உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு வாசகர் துளசிதளத்துக்கு வந்து போறார். தனிமடலில் மட்டும் தொடர்பு. என்னை சந்திக்கணுமுன்னு ஒரு ஆவல். பயணக்கட்டுரைகளை வாசிச்சதும், 'வந்துட்டுப் போயிருக்கீங்க, என்னிடம் சொல்லவே இல்லையே'ன்னு மடல் அனுப்புவார். இப்படிப் பலமுறைகள்! அதனால் இந்த முறை சந்திக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு.
அந்த நன்னாள் இன்றுதான் என்பதால் இன்னொரு 'முக்கியமான வேலை'யைக் கொஞ்சம் தள்ளிப் போட்டுருந்தேன். அவரும் வேலைக்குப் போகுமுன் வர்றதாச் சொல்லி இருந்தார். சொன்னபடியே சொன்ன நேரத்துக்குச் சரியா வந்தார் அனந்து.
உடம்பொறந்தாளைப் பார்க்கப்போகும் உடம்பொறந்தான் தான்! கையில் இனிப்பு, காரம், மல்லிகைப்பூ! எனக்கு மனசே குழைஞ்சு போச்சு!
எதோ அடிபட்டுக் கை தொட்டிலில் கிடந்தது :-(
முதல்முறை சந்திக்கும் வாசகர் என்ற எண்ணமே தோணலை. வீட்டு, நாட்டு விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம். நெடுநாள் எண்ணம் நிறைவேறின ஒரு அபூர்வ திருப்தியும் பரவசமும் முகத்தில் தெரிஞ்சது போல எனக்கொரு தோணல். எங்களுக்கு நம்ம பூனா வாழ்க்கையில் குருசாமி என்றொரு நண்பர் இருந்தார். அவரை சந்திச்சதுபோல் இருக்கேன்னு நினைச்சால், கோபாலும் இதையே சொல்றார்!
எதோ பூர்வஜென்மத்து பந்தம்போலத்தான் இந்த பதிவர் வாசக உறவுகள்! ஒரு மணி நேரம் போனதும் தெரியலை. அடுத்தமுறை வீட்டுக்கு வரணும் என்பதோடு விடைபெற்றுப் போனார்.
நாங்களும் கிளம்பி அண்ணன் வீட்டுக்குப் போனோம். முகலிவாக்கம். அங்கே சூடா ஒரு காஃபியை அண்ணி கையால் குடிச்சுட்டு, நேற்றே போட்ட திட்டத்தின்படி வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போய்ச் சேர்ந்தோம். வெளியே லுக் இல்லையே தவிர உட்புறம் நல்லாவே இருக்கு. சென்னையின் புதியமால் இது. இன்னும் வெளி அலங்காரம் முடியலை போல! பெயருக்கேத்தாற்போல் உயிர்த்தெழட்டும்!
வேளச்சேரி இப்ப தி.நகருக்குப் போட்டியா உருவாகுதுபோல. அங்குள்ளவை அனைத்தும் இங்கேயும்!
எனக்கொரு மோதிரம் வாங்கித்தரணுமுன்னு நம்ம கோபாலுக்குத் தாங்க முடியாத ஆசை:-) அதுவும் வைரமாத்தான் இருக்கணுமுன்னு நிர்ப்பந்தம் பிடிக்கிறார்! நாப்பதாவது திருமணநாள் வந்தப்போ, நியூஸியில் வேணாம். அஞ்சு மாசத்தில் இந்தியா போறோமே அப்ப வாங்கித்தாங்கன்னு தள்ளிப் போட்டுருந்தேன்.(சரியான கைகேயி!)
தி நகர் ஏரியாவில் ஒரு சில கடைகளில் தேடியும் மனசுக்குப் பிடிக்காமல் போனதால் அண்ணி வாங்குன கடையில் பார்க்கலாமுன்னு இங்கே வந்து இருக்கோம். சரியானதும் ஆப்ட்டது!
ஆனாலும் அண்ணி போட்டுருக்கும் டிஸைன் சூப்பரா இருக்குல்லே!
பகல் சாப்பாட்டை இங்கேயே முடிச்சுக்கலாமுன்னு ராஜ்தானி போனால் செவ்வாய் தோறும் தாலி(யாம்!) நல்ல ருசியான சாப்பாடுன்னு அண்ணன் சொன்னார். மூத்தோரின் முன் அனுபவங்கள்!
சும்மாச் சொல்லப்டாது....ராஜ்தானியில் ராஜ உபச்சாரம்தான்! ராஜஸ்தான், குஜராத் உணவு வகைகள். அன்லிமிட்டட். ஆனால் நமக்கு என்ன ரெண்டு வயிறா இருக்கு?
மாலில் அங்கங்கே அலங்காரமா வச்சுருக்கும் மறுசுழற்சி முறையில் செய்யப்பட்ட சில சமாச்சாரங்கள் நல்லாவே இருக்கு.
மனீஷ் நய் சின்ன வயசுக்காரர். அவரோட ஐடியாக்களுக்கு அங்கீகாரமும் கிடைச்சுருக்கு! (கீழே படம்)
அண்ணன் வீட்டில் கொஞ்சம் வேலை செய்ய எலக்ட்ரீஷியன் வர்றதாச் சொல்லி இருந்தார். இப்ப விட்டா மறுபடி ஆளைப்பிடிக்க முடியாதேன்னு கிளம்பிட்டோம். அண்ணி வீட்டை ரொம்ப அழகா வச்சுருப்பாங்க. எனக்கு பலவகைகளில் இன்ஸ்ப்ரேஷனே அவுங்கதான்! எந்த ஒரு வேலையையும் முகம் சுளிக்காமல் நறுவிசா செய்யும் பாங்கு! எதுக்கும் அலட்டிக்காமல் 'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னுடுவாங்க. எனக்கு இது மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது. மூஞ்சைத் தூக்கி வச்சுக்குவேன் :-)
அண்ணனையும் அண்ணியையும் அவுங்க வீட்டில் விட்டுட்டு அறைக்குத் திரும்பினதும் கொஞ்சமா ஒரு ஓய்வு. நமக்கும் சென்னையை விட்டுக் கிளம்பும் நாள் நெருங்குவதால் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கணும்.
மயிலைக்குப்போய் நம்ம விஜயா ஸ்டோர்ஸில் கொஞ்சம் சாமி சாமான்கள் வாங்கிக்கணும். அப்படியே எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ போய் மகளுக்கு சில அலங்காரப் பொருட்கள்.
சுத்திப் பார்த்தபோது ஒரு கைவினைப்பொருட்கள் கடை என் கண்ணில் பட்டது. நிறைய அலங்காரப்பொருட்கள். 50% ஆஃப் ஸேல் ஐட்டம் பகுதியில் கொஞ்சம் யானைகள் இருக்கு. எல்லாம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் வகைகள்தான். ஒரு ஹரிக்கேன் விளக்கு பார்க்க நல்லாவே இருந்துச்சு.
மார்பிள் வகை. ராஜஸ்தான் சரக்கு. குமிழைத் திருப்பினா வெளிச்சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியுது. கொலுவுக்கு இருக்கட்டுமுன்னு வாங்கினேன். இது போன்ற சமயங்களில் கோபாலோடு ஐ கான்டாக்ட் கூடவேகூடாது :-)
பாண்டிச்சேரியில் நம்ம புள்ளையார் கோவில் கடையில் பார்த்தவகையில் பொம்மை ஒன்னு இங்கே இருந்துச்சு. நாட்டியப் பெண்மணி. ஆனால் வேற போஸ். ப்ச்..... வேணாம். இதை மட்டும் கோபாலிடம் சொல்லணும். "நல்லாத்தான் இருக்கு. ஆனால் வேணாம்." போகட்டும்.... மனசமாதானம் அடையட்டுமே!
அங்கிருந்து கிளம்புமுன் சீனிவாசனுக்கு தகவல் சொல்லணும். மாலில் பார்க்கிங் கொள்ளை இருப்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு வெளியே வேறெங்காவது பார்க் பண்ணிக்கறேன். நீங்க ஃபோன் பண்ணதும் வரேன்னார். எப்படியும் ஒரு மாலுக்குள்ளே நுழைஞ்சால் ரெண்டு மணி நேரம் ஆகிருமேன்னு வேணுமுன்னா வீடுவரை போய் வாங்களேன்னதுக்கு சரின்னார்.
அதே போல ஃபோன் செஞ்ச பத்தாவது நிமிட் வந்துட்டார். நாம் இப்போ ஒரு மூத்த பதிவரை சந்திக்கப்போறோம். மூத்த என்றால் வயதில். பதிவுலக அனுபவத்தில் இல்லை. இப்பெல்லாம் பதிவு எழுதறதே இல்லை. ஏழுவருசம் ஆச்சு :-( இவரும் இவர் குடும்பம் முழுசும் என்னை தத்து எடுத்துக்கிட்டாங்க. எனக்கு இன்னொரு அண்ணன், சிவஞானம்ஜி.
வரேன்னு கூப்பிட்டுச் சொன்னதும்.... போய்ச்சேருமுன் வாசலுக்கும் உள்ளுக்குமா பத்துதடவை நடந்து எட்டிப் பார்க்கும் அன்புக்கு என்ன கைமாறு?
அண்ணி ஊருக்குப்போயிருக்காங்க, மகள் வீட்டுக்கு. இங்கே வீட்டையும் மாமனாரையும் பார்த்துக்க மகன், மருமகள் இருக்காங்க என்பதால் கவலை இல்லை. பொழுது போக இருக்கவே இருக்கான் பேரன்!! இவன் ஒரு டிவி ப்ரேமி. பார்க்கணும் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. அதுபாட்டுக்கு கத்திக்கிட்டு இருந்தால் போதும். தாத்தாவை விட டிவி நல்லாப் பேசுதுன்னு நினைப்போ! அன்றைக்குப் பக்கத்து ஃப்ளாட் நண்பனும் தன் அம்மாவோடு அங்கே இருந்தாலும் அவரவர் விளையாட்டு அவரவருக்கு! பின்னணி மட்டும் ஒன்னுதான். டிவி :-)
அதிகநேரம் தங்கலை. முக்காமணிக்கூறுதான். அடுத்த பயணத்தில் அங்கே போய் சாப்பிடணும். அண்ணியும் வந்துருவாங்க. அண்ணனுக்கு அவ்வளவா உடம்பு முடியலையாம். அதான் எழுதறதே இல்லைன்னார். ஆனால் துளசிதளம் மட்டும் அப்டுடேட் வாசிப்பு.
இப்படியாக அன்றைய தினம் அருமை ! எழுதுறவங்களுக்கு வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன?
இந்தப்பதிவை நேத்து இரவு எழுதி வச்சேன். காலையில் அண்ணன் சிஜி (சிவஞானம்ஜி) யின் மெயில் வருது நலமான்னு கேட்டு! டெலிபதி......!!! ஆயுசு 100ன்னு பதில் போட்டேன்.
தொடரும்.......:-)
![]()
அந்த நன்னாள் இன்றுதான் என்பதால் இன்னொரு 'முக்கியமான வேலை'யைக் கொஞ்சம் தள்ளிப் போட்டுருந்தேன். அவரும் வேலைக்குப் போகுமுன் வர்றதாச் சொல்லி இருந்தார். சொன்னபடியே சொன்ன நேரத்துக்குச் சரியா வந்தார் அனந்து.
உடம்பொறந்தாளைப் பார்க்கப்போகும் உடம்பொறந்தான் தான்! கையில் இனிப்பு, காரம், மல்லிகைப்பூ! எனக்கு மனசே குழைஞ்சு போச்சு!
எதோ அடிபட்டுக் கை தொட்டிலில் கிடந்தது :-(
முதல்முறை சந்திக்கும் வாசகர் என்ற எண்ணமே தோணலை. வீட்டு, நாட்டு விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம். நெடுநாள் எண்ணம் நிறைவேறின ஒரு அபூர்வ திருப்தியும் பரவசமும் முகத்தில் தெரிஞ்சது போல எனக்கொரு தோணல். எங்களுக்கு நம்ம பூனா வாழ்க்கையில் குருசாமி என்றொரு நண்பர் இருந்தார். அவரை சந்திச்சதுபோல் இருக்கேன்னு நினைச்சால், கோபாலும் இதையே சொல்றார்!
எதோ பூர்வஜென்மத்து பந்தம்போலத்தான் இந்த பதிவர் வாசக உறவுகள்! ஒரு மணி நேரம் போனதும் தெரியலை. அடுத்தமுறை வீட்டுக்கு வரணும் என்பதோடு விடைபெற்றுப் போனார்.
நாங்களும் கிளம்பி அண்ணன் வீட்டுக்குப் போனோம். முகலிவாக்கம். அங்கே சூடா ஒரு காஃபியை அண்ணி கையால் குடிச்சுட்டு, நேற்றே போட்ட திட்டத்தின்படி வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் போய்ச் சேர்ந்தோம். வெளியே லுக் இல்லையே தவிர உட்புறம் நல்லாவே இருக்கு. சென்னையின் புதியமால் இது. இன்னும் வெளி அலங்காரம் முடியலை போல! பெயருக்கேத்தாற்போல் உயிர்த்தெழட்டும்!
வேளச்சேரி இப்ப தி.நகருக்குப் போட்டியா உருவாகுதுபோல. அங்குள்ளவை அனைத்தும் இங்கேயும்!
தி நகர் ஏரியாவில் ஒரு சில கடைகளில் தேடியும் மனசுக்குப் பிடிக்காமல் போனதால் அண்ணி வாங்குன கடையில் பார்க்கலாமுன்னு இங்கே வந்து இருக்கோம். சரியானதும் ஆப்ட்டது!
ஆனாலும் அண்ணி போட்டுருக்கும் டிஸைன் சூப்பரா இருக்குல்லே!
பகல் சாப்பாட்டை இங்கேயே முடிச்சுக்கலாமுன்னு ராஜ்தானி போனால் செவ்வாய் தோறும் தாலி(யாம்!) நல்ல ருசியான சாப்பாடுன்னு அண்ணன் சொன்னார். மூத்தோரின் முன் அனுபவங்கள்!
சும்மாச் சொல்லப்டாது....ராஜ்தானியில் ராஜ உபச்சாரம்தான்! ராஜஸ்தான், குஜராத் உணவு வகைகள். அன்லிமிட்டட். ஆனால் நமக்கு என்ன ரெண்டு வயிறா இருக்கு?
மாலில் அங்கங்கே அலங்காரமா வச்சுருக்கும் மறுசுழற்சி முறையில் செய்யப்பட்ட சில சமாச்சாரங்கள் நல்லாவே இருக்கு.
மனீஷ் நய் சின்ன வயசுக்காரர். அவரோட ஐடியாக்களுக்கு அங்கீகாரமும் கிடைச்சுருக்கு! (கீழே படம்)
அண்ணன் வீட்டில் கொஞ்சம் வேலை செய்ய எலக்ட்ரீஷியன் வர்றதாச் சொல்லி இருந்தார். இப்ப விட்டா மறுபடி ஆளைப்பிடிக்க முடியாதேன்னு கிளம்பிட்டோம். அண்ணி வீட்டை ரொம்ப அழகா வச்சுருப்பாங்க. எனக்கு பலவகைகளில் இன்ஸ்ப்ரேஷனே அவுங்கதான்! எந்த ஒரு வேலையையும் முகம் சுளிக்காமல் நறுவிசா செய்யும் பாங்கு! எதுக்கும் அலட்டிக்காமல் 'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னுடுவாங்க. எனக்கு இது மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது. மூஞ்சைத் தூக்கி வச்சுக்குவேன் :-)
அண்ணனையும் அண்ணியையும் அவுங்க வீட்டில் விட்டுட்டு அறைக்குத் திரும்பினதும் கொஞ்சமா ஒரு ஓய்வு. நமக்கும் சென்னையை விட்டுக் கிளம்பும் நாள் நெருங்குவதால் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கணும்.
மயிலைக்குப்போய் நம்ம விஜயா ஸ்டோர்ஸில் கொஞ்சம் சாமி சாமான்கள் வாங்கிக்கணும். அப்படியே எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ போய் மகளுக்கு சில அலங்காரப் பொருட்கள்.
சுத்திப் பார்த்தபோது ஒரு கைவினைப்பொருட்கள் கடை என் கண்ணில் பட்டது. நிறைய அலங்காரப்பொருட்கள். 50% ஆஃப் ஸேல் ஐட்டம் பகுதியில் கொஞ்சம் யானைகள் இருக்கு. எல்லாம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் வகைகள்தான். ஒரு ஹரிக்கேன் விளக்கு பார்க்க நல்லாவே இருந்துச்சு.
மார்பிள் வகை. ராஜஸ்தான் சரக்கு. குமிழைத் திருப்பினா வெளிச்சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியுது. கொலுவுக்கு இருக்கட்டுமுன்னு வாங்கினேன். இது போன்ற சமயங்களில் கோபாலோடு ஐ கான்டாக்ட் கூடவேகூடாது :-)
பாண்டிச்சேரியில் நம்ம புள்ளையார் கோவில் கடையில் பார்த்தவகையில் பொம்மை ஒன்னு இங்கே இருந்துச்சு. நாட்டியப் பெண்மணி. ஆனால் வேற போஸ். ப்ச்..... வேணாம். இதை மட்டும் கோபாலிடம் சொல்லணும். "நல்லாத்தான் இருக்கு. ஆனால் வேணாம்." போகட்டும்.... மனசமாதானம் அடையட்டுமே!
அங்கிருந்து கிளம்புமுன் சீனிவாசனுக்கு தகவல் சொல்லணும். மாலில் பார்க்கிங் கொள்ளை இருப்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு வெளியே வேறெங்காவது பார்க் பண்ணிக்கறேன். நீங்க ஃபோன் பண்ணதும் வரேன்னார். எப்படியும் ஒரு மாலுக்குள்ளே நுழைஞ்சால் ரெண்டு மணி நேரம் ஆகிருமேன்னு வேணுமுன்னா வீடுவரை போய் வாங்களேன்னதுக்கு சரின்னார்.
அதே போல ஃபோன் செஞ்ச பத்தாவது நிமிட் வந்துட்டார். நாம் இப்போ ஒரு மூத்த பதிவரை சந்திக்கப்போறோம். மூத்த என்றால் வயதில். பதிவுலக அனுபவத்தில் இல்லை. இப்பெல்லாம் பதிவு எழுதறதே இல்லை. ஏழுவருசம் ஆச்சு :-( இவரும் இவர் குடும்பம் முழுசும் என்னை தத்து எடுத்துக்கிட்டாங்க. எனக்கு இன்னொரு அண்ணன், சிவஞானம்ஜி.
வரேன்னு கூப்பிட்டுச் சொன்னதும்.... போய்ச்சேருமுன் வாசலுக்கும் உள்ளுக்குமா பத்துதடவை நடந்து எட்டிப் பார்க்கும் அன்புக்கு என்ன கைமாறு?
அண்ணி ஊருக்குப்போயிருக்காங்க, மகள் வீட்டுக்கு. இங்கே வீட்டையும் மாமனாரையும் பார்த்துக்க மகன், மருமகள் இருக்காங்க என்பதால் கவலை இல்லை. பொழுது போக இருக்கவே இருக்கான் பேரன்!! இவன் ஒரு டிவி ப்ரேமி. பார்க்கணும் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. அதுபாட்டுக்கு கத்திக்கிட்டு இருந்தால் போதும். தாத்தாவை விட டிவி நல்லாப் பேசுதுன்னு நினைப்போ! அன்றைக்குப் பக்கத்து ஃப்ளாட் நண்பனும் தன் அம்மாவோடு அங்கே இருந்தாலும் அவரவர் விளையாட்டு அவரவருக்கு! பின்னணி மட்டும் ஒன்னுதான். டிவி :-)
அதிகநேரம் தங்கலை. முக்காமணிக்கூறுதான். அடுத்த பயணத்தில் அங்கே போய் சாப்பிடணும். அண்ணியும் வந்துருவாங்க. அண்ணனுக்கு அவ்வளவா உடம்பு முடியலையாம். அதான் எழுதறதே இல்லைன்னார். ஆனால் துளசிதளம் மட்டும் அப்டுடேட் வாசிப்பு.
இப்படியாக அன்றைய தினம் அருமை ! எழுதுறவங்களுக்கு வாசகர் சந்திப்பு கசக்குமா என்ன?
இந்தப்பதிவை நேத்து இரவு எழுதி வச்சேன். காலையில் அண்ணன் சிஜி (சிவஞானம்ஜி) யின் மெயில் வருது நலமான்னு கேட்டு! டெலிபதி......!!! ஆயுசு 100ன்னு பதில் போட்டேன்.
தொடரும்.......:-)
