முகம் பளிச்ன்னு இருக்கு. என் கண்கள் விரிவதைப் பார்த்ததும் ஷேவ் பண்ணிக்கிட்டேன். 'டூத் ப்ரஷ், அண்ட் பேஸ்ட், ஷேவிங் கிட் கொடுத்தாங்க'ன்னார். பல் சமாச்சாரம் மட்டும் தெரியும். ஆனா ஷேவிங் கிட் கொடுப்பாங்கன்னு இப்பதான் தெரியும்.
கண்ணாடி இல்லைன்னு கொஞ்சம் மனவருத்தம். சீப்பு வேற இல்லையாம்:( ஆஹா ஆஹா.... குணமாகிக்கிட்டு வர்றார். உடல் சரியில்லைன்னா அழகு ரெண்டாம் பட்சம் இல்லையோ? தலைவாரிவிட்டதும் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் லுக் வந்துருச்சு:-) நாங்க அஞ்சே முக்காலுக்கு வந்துருக்கோம்.அதுக்குள்ளே டின்னர் முடிஞ்சுருக்கு! (இங்கே நியூஸியில் இதுக்குப்பெயர் டீ. ! கிவி வழக்கம்)
இது தெரியாமல் இங்கே வந்த புதிதில், தோழி ஒருவர் சில நண்பர்களை 'டீ'க்கு வாங்கன்னு சொல்லி இருக்கார். நம்மூர் தேநீர் விருந்து என்ற அனுமானம். சில நொறுக்ஸ் வகைகளும் கெட்டில் நிறைய தேநீரும் போட்டு வச்சாச்சு. வந்தவங்க எல்லோரும் இண்டியன் ஸ்நாக்ஸ் தின்னு டீ குடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க.
என்னடா இது. இன்னும் உக்கார்ந்திருக்காங்க? அவுங்க எப்பப்போறது,நாம் டின்னர் எப்போ சமைக்கறதுன்ன்னு யோசனை. பொறுத்துப்பொறுத்து பார்த்த விருந்தினர் ஒருத்தர் சமையல் ஆகிருச்சான்னு கேட்டுட்டாங்க. இவுங்க தயங்கித் தயங்கி இல்லே இனிமேல்தான்ன்னு இழுத்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி:-)
அப்பதான் தோழிக்கு விவரம் கிடைக்குது. அவுங்க கிவி டீ க்கு வந்திருக்காங்க.தோழி இண்டியன் டீ கொடுத்துருக்காங்கன்னு:-))))) அப்புறம் போய் கொஞ்சம் டேக் அவே வாங்கிவந்து சமாளிச்சாங்களாம். வெறும் டீ குடிக்கக் கூப்பிடணுமுன்னா, 'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா' னு சொல்லணும்.
கைப்பையில் இருந்து சீப்பை எடுத்துக் கொடுத்தால் கையைத் தூக்கி தலை வார முடியலை பாவம்:( வேனிட்டி அறை ரெண்டு இருக்கு. எழுந்து அதுக்குப்போக முடியலை. Catheter போட்டுருக்கே. ஸலைன் ட்ரிப் வேற போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சம் நடக்கலாமான்னு நர்ஸம்மாவிடம் கேட்டதுக்கு அவுங்கஒரு ஸ்டேண்ட் கொண்டுவந்து சகல இணைப்பையும் ஸ்டேண்டிலுள்ள மெஷீனுக்கு மாத்தி விட்டாங்க. திரும்பி வந்ததும் சுவற்றில் ப்ளக் பண்ணிக்கலாமுன்னும் சொன்னாங்க. டிவிடி பிரச்சனை வந்துருமேன்னு அதுக்கான தனி ஸ்டாக்கிங்ஸ் போட்டுவிட்டுருக்காங்க நேத்து சர்ஜரியின் போது. இப்போ நடக்கணுமென்றதும் வழுவழு என்றுள்ள தரையில் வழுக்கிட்டால் என்னசெய்வதுன்னு AntiSilp socks கொண்டுவந்து காலில் மாட்டிவிட்டாங்க நர்ஸம்மா.
மெள்ள அந்தக் காரிடாரில் மெது நடை. அப்படியே அங்கங்கே என்ன இருக்குன்னு எக்ஸ்ஃப்ளோர் செஞ்சோம். நாலு செட்ஸ் ஆஃப் பாத்ரூம், கழிவறைகள், வேனிட்டி ரூம் (அட்டகாசமா லைட்டிங், ட்ரெஸ்ஸிங் மிர்ரர் எல்லாம் பளபள!) வார்டின் கடைசியில் ஒரு டிவி ரூம். ஒரு பத்து வசதியான இருக்கைகள் போட்டு 32 இஞ்ச் எல் ஸி டி டிவியை சுவத்துலே பொருத்தி இருக்காங்க.
நாளைக்கு வரும்போது டாய்லெட்ரி பேக் கொண்டு வரேன்னேன். பொழுதன்னிக்கும் பயணம் போய்வருவதால் பயணப்பொட்டியில் எப்பவும் தயாராக இருக்கும்தான். நேத்து பயணம் முடிச்சுக் கொண்டு வந்த பெட்டிகள் எல்லாம் வீட்டுக்கூடத்தில் அம்போன்னு கிடக்கு. போட்டது போட்டபடி ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தோமுல்லெ!
ஆஸ்பத்திரி கௌனில் பார்க்கும்போது நோயாளி லுக் வந்துருது:( நமக்கு விருப்பமென்றால் நாம் வழக்கமா அணியும் உடைகளைப் போட்டுக்கலாம். பொதுவா இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய உரிமைகளுண்டு. எதாவது நம்ம மனசு பாதிக்கும்படி பணியாளர்கள் (டாக்டர்கள் உட்பட!) நடந்தால் உடனே புகார் செய்யலாம். ஆங்கில மொழி தெரியலைன்னா ஒரு மொழி பெயர்ப்பாளரையும் நமக்கு எற்பாடு செய்வாங்க. இந்தப் பட்டியலில் ஹிந்தி கூட இருக்கு! ஆஸ்பத்திரி முழுக்க அங்கங்கே புகார் பெட்டி. அதை கவனமா எடுத்துப் பார்த்து ஆவன செய்யறாங்க.
இன்னிக்கு ஒரு அஞ்சாறு நிமிச நடை போதும். தள்ளாட்டம் வேற இருக்கு. இன்னும் கொஞ்சம் முகம் மலரட்டுமேன்னு என் கைப்பையில் இருந்த கோபாலின் மொபைல் ஃபோனை எடுத்துக் கொடுத்தேன். கோடி சூர்யப்ரகாசம். ஒரு அம்பதறுபது மெயில்கள் வந்துருக்கு. எல்லாம் குசலம் விசாரிச்சுத்தான்.
தோழியும் கணவரும் வந்தாங்க. கொஞ்சநேரம் விசாரிப்புகள். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.
கையோடு கொண்டுபோயிருந்த நைட்டி(பஜாமாஸ்)யை அலமாரியில் வச்சுட்டு மறுநாள் சார்ஜர் கொண்டு வரேன்னுட்டு நாங்கள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்.
அடுத்தநாள் காலையில் எனக்கு அழைப்பு. எல்லாம் இவர்தான். அதான் கையில் ஃபோன் இருக்கே! காலை உணவு முடிச்சுட்டாராம். இன்னிக்கு ஞாயிறு ஆனதால் நாங்க ரிலாக்ஸா சாயங்காலம் வந்தால் போதுமாம். ராத்திரி கொஞ்சம் ஜுரம் வந்ததாம்.சின்னதா மூச்சுத் திணறல். ஆக்ஸிஜன் வச்சாங்களாம். இப்போ பிரச்சனை இல்லைன்னார்.
நாங்கள் ஒரு நாலரைக்குப் போனோம். புள்ளியைக் காணோம். டிவி அறைக்குப் போனேன். நினைச்சது சரி. அங்கேதான் ஓய்வா உக்கார்ந்துருந்தார். வீட்டு உடுப்பு அதன் மேல் ஆஸ்பத்த்ரி கௌன். கதீட்டர் அவுட்! குளிச்சாராம். இப்போ ஜூரம் இல்லை.வயித்துவலி போயே போயிந்தி. இட்ஸ் Gகான்:-) ஒரே ஒரு குறை..... டிவி ரிமோட்டை சுவரில் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க:(
அதானே.... போகட்டும். ஆளாளுக்கு கையில் வச்சுக்கணுமுன்னா ஒரு பத்திருவது ரிமோட் வாங்கிப் போடணுமில்லையோ? அந்த அறையிலிருந்து வியூ அருமையா இருக்கு. நம்மூர் ஏவான் ஆறு. தொட்டடுத்து போட் ஷெட். வாடகைக்குப் படகு(Kayak) எடுத்துக்கிட்டு நாமே சுத்தலாம். வேணாமுன்னா punting கூட உண்டு.
உள்ளூர் நண்பர்கள் மூணு பேர் குடும்பத்துடன் விஸிட் வந்து போனார்கள். நாலு ஸ்பூன் தயிர்சாதம் குட்டியூண்டு தூக்கில் கொண்டு போயிருந்தேன். சோறு கண்டவுடன் முகம் மலர்ந்தது.
திங்கள் காலையிலே போயிட்டேன். லஞ்ச் சமயம் மகள் வந்து வீட்டுக்குக் கூட்டிப் போனாள். மாலை வேலை முடிஞ்சு வந்ததும் மகளும் நானுமா அப்பாவைப்போய்ப் பார்த்துவந்தோம். நேத்து இரவும் காய்ச்சல் வந்துச்சாம்( மற்றபடி கெட்டிங் பெட்டர், டே பை டே. (டச் வுட்) ஐவி கூட எடுத்தாச்சு. ஆனால் கையில் குத்திவைப்பு அப்படியே இருக்கு. ஒரு அவசரமுன்னா சட்னு கனெக்ட் பண்ணிடலாம்.
செவ்வாய் காலை போனால்...... டாக்டர் குழு கூடி இருக்கு. டிஸ்சார்ஜ் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். 24 மணி நேரம் ஜுரமில்லாம இருந்தால்தான் வீடுன்னு கண்டிப்பாச் சொல்றாங்க. நேத்து இரவும் ஜுரம் வந்து போயிருக்கு. "அதெல்லாம் ஒன்னுமில்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் ஹீட்டர் இருப்பதால் ஜுரம் போல இருக்காம்."
'சரி. வீட்டுக்கு விடறோம். ஆனால் எதாவது பிரச்சனைன்னா உடனே வரணும்'என்றதோடு டிஸ்சார்ஜ் எழுதிக் கொடுத்தார் டாக்டர். எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிய ஒன்னரை மணி நேரமாச்சு. அதுக்குள்ளே வார்டில் இருந்த எல்லாருக்கும் டாடா பைபை சொல்லி முடிச்சார்:-)
வார்டு சுத்தம் செய்யும் பெண் (ஃபிஜி) 'பையன் நல்லவன். சந்தேகமே வேண்டாம். பேசிப்பார்'என்றதும் எனக்குக் குழப்பம்!
மகளுக்கு சம்பந்தம் பேசி இருக்காங்க. இவர் 'மகளைக் கேக்கணும்'என்று சொல்லி இருக்காராம். என்ன கதை? ன்னு கேட்டேன். ரெண்டு மூணுநாளா மகளைப் பார்த்ததும் இவரிடம் விசாரிச்சு இருக்காங்க.'சொந்தக்காரப் பையனுக்கு பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம் நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான். என்ன சொல்றீங்க'ன்னு கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள் ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)
மகளுக்கு சேதி சொல்லிட்டு (ஐ மீன், டிஸ்சார்ஜ் ஆனதை) ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.
நம்ம மருத்துவர் தோழி தினமும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.
இவருக்கு ஓரளவு குணமானதும் சனிக்கிழமை கோவிலுக்குப் போனோம். நம்ம கோவிலில் தீபாவளி, புது வருசம், அன்னக்கூட் எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு. நாம் ஏன் வரலைன்னு கேட்டு துளைச்செடுத்துட்டாங்க. அன்னக்கூட் ப்ரசாதம் எடுத்து வச்சுருந்தது கிடைச்சது.
மறுநாள் நம்ம வீட்டில் தீபாவளி. அன்றைக்குக் கார்த்திகை தீபமாகவும் அமைஞ்சு போனதால்..... எடு புடவையை. புதுசு கட்டிக்கோ. கொண்டாடுன்னு ..... மகளும் வந்தாள். போனவருசம் வாங்கி வச்ச பட்டாஸ் பொதியில் இருந்து கம்பி மத்தாப்பை எல்லாம் எடுத்து கொளுத்தினோம்.
அடுத்த தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கி வைக்கலாமா வேணாமான்னு இப்போ யோசனை:-)))))
இனி எல்லாம் நலமே!
ரொம்ப அலைஞ்சுட்டே... கொஞ்சநாள் சும்மா இரு என்றார்.
எப்படி????
கொஞ்சநாள் சமைக்காம இரு.
கொஞ்சநாள் காய்கறி நறுக்காமல் இரு.
கொஞ்சநாள் துணி துவைக்க வேணாம்.
கொஞ்சநாள் பாத்திரம் தேய்க்காமல் இரு
இப்படியெல்லாம் சொல்லப்டாதோ?
கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!
![]()
கண்ணாடி இல்லைன்னு கொஞ்சம் மனவருத்தம். சீப்பு வேற இல்லையாம்:( ஆஹா ஆஹா.... குணமாகிக்கிட்டு வர்றார். உடல் சரியில்லைன்னா அழகு ரெண்டாம் பட்சம் இல்லையோ? தலைவாரிவிட்டதும் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் லுக் வந்துருச்சு:-) நாங்க அஞ்சே முக்காலுக்கு வந்துருக்கோம்.அதுக்குள்ளே டின்னர் முடிஞ்சுருக்கு! (இங்கே நியூஸியில் இதுக்குப்பெயர் டீ. ! கிவி வழக்கம்)
இது தெரியாமல் இங்கே வந்த புதிதில், தோழி ஒருவர் சில நண்பர்களை 'டீ'க்கு வாங்கன்னு சொல்லி இருக்கார். நம்மூர் தேநீர் விருந்து என்ற அனுமானம். சில நொறுக்ஸ் வகைகளும் கெட்டில் நிறைய தேநீரும் போட்டு வச்சாச்சு. வந்தவங்க எல்லோரும் இண்டியன் ஸ்நாக்ஸ் தின்னு டீ குடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க.
என்னடா இது. இன்னும் உக்கார்ந்திருக்காங்க? அவுங்க எப்பப்போறது,நாம் டின்னர் எப்போ சமைக்கறதுன்ன்னு யோசனை. பொறுத்துப்பொறுத்து பார்த்த விருந்தினர் ஒருத்தர் சமையல் ஆகிருச்சான்னு கேட்டுட்டாங்க. இவுங்க தயங்கித் தயங்கி இல்லே இனிமேல்தான்ன்னு இழுத்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி:-)
அப்பதான் தோழிக்கு விவரம் கிடைக்குது. அவுங்க கிவி டீ க்கு வந்திருக்காங்க.தோழி இண்டியன் டீ கொடுத்துருக்காங்கன்னு:-))))) அப்புறம் போய் கொஞ்சம் டேக் அவே வாங்கிவந்து சமாளிச்சாங்களாம். வெறும் டீ குடிக்கக் கூப்பிடணுமுன்னா, 'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா' னு சொல்லணும்.
கைப்பையில் இருந்து சீப்பை எடுத்துக் கொடுத்தால் கையைத் தூக்கி தலை வார முடியலை பாவம்:( வேனிட்டி அறை ரெண்டு இருக்கு. எழுந்து அதுக்குப்போக முடியலை. Catheter போட்டுருக்கே. ஸலைன் ட்ரிப் வேற போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சம் நடக்கலாமான்னு நர்ஸம்மாவிடம் கேட்டதுக்கு அவுங்கஒரு ஸ்டேண்ட் கொண்டுவந்து சகல இணைப்பையும் ஸ்டேண்டிலுள்ள மெஷீனுக்கு மாத்தி விட்டாங்க. திரும்பி வந்ததும் சுவற்றில் ப்ளக் பண்ணிக்கலாமுன்னும் சொன்னாங்க. டிவிடி பிரச்சனை வந்துருமேன்னு அதுக்கான தனி ஸ்டாக்கிங்ஸ் போட்டுவிட்டுருக்காங்க நேத்து சர்ஜரியின் போது. இப்போ நடக்கணுமென்றதும் வழுவழு என்றுள்ள தரையில் வழுக்கிட்டால் என்னசெய்வதுன்னு AntiSilp socks கொண்டுவந்து காலில் மாட்டிவிட்டாங்க நர்ஸம்மா.
மெள்ள அந்தக் காரிடாரில் மெது நடை. அப்படியே அங்கங்கே என்ன இருக்குன்னு எக்ஸ்ஃப்ளோர் செஞ்சோம். நாலு செட்ஸ் ஆஃப் பாத்ரூம், கழிவறைகள், வேனிட்டி ரூம் (அட்டகாசமா லைட்டிங், ட்ரெஸ்ஸிங் மிர்ரர் எல்லாம் பளபள!) வார்டின் கடைசியில் ஒரு டிவி ரூம். ஒரு பத்து வசதியான இருக்கைகள் போட்டு 32 இஞ்ச் எல் ஸி டி டிவியை சுவத்துலே பொருத்தி இருக்காங்க.
நாளைக்கு வரும்போது டாய்லெட்ரி பேக் கொண்டு வரேன்னேன். பொழுதன்னிக்கும் பயணம் போய்வருவதால் பயணப்பொட்டியில் எப்பவும் தயாராக இருக்கும்தான். நேத்து பயணம் முடிச்சுக் கொண்டு வந்த பெட்டிகள் எல்லாம் வீட்டுக்கூடத்தில் அம்போன்னு கிடக்கு. போட்டது போட்டபடி ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தோமுல்லெ!
ஆஸ்பத்திரி கௌனில் பார்க்கும்போது நோயாளி லுக் வந்துருது:( நமக்கு விருப்பமென்றால் நாம் வழக்கமா அணியும் உடைகளைப் போட்டுக்கலாம். பொதுவா இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய உரிமைகளுண்டு. எதாவது நம்ம மனசு பாதிக்கும்படி பணியாளர்கள் (டாக்டர்கள் உட்பட!) நடந்தால் உடனே புகார் செய்யலாம். ஆங்கில மொழி தெரியலைன்னா ஒரு மொழி பெயர்ப்பாளரையும் நமக்கு எற்பாடு செய்வாங்க. இந்தப் பட்டியலில் ஹிந்தி கூட இருக்கு! ஆஸ்பத்திரி முழுக்க அங்கங்கே புகார் பெட்டி. அதை கவனமா எடுத்துப் பார்த்து ஆவன செய்யறாங்க.
இன்னிக்கு ஒரு அஞ்சாறு நிமிச நடை போதும். தள்ளாட்டம் வேற இருக்கு. இன்னும் கொஞ்சம் முகம் மலரட்டுமேன்னு என் கைப்பையில் இருந்த கோபாலின் மொபைல் ஃபோனை எடுத்துக் கொடுத்தேன். கோடி சூர்யப்ரகாசம். ஒரு அம்பதறுபது மெயில்கள் வந்துருக்கு. எல்லாம் குசலம் விசாரிச்சுத்தான்.
தோழியும் கணவரும் வந்தாங்க. கொஞ்சநேரம் விசாரிப்புகள். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.
கையோடு கொண்டுபோயிருந்த நைட்டி(பஜாமாஸ்)யை அலமாரியில் வச்சுட்டு மறுநாள் சார்ஜர் கொண்டு வரேன்னுட்டு நாங்கள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்.
அடுத்தநாள் காலையில் எனக்கு அழைப்பு. எல்லாம் இவர்தான். அதான் கையில் ஃபோன் இருக்கே! காலை உணவு முடிச்சுட்டாராம். இன்னிக்கு ஞாயிறு ஆனதால் நாங்க ரிலாக்ஸா சாயங்காலம் வந்தால் போதுமாம். ராத்திரி கொஞ்சம் ஜுரம் வந்ததாம்.சின்னதா மூச்சுத் திணறல். ஆக்ஸிஜன் வச்சாங்களாம். இப்போ பிரச்சனை இல்லைன்னார்.
நாங்கள் ஒரு நாலரைக்குப் போனோம். புள்ளியைக் காணோம். டிவி அறைக்குப் போனேன். நினைச்சது சரி. அங்கேதான் ஓய்வா உக்கார்ந்துருந்தார். வீட்டு உடுப்பு அதன் மேல் ஆஸ்பத்த்ரி கௌன். கதீட்டர் அவுட்! குளிச்சாராம். இப்போ ஜூரம் இல்லை.வயித்துவலி போயே போயிந்தி. இட்ஸ் Gகான்:-) ஒரே ஒரு குறை..... டிவி ரிமோட்டை சுவரில் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க:(
அதானே.... போகட்டும். ஆளாளுக்கு கையில் வச்சுக்கணுமுன்னா ஒரு பத்திருவது ரிமோட் வாங்கிப் போடணுமில்லையோ? அந்த அறையிலிருந்து வியூ அருமையா இருக்கு. நம்மூர் ஏவான் ஆறு. தொட்டடுத்து போட் ஷெட். வாடகைக்குப் படகு(Kayak) எடுத்துக்கிட்டு நாமே சுத்தலாம். வேணாமுன்னா punting கூட உண்டு.
உள்ளூர் நண்பர்கள் மூணு பேர் குடும்பத்துடன் விஸிட் வந்து போனார்கள். நாலு ஸ்பூன் தயிர்சாதம் குட்டியூண்டு தூக்கில் கொண்டு போயிருந்தேன். சோறு கண்டவுடன் முகம் மலர்ந்தது.
திங்கள் காலையிலே போயிட்டேன். லஞ்ச் சமயம் மகள் வந்து வீட்டுக்குக் கூட்டிப் போனாள். மாலை வேலை முடிஞ்சு வந்ததும் மகளும் நானுமா அப்பாவைப்போய்ப் பார்த்துவந்தோம். நேத்து இரவும் காய்ச்சல் வந்துச்சாம்( மற்றபடி கெட்டிங் பெட்டர், டே பை டே. (டச் வுட்) ஐவி கூட எடுத்தாச்சு. ஆனால் கையில் குத்திவைப்பு அப்படியே இருக்கு. ஒரு அவசரமுன்னா சட்னு கனெக்ட் பண்ணிடலாம்.
செவ்வாய் காலை போனால்...... டாக்டர் குழு கூடி இருக்கு. டிஸ்சார்ஜ் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். 24 மணி நேரம் ஜுரமில்லாம இருந்தால்தான் வீடுன்னு கண்டிப்பாச் சொல்றாங்க. நேத்து இரவும் ஜுரம் வந்து போயிருக்கு. "அதெல்லாம் ஒன்னுமில்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் ஹீட்டர் இருப்பதால் ஜுரம் போல இருக்காம்."
'சரி. வீட்டுக்கு விடறோம். ஆனால் எதாவது பிரச்சனைன்னா உடனே வரணும்'என்றதோடு டிஸ்சார்ஜ் எழுதிக் கொடுத்தார் டாக்டர். எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிய ஒன்னரை மணி நேரமாச்சு. அதுக்குள்ளே வார்டில் இருந்த எல்லாருக்கும் டாடா பைபை சொல்லி முடிச்சார்:-)
வார்டு சுத்தம் செய்யும் பெண் (ஃபிஜி) 'பையன் நல்லவன். சந்தேகமே வேண்டாம். பேசிப்பார்'என்றதும் எனக்குக் குழப்பம்!
மகளுக்கு சம்பந்தம் பேசி இருக்காங்க. இவர் 'மகளைக் கேக்கணும்'என்று சொல்லி இருக்காராம். என்ன கதை? ன்னு கேட்டேன். ரெண்டு மூணுநாளா மகளைப் பார்த்ததும் இவரிடம் விசாரிச்சு இருக்காங்க.'சொந்தக்காரப் பையனுக்கு பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம் நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான். என்ன சொல்றீங்க'ன்னு கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள் ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)
மகளுக்கு சேதி சொல்லிட்டு (ஐ மீன், டிஸ்சார்ஜ் ஆனதை) ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.
நம்ம மருத்துவர் தோழி தினமும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.
இவருக்கு ஓரளவு குணமானதும் சனிக்கிழமை கோவிலுக்குப் போனோம். நம்ம கோவிலில் தீபாவளி, புது வருசம், அன்னக்கூட் எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு. நாம் ஏன் வரலைன்னு கேட்டு துளைச்செடுத்துட்டாங்க. அன்னக்கூட் ப்ரசாதம் எடுத்து வச்சுருந்தது கிடைச்சது.
மறுநாள் நம்ம வீட்டில் தீபாவளி. அன்றைக்குக் கார்த்திகை தீபமாகவும் அமைஞ்சு போனதால்..... எடு புடவையை. புதுசு கட்டிக்கோ. கொண்டாடுன்னு ..... மகளும் வந்தாள். போனவருசம் வாங்கி வச்ச பட்டாஸ் பொதியில் இருந்து கம்பி மத்தாப்பை எல்லாம் எடுத்து கொளுத்தினோம்.
அடுத்த தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கி வைக்கலாமா வேணாமான்னு இப்போ யோசனை:-)))))
இனி எல்லாம் நலமே!
ரொம்ப அலைஞ்சுட்டே... கொஞ்சநாள் சும்மா இரு என்றார்.
எப்படி????
கொஞ்சநாள் சமைக்காம இரு.
கொஞ்சநாள் காய்கறி நறுக்காமல் இரு.
கொஞ்சநாள் துணி துவைக்க வேணாம்.
கொஞ்சநாள் பாத்திரம் தேய்க்காமல் இரு
இப்படியெல்லாம் சொல்லப்டாதோ?
கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!
