நம்ம வீட்டு எலுமிச்சம்பழச் செடியில் காய்ச்சுப் பழுத்த எலுமிச்சம்பழங்களைப் பறிக்காமல் விட்டு வச்சேன். ஒரு அலங்காரமாத்தான் இருக்கட்டுமே! செடிக்கு வயசு நாலு. இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பார்த்தால்..... நம்ம வீட்டுச்செடிகள், தோட்டம் எல்லாமே போயிருந்துச்சு. பார்த்துப் பார்த்து வச்ச செடிகள் எல்லாம், நம்ம இடப்பெயர்ச்சி, ரெண்டரை வருசத்தில் பராமரிப்பு இல்லாம எல்லாம் காலி. வாடகைக்கு இருந்தவர்களின் கைங்கரியம் :-(
இப்ப இருப்பவை எல்லாம் அதுக்குப்பிறகு வாங்கி வச்சவைகளே. அதிலும் இந்த எலுமிச்சம் செடி இருக்கே... அதுவும், கறிவேப்பிலையும், வாழையும் வருசாவருசம் செத்துப்பிழைக்கும் வகை. குளிரில் மண்டையைப் போட்டுரும். வசந்ததில் வந்துரும். அதனால் வாழை வச்சு 12 வருசமாகியும் குலை தள்ளலை. மார்க்கண்டேயன் வம்சம்!
நம்ம எலுமிச்சை மெயர் வகை. Meyer . தடித்த தோலுடன் இருக்கும்.
இப்படியாக எலுமிச்சம்பழங்களோடு இருந்த செடியில் இருந்து ஒரு பழத்தைப் பறித்து வந்து ஊறுகாய் போட்டேன். (செடியில் மொத்தமே மூணே பழங்கள் தான்!)
கடை ஊறுகாய்தான் எப்போதும் வாங்குவது. நம்ம வீட்டில் ஊறுகாய் ப்ரேமி நம்ம கோபால்தான். அதுவே போதும் போன்னு ...... ஆனாலும் அதுலே நிறைய ப்ரிஸர்வேடிவ் சேர்ப்பதாலோ என்னவோ ஒரே புளிப்பு. நீண்டநாள் ஷெல்ஃப் லைஃப் காரணமாக இருக்கலாம்.
நம்ம இண்டியன் கடைகள் ஒன்றில் (இப்ப நாலு கடைகள் இருக்கு !)ஊறுகாய் மசாலா கிடைச்சது. அதை வச்சு தயாரிச்ச ஊறுகாய் இப்ப வீட்டில் எல்லாருக்கும்(!) ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இனி கடை ஊறுகாய் வேணாமுன்னு சொல்லிட்டாங்கப்பா!
உப்புப் போட்டு நம்மூரில், சிலபல நாட்கள் வெய்யிலில் வச்சு எடுத்து அப்புறமா ஊறுகாய் போடும் தினுசு இல்லைப்பா. எல்லாம் இன்ஸ்டண்ட்:-)
செய்முறை பார்க்கலாமா?
வரிசையாப் படங்களைப் பார்த்துட்டு, சமையல்குறிப்பைப் படிக்கலாம்:-)
சமையல் குறிப்பு:
தேவையான பொருட்கள் :
எலுமிச்சம்பழம் 1 (இந்தியா எலுமிச்சைன்னா 3 போட்டுக்குங்க)
ஊறுகாய் மசாலா (ரெடிமேட்) 2 டேபிள் ஸ்பூன்
உப்பு 1+ 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தியப்பொடி 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்.
நல்லெண்ணெய் 1/4 கப்
கடுகு 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
எலுமிச்சம்பழத்தை நல்லா கழுவிட்டுத் துண்டுதுண்டாக நறுக்கிக்கணும். விதைகள் இருந்தால் எடுத்துடலாம். உப்பு சேர்த்து அதை ஒரு கடாயில் போட்டுச் சிறுதீயில் அஞ்சு நிமிசம் வேகவிடலாம். (வெயிலில் சிலநாட்கள் வச்சு எடுத்த மாதிரி இருக்கும் இப்போ!)
கொஞ்சம் சூடு ஆறினதும், அதுலே ஊறுகாய் மசாலாவைச் சேர்த்துக் கலக்கி வச்சுடணும்.
இன்னொரு கடாயில் கொஞ்சம் (2 டீஸ்பூன்) எண்ணெய் ஊத்தி அது சூடானதும் கடுகுபோட்டு வெடிக்கவிட்டுட்டு, அடுப்பை அணைச்சுடலாம்.
உடனே அந்த எண்ணெயிலேயே பெருங்காயப்பொடியைச் சேர்ந்து லேசா வதக்கிட்டு, கூடவே வறுத்து அரைச்சு வச்சுருக்கும் வெந்தியப்பொடியையும் சேர்த்து ஒரு கலக்கு.
இப்ப இந்த தாளிப்பு சமாச்சாரத்தை மசாலா சேர்த்த எலுமிச்சம்பழம் இருக்கும் கடாயில் கொட்டிக் கலக்கணும்.
அப்புறம் இதே தாளிப்பு செஞ்ச கடாயை அடுப்பில் ஏத்தி, அந்தக் கால் கப்பு நல்லெண்ணெயில் மீதம் இருப்பதை ஊற்றிக் காயவிட்டு, லேசாப் புகை வரும் அளவுக்குச் சூடானதும் அடுப்பை அணைச்சுடலாம். கொஞ்ச நேரம் ஆறவிட்டு, இன்னொரு கடாயில் இருக்கும் கலவையில் ஊற்றிக் கலக்கினால்......
ட்டடா....... ஊறுகாய் ரெடி.
ஃப்ரிஜ்ஜில் வச்சுப் பயன்படுத்தினால் நாலைஞ்சு நாளைக்குக் கெடாமல் இருக்கும்.(அதுவரை பாக்கி இருந்தால்!)
இப்படி ஆரம்பிச்ச ஊறுகாய் தயாரிப்பு, காலப்போக்கில் கடையில் வாங்கிய நாலைஞ்சு எலுமிச்சம்பழம் வரை வளர்ந்துபோச்சு. அப்புறம் ஒருநாள் ஊறுகாய் செஞ்ச மூணாம் நாள் பயணம் ஒன்னு போகவேண்டி இருந்துச்சு. ஐஸ் க்யூப் ட்ரேயில் பாக்கி இருந்த ஊறுகாயை நிரப்பி ஃப்ரீஸ் செஞ்சேன். மறுநாள் அதை எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுட்டு ஊருக்குப்போயாச்.
திரும்பி வந்தபின் ஒரு நாள் , தயிர் சோத்துக்குத் தொட்டுக்கலாமேன்னு ஒரு க்யூபை மட்டும் எடுத்து ஒரு சாஸரில் வச்சேன். அரைமணி ஆனதும் பார்த்தால்.... டீஃப்ராஸ்ட் ஆகி தின்னும் பக்குவத்தில் இருந்துச்சு.
தின்னு பார்த்தால்.... என்னமோ இன்றைக்குத்தான் செஞ்சதுபோல் ! ருசியில் ஒரு மாற்றமும் இல்லை. சூப்பரோ சூப்பர்!
ஊறுகாயைப் ஃபீரீஸ் செஞ்சுக்கலாமுன்னு தெரிஞ்சது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
எஞ்சாய் த ஊறுகாய் எனி டைம்!
![]()
இப்ப இருப்பவை எல்லாம் அதுக்குப்பிறகு வாங்கி வச்சவைகளே. அதிலும் இந்த எலுமிச்சம் செடி இருக்கே... அதுவும், கறிவேப்பிலையும், வாழையும் வருசாவருசம் செத்துப்பிழைக்கும் வகை. குளிரில் மண்டையைப் போட்டுரும். வசந்ததில் வந்துரும். அதனால் வாழை வச்சு 12 வருசமாகியும் குலை தள்ளலை. மார்க்கண்டேயன் வம்சம்!
நம்ம எலுமிச்சை மெயர் வகை. Meyer . தடித்த தோலுடன் இருக்கும்.
இப்படியாக எலுமிச்சம்பழங்களோடு இருந்த செடியில் இருந்து ஒரு பழத்தைப் பறித்து வந்து ஊறுகாய் போட்டேன். (செடியில் மொத்தமே மூணே பழங்கள் தான்!)
கடை ஊறுகாய்தான் எப்போதும் வாங்குவது. நம்ம வீட்டில் ஊறுகாய் ப்ரேமி நம்ம கோபால்தான். அதுவே போதும் போன்னு ...... ஆனாலும் அதுலே நிறைய ப்ரிஸர்வேடிவ் சேர்ப்பதாலோ என்னவோ ஒரே புளிப்பு. நீண்டநாள் ஷெல்ஃப் லைஃப் காரணமாக இருக்கலாம்.
நம்ம இண்டியன் கடைகள் ஒன்றில் (இப்ப நாலு கடைகள் இருக்கு !)ஊறுகாய் மசாலா கிடைச்சது. அதை வச்சு தயாரிச்ச ஊறுகாய் இப்ப வீட்டில் எல்லாருக்கும்(!) ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இனி கடை ஊறுகாய் வேணாமுன்னு சொல்லிட்டாங்கப்பா!
உப்புப் போட்டு நம்மூரில், சிலபல நாட்கள் வெய்யிலில் வச்சு எடுத்து அப்புறமா ஊறுகாய் போடும் தினுசு இல்லைப்பா. எல்லாம் இன்ஸ்டண்ட்:-)
செய்முறை பார்க்கலாமா?
வரிசையாப் படங்களைப் பார்த்துட்டு, சமையல்குறிப்பைப் படிக்கலாம்:-)
சமையல் குறிப்பு:
ஈஸி பீஸி எலுமிச்சம்பழ ஊறுகாய்!
தேவையான பொருட்கள் :
எலுமிச்சம்பழம் 1 (இந்தியா எலுமிச்சைன்னா 3 போட்டுக்குங்க)
ஊறுகாய் மசாலா (ரெடிமேட்) 2 டேபிள் ஸ்பூன்
உப்பு 1+ 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தியப்பொடி 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 டீஸ்பூன்.
நல்லெண்ணெய் 1/4 கப்
கடுகு 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
எலுமிச்சம்பழத்தை நல்லா கழுவிட்டுத் துண்டுதுண்டாக நறுக்கிக்கணும். விதைகள் இருந்தால் எடுத்துடலாம். உப்பு சேர்த்து அதை ஒரு கடாயில் போட்டுச் சிறுதீயில் அஞ்சு நிமிசம் வேகவிடலாம். (வெயிலில் சிலநாட்கள் வச்சு எடுத்த மாதிரி இருக்கும் இப்போ!)
கொஞ்சம் சூடு ஆறினதும், அதுலே ஊறுகாய் மசாலாவைச் சேர்த்துக் கலக்கி வச்சுடணும்.
இன்னொரு கடாயில் கொஞ்சம் (2 டீஸ்பூன்) எண்ணெய் ஊத்தி அது சூடானதும் கடுகுபோட்டு வெடிக்கவிட்டுட்டு, அடுப்பை அணைச்சுடலாம்.
உடனே அந்த எண்ணெயிலேயே பெருங்காயப்பொடியைச் சேர்ந்து லேசா வதக்கிட்டு, கூடவே வறுத்து அரைச்சு வச்சுருக்கும் வெந்தியப்பொடியையும் சேர்த்து ஒரு கலக்கு.
இப்ப இந்த தாளிப்பு சமாச்சாரத்தை மசாலா சேர்த்த எலுமிச்சம்பழம் இருக்கும் கடாயில் கொட்டிக் கலக்கணும்.
அப்புறம் இதே தாளிப்பு செஞ்ச கடாயை அடுப்பில் ஏத்தி, அந்தக் கால் கப்பு நல்லெண்ணெயில் மீதம் இருப்பதை ஊற்றிக் காயவிட்டு, லேசாப் புகை வரும் அளவுக்குச் சூடானதும் அடுப்பை அணைச்சுடலாம். கொஞ்ச நேரம் ஆறவிட்டு, இன்னொரு கடாயில் இருக்கும் கலவையில் ஊற்றிக் கலக்கினால்......
ட்டடா....... ஊறுகாய் ரெடி.
ஃப்ரிஜ்ஜில் வச்சுப் பயன்படுத்தினால் நாலைஞ்சு நாளைக்குக் கெடாமல் இருக்கும்.(அதுவரை பாக்கி இருந்தால்!)
இப்படி ஆரம்பிச்ச ஊறுகாய் தயாரிப்பு, காலப்போக்கில் கடையில் வாங்கிய நாலைஞ்சு எலுமிச்சம்பழம் வரை வளர்ந்துபோச்சு. அப்புறம் ஒருநாள் ஊறுகாய் செஞ்ச மூணாம் நாள் பயணம் ஒன்னு போகவேண்டி இருந்துச்சு. ஐஸ் க்யூப் ட்ரேயில் பாக்கி இருந்த ஊறுகாயை நிரப்பி ஃப்ரீஸ் செஞ்சேன். மறுநாள் அதை எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுட்டு ஊருக்குப்போயாச்.
திரும்பி வந்தபின் ஒரு நாள் , தயிர் சோத்துக்குத் தொட்டுக்கலாமேன்னு ஒரு க்யூபை மட்டும் எடுத்து ஒரு சாஸரில் வச்சேன். அரைமணி ஆனதும் பார்த்தால்.... டீஃப்ராஸ்ட் ஆகி தின்னும் பக்குவத்தில் இருந்துச்சு.
தின்னு பார்த்தால்.... என்னமோ இன்றைக்குத்தான் செஞ்சதுபோல் ! ருசியில் ஒரு மாற்றமும் இல்லை. சூப்பரோ சூப்பர்!
ஊறுகாயைப் ஃபீரீஸ் செஞ்சுக்கலாமுன்னு தெரிஞ்சது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
எஞ்சாய் த ஊறுகாய் எனி டைம்!
