காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து மூணாவது நிமிசம் பச்சைவண்ணப்பெருமாள் கோவில் கண்ணில் பட்டது. கோவில் வாசல் மூடிக்கிடக்கேன்னு அங்கிருந்து வெறும்முன்னூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் பவளவண்ணர் கோவிலுக்குப்போனோம். கோவில் முகப்பில் ஸ்ரீப்ரவாளவர்ணசாமி என்றே எழுதி இருக்காங்க.
ஈரேழு உலகத்துக்கும் முதல் சோஃபா கம் பெட் வச்சுருக்கறவர் நம்ம பெருமாளைத் தவிர வேறயார்?
இங்கேயும் நல்ல சேஷ சோஃபாவில் அமர்ந்த திருக்கோலம். சிவந்த திருமேனி என்பதால் பவழவண்ணர் என்று பெயர். எல்லாம் அந்த ப்ரம்மா சரஸ்வதி எபிஸோடுதான் காரணம். ப்ரம்மாவின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி அனுப்பி வைத்த அசுரர்களோடு யுத்தம் செய்து அவர்களைப் போட்டுத் தள்ளினார் நம்ம விஷ்ணு. அப்போது அசுரர்களின் ரத்தத்துளிகள் இவர் மேனியில் தெறித்து விழுந்து இவரே சிகப்பாகிவிட்டார். அதான் இவர் பவழவண்ணர் ஆன கதை.
சண்டை போட்டக் களைப்பு தீர விஸ்ராந்தியாக உக்கார்ந்துக்கிட்டு இருக்கார் இங்கே!
கோவில் விமானம் ப்ரவாளவிமானம் என்பதால் பெருமாளுக்கு ப்ரவாளவண்ணரென்ற பெயரும் வந்திருக்கலாம்.
தாயார் பவழவல்லி என்ற பெயருடன் இருக்கார்.
காலை எட்டு முதல் பதினொன்னு வரை, மாலை நாலு முதல் ஏழரை மணி வரை கோவில் திறந்திருக்கும்.
பாடல்பெற்ற ஸ்தலம் இது. அதான் அந்த நூற்றியெட்டில் ஒன்னு. கொஞ்சம் நல்லமுறையில் பராமரிக்கக்கூடாதோ?
அஞ்சு நிலை ராஜகோபுரத்துக்குக் கொஞ்சம் வர்ணம்தீட்டினால் நல்லா இருக்கும்.
ஆமாம்....பவழம், பவளம் இதில் எது சரி? ஙே!
கொஞ்சம் மனவருத்தமுடன் பச்சைவண்ணரைப் பார்க்கப் போனோம்.
கோவில்வாசல் திறந்துருக்கு. பெரிய கமலா தெருவாம். கடைகண்ணிகளின் வரிசையில் கோவில் வாசலும் ஒன்னு!
பவழத்தைப் பார்க்க வரும் சனம் பச்சையையும் கையோடு பார்த்துப்போவது வழக்கம். ரெண்டு பேரையும் ஒரே நாளில் தொடர்ந்து தரிசித்தால் புண்ணியம் அதிகம். (அதான் பதிவிலும் ரெண்டையுமே சேர்த்துப்போட்டுருக்கேன். சுலபமாக் கிடைக்கும் புண்ணியத்தை விடலாமா சொல்லுங்க?)
பவழவண்ணரைப் பாடிய ஆழ்வார் ஏன் பச்சைவண்ணரைப் பாடலைன்னு ஒரு சந்தேகம் வருது எனக்கு. இந்தக் கோவிலின் வயசு ஐநூறு என்று சொல்வதில் இருந்து ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு. ஆழ்வார் பவழத்தை ஸேவிக்க வந்தபோது பச்சை இங்கே இல்லை, அதாவது பச்சைக்கு இங்கே கோவிலெழுப்பவில்லை என்று பிறாண்டும் மனசுக்குப் பதில் சொல்லி வச்சேன்.
ஐநூறோ ஆயிரமோ ரெண்டுமே ஒரே மாதிரி கவனிப்பில் கிடக்கு. சீக்கிரம் சீரமைத்தால் நல்லது.கோபுரங்கள் எல்லாம் கருப்பு பிடிச்சுக்கிடக்கே:(
கோவில் உள்ளே நுழைஞ்சதும் பலிபீடம், கொடிமரம் பெரிய திருவடியின் சந்நிதி தரிசனம் ஆச்சு. கருவறை மண்டபத்தில் உள்ளே மூலவர் எப்படி இருக்கார் என்ற விபரமும் கிடைச்சது, கண்ணைக்கொஞ்சம் அகல விரித்தபடி வாங்கன்னு பக்தர்களை அழைக்கும் முகபாவம்.
மரீஷி முனிவருக்கு ராமனாகத் தோன்றி அருள் பாலித்த இடமாம். மூலவர் சந்நிதியில் மரீஷிக்கும் இடமுண்டு. பச்சைக்கலர் எனக்குச் சரியாத் தெரியலை. ஆனால்.... பச்சைதான்னு கோபால் சொன்னார்.
தாயார் பெயர் மரகதவல்லி. கணவருக்கும் மனைவிக்கும் வண்ணப்பொருத்தம் அபாரம்! சந்நிதியைக் க்ளிக்கினால் ஒரு சிறு பெண் வாசலில் நிற்பது தெரிஞ்சது. ஒருவேளை நம்ம தாயாரே சிறுமி வடிவில் நமக்காகக் காத்திருக்காங்களோ!
ப்ரகாரம் சுற்றி வந்தபோது, நிறைய மரங்களுடன் குளுமையாக இருந்துச்சு.
அடடா....... ஒரு இளநீர் வீணாப்போச்சே!
கோவில் கொடிமரத்துக்கருகில் ஒரு தம்பதிகளைச் சந்திச்சோம். ஐயா, மேல்க்கோட்டைப் பெருமாள் கோவில் பட்டர்! அம்மாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதால் விஸிட்டுக்கு வந்துருக்காங்களாம்.அவுங்ககிட்டே பாண்டவதூதர் கோவில் எங்கே இருக்குன்னு விசாரிச்சார் கோபால்.
கங்கைமண்டபத்துக்குச் சமீபம் என்று சொல்லி, அவுங்க வீடும் அங்கேதான். வாங்களேன்னு அழைப்பும் விட்டாங்க. பின்னொருக்கில் ஆகட்டுமுன்னு சொன்னோம். நாளைக்குக் காலையில் மேல்கோட்டைக்கு கிளம்பிருவாங்களாம். அங்கே கோவில் தரிசனத்துக்கு வந்தீங்களான்னு கேட்டார் பட்டர் ஐயா.
இன்னும் இல்லை ன்னு சொன்னோம். (இப்பப் பெருமாள் கூப்புட்டுட்டார். போகத்தான் வேணும்!)
கட்டாயம் வாங்கன்னு சொன்னார். இப்ப நம்முடன் பாண்டவதூதர் கோவிலாண்டை இறக்கி விடமுடியுமான்னு கேட்டதும் மகிழ்ச்சியோடு அவுங்களோடு கிளம்பினோம்.
இந்த ரெண்டு கோவில்களையும் வெறும் அரைமணியில் சுத்தி வந்தது எனக்கு போதலை கேட்டோ:( என்ன அவசர தரிசனமோ!
சொல்ல மறந்துட்டேனே.... கோவில் திறந்திருக்கும் நேரம் காலை எட்டு முதல் பதினொன்னு வரை, மாலை நாலு முதல் ஏழு வரை மட்டுமே.
தொடரும்.........:-)
![]()
ஈரேழு உலகத்துக்கும் முதல் சோஃபா கம் பெட் வச்சுருக்கறவர் நம்ம பெருமாளைத் தவிர வேறயார்?
இங்கேயும் நல்ல சேஷ சோஃபாவில் அமர்ந்த திருக்கோலம். சிவந்த திருமேனி என்பதால் பவழவண்ணர் என்று பெயர். எல்லாம் அந்த ப்ரம்மா சரஸ்வதி எபிஸோடுதான் காரணம். ப்ரம்மாவின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி அனுப்பி வைத்த அசுரர்களோடு யுத்தம் செய்து அவர்களைப் போட்டுத் தள்ளினார் நம்ம விஷ்ணு. அப்போது அசுரர்களின் ரத்தத்துளிகள் இவர் மேனியில் தெறித்து விழுந்து இவரே சிகப்பாகிவிட்டார். அதான் இவர் பவழவண்ணர் ஆன கதை.
சண்டை போட்டக் களைப்பு தீர விஸ்ராந்தியாக உக்கார்ந்துக்கிட்டு இருக்கார் இங்கே!
கோவில் விமானம் ப்ரவாளவிமானம் என்பதால் பெருமாளுக்கு ப்ரவாளவண்ணரென்ற பெயரும் வந்திருக்கலாம்.
தாயார் பவழவல்லி என்ற பெயருடன் இருக்கார்.
காலை எட்டு முதல் பதினொன்னு வரை, மாலை நாலு முதல் ஏழரை மணி வரை கோவில் திறந்திருக்கும்.
பாடல்பெற்ற ஸ்தலம் இது. அதான் அந்த நூற்றியெட்டில் ஒன்னு. கொஞ்சம் நல்லமுறையில் பராமரிக்கக்கூடாதோ?
அஞ்சு நிலை ராஜகோபுரத்துக்குக் கொஞ்சம் வர்ணம்தீட்டினால் நல்லா இருக்கும்.
ஆமாம்....பவழம், பவளம் இதில் எது சரி? ஙே!
கொஞ்சம் மனவருத்தமுடன் பச்சைவண்ணரைப் பார்க்கப் போனோம்.
கோவில்வாசல் திறந்துருக்கு. பெரிய கமலா தெருவாம். கடைகண்ணிகளின் வரிசையில் கோவில் வாசலும் ஒன்னு!
பவழத்தைப் பார்க்க வரும் சனம் பச்சையையும் கையோடு பார்த்துப்போவது வழக்கம். ரெண்டு பேரையும் ஒரே நாளில் தொடர்ந்து தரிசித்தால் புண்ணியம் அதிகம். (அதான் பதிவிலும் ரெண்டையுமே சேர்த்துப்போட்டுருக்கேன். சுலபமாக் கிடைக்கும் புண்ணியத்தை விடலாமா சொல்லுங்க?)
பவழவண்ணரைப் பாடிய ஆழ்வார் ஏன் பச்சைவண்ணரைப் பாடலைன்னு ஒரு சந்தேகம் வருது எனக்கு. இந்தக் கோவிலின் வயசு ஐநூறு என்று சொல்வதில் இருந்து ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு. ஆழ்வார் பவழத்தை ஸேவிக்க வந்தபோது பச்சை இங்கே இல்லை, அதாவது பச்சைக்கு இங்கே கோவிலெழுப்பவில்லை என்று பிறாண்டும் மனசுக்குப் பதில் சொல்லி வச்சேன்.
ஐநூறோ ஆயிரமோ ரெண்டுமே ஒரே மாதிரி கவனிப்பில் கிடக்கு. சீக்கிரம் சீரமைத்தால் நல்லது.கோபுரங்கள் எல்லாம் கருப்பு பிடிச்சுக்கிடக்கே:(
கோவில் உள்ளே நுழைஞ்சதும் பலிபீடம், கொடிமரம் பெரிய திருவடியின் சந்நிதி தரிசனம் ஆச்சு. கருவறை மண்டபத்தில் உள்ளே மூலவர் எப்படி இருக்கார் என்ற விபரமும் கிடைச்சது, கண்ணைக்கொஞ்சம் அகல விரித்தபடி வாங்கன்னு பக்தர்களை அழைக்கும் முகபாவம்.
மரீஷி முனிவருக்கு ராமனாகத் தோன்றி அருள் பாலித்த இடமாம். மூலவர் சந்நிதியில் மரீஷிக்கும் இடமுண்டு. பச்சைக்கலர் எனக்குச் சரியாத் தெரியலை. ஆனால்.... பச்சைதான்னு கோபால் சொன்னார்.
தாயார் பெயர் மரகதவல்லி. கணவருக்கும் மனைவிக்கும் வண்ணப்பொருத்தம் அபாரம்! சந்நிதியைக் க்ளிக்கினால் ஒரு சிறு பெண் வாசலில் நிற்பது தெரிஞ்சது. ஒருவேளை நம்ம தாயாரே சிறுமி வடிவில் நமக்காகக் காத்திருக்காங்களோ!
ப்ரகாரம் சுற்றி வந்தபோது, நிறைய மரங்களுடன் குளுமையாக இருந்துச்சு.
அடடா....... ஒரு இளநீர் வீணாப்போச்சே!
கோவில் கொடிமரத்துக்கருகில் ஒரு தம்பதிகளைச் சந்திச்சோம். ஐயா, மேல்க்கோட்டைப் பெருமாள் கோவில் பட்டர்! அம்மாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதால் விஸிட்டுக்கு வந்துருக்காங்களாம்.அவுங்ககிட்டே பாண்டவதூதர் கோவில் எங்கே இருக்குன்னு விசாரிச்சார் கோபால்.
கங்கைமண்டபத்துக்குச் சமீபம் என்று சொல்லி, அவுங்க வீடும் அங்கேதான். வாங்களேன்னு அழைப்பும் விட்டாங்க. பின்னொருக்கில் ஆகட்டுமுன்னு சொன்னோம். நாளைக்குக் காலையில் மேல்கோட்டைக்கு கிளம்பிருவாங்களாம். அங்கே கோவில் தரிசனத்துக்கு வந்தீங்களான்னு கேட்டார் பட்டர் ஐயா.
இன்னும் இல்லை ன்னு சொன்னோம். (இப்பப் பெருமாள் கூப்புட்டுட்டார். போகத்தான் வேணும்!)
கட்டாயம் வாங்கன்னு சொன்னார். இப்ப நம்முடன் பாண்டவதூதர் கோவிலாண்டை இறக்கி விடமுடியுமான்னு கேட்டதும் மகிழ்ச்சியோடு அவுங்களோடு கிளம்பினோம்.
இந்த ரெண்டு கோவில்களையும் வெறும் அரைமணியில் சுத்தி வந்தது எனக்கு போதலை கேட்டோ:( என்ன அவசர தரிசனமோ!
சொல்ல மறந்துட்டேனே.... கோவில் திறந்திருக்கும் நேரம் காலை எட்டு முதல் பதினொன்னு வரை, மாலை நாலு முதல் ஏழு வரை மட்டுமே.
தொடரும்.........:-)
