சம்பவத்துக்கு ஒரு ஆறுநாள் இருக்கும்போது விருந்தாவனில் பாபுவுடன் ஒரு டிஸ்கஷன். என்ன இது அநியாயம்? வடக்கின் ஆக்கிரமிப்பு தாளலை::( பேருக்கு ஒரு தமிழ் இருக்கவேணாமோ?
"இருக்கே..... இங்க பாருங்க, லைவா !"
அய்ய............தோசை.
"அப்ப குழிப்பணியாரம், ஆப்பம் இப்படி எதாவது......"
"மூச்!!! "
"............இட்லி?"
"பேசப்டாது"
ஒரு பக்கம் வடக்கர்கள் வந்து தமிழ்நாட்டு வியாபாரங்கள் அத்தனையும் வழிச்சுத் தங்கள் பக்கம் இழுத்துட்டுக்கிட்டாங்கன்னு வயித்தெரிச்சல் படும் மக்கள், தங்களை அறியாமலேயே வயித்துலே(யும்) அவுங்களுக்கு இடம் கொடுத்துட்டாங்க பாருங்களேன்........... வியப்புதான்.
பட்டர் நான், பனீர் டிக்கா மசாலா, மலாய் கொஃப்தா, ஆலூமட்டர், நவ்ரத்தன் கொர்மா..........
இதான் ஓசைப்படாம உள்ளே நுழையறதா? மக்கள் விரும்பறாங்கன்னு சினிமா நாயகி(??)களைக் கொண்டுவந்தது முதல், உடைகள், கல்யாணவீட்டுக் கலாச்சாரங்கள் இப்படி எல்லாச் சமாச்சாரங்களும் வந்துருச்சே! முந்தானையின் அழகுக்காகக் குஜராத்தி ஸ்டைலில் புடவைகட்ட ஆரம்பிச்சது கலியாண ரிசெப்ஷன்களில் தொடங்குச்சு!
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்கெ சாப்பிடப்போனாலும் மெனுகார்டில் சீன சாப்பாடுகள்:( மஞ்சூரியன் மஞ்சூரியன்னு சொல்றமே... அது உண்மையான சீனத்துலே இல்லவே இல்லை(யாம்)! இங்கே எங்கூரில் அதென்டிக் சீன உணவு வகைகள் விற்கும் கடையிலே கேட்டால் பேய்முழி முழிக்கிறாங்க....அப்படி ஒன்னு கேள்விப்பட்டதே இல்லைன்னு!!!!
தமிழ் சாப்பாடு குறைஞ்சபட்சம் ஒரு தென்னிந்திய மெனு........
"அதைத்தான் தினமும் வீட்டுலே சாப்புடுறாங்களே. வெளியே போனாலும் அதேதானா? "
என்ன லாஜிக்ன்னு புரியலையே:(
! "சரி. வடையை மட்டும் சேர்த்துருங்க. இல்லேன்னா பதிவர் சந்திப்புக்குப் பெருமை இருக்காது!"
விழா நடக்கப்போகும் ஹாலை பார்த்துருங்கன்னு கூட்டிக்கிட்டுப்போனார் பாபு. நீச்சல்குளத்தையொட்டியே இருக்கு. அடடா....குளிக்கும் மக்கள்ஸ்க்கு தொந்திரவாப் போயிருவோமோன்னு ஒரு சந்தேகம்!
"மாலை ஆறரைக்கு அப்புறம் நீச்சல் குளத்துக்கு அனுமதி இல்லை. உங்க விழா ஏழுக்குத்தானே.? அதுக்குள்ளே எல்லா இடத்தையும் சுத்தம் செஞ்சு சாப்பாடு ஐட்டங்களுக்கும், இருக்கைகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருவோம். குறைஞ்சபட்சம் 100 பேர்கள் வருவாங்கதானே"?
சொல்ல முடியாது.... நமக்கேது அவ்ளோ நண்பர்கள்? அழைப்பு அனுப்பி இருக்கேன்னாலும் அன்று வேலைநாளாப் போயிட்டபடியால் அழைத்தவர்கள் அனைவருக்கும் வர இயலுமான்னு தெரியலையே.... ஒரு அறுபதுன்னு ஆரம்பிச்ச கோபாலை மடக்கி, 'நூத்தியம்பது லட்சியம் எண்பது நிச்சயம்'ன்னு சொன்னேன்.:-)
விருந்தாவன் அடுக்களையில் இருந்துதான் சகலமும் என்பதால் , எண்பதுபேருக்கு எல்லாம் செட் செஞ்சுடறோம். மேற்கொண்டு மக்கள்ஸ் வரவர பதார்த்தங்களைக்கொண்டு வந்து நிரப்பலாமுன்னு சொன்னார் பாபு.
நீச்சல்குளத்துக்குப் பக்கத்தில் பார்ட்டி என்றதும், ஸ்விம்மிங் ஸூட் கொண்டு வரணுமோன்னு நெருங்கிய தோழிகளுக்குக் கவலை! யாரையும் டார்ச்சர் பண்ணும் உத்தேசமில்லை என்று சொன்னேன்:-)))))
பெங்களூருவிலிருந்து முதல் நாள் வரும் மச்சினர் குடும்பத்துக்கு இதே ஹொட்டேலில் ஒரு அறை புக் செய்யும்போதே இன்னொரு அறையையும் புக் செஞ்சோம். காலை விழாவுக்கு வந்துட்டு, மறுபடியும் மாலை நிகழ்ச்சிக்கு வரும் தோழிகள், மற்ற உறவினர்கள், சென்னை ட்ராஃபிக்கில் மாட்டிக்கிட்டு மறுபடி வீட்டுக்குபோய்வரணுமுன்னா கஷ்டம்தானே? பேசாம மாற்று உடைகளைக் கையோடு கொண்டு வந்துட்டால் மதிய உணவு முடிஞ்சதும் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு மாலை விழாவுக்கு ரெடி ஆக லகுவாக இருக்காதா? முன்னேற்பாடுகளை தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சொல்லியாச்சு:-)
காலைச் சடங்குகள் முடிஞ்சதும் பகல் 2 மணி அளவில் நாங்கள் மகளுடன் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் இரவே அவள் நியூஸி திரும்புவதால் முடிச்சுக்கொடுக்க சில வேலைகள் இருந்தன. மாலை ஒரு ஆறரைமணி அளவில் ஹொட்டேல் நியூவுட்லேண்ட்ஸ் அறைக்குப் போனால், அண்ணனும் அண்ணியும் விழாவுக்குத் தயாராகி ரெடியா இருந்தாங்க. மற்ற தோழிகள் எல்லாம் வந்துருந்து கதையும் பேச்சுமா பொழுது போயிருக்கு! அட...... நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேனே.....
ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.
யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.
சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:( நம்ம டோண்டு!!!!!
டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.
உணவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ரெடின்னு வந்து சொன்ன மேனேஜர் பாபுவிடம், கேக் வெட்டிட்டுச் சின்னதா ஒரு ஸ்பீச் முடிச்சு சாப்பிடத்தொடங்கலாமுன்னு சொன்னதும்..... கேக்கான்னு முழிக்கிறார். மெனு ஐட்டங்கள் முடிவு செஞ்சபோது அந்த லிஸ்ட்டில் கேக் என்று பார்த்ததாக என் நினைவு.
இல்லீங்களேன்னு சொன்ன பாபுவிடம் கேக்குக்கு ஏற்பாடு செஞ்சுருங்கன்னதும்.... 'எங்க ரெஸ்ட்டாரண்டில் பேக்கரி இல்லை. வெளியே இருந்து வாங்கிக்கலாம். ஆனால் இன்னிக்கு பந்த். கடைகள் இருக்குமான்னு தெரியலையே. என்ன கேக் வேணும்' என்றவரிடம் முயற்சி செஞ்சு பாருங்க கிடைக்கலைன்னா..... வெறும் பேப்பரில் கேக் என்று எழுதி வெட்டிக்கலாம்!
அடுத்த இருபதாவது நிமிஷம் ரெண்டு கேக்குகளோடு பாபு ஆஜர்.!!! உடனடி ஏற்பாடு செஞ்சு உதவின பாபுவுக்கு என் நன்றியை இங்கே(யும்) பதிவு செய்கிறேன்.
இரண்டு பக்கக் குடும்பத்தினரும் வந்துருந்தனர் எங்களை மகிழ்வில் ஆழ்த்த!
பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தியவர்களும், பாமாலை பாடி வாழ்த்தியவரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எங்களை முக்கி எடுத்தனர். . 'அன்றொருநாள்' படம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து கொசுவத்தி ஏத்திவச்சார் மோகன்குமார்.
பெண்களூரில் இருந்து புறப்பட்டு வந்த ஷைலஜா, வாழ்த்துக் கவிதை வாசிச்சப்ப, நானும் மரபு வழுவாமல் வா ....வா.....(ஹிந்தியில் பாராட்டு) சொன்னேன், கேட்டோ:-))))
பதிவுலக நண்பர்கள் தல பாலபாரதி & குடும்பத்தினர், டாக்டர் புரூனோ, லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர், காவேரி கணேஷ், பாலகணேஷ், மோகன் குமார், ஸாதிகா, டி ஆர் சி, மரபூர் சந்திரசேகர், மா.சிவகுமார், சிமுலேஷன் சுந்தரராமன் & திருமதி சுந்தரராமன், அண்ணாகண்ணன், உண்மைத்தமிழன் சரவணன், செந்தில், பட்டர்பஃப்ளை சூரியா, எறும்பு ராஜகோபால், பலாபட்டறை ஷங்கர், ஆன்மீகச் செம்மல் ஜி ராகவன், டோண்டு ராகவன், வடுவூர் குமார் &திருமதி குமார், பதிவர் நானானி சார்பில் அவரது அன்புக் கணவரும் மகளும் பேரன் ஷன்னு த க்ரேட்,
பண்புடன் குழும நண்பர்கள் சா.கி.நடராஜன், மோர் சுப்ரா, உதயன், ஸ்நாபக் விநோத், அச்சு சுதாகர் கார்த்திக், மரத்தடி குழுமத் தோழிகள், ஹோப் ஃபவுண்டேஷன் குழுவினர் சார்பில் டாக்டர் அஷோக், சந்தோஷ் ஆகியோர் குடும்பங்கள், விழாவுக்காகவே வெளியூர்களில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய அன்புள்ளங்கள் சீனா&செல்வி தம்பதியர், திருப்பூர் ஜோதி கணேசன், அவர் நண்பர் ராஜராஜன், அன்று காலையில்தான் அமெரிக்காவை வென்று(???) தாய்நாடு திரும்பிய (தூக்கக் கலக்கக் கண்களுடன்) புதுகை அப்துல்லா, தலைநகரில் இருந்து (மத்திய அரசின் சார்பில் பங்குபெற்ற (??!!!! இருக்குமோ ) நம்ம வெங்கட் நாகராஜ். எழுத்தாளர்கள் ஷங்கரநாராயணன், லதானந்த், முனைவர் இரா.வாசுதேவன், புத்தக வெளியீட்டாளர் சந்தியா பதிப்பகத்தின் திரு & திருமதி நடராஜன்,
பாரதி மணி ஐயா, க்ரிக்கெட் போட்டிகளின் நடுவிலும் நமக்காக நேரம் ஒதுக்கிய நண்பர் அப்துல் ஜப்பார் ஐயா, கல்பட்டு நரசிம்ஹன் & சாந்தா தம்பதியினர், பேராசிரியர் சிவஞானம் ஐயா&குடும்பத்தினர், சிங்கை சித்ரா ரமேஷின் பெற்றோர்&குடும்பத்தினர் (மற்றபடி எவர் பெயராவது விட்டுப்போயிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.என் கவனக்குறைவுக்கும் ஞாபகமறதிக்கும் மன்னிக்கணும்.)இப்படி அனைவரின் அன்பும் ஆசிகளும் வாழ்த்துகளும் நிறைந்து வழியும் நாளாக அமைஞ்சுபோனது எங்கள் பாக்கியம்.
எல்லோரையும் குளக்கரையில் நிறுத்தி பெரிய க்ரூப் ஃபோட்டோவா ஒன்னு எடுத்துடலாமுன்னு ஃபொட்டோக்ராஃபர் சொன்னது அருமையான ஐடியாவா இருந்தாலும் விருந்துக்கு நடுவில், அப்படியே தட்டை வச்சுட்டு இப்படி வரிசையில் நின்னு போஸ் கொடுங்கன்னு சொல்ல இயலுமா?????
வல்லி சிம்ஹன் வரலை. காலையில் ஓடுன ஓட்டத்துக்குக் கால் வலி வந்துருக்கு:( பாவம்.... எல்லோருக்கும் இந்த பதிலைச் சொல்லியே நேரம் போக்கினேன்.
மனம் நிறைஞ்சு போயிருந்ததால் வயிற்றுப்பசி அறவே இல்லை. ஒன்னுமே சாப்பிடலையே நீங்கன்னு சொல்லிக்கிட்டே 'லைவாப்' போட்டு எடுத்துவந்த தோசையை எனக்கு விளம்பிட்டுப் போனார் பாபு!
கூடியிருந்து குளிர்விக்க வந்திருந்த நண்பர்கள், சரியாச் சாப்பிட்டாங்களான்னு கூட கவனிக்க முடியலை. இடம் சின்னது என்பதால் நல்ல கூட்டம்போல ஒரு தோற்றம்!!!!
தொலைபேசி, மின்மடல்கள் மூலமாக வாழ்த்திய அன்பர்களுக்கும், நேரில் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , வர நினைத்து வரமுடியாமல் போன நட்புகளுக்கும் , பதிவின் மூலம் சேதி அறிஞ்சு வாழ்த்திய பதிவர் குடும்ப மக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.
படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். கீழே இருக்கும் சுட்டிகளில் எதாவது ஒன்னு வேலை செய்யும் என்ற அதீத நம்பிக்கை:-)
படத்தொகுதி சுட்டி 1
அது இல்லைன்னா இது
படத்தொகுதி சுட்டி 2
இவ்ளோ உற்சாகமும் அன்பும் இருக்கே...பேசாம சதாபிஷேகத்தை அடுத்த வருசமே வச்சுக்கலாமா ஷைலூ?
![]()
"இருக்கே..... இங்க பாருங்க, லைவா !"
அய்ய............தோசை.
"அப்ப குழிப்பணியாரம், ஆப்பம் இப்படி எதாவது......"
"மூச்!!! "
"............இட்லி?"
"பேசப்டாது"
ஒரு பக்கம் வடக்கர்கள் வந்து தமிழ்நாட்டு வியாபாரங்கள் அத்தனையும் வழிச்சுத் தங்கள் பக்கம் இழுத்துட்டுக்கிட்டாங்கன்னு வயித்தெரிச்சல் படும் மக்கள், தங்களை அறியாமலேயே வயித்துலே(யும்) அவுங்களுக்கு இடம் கொடுத்துட்டாங்க பாருங்களேன்........... வியப்புதான்.
பட்டர் நான், பனீர் டிக்கா மசாலா, மலாய் கொஃப்தா, ஆலூமட்டர், நவ்ரத்தன் கொர்மா..........
இதான் ஓசைப்படாம உள்ளே நுழையறதா? மக்கள் விரும்பறாங்கன்னு சினிமா நாயகி(??)களைக் கொண்டுவந்தது முதல், உடைகள், கல்யாணவீட்டுக் கலாச்சாரங்கள் இப்படி எல்லாச் சமாச்சாரங்களும் வந்துருச்சே! முந்தானையின் அழகுக்காகக் குஜராத்தி ஸ்டைலில் புடவைகட்ட ஆரம்பிச்சது கலியாண ரிசெப்ஷன்களில் தொடங்குச்சு!
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்கெ சாப்பிடப்போனாலும் மெனுகார்டில் சீன சாப்பாடுகள்:( மஞ்சூரியன் மஞ்சூரியன்னு சொல்றமே... அது உண்மையான சீனத்துலே இல்லவே இல்லை(யாம்)! இங்கே எங்கூரில் அதென்டிக் சீன உணவு வகைகள் விற்கும் கடையிலே கேட்டால் பேய்முழி முழிக்கிறாங்க....அப்படி ஒன்னு கேள்விப்பட்டதே இல்லைன்னு!!!!
தமிழ் சாப்பாடு குறைஞ்சபட்சம் ஒரு தென்னிந்திய மெனு........
"அதைத்தான் தினமும் வீட்டுலே சாப்புடுறாங்களே. வெளியே போனாலும் அதேதானா? "
என்ன லாஜிக்ன்னு புரியலையே:(
! "சரி. வடையை மட்டும் சேர்த்துருங்க. இல்லேன்னா பதிவர் சந்திப்புக்குப் பெருமை இருக்காது!"
விழா நடக்கப்போகும் ஹாலை பார்த்துருங்கன்னு கூட்டிக்கிட்டுப்போனார் பாபு. நீச்சல்குளத்தையொட்டியே இருக்கு. அடடா....குளிக்கும் மக்கள்ஸ்க்கு தொந்திரவாப் போயிருவோமோன்னு ஒரு சந்தேகம்!
"மாலை ஆறரைக்கு அப்புறம் நீச்சல் குளத்துக்கு அனுமதி இல்லை. உங்க விழா ஏழுக்குத்தானே.? அதுக்குள்ளே எல்லா இடத்தையும் சுத்தம் செஞ்சு சாப்பாடு ஐட்டங்களுக்கும், இருக்கைகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருவோம். குறைஞ்சபட்சம் 100 பேர்கள் வருவாங்கதானே"?
சொல்ல முடியாது.... நமக்கேது அவ்ளோ நண்பர்கள்? அழைப்பு அனுப்பி இருக்கேன்னாலும் அன்று வேலைநாளாப் போயிட்டபடியால் அழைத்தவர்கள் அனைவருக்கும் வர இயலுமான்னு தெரியலையே.... ஒரு அறுபதுன்னு ஆரம்பிச்ச கோபாலை மடக்கி, 'நூத்தியம்பது லட்சியம் எண்பது நிச்சயம்'ன்னு சொன்னேன்.:-)
விருந்தாவன் அடுக்களையில் இருந்துதான் சகலமும் என்பதால் , எண்பதுபேருக்கு எல்லாம் செட் செஞ்சுடறோம். மேற்கொண்டு மக்கள்ஸ் வரவர பதார்த்தங்களைக்கொண்டு வந்து நிரப்பலாமுன்னு சொன்னார் பாபு.
நீச்சல்குளத்துக்குப் பக்கத்தில் பார்ட்டி என்றதும், ஸ்விம்மிங் ஸூட் கொண்டு வரணுமோன்னு நெருங்கிய தோழிகளுக்குக் கவலை! யாரையும் டார்ச்சர் பண்ணும் உத்தேசமில்லை என்று சொன்னேன்:-)))))
பெங்களூருவிலிருந்து முதல் நாள் வரும் மச்சினர் குடும்பத்துக்கு இதே ஹொட்டேலில் ஒரு அறை புக் செய்யும்போதே இன்னொரு அறையையும் புக் செஞ்சோம். காலை விழாவுக்கு வந்துட்டு, மறுபடியும் மாலை நிகழ்ச்சிக்கு வரும் தோழிகள், மற்ற உறவினர்கள், சென்னை ட்ராஃபிக்கில் மாட்டிக்கிட்டு மறுபடி வீட்டுக்குபோய்வரணுமுன்னா கஷ்டம்தானே? பேசாம மாற்று உடைகளைக் கையோடு கொண்டு வந்துட்டால் மதிய உணவு முடிஞ்சதும் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு மாலை விழாவுக்கு ரெடி ஆக லகுவாக இருக்காதா? முன்னேற்பாடுகளை தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சொல்லியாச்சு:-)
காலைச் சடங்குகள் முடிஞ்சதும் பகல் 2 மணி அளவில் நாங்கள் மகளுடன் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் இரவே அவள் நியூஸி திரும்புவதால் முடிச்சுக்கொடுக்க சில வேலைகள் இருந்தன. மாலை ஒரு ஆறரைமணி அளவில் ஹொட்டேல் நியூவுட்லேண்ட்ஸ் அறைக்குப் போனால், அண்ணனும் அண்ணியும் விழாவுக்குத் தயாராகி ரெடியா இருந்தாங்க. மற்ற தோழிகள் எல்லாம் வந்துருந்து கதையும் பேச்சுமா பொழுது போயிருக்கு! அட...... நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேனே.....
ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.
யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.
சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:( நம்ம டோண்டு!!!!!
டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.
உணவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ரெடின்னு வந்து சொன்ன மேனேஜர் பாபுவிடம், கேக் வெட்டிட்டுச் சின்னதா ஒரு ஸ்பீச் முடிச்சு சாப்பிடத்தொடங்கலாமுன்னு சொன்னதும்..... கேக்கான்னு முழிக்கிறார். மெனு ஐட்டங்கள் முடிவு செஞ்சபோது அந்த லிஸ்ட்டில் கேக் என்று பார்த்ததாக என் நினைவு.
இல்லீங்களேன்னு சொன்ன பாபுவிடம் கேக்குக்கு ஏற்பாடு செஞ்சுருங்கன்னதும்.... 'எங்க ரெஸ்ட்டாரண்டில் பேக்கரி இல்லை. வெளியே இருந்து வாங்கிக்கலாம். ஆனால் இன்னிக்கு பந்த். கடைகள் இருக்குமான்னு தெரியலையே. என்ன கேக் வேணும்' என்றவரிடம் முயற்சி செஞ்சு பாருங்க கிடைக்கலைன்னா..... வெறும் பேப்பரில் கேக் என்று எழுதி வெட்டிக்கலாம்!
அடுத்த இருபதாவது நிமிஷம் ரெண்டு கேக்குகளோடு பாபு ஆஜர்.!!! உடனடி ஏற்பாடு செஞ்சு உதவின பாபுவுக்கு என் நன்றியை இங்கே(யும்) பதிவு செய்கிறேன்.
இரண்டு பக்கக் குடும்பத்தினரும் வந்துருந்தனர் எங்களை மகிழ்வில் ஆழ்த்த!
பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தியவர்களும், பாமாலை பாடி வாழ்த்தியவரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எங்களை முக்கி எடுத்தனர். . 'அன்றொருநாள்' படம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து கொசுவத்தி ஏத்திவச்சார் மோகன்குமார்.
பெண்களூரில் இருந்து புறப்பட்டு வந்த ஷைலஜா, வாழ்த்துக் கவிதை வாசிச்சப்ப, நானும் மரபு வழுவாமல் வா ....வா.....(ஹிந்தியில் பாராட்டு) சொன்னேன், கேட்டோ:-))))
பதிவுலக நண்பர்கள் தல பாலபாரதி & குடும்பத்தினர், டாக்டர் புரூனோ, லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர், காவேரி கணேஷ், பாலகணேஷ், மோகன் குமார், ஸாதிகா, டி ஆர் சி, மரபூர் சந்திரசேகர், மா.சிவகுமார், சிமுலேஷன் சுந்தரராமன் & திருமதி சுந்தரராமன், அண்ணாகண்ணன், உண்மைத்தமிழன் சரவணன், செந்தில், பட்டர்பஃப்ளை சூரியா, எறும்பு ராஜகோபால், பலாபட்டறை ஷங்கர், ஆன்மீகச் செம்மல் ஜி ராகவன், டோண்டு ராகவன், வடுவூர் குமார் &திருமதி குமார், பதிவர் நானானி சார்பில் அவரது அன்புக் கணவரும் மகளும் பேரன் ஷன்னு த க்ரேட்,
பண்புடன் குழும நண்பர்கள் சா.கி.நடராஜன், மோர் சுப்ரா, உதயன், ஸ்நாபக் விநோத், அச்சு சுதாகர் கார்த்திக், மரத்தடி குழுமத் தோழிகள், ஹோப் ஃபவுண்டேஷன் குழுவினர் சார்பில் டாக்டர் அஷோக், சந்தோஷ் ஆகியோர் குடும்பங்கள், விழாவுக்காகவே வெளியூர்களில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய அன்புள்ளங்கள் சீனா&செல்வி தம்பதியர், திருப்பூர் ஜோதி கணேசன், அவர் நண்பர் ராஜராஜன், அன்று காலையில்தான் அமெரிக்காவை வென்று(???) தாய்நாடு திரும்பிய (தூக்கக் கலக்கக் கண்களுடன்) புதுகை அப்துல்லா, தலைநகரில் இருந்து (மத்திய அரசின் சார்பில் பங்குபெற்ற (??!!!! இருக்குமோ ) நம்ம வெங்கட் நாகராஜ். எழுத்தாளர்கள் ஷங்கரநாராயணன், லதானந்த், முனைவர் இரா.வாசுதேவன், புத்தக வெளியீட்டாளர் சந்தியா பதிப்பகத்தின் திரு & திருமதி நடராஜன்,
பாரதி மணி ஐயா, க்ரிக்கெட் போட்டிகளின் நடுவிலும் நமக்காக நேரம் ஒதுக்கிய நண்பர் அப்துல் ஜப்பார் ஐயா, கல்பட்டு நரசிம்ஹன் & சாந்தா தம்பதியினர், பேராசிரியர் சிவஞானம் ஐயா&குடும்பத்தினர், சிங்கை சித்ரா ரமேஷின் பெற்றோர்&குடும்பத்தினர் (மற்றபடி எவர் பெயராவது விட்டுப்போயிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.என் கவனக்குறைவுக்கும் ஞாபகமறதிக்கும் மன்னிக்கணும்.)இப்படி அனைவரின் அன்பும் ஆசிகளும் வாழ்த்துகளும் நிறைந்து வழியும் நாளாக அமைஞ்சுபோனது எங்கள் பாக்கியம்.
எல்லோரையும் குளக்கரையில் நிறுத்தி பெரிய க்ரூப் ஃபோட்டோவா ஒன்னு எடுத்துடலாமுன்னு ஃபொட்டோக்ராஃபர் சொன்னது அருமையான ஐடியாவா இருந்தாலும் விருந்துக்கு நடுவில், அப்படியே தட்டை வச்சுட்டு இப்படி வரிசையில் நின்னு போஸ் கொடுங்கன்னு சொல்ல இயலுமா?????
வல்லி சிம்ஹன் வரலை. காலையில் ஓடுன ஓட்டத்துக்குக் கால் வலி வந்துருக்கு:( பாவம்.... எல்லோருக்கும் இந்த பதிலைச் சொல்லியே நேரம் போக்கினேன்.
மனம் நிறைஞ்சு போயிருந்ததால் வயிற்றுப்பசி அறவே இல்லை. ஒன்னுமே சாப்பிடலையே நீங்கன்னு சொல்லிக்கிட்டே 'லைவாப்' போட்டு எடுத்துவந்த தோசையை எனக்கு விளம்பிட்டுப் போனார் பாபு!
கூடியிருந்து குளிர்விக்க வந்திருந்த நண்பர்கள், சரியாச் சாப்பிட்டாங்களான்னு கூட கவனிக்க முடியலை. இடம் சின்னது என்பதால் நல்ல கூட்டம்போல ஒரு தோற்றம்!!!!
தொலைபேசி, மின்மடல்கள் மூலமாக வாழ்த்திய அன்பர்களுக்கும், நேரில் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , வர நினைத்து வரமுடியாமல் போன நட்புகளுக்கும் , பதிவின் மூலம் சேதி அறிஞ்சு வாழ்த்திய பதிவர் குடும்ப மக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.
படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். கீழே இருக்கும் சுட்டிகளில் எதாவது ஒன்னு வேலை செய்யும் என்ற அதீத நம்பிக்கை:-)
படத்தொகுதி சுட்டி 1
அது இல்லைன்னா இது
படத்தொகுதி சுட்டி 2
இவ்ளோ உற்சாகமும் அன்பும் இருக்கே...பேசாம சதாபிஷேகத்தை அடுத்த வருசமே வச்சுக்கலாமா ஷைலூ?
