும் உருவாச்சு.
அப்போ நர்ஸ்களின் சீருடைகள், ஆஸ்பத்திரி அறைகள் , மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் விதமா இப்போதைய ஃபோயரில் ஒரு பொம்மைக்கொலு இருக்கு.
ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு அரைக் கிலோமீட்டரில் அதே ஹேக்ளி பார்க்கிலொரு ஹெலிபேட் அமைப்பு இருக்கு. மலை ஏற்றம், காடுகளுக்குள்ளே போய் சுத்தி வர்றது போன்ற செயல்களால் ஆபத்தில் மாட்டிக்கிட்டவங்களை மருத்துவமனைக்குச் சீக்கிரமாக் கொண்டுவர ஹெலிக்காப்டர் தேவையாத்தானே இருக்கு.
இப்போது இருக்கும் 550 படுக்கை வசதி போதலையேன்னு நானூறு மில்லியன் செலவில் புதுக் கட்டிடம் 450 படுக்கை வசதிகளோடு கட்டஒரு திட்டம் இருக்கு. மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதிகளோடு வருதாம். 2009 வது ஆண்டு ஆரம்பிச்சு அடுத்த வருசம் முடியவேண்டியது. நிலநடுக்கம் காரணம் வேலையில் கொஞ்சம் தொய்வு. நகரை மீண்டும் நிர்மாணிக்கும் வேலையும் சேர்ந்துருச்சு பாருங்க.
இங்கே தனியார் மருத்துவமனைகள் கிடையாது. இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில் அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான் இங்கேயும் வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.
மத்தபடி கேண்டர்பரி ஹெல்த் போர்டு நடத்தும் மருத்துவமனைகள் தான் ஊருக்கே!. இதுலே அஞ்சு மருத்துவமனைகள் அடங்கும். இப்போ நாம் பார்க்கும் பொது மருத்துவமனை, ரெண்டாவதாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை, மூணாவதாக, ஸர்ஜரி நடந்தவுடன் ஆஃப்டர் கேர் என்ற வகையிலும், உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கஷ்டமில்லாமல் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள ஆக்குபேஷனல் தெரபி கொடுப்பது, இடுப்பு, முழங்கால் ரீப்ளேஸ்மெண்ட் செஞ்சுக்கிட்டவங்களுக்கு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பயிற்சின்னு சேவைகள். ஒவ்வொரு ஆஸ்பத்திரியா மாறி,இப்போ இங்கே தான் நம்ம தோழி வேலை செய்யறாங்க. இந்தக் கட்டிடமும் நிலநடுக்கத்தில் ஆப்டுக்கிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இடிச்சுட்டு நானூறு படுக்கை வசதிகளுடன் தனித்தனி அறைகளும், அட்டாச்ட் பாத்ரூமோடும் கட்டஆரம்பிச்சு இருக்காங்க.
நாலாவது மருத்துவமனை மனநலம் குறைந்தவர்களுக்கு. பயங்கர செக்யூரிட்டி உள்ள இடம். இந்த ரெண்டாவது, மூன்றாவது நாலாவது மருத்துமனைகள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைச்சுருக்காங்க.
அஞ்சாவது மட்டும் பொது மருத்துவமனையின் பக்கத்துலேயே புதுக் கட்டிடம் கட்டிக்கிட்டு வந்துருக்கு பெண்களுக்கானது. நம்ம பொது மருத்துமனை அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் போல என்றால் இந்த பெண்கள் பேறுகால மருத்துவமனை ஸெவன் ஸ்டார் ஸ்பெஷல்! பளபளன்னு ஜொலிக்குது. இங்கே பேறுகாலத்துக்கு முற்றிலும் இலவசம்தான். தனித்தனி அறைகளும் அட்டாச்ட் பாத்ரூமுமாய் சூப்பர் போங்க.
எங்க ஜில்லா முழுசுக்குமான சுத்துவர பதினெட்டு பட்டிக்குமான மருத்துவ வசதிகள் இந்த ஹெல்த் போர்டால் கொடுக்கப்படுது. அஞ்சரை லட்சம் மக்கள் பயனடைவர். இதுலே எங்க நகர மக்கள் தொகை மூணரை லட்சம் முழுசுக்கும் பொதுமருத்துவமனையே கதி. ஆனா.... சும்மா சொல்லக்கூடாது...... அருமையான கேஃபே, புக்ஷாப், ஸலூன், போஸ்ட் ஆஃபீஸ், பேங்க், கிஃப்ட் ஷாப், ஃபார்மஸின்னு தரைத்தளத்தில் வச்சுருக்காங்க. ப்ளவர் பொக்கே கடையும் உண்டு. வார்டுகளில் ஒரு அறையில் இருக்கும் ஃப்ளவர் வாஸை நாம் பயன்படுத்திக்கலாம். ஒரு சில வார்டுகளில் மட்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை.
ஒரு Chapel தரைதளத்தில் உண்டு. நல்ல இருக்கைகள்போட்டு வச்சுருக்காங்க. ஆல்டர் மாதிரி ஒரு மேஜை. அதில் பூக்கள் மட்டும். யார் யாருக்கு என்ன சாமியோ அதை மனதில் நினைச்சு சாமி கும்பிட்டுக்கலாம்.
ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!
சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான். பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(
என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே அதற்கேற்ற வரிகள் கட்ட வேணும். யாரும் வரி கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும். நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு கொடுக்கும் வெல்ஃபேர் பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))
