நம்ம புள்ளையாரிடம் எனக்கு ரொம்பப்பிடிச்சதே இதுதான். மஞ்சப்பொடியைக் கொஞ்சம் ஈரமாக்கி பிடிச்சு வச்சாலும் அவர் புள்ளையார்தான். கிராமப்புறங்களில் சில சடங்குகளுக்கு வெறும் பசுஞ்சாணகத்தில் கூட ஒரு பிடி அளவு எடுத்துப் பிள்ளையார் பிடிச்சு வைப்பதும் உண்டு. வைரத்துலே செஞ்சாலும் சரி, வெறும் களிமண்ணுலே செஞ்சாலும் சரி அவருக்கு ஒன்னுமே பேதம் இல்லை. பிள்ளையார், புள்ளையார்னு எப்படிக் கூப்ட்டாலும் கூடக் கோச்சுக்கமாட்டார். இழுத்த இழுப்புக்கு வந்துருவார்!
சின்னப்பிள்ளையா இருந்த காலங்களில் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட அச்சு வச்சு செஞ்சு தரும் பிள்ளையார் பொம்மைக் கடைக்குப்போய் களிமண் வாங்கி வருவேன். தாற்காலிகக் கடைதான். அன்றே முளைத்து அன்றே முடிஞ்சுரும் இது.
அண்ணன் பொம்மை செய்வதில் எக்ஸ்பர்ட். அவர் அழகாப் பிள்ளையார் சிலை(! )செஞ்சுட்டுக் கையோடு மூஞ்சூறும் செஞ்சு கொடுப்பார். மீதி இருக்கும் களிமண் எனக்கு. செப்பு செஞ்சுக்குவேன்.
அப்புறம் கல்யாணம் ஆனபிறகு இந்த 41 வருசங்களா, ஃப்ரெஷாக் களிமண் பிள்ளையார் வாங்குனதில்லை. சென்னையில் இருந்த ஒரு சமயம் ஆசைஆசையா பிள்ளையார் வாங்குனது தவிர. அதைப்பற்றி அப்பவே எழுதியும் ஆச்சு:-)
இங்கே நியூஸியில் இதெல்லாம் கனவுன்னே இருந்தேன். ஒருமுறை க்ராஃப்ட் ஷோ பார்க்கப்போனபோது அங்கே பாட்டரி வேலைகளும் வகுப்புகளும் எடுத்துக்கிட்டு இருக்கும் இடம் பார்த்தேன். எப்போ? அதான் சம்மரில் ஒட்டைச்சிவிங்கி பார்க்கப்போனோமே அப்போ! அது ஆச்சே ஒரு ஆறேழு மாசம். சரியாச் சொன்னால் ஃபிப்ரவரி 8, 2015.
அங்கே வெள்ளைக் களிமண் வச்சு பொருட்கள் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பார்வையாளர்களையும் களிமண் தொட்டுப்பார்க்க அனுமதிச்சும், சில டிசைன்களில் நாமும் பங்கெடுக்கலாமுன்னும் சொன்னது பிடிச்சுருந்தது. அப்போதான் தோணுச்சு, களிமண் கிடைச்சால் நாமே புள்ளையார் செஞ்சுக்கலாமேன்னு. கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டால்..... வேற ஒரு ஊரில் (நியூஸிதான்) இருந்து வருது 20 கிலோ பொதியாகன்னு சொன்னாங்க. அவ்ளோ நமக்கெதுக்கு? கொஞ்சம்னு கை காமிச்சதுக்கு இவ்ளோ போதுமான்னு கேட்டு ஒரு புது பாக்கில் இருந்து நூல் வச்சு வெட்டிக் கொடுத்தாங்க. ஒரு அஞ்சு கிலோ தேறும். 12 டாலர்.
என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டதுக்கு, ஜம்பமா 'எலெஃபெண்ட் காட்'னு அளந்தேன். செஞ்சு முடிச்சதும் கொண்டு வாங்க. இங்கத்துச் சூளையில் சுட்டுத் தர்றோமுன்னாங்க.
வாங்கியாந்து வச்சதுதான். அப்புறம் அப்புறமுன்னு நாட்கள் ஓடியே போனது மிச்சம். அப்பப்பத் தொட்டுப் பார்த்துக்குவேன். காய்ஞ்சு போயிருக்குமோன்னு..... ஊஹூம். விரலுக்கு மெத்துமெத்துன்னுதான் இருந்துச்சு.
இந்த வருசம் ஃப்ளூ காய்ச்சல் குளிர்காலம் முடிஞ்சவுடனே வந்து ஊரையே பாழ்படுத்திக்கிட்டு இருக்கு. இதில் நானும் ஒரு விக்டிம். ரெண்டு வாரமா ஜுரம் அடிச்சு ஓய்ஞ்சு இப்ப வாய்ஸ் இல்லாம ஒரு வாரமாச்சு. எல்லாம் கண் ஜாடை, கை ஜாடைதான். கோபாலைக்கூப்பிட பூஜை மணி ஒன்னு வச்சுருக்கேன் படுக்கைக்குப் பக்கத்தில். இப்பெல்லாம் மணி அடிச்சதும் ரஜ்ஜுகூட என்னன்னு கேக்கறான்:-)
இந்த அழகில் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்னும்தான் செய்யமுடியாதுன்னு இருக்கு. க்ருஷ்ணாஷ்டமியும் அப்படியே போனதுதான் மனக்குறை. ஆனால் புள்ளையார் மட்டும் மனசுக்குள் சந்தோஷப்பட்டு இருப்பார். கொழுக்கட்டை என்ற பெயரில் அவருக்கு நான் செஞ்ச கொடுமைகள் கொஞ்சநஞ்சமா என்ன? ஆனாலும் அவருக்குப் பெரிய மனசு. எப்பவும் மன்னிச்சு....
நேத்துதான் இந்தக் களிமண் இருக்கே. புள்ளையார் செஞ்சு பார்க்கலாமேன்னு எடுத்து வெளியே வச்சேன். அதுக்கு முன்னால் யூட்யூபில் புள்ளையார் செய்யறதைப் பார்த்துக்கிட்டேன்.
அந்தப்புள்ளையாரையே வேண்டிக்கிட்டு, மனசை ஒருமாதிரி திடப்படுத்திக்கிட்டு புள்ளையாரைச் செஞ்சேன். பார்க்கப் புள்ளையார் மாதிரித்தான் இருக்கார். நீளப்பாம்பை திரிச்சு பூநூல் கூடப்போட்டாச்சு:-) ஊரில் இருந்து வாங்கியாந்த ஒரு செட் கண்கள் கூட ஓக்கேதான். லேசா உலர்ந்ததும் கொஞ்சம் அலங்காரங்கள் செய்யணும்.
இப்ப மூஞ்சூறு செஞ்சுக்கணுமே.... பெரியதிருவடி கால்மடிச்சு உக்கார்ந்துருக்கும் போஸ். கண்களுக்குக் குறுமிளகுகள். நீ.....ள வால் புள்ளையாரைச் சுத்திக்கிட்டுப்போகுது. இது அந்த வகை இனம் கேட்டோ:-)))))
கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் நாட் பேட். அதான் சிம்ப்ளிஸிட்டின்னு சொன்னேன் பாருங்க. இவர் யுனீக்கா இருக்கார்!
பத்தாமப்போயிருமோன்னு பயந்து பயந்து செஞ்சதில் இன்னும் பாதிக்களிமண் பாக்கி இருக்கு. இன்னொரு புள்ளையார் செஞ்சால் ஆச்சு. இப்பதான் டெக்னிக் தெரிஞ்சுபோச்சே:-))))
புள்ளையார் கொலு வச்சு, தெரிஞ்சமாதிரி கொழுக்கட்டைக் கொடுமைகள் செய்து, புள்ளையார் பூஜையை முடிச்சுட்டேன். நாள் ஆரம்பிக்கும் நாடு என்பதால் முதல் பூஜை இங்கேதான்!
எண்ணி 11 இனிப்புக்கொழுக்கட்டை , காய்கறிகள் தேங்காய்த்துருவல் சேர்த்தப் நவரத்ன புட்டுக்கொழுக்கட்டை (உப்புப் பலகாரமாம்ப்பா!) கடலைப்பருப்பு சுண்டல், பழங்கள், வாசனை தூக்கலா இருக்கும் நம்ம வீட்டு மல்லிகைகள் (ஏர்லி ச்சியர்ஸ் என்னும் வகை) எல்லாத்துக்கும் மேலா என் அன்பு. போதாதா என்ன?
என்னோடு பேச மாட்டேங்கறா.... ஆனா என்னென்னவோ செஞ்சுக்கிட்டே இருக்காளே இந்த அம்மா! இவளும் என்னைப்போல சைலண்ட் ம்யாவ் போல :-)
விஐபி கள் வந்து சாமி கும்பிட்டாங்க:-)
நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க.
ஹேப்பி பர்த்டே கணேஷா!
![]()
சின்னப்பிள்ளையா இருந்த காலங்களில் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட அச்சு வச்சு செஞ்சு தரும் பிள்ளையார் பொம்மைக் கடைக்குப்போய் களிமண் வாங்கி வருவேன். தாற்காலிகக் கடைதான். அன்றே முளைத்து அன்றே முடிஞ்சுரும் இது.
அண்ணன் பொம்மை செய்வதில் எக்ஸ்பர்ட். அவர் அழகாப் பிள்ளையார் சிலை(! )செஞ்சுட்டுக் கையோடு மூஞ்சூறும் செஞ்சு கொடுப்பார். மீதி இருக்கும் களிமண் எனக்கு. செப்பு செஞ்சுக்குவேன்.
அப்புறம் கல்யாணம் ஆனபிறகு இந்த 41 வருசங்களா, ஃப்ரெஷாக் களிமண் பிள்ளையார் வாங்குனதில்லை. சென்னையில் இருந்த ஒரு சமயம் ஆசைஆசையா பிள்ளையார் வாங்குனது தவிர. அதைப்பற்றி அப்பவே எழுதியும் ஆச்சு:-)
இங்கே நியூஸியில் இதெல்லாம் கனவுன்னே இருந்தேன். ஒருமுறை க்ராஃப்ட் ஷோ பார்க்கப்போனபோது அங்கே பாட்டரி வேலைகளும் வகுப்புகளும் எடுத்துக்கிட்டு இருக்கும் இடம் பார்த்தேன். எப்போ? அதான் சம்மரில் ஒட்டைச்சிவிங்கி பார்க்கப்போனோமே அப்போ! அது ஆச்சே ஒரு ஆறேழு மாசம். சரியாச் சொன்னால் ஃபிப்ரவரி 8, 2015.
அங்கே வெள்ளைக் களிமண் வச்சு பொருட்கள் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பார்வையாளர்களையும் களிமண் தொட்டுப்பார்க்க அனுமதிச்சும், சில டிசைன்களில் நாமும் பங்கெடுக்கலாமுன்னும் சொன்னது பிடிச்சுருந்தது. அப்போதான் தோணுச்சு, களிமண் கிடைச்சால் நாமே புள்ளையார் செஞ்சுக்கலாமேன்னு. கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டால்..... வேற ஒரு ஊரில் (நியூஸிதான்) இருந்து வருது 20 கிலோ பொதியாகன்னு சொன்னாங்க. அவ்ளோ நமக்கெதுக்கு? கொஞ்சம்னு கை காமிச்சதுக்கு இவ்ளோ போதுமான்னு கேட்டு ஒரு புது பாக்கில் இருந்து நூல் வச்சு வெட்டிக் கொடுத்தாங்க. ஒரு அஞ்சு கிலோ தேறும். 12 டாலர்.
என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டதுக்கு, ஜம்பமா 'எலெஃபெண்ட் காட்'னு அளந்தேன். செஞ்சு முடிச்சதும் கொண்டு வாங்க. இங்கத்துச் சூளையில் சுட்டுத் தர்றோமுன்னாங்க.
வாங்கியாந்து வச்சதுதான். அப்புறம் அப்புறமுன்னு நாட்கள் ஓடியே போனது மிச்சம். அப்பப்பத் தொட்டுப் பார்த்துக்குவேன். காய்ஞ்சு போயிருக்குமோன்னு..... ஊஹூம். விரலுக்கு மெத்துமெத்துன்னுதான் இருந்துச்சு.
இந்த வருசம் ஃப்ளூ காய்ச்சல் குளிர்காலம் முடிஞ்சவுடனே வந்து ஊரையே பாழ்படுத்திக்கிட்டு இருக்கு. இதில் நானும் ஒரு விக்டிம். ரெண்டு வாரமா ஜுரம் அடிச்சு ஓய்ஞ்சு இப்ப வாய்ஸ் இல்லாம ஒரு வாரமாச்சு. எல்லாம் கண் ஜாடை, கை ஜாடைதான். கோபாலைக்கூப்பிட பூஜை மணி ஒன்னு வச்சுருக்கேன் படுக்கைக்குப் பக்கத்தில். இப்பெல்லாம் மணி அடிச்சதும் ரஜ்ஜுகூட என்னன்னு கேக்கறான்:-)
இந்த அழகில் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்னும்தான் செய்யமுடியாதுன்னு இருக்கு. க்ருஷ்ணாஷ்டமியும் அப்படியே போனதுதான் மனக்குறை. ஆனால் புள்ளையார் மட்டும் மனசுக்குள் சந்தோஷப்பட்டு இருப்பார். கொழுக்கட்டை என்ற பெயரில் அவருக்கு நான் செஞ்ச கொடுமைகள் கொஞ்சநஞ்சமா என்ன? ஆனாலும் அவருக்குப் பெரிய மனசு. எப்பவும் மன்னிச்சு....
நேத்துதான் இந்தக் களிமண் இருக்கே. புள்ளையார் செஞ்சு பார்க்கலாமேன்னு எடுத்து வெளியே வச்சேன். அதுக்கு முன்னால் யூட்யூபில் புள்ளையார் செய்யறதைப் பார்த்துக்கிட்டேன்.
அந்தப்புள்ளையாரையே வேண்டிக்கிட்டு, மனசை ஒருமாதிரி திடப்படுத்திக்கிட்டு புள்ளையாரைச் செஞ்சேன். பார்க்கப் புள்ளையார் மாதிரித்தான் இருக்கார். நீளப்பாம்பை திரிச்சு பூநூல் கூடப்போட்டாச்சு:-) ஊரில் இருந்து வாங்கியாந்த ஒரு செட் கண்கள் கூட ஓக்கேதான். லேசா உலர்ந்ததும் கொஞ்சம் அலங்காரங்கள் செய்யணும்.
இப்ப மூஞ்சூறு செஞ்சுக்கணுமே.... பெரியதிருவடி கால்மடிச்சு உக்கார்ந்துருக்கும் போஸ். கண்களுக்குக் குறுமிளகுகள். நீ.....ள வால் புள்ளையாரைச் சுத்திக்கிட்டுப்போகுது. இது அந்த வகை இனம் கேட்டோ:-)))))
கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் நாட் பேட். அதான் சிம்ப்ளிஸிட்டின்னு சொன்னேன் பாருங்க. இவர் யுனீக்கா இருக்கார்!
பத்தாமப்போயிருமோன்னு பயந்து பயந்து செஞ்சதில் இன்னும் பாதிக்களிமண் பாக்கி இருக்கு. இன்னொரு புள்ளையார் செஞ்சால் ஆச்சு. இப்பதான் டெக்னிக் தெரிஞ்சுபோச்சே:-))))
புள்ளையார் கொலு வச்சு, தெரிஞ்சமாதிரி கொழுக்கட்டைக் கொடுமைகள் செய்து, புள்ளையார் பூஜையை முடிச்சுட்டேன். நாள் ஆரம்பிக்கும் நாடு என்பதால் முதல் பூஜை இங்கேதான்!
எண்ணி 11 இனிப்புக்கொழுக்கட்டை , காய்கறிகள் தேங்காய்த்துருவல் சேர்த்தப் நவரத்ன புட்டுக்கொழுக்கட்டை (உப்புப் பலகாரமாம்ப்பா!) கடலைப்பருப்பு சுண்டல், பழங்கள், வாசனை தூக்கலா இருக்கும் நம்ம வீட்டு மல்லிகைகள் (ஏர்லி ச்சியர்ஸ் என்னும் வகை) எல்லாத்துக்கும் மேலா என் அன்பு. போதாதா என்ன?
என்னோடு பேச மாட்டேங்கறா.... ஆனா என்னென்னவோ செஞ்சுக்கிட்டே இருக்காளே இந்த அம்மா! இவளும் என்னைப்போல சைலண்ட் ம்யாவ் போல :-)
விஐபி கள் வந்து சாமி கும்பிட்டாங்க:-)
நண்பர்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க.
ஹேப்பி பர்த்டே கணேஷா!
