இருள்வெளியில் ஒரு 'ஓம்' கண்ணில் பட்டது . முதலில் நான் எங்கிருக்கிறேன் என்பது மனசுக்குத் தெளிவாகலை. நியூஸி நேரத்துக்கு உறக்கம் போயிருக்கு. பால்கனியில் வந்து நின்னால்.... மசமசன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா மினுக்கும் பல்பு! எதிரில் வீரமாகாளியம்மன் கோவில். அந்தக் கோபுரத்தில்தான் இந்த ஓம் இருக்கு! இந்தப் பக்கம் கைலாஷ் பர்வத்! இதுவும் இதே ஹொட்டேல் கட்டடத்தின் நீட்சி. இங்கே ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு இந்தப்பெயரில்:-)))))
பொழுது புலரக் காத்திருந்து குளிச்சு முடிச்சுக் கிளம்பி முதல்வேலையா பேட் கி பூஜா. அப்படியே காளியம்மனுக்கு ஒரு கும்பிடு. கோவிலின் பின்பக்கத்தில் புதுசா ஒரு ஆறுமாடிக்கட்டிடம் வரப்போகுது. அன்னதானக்கூடம், உணவுக்கூடம் (ரெண்டுமே ஒன்னில்லையோ? ) அடுக்களை, திருமணமண்டபம், அலுவலகம், ஸ்டோர் ரூம், கோவில் பணியாளர் விடுதி, பல்நோக்கு அறைகள் இப்படி சகலவசதிகளும் ஒரே இடத்தில்! அடுத்த வருசம் கும்பாபிஷேகம் வச்சுருக்காங்களாம்.
செராங்கூன் சாலை லேசாக் கண்ணைத் திறக்க முயற்சி செய்யுது. கோவிலின் அருகே இருக்கும் பூக்கடையில் மல்லிச்சரம் வாங்கிக்கிட்டேன். கொண்டை பூவுக்கு நிஜமாவே அழுதே! இங்கே நியூஸியில் பூவச்சுக்க முடியுதா? ரொம்பப் பழைய காலனி ஆதிக்ககால கட்டிடங்கள் சில கண்ணில் பட்டன. மேல்மாடிகளை அப்படியப்படியே வச்சுக்கிட்டு கீழ்தளத்தில் கடைகள் விதவிதமாய்!
கோமளவிலாஸில் ரெண்டொரு வாடிக்கையாளர்கள். கல்லாவில் இருந்தவங்களைக் ( நமக்கு கடந்த 28 வருசமாப் பழக்கம்தான்!) குசலம் விசாரிச்சுட்டு போய் உக்கார்ந்தோம். விலைவாசி என்னவோ தாறுமாறா ஏறுனாப்போல இருக்கு. ஐட்டங்கள் அதே என்னும்போது எதுக்கு அனாவசியமான்னு விலையை மட்டும் புதுப்பிச்சு வச்சுருக்காங்க. என் கணக்குக்கு இப்போ ( ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே வந்துட்டுப்போனேன் )எல்லாம் 50% விலை அதிகம்.
கொஞ்சம் மெலிசாத் தட்டக்கூடாதோ? பூத வடையா இருக்கே! படம் எடுக்கும்போது நம்பள்கியை நினைச்சுக்கிட்டே ...கோபாலத் தவிர்த்து, படம் எடுக்க முயற்சித்தேன். பழக்கதோஷம் கோபாலும் படத்துலே இருந்தார்:-))) சாப்பிட்டு முடிச்சு சீனுவை நோக்கிப்போகும்போது மூடிய கடை வாசல் வெராந்தாவில் உள்ளூர் கடைகளுக்கு பத்திரிகை விநியோகம் செய்ய கட்டுகளைப்பிரிச்சு அடுக்கிக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். ஒரு ஆங்கிலமும் ஒரு தமிழுமாக ரெண்டு தினசரிகளை வாங்கினோம். நெருங்கிய எழுத்தாளர் தோழி இப்போ அந்தத் தமிழ்ப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க. அவுங்க கட்டுரை எப்படி வந்துருக்குன்னு பார்க்கும் ஆர்வம் எனக்கு:-)
இந்தத் தமிழ்பத்திரிகையில் நமக்குத் தெரிஞ்ச அக்கா ஒருத்தர் (ஃபிஜியில் இருந்தபோது பழக்கம்) அந்தக் காலத்தில் வேலை செஞ்சுருந்தாங்க. மலேசியா & சிங்கைன்னு ரெண்டு பதிப்புகளையும் அப்போ கவனிச்சுக்கிட்டு இருந்ததால் இங்கேயும் அங்கேயுமா பயணத்துலேயே இருப்பாங்க அந்த அக்கா, மிஸ் அம்மணி அய்யர். குழந்தையுடன் முதல்முறை சிங்கை வந்திருந்தோம். சேதி சொன்னதும் ஓடிவந்து குழந்தையை உச்சிமோந்து ஆசீர்வதித்த அன்பை இன்னும் என்னால் மறக்க முடியலை.
ஃபாரர் பார்க் பக்கம் கிச்சனர் சாலை & ரங்கூன் சாலை முனையில் புதுசா அடுக்கு மாடிக் கட்டிடம் வருது! சிகிச்சை சுற்றுலாவுக்கு வரும் மக்களைக் குறிவச்சு கட்டிக்கிட்டு இருக்கு ஃபா ர்டீஸ் நிறுவனம். ( Fortis Healthcare) ஃபாரர் ஸ்கொயர் என்று பெயராம்.
கோவிலில் சின்னதா ஒரு கூட்டம். பெரிய திருவடிக்கு முன் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு. பெருசா ஒரு கலசம்/கும்பம் ஒரு மேடையில் ! புள்ளையாருக்கு ஒரு தேங்காய் அர்ச்சனை செஞ்சுக்கணும். ஒரு சமாச்சாரத்துக்கு அப்பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எல்லா பட்டர்களும் யாகத்தில் பங்கேற்பதால் அது முடிஞ்சாவுட்டுத்தான் அர்ச்சனை என்று கவுண்ட்டரில் சொன்னார்கள். சரி எப்படியும் எட்டுநாளில் திரும்பி சிங்கை வரும்போது வச்சுக்கலாமுன்னு சீனுவை தரிசிக்கப்போனோம்.
'இப்படி.... இப்படித்தாம்மா இருந்தான் அன்னிக்கு திருப்பதியிலே! கேட்டுக்கிட்டே இருந்தியே எப்படி இருந்தான் எப்படி இருந்தான்னு இப்படியேதான் 'என்றார் கோபால்.(பாவம்... ரொம்பப் பட்டுட்டார்!)
ஒற்றை வஸ்த்திரமும் துளசி மாலையுமா ..... நாமம் மட்டும் மங்கலாத் தெரியுது!
"அன்னிக்கு உன் கண்ணில் படலையேன்னு இன்னிக்கு அப்படியே காட்சி கொடுக்கறான் பார் ... "கோபால். ஏகாந்த சேவையா வேற வாய்ச்சுருச்சு!
தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதியில் தூமணி மாடம் பாடுவது எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பிப் பார்த்தால் கோபாலைக் காணோம். கண்ணைத் துரத்தினால் சீனுவின் முன்னால் மண்டபத்தில் கம்பியை ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார். என்னன்னு கிட்டே போனால்.... திருமஞ்சனம் ஆரம்பிக்கப்போகுதாம்!
அட்றா சக்கை! போனஸ் ஆப்ட்டது நமக்கு!
ஒரு மணி நேரம்! உற்சவருக்கும் மூலவருக்குமா குளியல் ! அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை எல்லாம் அமோகம். கண்குளிரக் கண்டோம்!
திருப்பதி தரிசனத்தை இடைக்கிடை நினைச்சுக்கிட்டு நடுங்கினது என்னவோ நிஜம். ஒருவிநாடி கண்ணைத் திறக்குமுன் கை இழுத்துக் கடாசும் கோவில் ஊழியர்களின் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா?
மூலவருக்கு முன் திரை போட்டு அலங்காரங்கள் ஒரு பக்கம் ஆரம்பிக்க,யாககுண்டத்தின் அருகில் அன்றைய கட்டளைதாரர் மாலைகள் ஏந்திய தாம்பாளத்துடன் யாகத்துக்கான சீர்வரிசைகளுடன் கோவிலைச் சுற்றி வந்து நிற்க , யாக குண்டத்தின் ஆஹூதியில் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு பரிபூரணம் ! பரிவட்டம் கட்டிய பட்டர் கலசத்தைத் தலையில்சுமந்து மேளதாளங்களுடனும் தீவட்டி, குடைகள் போன்ற சம்ப்ரதாயங்களுடனும் கோவிலைச் சுற்றி வந்தார். கலசத்துக்கு தீபாரதனை காட்டினார்கள்.
நினைச்ச இடத்துக்குப்போகும் வகையில் சக்கரம் வச்ச வட்ட யாககுண்டம் அழகோ அழகு.
சிங்கை சீனு ஸ்பெஷலாக பத்துப்பதினைஞ்சு வருசமா நான் ஒரு வழக்கம் ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன். கோவில் உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிப்பது. நம்மிடம் இருக்கும் பெரிய எழுத்துப் புத்தகத்தை சிங்கைப் பயணங்களில் கொண்டு போவேன். மிஞ்சிப்போனால் ஒரு அரைமணி நேரம். நம்ம தூண் வேற நமக்காகக் காத்திருந்தது. வாசிச்சு முடிச்சு பெருமாளுக்கும், அனுமனுக்கும் நின்ன இடத்தில் இருந்தே ஒரு கும்பிடு போட்டு, எட்டுநாளில் மீண்டும் சந்திக்கலாமுன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பினோம். ஜாய் ஆலூக்காஸ் கடை போட்டுருக்கு கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் தள்ளி!
எப்பப் பார்த்தாலும் செராங்கூன் ரோடு என்ன வேண்டி இருக்குன்னு குறுக்குச்சாலையில் புகுந்து புறப்பட்டோம். சின்னச் சின்ன சந்துகளும் வீடுகளுமா இருக்கு. சுத்தம் ஓரளவு பரவாயில்லை. சீனர்களின் கடைகளில் காய்கறிக் கூடைகள் விற்பனைக்கு வந்து இறங்கி இருந்தன. அங்குமிங்குமா பழைய கலோனியல் ஸ்டைல் கட்டிடங்கள். போலீஸ் ஸ்டேஷன்கூட கண்ணில் பட்டது. கூடவே ஒரு பழைய சர்ச் ! கம்போங் கபோர் சர்ச்.
1929/30 வது வருசம் கட்டப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியான்னு சொல்லும் இந்தப்பகுதியில் இந்தியர்கள்மட்டுமில்லாமல் சீனர்களும் மற்ற இனத்தவர்களும் கணிசமான அளவு இருந்துருக்காங்க. அப்போ 1890களில் பாபா என்னும் சீன ஆண்கலும் நோன்யா என்ன்னும் சீனப்பெண்களுமா சுமார் 20 பேர்கள் சேர்ந்து சிங்கை மெதடிஸ்ட் சர்ச்சின் முதல் பெண் சமய போதகராக இருந்த சோஃபியா ப்ளாக்மோரின் வீட்டில் கூடி இருந்து ஆலயமொன்று வேண்டுமென தீர்மானித்துள்ளனர். 1891 முதல் மிடில் ரோடிலுள்ள கிறிஸ்துவ நிலையக் கட்டிடத்தில் வழக்கமாகக்கூடி வழிபாடு நடத்தி இருக்காங்க.
இதே கட்டிடத்தில்தான் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி ஒன்னும் 1900 ஆம் ஆண்டு வரை நடந்துருக்கு. வழிபாடு நடத்தும் கூட்டம் கொஞ்சம்கொஞ்சமா அதிகாமானதும் இடப்பற்றாக்குறை காரணமாக, 1927 ஆம் ஆண்டு தேவாலய உறுப்பினர்கள் நண்பர்கள், பிஷப் பிக்லி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி அம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்போ நாம் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. (கம்போங் கபோர் சாலையும் கஃப் சாலையும் சந்திக்கும் மூலை இது) பிக்லி மெமோரியல்ன்னே ஒரு காலத்துலே இதைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கிட்டு இருந்துருக்காங்க.
சிங்கைச் சரித்திரத்தின் ஒரு பகுதியா அரசு இதை அறிவிச்சு தகவல் பலகையும் வச்சுருக்கு. சிங்கை அரசில் பாராட்டப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சம் இப்படிப்பட்டத் தகவல் பலகைகள். ஆங்கிலம் தமிழ் சீனம் என்று மும்மொழிகளில் பாரம்பரிய, சரித்திர அம்சங்களோடுள்ளதை மறக்காமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! அப்பாடா.... சரித்திரம் கிடைச்சுருச்சுன்னு மகிழ்ச்சியா ரெண்டு க்ளிக் க்ளிக்கிட்டு டன்லப் தெரு வந்து சேர்ந்தோம்
. பச்சைப்பசேலுன்னு காய்கறிக் கடைகள். ஒரு ஆரம்பப் பள்ளி(Endeavour Primary )ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணாக்கரை லைஃப் ஸ்டடி டூர் என்ற வகையில் கூட்டிவந்து கடைகளையும் பொருட்களையும் காமிச்சு பாடம் சொல்லிக்கிட்டு இருந்தார். முத்தாத இளம் காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்கணுமுன்னு சொல்லி இருப்பாரோ? மாணவர்கூட்டத்தில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகம் என்று தோணுச்சு எனக்கு. (நல்லாப் பார்த்துப் படிங்கப்பா....பின்னாளில் மனைவியிடம் பாராட்டு பெற உதவும்!)
பொடிநடையில் நாங்கள் Tekka Centre (சிராங்கூன் சாலையின் ஆரம்பம்) வந்து அங்கே அடித்தளத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்குப்போய் பழங்கள் பகுதியை நோட்டம் விட்டோம். அழகாக நறுக்கிய பழத்துண்டுகளை சின்ன அளவில் பொதிஞ்சு வச்சுருப்பாங்க இங்கே. பார்க்கவும் சுத்தமாக இருப்பதால் பயமில்லாமல் வாங்கிச்சாப்பிடலாம். பலாப்பழம் கிடைச்சது. டூரியனையும் வெட்டி வச்சுக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர். இங்கே நியூஸியில் நான் தேடிக்கிட்டு இருக்கும் டெவில்ஸ் ஐவி (மணி ப்ளான்ட்ஸ்) செடிகள் விற்பனைக்கு இருக்கு. ஐயோ..... என்னால் வாங்கிவர முடியாதே............ நியூஸியில் விமானம் இறங்கும்போது ஒரு பூவோ, பழமோ இலையோ நம்வசம் இருந்தால் தொலைஞ்சோம்! பயோ செக்யூரிட்டி இங்கே கடுமை. பத்தாயிரம் டாலர் வரை அபராதம் உண்டு!
அப்படியே லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு ஒரு புத்தகக்கடைக்குப்போய்ப் பார்த்தோம். துளசி கிடைச்சாள். பாலகுமாரன். பயண வாசிப்புக்கு வேணுமேன்னு பார்த்ததில் எழில்வரதனின் 'கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை' ஆப்ட்டது. சிரிப்புக்கு கேரண்டீன்னதால்வாங்கினேன். கூடவே வாடாமல்லியும்.(சு.சமுத்திரம்)
லெட்சிமி புஸ்பக் கடையில் அழகான மாலைகளும் இன்னொரு மூலைக்கடையில் மாம்பழவகைகளும் அப்படியே கண்ணையும் மனசையும் இழுத்துச்சு. இன்னொரு கடையில் இளநீர் வாங்கிக்குடிச்சுட்டு செராங்கூன் சாலையைக் கடந்தோம். ஏதோ டிவிக்கான படப்பிடிப்பு. நாயகி ஷாப்பிங் செஞ்ச பைகளோடு சாலையைக் கடக்குறாங்களாம்!!! படு பொருத்தம்:-)
வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பிரசாத விநியோகம் நடக்குது. சாம்பார் சாதமும் கேஸரியும் கண்ணை இழுத்தாலும் வயிற்றில் இடமில்லையே:(
ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டு (இங்கே செக் அவுட் டைம் பகல் 12. செக் இன் மதியம் 3 )சிங்கை ஸ்டாப் ஓவரின் ஃப்ரீ பிக்கப் ஒரு பனிரெண்டரை மணிக்கு வரும் என்று காத்திருந்தோம். சரியான நேரத்துக்கு வண்டி வந்தது. நாங்க ரெண்டு பேர் மட்டுமே என்பதால் நேராக விமானநிலையம்தான். ஏர் ஏஷியா டெர்மினல் நம்பர் ஒன்னில் இருந்து போகுதாம். ரொம்ப நல்லதாப்போச்சு.போன முறை விட்டுப்போன காக்டெஸ் கார்டனைப் பார்த்துறலாம்!
![]()
பொழுது புலரக் காத்திருந்து குளிச்சு முடிச்சுக் கிளம்பி முதல்வேலையா பேட் கி பூஜா. அப்படியே காளியம்மனுக்கு ஒரு கும்பிடு. கோவிலின் பின்பக்கத்தில் புதுசா ஒரு ஆறுமாடிக்கட்டிடம் வரப்போகுது. அன்னதானக்கூடம், உணவுக்கூடம் (ரெண்டுமே ஒன்னில்லையோ? ) அடுக்களை, திருமணமண்டபம், அலுவலகம், ஸ்டோர் ரூம், கோவில் பணியாளர் விடுதி, பல்நோக்கு அறைகள் இப்படி சகலவசதிகளும் ஒரே இடத்தில்! அடுத்த வருசம் கும்பாபிஷேகம் வச்சுருக்காங்களாம்.
செராங்கூன் சாலை லேசாக் கண்ணைத் திறக்க முயற்சி செய்யுது. கோவிலின் அருகே இருக்கும் பூக்கடையில் மல்லிச்சரம் வாங்கிக்கிட்டேன். கொண்டை பூவுக்கு நிஜமாவே அழுதே! இங்கே நியூஸியில் பூவச்சுக்க முடியுதா? ரொம்பப் பழைய காலனி ஆதிக்ககால கட்டிடங்கள் சில கண்ணில் பட்டன. மேல்மாடிகளை அப்படியப்படியே வச்சுக்கிட்டு கீழ்தளத்தில் கடைகள் விதவிதமாய்!
கோமளவிலாஸில் ரெண்டொரு வாடிக்கையாளர்கள். கல்லாவில் இருந்தவங்களைக் ( நமக்கு கடந்த 28 வருசமாப் பழக்கம்தான்!) குசலம் விசாரிச்சுட்டு போய் உக்கார்ந்தோம். விலைவாசி என்னவோ தாறுமாறா ஏறுனாப்போல இருக்கு. ஐட்டங்கள் அதே என்னும்போது எதுக்கு அனாவசியமான்னு விலையை மட்டும் புதுப்பிச்சு வச்சுருக்காங்க. என் கணக்குக்கு இப்போ ( ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே வந்துட்டுப்போனேன் )எல்லாம் 50% விலை அதிகம்.
கொஞ்சம் மெலிசாத் தட்டக்கூடாதோ? பூத வடையா இருக்கே! படம் எடுக்கும்போது நம்பள்கியை நினைச்சுக்கிட்டே ...கோபாலத் தவிர்த்து, படம் எடுக்க முயற்சித்தேன். பழக்கதோஷம் கோபாலும் படத்துலே இருந்தார்:-))) சாப்பிட்டு முடிச்சு சீனுவை நோக்கிப்போகும்போது மூடிய கடை வாசல் வெராந்தாவில் உள்ளூர் கடைகளுக்கு பத்திரிகை விநியோகம் செய்ய கட்டுகளைப்பிரிச்சு அடுக்கிக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பேர். ஒரு ஆங்கிலமும் ஒரு தமிழுமாக ரெண்டு தினசரிகளை வாங்கினோம். நெருங்கிய எழுத்தாளர் தோழி இப்போ அந்தத் தமிழ்ப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க. அவுங்க கட்டுரை எப்படி வந்துருக்குன்னு பார்க்கும் ஆர்வம் எனக்கு:-)
இந்தத் தமிழ்பத்திரிகையில் நமக்குத் தெரிஞ்ச அக்கா ஒருத்தர் (ஃபிஜியில் இருந்தபோது பழக்கம்) அந்தக் காலத்தில் வேலை செஞ்சுருந்தாங்க. மலேசியா & சிங்கைன்னு ரெண்டு பதிப்புகளையும் அப்போ கவனிச்சுக்கிட்டு இருந்ததால் இங்கேயும் அங்கேயுமா பயணத்துலேயே இருப்பாங்க அந்த அக்கா, மிஸ் அம்மணி அய்யர். குழந்தையுடன் முதல்முறை சிங்கை வந்திருந்தோம். சேதி சொன்னதும் ஓடிவந்து குழந்தையை உச்சிமோந்து ஆசீர்வதித்த அன்பை இன்னும் என்னால் மறக்க முடியலை.
ஃபாரர் பார்க் பக்கம் கிச்சனர் சாலை & ரங்கூன் சாலை முனையில் புதுசா அடுக்கு மாடிக் கட்டிடம் வருது! சிகிச்சை சுற்றுலாவுக்கு வரும் மக்களைக் குறிவச்சு கட்டிக்கிட்டு இருக்கு ஃபா ர்டீஸ் நிறுவனம். ( Fortis Healthcare) ஃபாரர் ஸ்கொயர் என்று பெயராம்.
கோவிலில் சின்னதா ஒரு கூட்டம். பெரிய திருவடிக்கு முன் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு. பெருசா ஒரு கலசம்/கும்பம் ஒரு மேடையில் ! புள்ளையாருக்கு ஒரு தேங்காய் அர்ச்சனை செஞ்சுக்கணும். ஒரு சமாச்சாரத்துக்கு அப்பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எல்லா பட்டர்களும் யாகத்தில் பங்கேற்பதால் அது முடிஞ்சாவுட்டுத்தான் அர்ச்சனை என்று கவுண்ட்டரில் சொன்னார்கள். சரி எப்படியும் எட்டுநாளில் திரும்பி சிங்கை வரும்போது வச்சுக்கலாமுன்னு சீனுவை தரிசிக்கப்போனோம்.
'இப்படி.... இப்படித்தாம்மா இருந்தான் அன்னிக்கு திருப்பதியிலே! கேட்டுக்கிட்டே இருந்தியே எப்படி இருந்தான் எப்படி இருந்தான்னு இப்படியேதான் 'என்றார் கோபால்.(பாவம்... ரொம்பப் பட்டுட்டார்!)
ஒற்றை வஸ்த்திரமும் துளசி மாலையுமா ..... நாமம் மட்டும் மங்கலாத் தெரியுது!
"அன்னிக்கு உன் கண்ணில் படலையேன்னு இன்னிக்கு அப்படியே காட்சி கொடுக்கறான் பார் ... "கோபால். ஏகாந்த சேவையா வேற வாய்ச்சுருச்சு!
தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதியில் தூமணி மாடம் பாடுவது எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பிப் பார்த்தால் கோபாலைக் காணோம். கண்ணைத் துரத்தினால் சீனுவின் முன்னால் மண்டபத்தில் கம்பியை ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார். என்னன்னு கிட்டே போனால்.... திருமஞ்சனம் ஆரம்பிக்கப்போகுதாம்!
அட்றா சக்கை! போனஸ் ஆப்ட்டது நமக்கு!
ஒரு மணி நேரம்! உற்சவருக்கும் மூலவருக்குமா குளியல் ! அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை எல்லாம் அமோகம். கண்குளிரக் கண்டோம்!
திருப்பதி தரிசனத்தை இடைக்கிடை நினைச்சுக்கிட்டு நடுங்கினது என்னவோ நிஜம். ஒருவிநாடி கண்ணைத் திறக்குமுன் கை இழுத்துக் கடாசும் கோவில் ஊழியர்களின் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா?
மூலவருக்கு முன் திரை போட்டு அலங்காரங்கள் ஒரு பக்கம் ஆரம்பிக்க,யாககுண்டத்தின் அருகில் அன்றைய கட்டளைதாரர் மாலைகள் ஏந்திய தாம்பாளத்துடன் யாகத்துக்கான சீர்வரிசைகளுடன் கோவிலைச் சுற்றி வந்து நிற்க , யாக குண்டத்தின் ஆஹூதியில் எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு பரிபூரணம் ! பரிவட்டம் கட்டிய பட்டர் கலசத்தைத் தலையில்சுமந்து மேளதாளங்களுடனும் தீவட்டி, குடைகள் போன்ற சம்ப்ரதாயங்களுடனும் கோவிலைச் சுற்றி வந்தார். கலசத்துக்கு தீபாரதனை காட்டினார்கள்.
நினைச்ச இடத்துக்குப்போகும் வகையில் சக்கரம் வச்ச வட்ட யாககுண்டம் அழகோ அழகு.
சிங்கை சீனு ஸ்பெஷலாக பத்துப்பதினைஞ்சு வருசமா நான் ஒரு வழக்கம் ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன். கோவில் உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிப்பது. நம்மிடம் இருக்கும் பெரிய எழுத்துப் புத்தகத்தை சிங்கைப் பயணங்களில் கொண்டு போவேன். மிஞ்சிப்போனால் ஒரு அரைமணி நேரம். நம்ம தூண் வேற நமக்காகக் காத்திருந்தது. வாசிச்சு முடிச்சு பெருமாளுக்கும், அனுமனுக்கும் நின்ன இடத்தில் இருந்தே ஒரு கும்பிடு போட்டு, எட்டுநாளில் மீண்டும் சந்திக்கலாமுன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பினோம். ஜாய் ஆலூக்காஸ் கடை போட்டுருக்கு கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் தள்ளி!
எப்பப் பார்த்தாலும் செராங்கூன் ரோடு என்ன வேண்டி இருக்குன்னு குறுக்குச்சாலையில் புகுந்து புறப்பட்டோம். சின்னச் சின்ன சந்துகளும் வீடுகளுமா இருக்கு. சுத்தம் ஓரளவு பரவாயில்லை. சீனர்களின் கடைகளில் காய்கறிக் கூடைகள் விற்பனைக்கு வந்து இறங்கி இருந்தன. அங்குமிங்குமா பழைய கலோனியல் ஸ்டைல் கட்டிடங்கள். போலீஸ் ஸ்டேஷன்கூட கண்ணில் பட்டது. கூடவே ஒரு பழைய சர்ச் ! கம்போங் கபோர் சர்ச்.
1929/30 வது வருசம் கட்டப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியான்னு சொல்லும் இந்தப்பகுதியில் இந்தியர்கள்மட்டுமில்லாமல் சீனர்களும் மற்ற இனத்தவர்களும் கணிசமான அளவு இருந்துருக்காங்க. அப்போ 1890களில் பாபா என்னும் சீன ஆண்கலும் நோன்யா என்ன்னும் சீனப்பெண்களுமா சுமார் 20 பேர்கள் சேர்ந்து சிங்கை மெதடிஸ்ட் சர்ச்சின் முதல் பெண் சமய போதகராக இருந்த சோஃபியா ப்ளாக்மோரின் வீட்டில் கூடி இருந்து ஆலயமொன்று வேண்டுமென தீர்மானித்துள்ளனர். 1891 முதல் மிடில் ரோடிலுள்ள கிறிஸ்துவ நிலையக் கட்டிடத்தில் வழக்கமாகக்கூடி வழிபாடு நடத்தி இருக்காங்க.
இதே கட்டிடத்தில்தான் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி ஒன்னும் 1900 ஆம் ஆண்டு வரை நடந்துருக்கு. வழிபாடு நடத்தும் கூட்டம் கொஞ்சம்கொஞ்சமா அதிகாமானதும் இடப்பற்றாக்குறை காரணமாக, 1927 ஆம் ஆண்டு தேவாலய உறுப்பினர்கள் நண்பர்கள், பிஷப் பிக்லி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி அம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்போ நாம் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. (கம்போங் கபோர் சாலையும் கஃப் சாலையும் சந்திக்கும் மூலை இது) பிக்லி மெமோரியல்ன்னே ஒரு காலத்துலே இதைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கிட்டு இருந்துருக்காங்க.
சிங்கைச் சரித்திரத்தின் ஒரு பகுதியா அரசு இதை அறிவிச்சு தகவல் பலகையும் வச்சுருக்கு. சிங்கை அரசில் பாராட்டப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சம் இப்படிப்பட்டத் தகவல் பலகைகள். ஆங்கிலம் தமிழ் சீனம் என்று மும்மொழிகளில் பாரம்பரிய, சரித்திர அம்சங்களோடுள்ளதை மறக்காமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! அப்பாடா.... சரித்திரம் கிடைச்சுருச்சுன்னு மகிழ்ச்சியா ரெண்டு க்ளிக் க்ளிக்கிட்டு டன்லப் தெரு வந்து சேர்ந்தோம்
. பச்சைப்பசேலுன்னு காய்கறிக் கடைகள். ஒரு ஆரம்பப் பள்ளி(Endeavour Primary )ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணாக்கரை லைஃப் ஸ்டடி டூர் என்ற வகையில் கூட்டிவந்து கடைகளையும் பொருட்களையும் காமிச்சு பாடம் சொல்லிக்கிட்டு இருந்தார். முத்தாத இளம் காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்கணுமுன்னு சொல்லி இருப்பாரோ? மாணவர்கூட்டத்தில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகம் என்று தோணுச்சு எனக்கு. (நல்லாப் பார்த்துப் படிங்கப்பா....பின்னாளில் மனைவியிடம் பாராட்டு பெற உதவும்!)
பொடிநடையில் நாங்கள் Tekka Centre (சிராங்கூன் சாலையின் ஆரம்பம்) வந்து அங்கே அடித்தளத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்குப்போய் பழங்கள் பகுதியை நோட்டம் விட்டோம். அழகாக நறுக்கிய பழத்துண்டுகளை சின்ன அளவில் பொதிஞ்சு வச்சுருப்பாங்க இங்கே. பார்க்கவும் சுத்தமாக இருப்பதால் பயமில்லாமல் வாங்கிச்சாப்பிடலாம். பலாப்பழம் கிடைச்சது. டூரியனையும் வெட்டி வச்சுக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர். இங்கே நியூஸியில் நான் தேடிக்கிட்டு இருக்கும் டெவில்ஸ் ஐவி (மணி ப்ளான்ட்ஸ்) செடிகள் விற்பனைக்கு இருக்கு. ஐயோ..... என்னால் வாங்கிவர முடியாதே............ நியூஸியில் விமானம் இறங்கும்போது ஒரு பூவோ, பழமோ இலையோ நம்வசம் இருந்தால் தொலைஞ்சோம்! பயோ செக்யூரிட்டி இங்கே கடுமை. பத்தாயிரம் டாலர் வரை அபராதம் உண்டு!
அப்படியே லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு ஒரு புத்தகக்கடைக்குப்போய்ப் பார்த்தோம். துளசி கிடைச்சாள். பாலகுமாரன். பயண வாசிப்புக்கு வேணுமேன்னு பார்த்ததில் எழில்வரதனின் 'கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை' ஆப்ட்டது. சிரிப்புக்கு கேரண்டீன்னதால்வாங்கினேன். கூடவே வாடாமல்லியும்.(சு.சமுத்திரம்)
லெட்சிமி புஸ்பக் கடையில் அழகான மாலைகளும் இன்னொரு மூலைக்கடையில் மாம்பழவகைகளும் அப்படியே கண்ணையும் மனசையும் இழுத்துச்சு. இன்னொரு கடையில் இளநீர் வாங்கிக்குடிச்சுட்டு செராங்கூன் சாலையைக் கடந்தோம். ஏதோ டிவிக்கான படப்பிடிப்பு. நாயகி ஷாப்பிங் செஞ்ச பைகளோடு சாலையைக் கடக்குறாங்களாம்!!! படு பொருத்தம்:-)
வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பிரசாத விநியோகம் நடக்குது. சாம்பார் சாதமும் கேஸரியும் கண்ணை இழுத்தாலும் வயிற்றில் இடமில்லையே:(
ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டு (இங்கே செக் அவுட் டைம் பகல் 12. செக் இன் மதியம் 3 )சிங்கை ஸ்டாப் ஓவரின் ஃப்ரீ பிக்கப் ஒரு பனிரெண்டரை மணிக்கு வரும் என்று காத்திருந்தோம். சரியான நேரத்துக்கு வண்டி வந்தது. நாங்க ரெண்டு பேர் மட்டுமே என்பதால் நேராக விமானநிலையம்தான். ஏர் ஏஷியா டெர்மினல் நம்பர் ஒன்னில் இருந்து போகுதாம். ரொம்ப நல்லதாப்போச்சு.போன முறை விட்டுப்போன காக்டெஸ் கார்டனைப் பார்த்துறலாம்!
