இந்த காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் மட்டும் பத்து முற்றங்கள் இருக்காம். இடிபாடுகள் காரணம் எல்லா இடங்களையும் பார்க்க முடியலை. காலபைரவர் இருக்கும் இடத்துக்குப் போறோம். எதிரில் குவிச்சு வச்சுருந்த மணல்மேட்டில் இந்தக் கால 'பைரவர்கள்'இருவர்:-)
சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர்தான் உலகெங்கும் வியாபித்து இருக்காராம். அந்த பைரவர்களில் கால பைரவர் சிறப்பானவராம். திறந்த வெளியில் பெரிய உருவமா கல்லில் செதுக்கி இருக்கும் சிலை.... மூணு கண்கள், கோரப் பற்கள்னு இருக்கார். பனிரெண்டடி உயரம். தலைக்கு மேலே ரெண்டு பக்கமும் சந்திரனும் சூரியனும்!
முழு உருவத்தையும் தரிசிக்க முடியலை. நல்ல கூட்டம் இங்கே. இதுலே ஒருத்தர் சாமியைக் கட்டிப்பிடிக்கறது போல சிலை மீது ஏறித் தொங்கிக்கிட்டே என்னமோ பிரசாதங்களை சாமி வாயில் ஊட்டி விடறார். சுத்தி நிக்கும் சனம் அவுங்கவுங்க கொண்டு வந்த பிரசாதங்களை அவர்கிட்டே கொடுத்து ஊட்டச் சொல்றாங்க ! பாருங்க வாயிலெ பர்பி. காஜு கத்லின்னு நினைக்கிறேன் :-)
கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமிதான் இவருக்கு ரொம்பவே விசேஷநாளாம். அன்றைக்கு பலியிடுவது கூட நடக்குமாம்.
எதிரி பயம் ஒழிய இவரை வணங்கணுமாம். எல்லோருக்கும் நிறைய எதிரிகள் இருக்காங்க போல....
அஞ்சாம் நூற்றாண்டு சிலைன்னு சொல்றாங்க. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி ..... எதாவது வழக்கு, சொல்றது பொய் இல்லைன்னு சத்தியம் செய்யறதுன்னு இருக்கும் சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் இதுலெயெல்லாம் இங்கே இவர்முன்னால் வந்து சத்தியம் செய்யச் சொல்வாங்களாம். பொய் சத்தியம் பண்ணா கொஞ்ச நாளில் ஆள் காலி. இங்கத்து சுப்ரீம் கோர்ட் இதுதான்னார் பவன் :-)
இவருக்கு முன்னால் காவல் சிங்கங்கள் ரெண்டு இருக்கு. எல்லாம் நல்ல கருங்கல் சிலகள்தான்.
சனி பகவானின் கொடுமைகளில் இருந்து தப்பிக்கக் காலபைரவரை வணங்கினால் போதுமாம். இவரை மகிழ்விப்பது ரொம்ப சுலபம். தினசரி இந்தப் பக்கம் போகும்போது கையெடுத்துக்குக் கும்பிட்டால் போதுமாம். பார்க்கக் கொடூரமா, பயங்கரமா இருந்தாலும்.... இளகின மனசுடையவர் இவர். (அதானே... சிவனின் 64 வடிவத்தில் ஒருவர் ஆச்சே!
சிவபெருமானையும் சுலபமா வசப்படுத்திடலாம். சாமிகளில் கொஞ்சம் அப்பாவி சிவன் தான்னு எனக்கு ஒரு எண்ணம். சாதுர்யமெல்லாம் கிடையாது. ரொம்ப ஸீதா சாதா... இல்லாட்டி, பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகால விஷத்தைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுனப்ப, 'உங்க அனைவரின் நன்மைக்கு வேண்டி நான் விஷத்தை முழுங்கறேன்'னு சொல்லி முழுங்கி இருப்பாரா? கிடைச்ச ஐஸ்வரியங்களை எல்லாம் பங்கு போட்டுக்கிட்ட தேவர்கள் யாராவது , ஐயோ... வேணாமுன்னு தடுத்தாங்களா என்ன? பாவம்... பெண்டாட்டிதான் அழுதுகிட்டே ஓடோடி வந்து, மயங்கிக்கிடந்தவரை மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்பினாங்க....)
இப்பதான் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. தக்ஷயாகம் கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே! திருவிளையாடல் சினிமா பார்த்துருப்பீங்கதானே? யாகத்தீயில் விழுந்து இறந்துபோன மனைவி சதியைத் தோளில் தூக்கிக்கிட்டு அலைஞ்சதும், விஷ்ணு தன் சக்ராயுதத்தால் அந்த உடலை 51 துண்டுகளா வெட்டியெறிஞ்சதும், அந்த உடல்பகுதிகள் விழுந்த இடங்கள் எல்லாம் சக்தி பீடமுன்னு கொண்டாடப்படுவதும் எல்லாம் நம்ம துளசிதளத்துலேயே பலமுறை எழுதியாச்சு. அந்த சக்திபீடக் கோவில்களில் எல்லாம் காலபைரவர் இருக்காராம்.
இவருடைய முழு உருவம் எப்படித்தான் இருக்குமுன்னு வலையில் தேடினேன். ஆப்ட்டார். படத்தின் சொந்தக்காரருக்கு நன்றிகள்.
பட்டாணி வேர்க்கடலை, பொரி ன்னு வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. அநேகமா பேல் பூரி செஞ்சு தருவாங்க போல..... பச்சை மிளகாய், தக்காளி உரிச்ச வெங்காயம்னு வச்சுருக்காங்க. கலர்ஃபுல்!
உள்ளூர் மக்களுக்கு இதுதான் பீச். சாவகாசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. கூடவே சிறு தீனிகளும்.
இருட்டத்தொடங்குச்சு. போதும் பார்த்ததுன்னு கிளம்பினோம். அப்பதான் குமாரியின் மாளிகையின் முன்பக்கத்தைக் கவனிச்சேன். வெள்ளைச்சிங்கங்கள் காவலுக்கு இருக்கே!
ரவியை செல்லில் கூப்பிட்டு, அவர் வரச்சொன்ன இடத்துக்கு நம்மைக் கூட்டிப்போனார் பவன். கிட்டத்தட்ட அரைமணி நேரமாச்சு, லெமன் ட்ரீ வந்து சேர! இத்தனைக்கும் ரெண்டே கிமீதான் தூரம் !
அப்படி ஒரு நெரிசலான போக்குவரத்து. ஆட்டோமேடிக் சிக்னல் இருந்தாலும் அதை கண்டுக்காம ட்ராஃபிக் போலீஸ் கை காட்டிக்கிட்டு இருக்காங்க.
லெமன்ட்ரீயில் ஓனர் ப்ரகாஷ் இருந்தார். போய் வந்த இடங்கள், பவன் நல்லபடியா வழிகாட்டுனாரா என்ற விசாரிப்புகள் எல்லாம் ஆச்சு. இந்த ரெண்டு நாட்களுக்கு மட்டும்தான் நமக்கு கைடு. பவன் தொழில் சுத்தம்:-)
கவனமாப் பார்த்துக் கூட்டிப்போனது பிடிச்சுருந்தது. பவனுக்கு அஸ்ட்ராலியாவில் வந்து படிக்கணுமாம். மேற்படிப்புதான். சீக்கிரம் வந்து சேரச் சொன்னேன். அப்படியே நியூஸி வந்துட்டுப் போகவும் ஒரு அழைப்பு. நான் பதிலுக்கு வழிகாட்டியா இருக்கணுமா இல்லையா?
அறைக்குப்போய் ஓய்வு எடுக்கணும். முக்கியமா வைஃபை மூலம் கொஞ்சம் மெயிலனுப்பணும் ......
இன்றைக்கு நிறையவே சுத்திட்டதால் இனி எங்கேயும் ராச்சாப்பாட்டுக்குன்னு கிளம்ப மனசில்லை. கீழே சொல்லி ஒரு பிட்ஸா வரவழைச்சாச்சு. எல்லாம் அது போதும்.
மறுநாள் நேபாளை விட்டுக் கிளம்பறோம். ப்ரகாஷிடம் கணக்கு வழக்குகளைப் பார்த்து வைக்கச் சொல்லியாச்.
மறுநாளைக்கு வேண்டிய துணிமணிகளை வெளியே எடுத்து வச்சுட்டு, பெட்டிகளில் மற்ற சாமான்களை அடுக்கி (அடைச்சு) வைக்கத்தான் கொஞ்சம் நேரம் ஆச்சு. ஜலநாராயணனையும், சாளக்ராம்களையும் அடிபடாம பத்திரமாக் கொண்டு போகணுமே!
பாக்கி சமாச்சாரத்தை காலையில் பார்க்கலாம். குட்நைட்!
தொடரும்......... :-)
![]()
சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர்தான் உலகெங்கும் வியாபித்து இருக்காராம். அந்த பைரவர்களில் கால பைரவர் சிறப்பானவராம். திறந்த வெளியில் பெரிய உருவமா கல்லில் செதுக்கி இருக்கும் சிலை.... மூணு கண்கள், கோரப் பற்கள்னு இருக்கார். பனிரெண்டடி உயரம். தலைக்கு மேலே ரெண்டு பக்கமும் சந்திரனும் சூரியனும்!
முழு உருவத்தையும் தரிசிக்க முடியலை. நல்ல கூட்டம் இங்கே. இதுலே ஒருத்தர் சாமியைக் கட்டிப்பிடிக்கறது போல சிலை மீது ஏறித் தொங்கிக்கிட்டே என்னமோ பிரசாதங்களை சாமி வாயில் ஊட்டி விடறார். சுத்தி நிக்கும் சனம் அவுங்கவுங்க கொண்டு வந்த பிரசாதங்களை அவர்கிட்டே கொடுத்து ஊட்டச் சொல்றாங்க ! பாருங்க வாயிலெ பர்பி. காஜு கத்லின்னு நினைக்கிறேன் :-)
கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமிதான் இவருக்கு ரொம்பவே விசேஷநாளாம். அன்றைக்கு பலியிடுவது கூட நடக்குமாம்.
எதிரி பயம் ஒழிய இவரை வணங்கணுமாம். எல்லோருக்கும் நிறைய எதிரிகள் இருக்காங்க போல....
அஞ்சாம் நூற்றாண்டு சிலைன்னு சொல்றாங்க. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி ..... எதாவது வழக்கு, சொல்றது பொய் இல்லைன்னு சத்தியம் செய்யறதுன்னு இருக்கும் சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் இதுலெயெல்லாம் இங்கே இவர்முன்னால் வந்து சத்தியம் செய்யச் சொல்வாங்களாம். பொய் சத்தியம் பண்ணா கொஞ்ச நாளில் ஆள் காலி. இங்கத்து சுப்ரீம் கோர்ட் இதுதான்னார் பவன் :-)
இவருக்கு முன்னால் காவல் சிங்கங்கள் ரெண்டு இருக்கு. எல்லாம் நல்ல கருங்கல் சிலகள்தான்.
சனி பகவானின் கொடுமைகளில் இருந்து தப்பிக்கக் காலபைரவரை வணங்கினால் போதுமாம். இவரை மகிழ்விப்பது ரொம்ப சுலபம். தினசரி இந்தப் பக்கம் போகும்போது கையெடுத்துக்குக் கும்பிட்டால் போதுமாம். பார்க்கக் கொடூரமா, பயங்கரமா இருந்தாலும்.... இளகின மனசுடையவர் இவர். (அதானே... சிவனின் 64 வடிவத்தில் ஒருவர் ஆச்சே!
சிவபெருமானையும் சுலபமா வசப்படுத்திடலாம். சாமிகளில் கொஞ்சம் அப்பாவி சிவன் தான்னு எனக்கு ஒரு எண்ணம். சாதுர்யமெல்லாம் கிடையாது. ரொம்ப ஸீதா சாதா... இல்லாட்டி, பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகால விஷத்தைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுனப்ப, 'உங்க அனைவரின் நன்மைக்கு வேண்டி நான் விஷத்தை முழுங்கறேன்'னு சொல்லி முழுங்கி இருப்பாரா? கிடைச்ச ஐஸ்வரியங்களை எல்லாம் பங்கு போட்டுக்கிட்ட தேவர்கள் யாராவது , ஐயோ... வேணாமுன்னு தடுத்தாங்களா என்ன? பாவம்... பெண்டாட்டிதான் அழுதுகிட்டே ஓடோடி வந்து, மயங்கிக்கிடந்தவரை மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்பினாங்க....)
இப்பதான் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. தக்ஷயாகம் கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே! திருவிளையாடல் சினிமா பார்த்துருப்பீங்கதானே? யாகத்தீயில் விழுந்து இறந்துபோன மனைவி சதியைத் தோளில் தூக்கிக்கிட்டு அலைஞ்சதும், விஷ்ணு தன் சக்ராயுதத்தால் அந்த உடலை 51 துண்டுகளா வெட்டியெறிஞ்சதும், அந்த உடல்பகுதிகள் விழுந்த இடங்கள் எல்லாம் சக்தி பீடமுன்னு கொண்டாடப்படுவதும் எல்லாம் நம்ம துளசிதளத்துலேயே பலமுறை எழுதியாச்சு. அந்த சக்திபீடக் கோவில்களில் எல்லாம் காலபைரவர் இருக்காராம்.
இவருடைய முழு உருவம் எப்படித்தான் இருக்குமுன்னு வலையில் தேடினேன். ஆப்ட்டார். படத்தின் சொந்தக்காரருக்கு நன்றிகள்.
பட்டாணி வேர்க்கடலை, பொரி ன்னு வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. அநேகமா பேல் பூரி செஞ்சு தருவாங்க போல..... பச்சை மிளகாய், தக்காளி உரிச்ச வெங்காயம்னு வச்சுருக்காங்க. கலர்ஃபுல்!
உள்ளூர் மக்களுக்கு இதுதான் பீச். சாவகாசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. கூடவே சிறு தீனிகளும்.
இருட்டத்தொடங்குச்சு. போதும் பார்த்ததுன்னு கிளம்பினோம். அப்பதான் குமாரியின் மாளிகையின் முன்பக்கத்தைக் கவனிச்சேன். வெள்ளைச்சிங்கங்கள் காவலுக்கு இருக்கே!
ரவியை செல்லில் கூப்பிட்டு, அவர் வரச்சொன்ன இடத்துக்கு நம்மைக் கூட்டிப்போனார் பவன். கிட்டத்தட்ட அரைமணி நேரமாச்சு, லெமன் ட்ரீ வந்து சேர! இத்தனைக்கும் ரெண்டே கிமீதான் தூரம் !
அப்படி ஒரு நெரிசலான போக்குவரத்து. ஆட்டோமேடிக் சிக்னல் இருந்தாலும் அதை கண்டுக்காம ட்ராஃபிக் போலீஸ் கை காட்டிக்கிட்டு இருக்காங்க.
லெமன்ட்ரீயில் ஓனர் ப்ரகாஷ் இருந்தார். போய் வந்த இடங்கள், பவன் நல்லபடியா வழிகாட்டுனாரா என்ற விசாரிப்புகள் எல்லாம் ஆச்சு. இந்த ரெண்டு நாட்களுக்கு மட்டும்தான் நமக்கு கைடு. பவன் தொழில் சுத்தம்:-)
கவனமாப் பார்த்துக் கூட்டிப்போனது பிடிச்சுருந்தது. பவனுக்கு அஸ்ட்ராலியாவில் வந்து படிக்கணுமாம். மேற்படிப்புதான். சீக்கிரம் வந்து சேரச் சொன்னேன். அப்படியே நியூஸி வந்துட்டுப் போகவும் ஒரு அழைப்பு. நான் பதிலுக்கு வழிகாட்டியா இருக்கணுமா இல்லையா?
அறைக்குப்போய் ஓய்வு எடுக்கணும். முக்கியமா வைஃபை மூலம் கொஞ்சம் மெயிலனுப்பணும் ......
இன்றைக்கு நிறையவே சுத்திட்டதால் இனி எங்கேயும் ராச்சாப்பாட்டுக்குன்னு கிளம்ப மனசில்லை. கீழே சொல்லி ஒரு பிட்ஸா வரவழைச்சாச்சு. எல்லாம் அது போதும்.
மறுநாள் நேபாளை விட்டுக் கிளம்பறோம். ப்ரகாஷிடம் கணக்கு வழக்குகளைப் பார்த்து வைக்கச் சொல்லியாச்.
மறுநாளைக்கு வேண்டிய துணிமணிகளை வெளியே எடுத்து வச்சுட்டு, பெட்டிகளில் மற்ற சாமான்களை அடுக்கி (அடைச்சு) வைக்கத்தான் கொஞ்சம் நேரம் ஆச்சு. ஜலநாராயணனையும், சாளக்ராம்களையும் அடிபடாம பத்திரமாக் கொண்டு போகணுமே!
பாக்கி சமாச்சாரத்தை காலையில் பார்க்கலாம். குட்நைட்!
தொடரும்......... :-)
