Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1438

நம்ம அபி அப்பாவுடன் ஊர் சுத்தலாமா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 65)

$
0
0
ஹொட்டேல் பாம்ஸ்.     சுமாரான அறை. இதாவது கிடைச்சதே ன்னு  ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்...   க்குக்கும்  க்குக்கும் என்று புறாவின் கொஞ்சல்:-) ஒரு ஹை சொல்லிட்டுக் கீழே சாப்பிடப் போனோம்.

நம்மவருக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல்ஸ். எனக்குச் சப்பாத்தியும் தயிரும்.  மணி ரெண்டரையைத் தாண்டி இருக்கு.

சாப்பாடு ஆனதும், வரவேற்பில் போய் wifi தொடர்பு விசாரிச்சால்,  அதாலே ரெண்டாவது  மாடி வரை ஏற முடியாதாம் :-(  நமக்கு  Non smoking floor  வேணுமுன்னு கேட்டதால் ரெண்டாவது மாடி கொடுத்துருக்காங்களாம்.  முதல் மாடின்னா அறையிலேயே wifi கிடைக்குமாம்.  இங்கே ரிஸப்ஷன் ஏரியாவில் பிரச்சனை இல்லைன்னு  சொன்னாங்க.  அதுக்கான தொடர்புக்கு அவுங்களே நம்ம செல்லில் போட்டுத்தந்தாங்க.  ரகஸிய  பாஸ்வேர்ட் கோட் :-)

மாயவரத்துலே நமக்கு வேண்டப்பட்டவங்கன்னா  அபி அப்பா, சீமாச்சு, கோமதி அரசு  அண்ட் பரிமள ரெங்கன் மட்டும்தான்.  சீமாச்சு நாட்டில் இல்லை. கோமதி அரசு இடப்பெயர்ச்சியில்.  ரெங்கனுக்கு செல்ஃபோனே கிடையாது.  அபி அப்பாவுடன் பேசிட்டு, கொஞ்ச நேரத்துலே வர்றதாச் சொல்லியாச்.

போனமுறை போனது  செப்டம்பர் 2012.  மூணரை வருசமாச்சு.  நட்டுவுக்கு ஏதும்  வாங்கி வரலை.  நியூஸியில் இருந்து சாக்லேட்கள்தான் வாங்கிப்போயிருந்தாலும், அவை எல்லாம் சென்னைக்குன்னே இருக்கு.  அங்கிருக்கும் சூட்டில் எல்லாம் உருகிப்போயிருது பாருங்க. அதிலும்  உள்ளூர் கார்ப்பயணத்தில் கேக்கவே வேணாம்.
முதலில் கடைவீதிப்பக்கம் போய் எதாவது வாங்கிக்கணும். போனோம். காளியாகுடி கண்ணில்பட்டது. இந்த முறையும்  தூரதர்சனம்தான். ஒரு 'பெரிய கடை'யில் சுமாரான      சாக்லேட்ஸ் கிடைச்சது.  அப்படியே நேரா அபி அப்பா வீட்டுக்குத்தான். நம்ம சீனிவாசனுக்கு  ஒருமுறை போன இடம் சட்னு  மறக்கறதில்லையாக்கும்.

போய்ச் சேரும்போது, என்னடா இதுவரை காணோமேன்னு  வெளியே தெருவில் வந்து பார்த்துக்கிட்டு இருந்தார் அபி அப்பா. இவரை இப்போதான் முதல்முறையா சந்திக்கறோம்.  ஆனால் மற்ற குடும்ப  அங்கத்தினருடன் இது நமக்கு ரெண்டாவது சந்திப்பு.
முதல்முறை சந்திப்பு என்ற உணர்வு கொஞ்சமும் இல்லை. தினம் பார்த்துப்பேசும் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல ஆக்கி இருக்கு வலையுலகம் :-)

வீட்டுக்குள்  காலெடுத்து வைக்குமுன் அபி அம்மா ஓடிவந்து  'வாங்க'ன்னு  சொன்னதும்  எனக்கு அக்கா நினைவு வந்துருச்சு.  ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்:-)


உறவினர் வீட்டுலே குழந்தை பிறந்துருக்குன்னு  போயிட்டு அவசர அவசரமா வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் போயிட்டு வரேன்னு அபி அப்பா கிளம்பிப்போய் கொஞ்ச நேரத்துலே  வந்துட்டார்!  பின்னாலேயே நட்டு த க்ரேட்!

அபி அப்பாவுடன் வெளியே கிளம்பினோம்.  அபி அம்மா வரலை. நட்டுவும் வரலை. நண்பர்களுடன் விளையாடப் போறாராம். வரேன்னு வாக்குக் கொடுத்ததை மீற முடியாது !  ஆஹா....
 அபி அப்பா வழிகாட்ட முதலில் நாங்க போய்ச்சேர்ந்த இடம் விளநகர். இதில் ஆறுபாதி என்ற  பகுதி.   மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிமீ தூரம். பெருமாள் கோவில்  வாசலில் இறங்கியதும், வலப்பக்கம் இருக்கும் சிறிய திருவடி கைகூப்பிய நிலையில் இருக்க அவருக்கு நேர் எதிரா இருக்கார் பெருமாள்.


சிறிய திருவடியையொட்டியே ஒரு கோவில் உருவாகிக்கிட்டு இருக்கு. சின்ன இடம்தான். அதுலே குறுக்குவாட்டிலே கோவில் எழும்புது. என்ன கோவிலாக இருக்குமுன்னு போய் எட்டிப் பார்த்தேன்.

ஷீரடி சாயிபாபா கோவிலாம். இங்கே கோவில் வருவதன் காரணம்?  மரத்தில் தோன்றிய சுயம்பு சாயிபாபா!

 பக்தர் ஒருவர் மரத்தாண்டை கூட்டிப்போய் காமிச்சார். இலவம் பஞ்சு மரத்தில்  கீறியது போல் இருந்தது.  நெற்றியில் விபூதி குங்குமம் வச்சுருந்தாங்க.  இவர் மரத்தில் தோன்றி  டிசம்பர் 20, 2015 தேதி   ஒரு வருசம் ஆகி இருக்குன்னு   முதலாம் ஆண்டுவிழா கொண்டாடி இருக்காங்க.
இன்றைக்கு (ஃபிப்ரவரி 1 2016)  கோவில் மளமளன்னு  வளர்ந்து வருது.  அடுத்த  மாசம் கும்பாபிஷேகம் ஆகிருமாம்.

 கோவில் கருவறைக்கான மூலவர் சிலை வந்துருச்சு. வாங்கன்னு  பக்தர்  ஒரு வீட்டின் வெளிப்புறம் போட்டுருந்த தாற்காலிக  ஷெட்டுக்கு கூட்டிப்போனார்.  மூடி இருந்த  ஷெட் கதவைத் திறந்ததும் பெரியதும் சிறியதுமா ரெண்டு மார்பிள் சிலைகள் இருந்தன.  இங்கேதான் பூஜைகள் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு.

கோவிலைப் பார்த்துக்கிட்டு  எல்லா வேலைகளுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சாயி பன்னீர்.  சிலைகள்,  ஷீரடி கோவிலில்  ஒரு மண்டலம்  வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி, ஆசிர்வதிச்சு  அனுப்பினாங்களாம்.

ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து மூணு பிஸ்கட்ஸ் எடுத்துப் பூஜைத்தட்டில் வச்சு  பாபாவுக்கு  தீபஆரத்தி எடுத்துட்டு, நமக்குப் பிரஸாதம் வழங்கினார்.
நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.  இங்கே ஃபேஸ்புக்கிலும், பதிவர் உலகிலும் எனக்குத் தெரிஞ்ச சாயி பக்தர்கள் நினைவு வந்தது என்பது உண்மை.
எந்த நிகழ்வானாலும் சரி, சம்பந்தப்பட்ட  பதிவர்கள் நினைவுவருவது இந்த 12 வருசத்தில் சகஜமாத்தான்  போயிருக்கு.
கடவுள் என்பதே  நம்பிக்கைதான். நம்புனாத்தான் கடவுள்!   அவரவர் நம்பிக்கையை நாம் மதிக்க வேணும் இல்லையா?

சமீபகாலமாக நிறைய இடங்களில்  சாயிபாபா கோவில்கள் பெருகி வர்றதை கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.  யாருக்கு எங்கே மனம் லயிக்குதோ அங்கே பக்தி செலுத்துதல் தப்பே கிடையாது!

வாங்க நாம் வந்த வேலையைப்  பார்க்கலாமுன்னு  கிளம்பினோம்.


 PIN குறிப்பு:  இந்தப்   பதிவு எழுதும்போது  கும்பாபிஷேகப்படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். மார்ச் 26  நடந்துருக்கு.  சுட்டபடங்கள்  சில  உங்களுக்காக! படத்தில் நம்ம சாய் பன்னீரைத் தேடினேன்.  காணோம் :-(






தொடரும்.......... :-)




Viewing all articles
Browse latest Browse all 1438

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>