Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1440

கூடியிருந்து.... குளிர்ந்தேலோ.....(2025 இந்தியப்பயணம் பகுதி 19 )

$
0
0
எனக்கு ஏகப்பட்ட தம்பிகளும் தங்கைகளும்,மாமிகளும், நண்பர்களும், தோழிகளுமா இருக்காங்கன்றது உங்களுக்குத் தெரியாதா என்ன ?  நேத்து திடீர்னு ஒரு சேதி துபாயில் இருந்து ! தம்பி மகன்தான்.  அடுத்த வாரம் வரப்போவதா தம்பி சொல்லிக்கிட்டு இருந்தார். 
எப்போ நான் ஃப்ரீயா இருப்பேன்னு..... ஹாஹா....  அடுத்தவாரம் தெந்தமிழ்நாடு போகும் திட்டம் இருக்குன்னேன். அதான்  அப்பா சொன்னார்.  எப்படியாவது உங்களைப் பார்க்கணுமுன்னு இப்பவே கிளம்பிவரப் போறேன்னதும்  மன நிறைவா இருந்தது உண்மை. 

பகல் ரெண்டரை மணிக்கு மேல் ஃப்ரீதான். ஓ.... அப்பச் சரி .வந்து பார்க்கிறேன். 

  இன்றைக்கு ஒரு சந்திப்பு வைக்கலாமான்னு நெருங்கிய தோழிகளிடம் கேட்டதற்கு , நோ ஒர்ரீஸ்னுட்டாங்க. மூணு முதல் ஆறு மணி. வழக்கம்போல் அதே லோட்டஸ் !  சென்னைத்தோழி ஒருவர், இப்போ ரெண்டு வருஷமா, தென்காசிக்கு இடம் பெயர்ந்துருக்காங்க.  அவுங்க ஒரு வீட்டு விசேஷத்துக்காக  சென்னைக்கு வந்துருக்காங்களாம். அதனால்தான்  சந்திப்பு வச்சுக்கற எண்ணமே திடீர்னு வந்தது. 

காலையில் இடியாப்பமும் வடைகறியுமா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுப் பத்துமணிக்கு சிகிச்சைக்குப் போயாச்சு.  இந்த  ஆஸ்பத்ரியின் நிறுவனர் பிறந்தநாள்னு ஒரு மாலையுடன் ஒரு ஃபோட்டோ !  கால்களை வாட்டியெடுத்தபின் கட்டுப்போட்டு விட்டாங்க.  பயணம் போவதால்  தினசரி சிகிச்சைக்கு லீவு.  பயணநாட்களில் ஒரு தைலத்தைக்  காலுக்குத் தடவி மஸாஜ் செஞ்சு, ஒரு அரைமணி நேரம் கழிச்சு நல்ல சூடான வெந்நீர்  ஊற்றிக் கழுவணுமாம். அதுக்குண்டானவைகளை வாங்கினோம். வாசல்  புள்ளையாரிடமும் லீவு சொல்லிட்டு வந்தேன்.
ரெண்டரைக்கு ஸ்ரீதர் வந்தாச்சு. ராத்ரி ஃப்ளைட்டாம் .  ரொம்ப நாள் கதைகள் பாக்கி இருந்ததே.....  நியூஸியில் மேற்படிப்பு முடிச்சுட்டு போனவர்தான். நாங்க  கதையடிச்சுக்கிட்டு இருந்தப்ப அலைகள் அருணா  வந்தாங்க.  ஸ்ரீதரைக்கண்டதும் புருவம் உயர்ந்தது. அறிமுகம் ஆச்சு.  உள்ளூரில் ஸ்ரீதரின் நட்புவட்டம் பெருசு.  அவுங்கெல்லாம் சேர்ந்து  மூணுமணிக்கு ஒரு சந்திப்பு வச்சுருக்காங்களாம். வந்தாச்சு, பார்த்தாச்சுன்னு கிளம்பும் அவசரம்.....  எனக்குமே துபாய் ஊருக்குள்ளே போனதில்லை. ஏர்ப்போர்ட்டில் ட்ரான்ஸிட்டில் இருந்ததோடு சரி.  பாக்கியை அங்கேபோய்த்தான் பேசிக்கணுமுன்னு சொன்னேன்.
நுனிப்புல் ராமச்சந்திரன் உஷாவும், ஒலிக்கும் கணங்கள் நிர்மலா நிவேதாவும் வந்துட்டாங்க. மரத்தடிகால நட்பு.  சென்னையில் ஐவரும் வெளிநாடுகளில் ஐவருமா இருக்கோம்.  தொடர்பிலேயே இருப்பதால்  புதுசாப் பேச ஒன்னும்தான் இல்லை.  எல்லாம் அப்போதைக்கப்போது  பேசித்தீர்த்துக்கறதுதான்..... வாட்ஸ்ஸப்பில் இருக்கு வழி, இல்லையோ ! 


நம்ம கூட்டத்தில்  சிலர் இப்பெல்லாம் ப்ளொக்கில் எழுதலைன்னாலும்,  ஃபேஸ்புக்கில் வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க. புத்தகங்களை எழுதிக்குவிப்போரும்,  காற்றுவெளியில் கவிதை உலகில் மிதப்போரும், இயற்கையை நேசிப்போரும்,  பயணத்தை ரசிப்போருமாகப் பத்தும் பத்து வகை! சுவாரஸ்யத்துக்குக் கேட்பானேன் !  நேத்தே கீதத்தில் இருந்து வாங்கி வந்த  இனிப்புவகைகளும்,  நம்ம சுஸ்வாத் தீனிகளும்  துணைக்கு !  போதாததுக்கு திருப்பதி லட்டு !   கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து காஃபி. சாயங்காலம் ஆறு வந்ததுகூடத் தெரியலை. பறவைகள் கூடடையப்போயாச் ! 
 சனிக்கிழமையா இருப்பதால் கோவில் விஸிட் போகணும்.  சலோ  தில்லக்கேணி !  அவ்வளவாக்கூட்டம் இல்லைதான்.  பொதுவழியில் போறதுதான் எனக்குப்பிடிக்கும்.  ராமனையும் ரங்கனையும்  தரிசனம் செஞ்சுக்கலாம்.  மீசைக்காரனோ....... ரொம்ப தூரத்தில் இருந்து பார்த்தாலும் நம் கண்ணுக்குத் தெரியறாப்போல பளிச்,  வெளிச்சத்தில் !  இந்த ஒரு காரணமே போதும் எனக்கு ! ஒருத்தரைப்போல இருட்டறையில் ஒளிஞ்சு நிக்கற சமாச்சாரமே இல்லையாக்கும் ! 

 வேதவல்லித்தாயாரும், கஜேந்த்ர வரதரும், யோக நரஸிம்ஹரும் , நம்ம ஆண்டாளம்மாவுமா  அனைவருக்கும் அருள்செய்யக் காத்திருந்தாங்க! ஒரு சேதியைக் காதில் போட்டுட்டு வந்தேன்.
திரும்பும்போது பீச் ரோடில் கொஞ்சதூரம் போயிட்டு,  லாயிட்ஸ் ரோடில் திரும்பினோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைன்னு பெயர் மாத்திப்பலவருஷங்களாச்சு. ஒரு மாறுதலுக்காக  போற வழியில்  வ்ருந்தாவனத்தில் சாப்பிட்டால் ஆச்சு.  வழக்கம்போல் அவரவருக்கு வேண்டியதைச் சொல்லியாச். 

லோட்டஸ் திரும்பும் வழியில்  நம்ம தாயாரை எட்டிப்பார்க்கலாம்னு  போனால்.....  மண்டபத்தில்  கருடவாஹன தரிசனம் கிடைக்கலை. பறந்துபோயாச்சு ! டெலிபதியில்தான் சேதியை அனுப்பினேன். 
நாளைமுதல் ஒரு பத்துப்பனிரெண்டு நாளைக்கு தென் தமிழகப் பயணம் போறதால் அதுக்குண்டானவைகளை மட்டும் சின்னப்பெட்டிகளில் எடுத்துக்கிட்டு, மற்ற பெரிய பெட்டிகளை ஸ்டோரேஜில் போட்டு வச்சுட்டுப் போகணும்.

'என்னை என்னச் செய்யப்போகிறாய் 'என்ற  குழந்தைக்கு, 'நீயும்  என் கூட வர்றேடா'ன்னேன். 

 தொடரும்.......... :-)


Viewing all articles
Browse latest Browse all 1440

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>