எதா இருந்தாலும் வீக் எண்டுக்குன்னு நேர்ந்து விட்டுருவோம். இதுலே ஒன்னே ஒன்னு மட்டும் அடங்காது. 'அவுங்க ' சனி ஞாயிறு வேலை செய்ய மாட்டாங்க. அச்சானியமா இருக்குன்னு நினைச்சுக்குவீங்கன்னுதான் பெயரைச் சொல்லலை:-)
இந்த வீக் எண்டுக்கு ரெண்டு ஈவெண்ட்.
1. இந்திய சுதந்திர தின விழா.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு டின்னரோடு ஆரம்பிச்சது. பூரி, சாதம், உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் கூட்டு, ரெய்த்தா, அப்பளம். ஊறுகாய், கேசரி, காஃபி, டீ, குளிர் பானங்கள் இப்படி ஒரு மெனு. உள்ளூர் ஸ்வாமி நாராயண் கோவில் அடுக்களையில் தயார் செய்யப்பட்டு வந்து இறங்குச்சு. கடவுளின் ஆசிகளோடு வந்த சாப்பாட்டை முடிச்சோம். எட்டு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.
இந்த ஆண்டு பெண் ஜனாதிபதி எங்களுக்கு. ஃபிஜி இந்தியர் ப்ரமீளா. தேர்தல் நடந்தப்பத்தான் தெரிஞ்சது மூணு வருசமா க்ளப் கதிகேடாப் போயிருந்துச்சுன்னு:(
காரணம் ரொம்பவே சிம்பிள்... சாட்டை எடுக்கஇண்டியன் க்ளப்பின் தந்தை நாட்டில் இல்லை:(
நிலநடுக்கம் காரணம் மக்கள் மன அழுத்தத்தில் ஆழ்ந்துட்டாங்க. நோ மோர் சோஸியலைஸிங்:( ஊரை விட்டு வேறு ஊர்களுக்கும் நாட்டுக்கும் புலம் பெயர்ந்துட்டாங்களாம்!
ஹேய்.... ஜுஜுபி..... நொண்டிச் சாக்குகள்!
புறக்கணிப்புக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு காரணம்.....
இந்தியனாக இருக்கணும் என்றால் நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் குண அம்சமான அங்கிங்கெனாதபடி பாதாளம் வரை வேர்பரப்பி நிற்கும் ஒரு சமாச்சாரத்தில் எந்தவகையிலாவது சம்பந்தப்பட்டு இருக்கணும். இருந்தாங்க..... :(
பொறுக்க முடியாமக் கேள்வி கேட்டவங்களுக்கு எந்த ஒரு தனி மரியாதை கிடைக்குமோ அது(வும்) கிடைச்சது. அதனால் கொந்தளிச்சுப்போய்க் கிடந்தாங்க.
க்ளப்பின் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ..............
ஃபாதர் ஆஃப் த க்ளப் திரும்பி வந்ததும் ரெண்டு குழுவும் தனித்தனியா வந்து கண்டுக்கிட்டு ஒப்பாரி எல்லாம் வச்சாங்க. ஃபாதரும், மதரும் ரெண்டு பக்கத்தையும் நின்னு கேட்டு உண்மை எதுன்னு கண்டு பிடிச்சதும்....
கட்டாயம் இதுக்குப் புத்துயிர் கொடுக்கலாமா? இல்லை போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு ஒழியட்டுமுன்னு விட்டுட்டு இன்னொரு குழந்தையை பெத்துக்கலாமான்னு உக்கார்ந்து யோசிச்சு, கடைசியா ஒரு முறை ஐ யூ ஸியிலே இருப்பதைக் கவனிச்சு உயிர் ஊட்டிப் பார்க்கலாம். பொழைச்சு எழும்போல இருந்தால் மேற்கொண்டுன்னு...... மீட்டிங் ஒன்னு போட்டால் 100 குடும்பங்களை விட்டுட்டுப்போன (குடும்பத்துக்கு ரெண்டு பேர் என்று வச்சாலும் 200 பேர் இருக்க வேண்டிய) இடத்தில் எண்ணி மூணே மூணு அங்கத்தினர் ஊழல் கட்சியிலும், எதிரிகளாக ரெண்டே ரெண்டு பேரும் வருகை தந்தாங்க! இன்றைக்கு ஏ ஜி எம் நடத்தனுமுன்னு ஏற்பாடு! கிழிஞ்சது போ:(
மூணு வாரத்தில் எல்லா அங்கத்தினருக்கும் தகவல் அனுப்பி இன்னொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கன்னு ஃபாதர் சொல்லிட்டார். அங்கத்தினர் லிஸ்ட் எங்கேன்னு கேட்டால்..... ஊழலோடு சேர்த்து அதையும் ஸ்வாஹா பண்ணி இருக்காங்க:(
நண்பர்கள் லிஸ்ட் அவுங்கவுங்ககிட்டே இருக்கும் பாருங்க அதை வச்சு எல்லோருக்கும் தகவல் அனுப்பி மூணு வாரம் முன்னறிவிப்பெல்லாம் விதிப்படி கொடுத்து இன்னொரு ஏ ஜி எம் கூட்டம் ஏற்பாடாச்சு. கொஞ்சம் முன்னேற்றம்!!! கடந்த ஆண்டுகளில் கிடைச்ச மரியாதையை நினைச்சு பழைய அங்கத்தினர் யாரும் தலை காட்டலை:( ஆனால் புதுசா நாலு பேர் வேடிக்கை பார்க்க வந்துருந்தாங்க.
சட்ன்னு அவுங்களைப்பிடிச்சுப்போட்டு பழைய இந்தியப் பெருச்சாளிகளை உள்ளே வரவிடாமல் சங்கத்தைக் காப்பாத்த ஃபிஜி இண்டியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கினோம்:-) அப்படியும் ஒரு பெருச்சாளி வேற ஒரு போஸ்ட்டில் இடம் பிடிச்சாச்சு. சரி. போகட்டும் திருந்துமான்னு பொறுத்துப் பார்க்கலாம். வழக்கமா ஏழு பேர் நிர்வாகிகள். ஆனால்..... நாலு பேர் இருக்கும் க்ளப்புக்கு ஏழு நியாயமா? மூணே ஜாஸ்தி இல்லையோ?
1997 சுதந்திர தின பொன்விழா ஆண்டுதான் நம்ம க்ளப் ஆரம்பிச்சு முதல் விழாவைக் கொண்டாடுச்சு. 15 வருசத்துக்குப்பின் இந்த சுதந்திர தின விழாவில் மறு உயிர். புது ஜனாதிபதி நல்லா ஊக்கத்தோடு உழைச்சு ஆட்களைச் சேர்த்துருந்தாங்க. பயந்துக்கிட்டேதான் போனேன்...... தனியா உக்கார்ந்து சாப்பிடும்படி ஆகிருமோன்னு!
இந்த வருசத்தின் முதல் ஒன்று கூடல் என்பதால் இதையே புது அங்கத்தினர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியா வச்சுக்கணும். நம்மாட்களுக்கு இலவசமாக் கிடைச்சால்தான் வரவும் செய்வாங்க. இன்றைக்கு மெம்பர்ஷிப் எடுத்தால் எல்லாம் இலவசம். நல்லா ஒர்க்கவுட் ஆகிருச்சு:-))))
நாங்களும் ஒரு அஞ்சு பேரைப்பிடிச்சுப் போட்டோமுன்னு வையுங்க:-)))))
கூடியவரை மேடையை அலங்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போதைக்கு இது யதேஷ்டம்:-)
கடவுள் வணக்கம், கஸல் பாடல்கள். ஃபாதரின் சிறப்புரை, எத்னிக் கவுன்ஸில் அங்கத்தினரின் பேச்சு, ரெண்டு நடனம் இப்படி நிகழ்ச்சிகள். மேடை நிகழ்ச்சியின் கடைசியில் இந்திய தேசிய கீதம், கஸல் குழுவினரால் பாடப்பட்டது. ராகம் வேற ஒரு வர்ஷன்னு வச்சுக்கலாம். இசைக்குழு முழுசும் ஃபிஜி மக்கள்ஸ்.
நம்மூர் ஹரே க்ரிஷ்ணாவில் சாமி பாட்டுகளையெல்லாம் வழவழா கொழகொழான்னு பாடுவது நினைவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கார நாவில் பெங்காலிமொழி படும் பாடு:-)
எனெக்கென்னவோ...வந்தேமாதரம் பாட்டுதான் தேசிய கீதமா இருக்கணும் என்ற விருப்பம்.
அப்புறம் டான்ஸ் ஆரம்பிச்சது. தாண்டியா! ஆக மொத்தம் இங்கே ரெண்டே வகைதான். பஞ்சாபிகள் ஆக்ரமிச்சால் பல்லே பல்லே பாங்க்ரா இருக்கும். குஜராத்திகள் என்றால் தாண்டியா.
நமக்கு ஒரு விரோதமும் இல்லை. எப்படியோ ஜனங்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியா இருந்தாச் சரி.
அனைவருக்கும் இந்திய சுதந்திர நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
இந்த வீக் எண்டுக்கு ரெண்டு ஈவெண்ட்.
1. இந்திய சுதந்திர தின விழா.
சனிக்கிழமை மாலை 6 மணிக்கு டின்னரோடு ஆரம்பிச்சது. பூரி, சாதம், உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் கூட்டு, ரெய்த்தா, அப்பளம். ஊறுகாய், கேசரி, காஃபி, டீ, குளிர் பானங்கள் இப்படி ஒரு மெனு. உள்ளூர் ஸ்வாமி நாராயண் கோவில் அடுக்களையில் தயார் செய்யப்பட்டு வந்து இறங்குச்சு. கடவுளின் ஆசிகளோடு வந்த சாப்பாட்டை முடிச்சோம். எட்டு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.
இந்த ஆண்டு பெண் ஜனாதிபதி எங்களுக்கு. ஃபிஜி இந்தியர் ப்ரமீளா. தேர்தல் நடந்தப்பத்தான் தெரிஞ்சது மூணு வருசமா க்ளப் கதிகேடாப் போயிருந்துச்சுன்னு:(
காரணம் ரொம்பவே சிம்பிள்... சாட்டை எடுக்கஇண்டியன் க்ளப்பின் தந்தை நாட்டில் இல்லை:(
நிலநடுக்கம் காரணம் மக்கள் மன அழுத்தத்தில் ஆழ்ந்துட்டாங்க. நோ மோர் சோஸியலைஸிங்:( ஊரை விட்டு வேறு ஊர்களுக்கும் நாட்டுக்கும் புலம் பெயர்ந்துட்டாங்களாம்!
ஹேய்.... ஜுஜுபி..... நொண்டிச் சாக்குகள்!
புறக்கணிப்புக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு காரணம்.....
இந்தியனாக இருக்கணும் என்றால் நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் குண அம்சமான அங்கிங்கெனாதபடி பாதாளம் வரை வேர்பரப்பி நிற்கும் ஒரு சமாச்சாரத்தில் எந்தவகையிலாவது சம்பந்தப்பட்டு இருக்கணும். இருந்தாங்க..... :(
பொறுக்க முடியாமக் கேள்வி கேட்டவங்களுக்கு எந்த ஒரு தனி மரியாதை கிடைக்குமோ அது(வும்) கிடைச்சது. அதனால் கொந்தளிச்சுப்போய்க் கிடந்தாங்க.
க்ளப்பின் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ..............
ஃபாதர் ஆஃப் த க்ளப் திரும்பி வந்ததும் ரெண்டு குழுவும் தனித்தனியா வந்து கண்டுக்கிட்டு ஒப்பாரி எல்லாம் வச்சாங்க. ஃபாதரும், மதரும் ரெண்டு பக்கத்தையும் நின்னு கேட்டு உண்மை எதுன்னு கண்டு பிடிச்சதும்....
கட்டாயம் இதுக்குப் புத்துயிர் கொடுக்கலாமா? இல்லை போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு ஒழியட்டுமுன்னு விட்டுட்டு இன்னொரு குழந்தையை பெத்துக்கலாமான்னு உக்கார்ந்து யோசிச்சு, கடைசியா ஒரு முறை ஐ யூ ஸியிலே இருப்பதைக் கவனிச்சு உயிர் ஊட்டிப் பார்க்கலாம். பொழைச்சு எழும்போல இருந்தால் மேற்கொண்டுன்னு...... மீட்டிங் ஒன்னு போட்டால் 100 குடும்பங்களை விட்டுட்டுப்போன (குடும்பத்துக்கு ரெண்டு பேர் என்று வச்சாலும் 200 பேர் இருக்க வேண்டிய) இடத்தில் எண்ணி மூணே மூணு அங்கத்தினர் ஊழல் கட்சியிலும், எதிரிகளாக ரெண்டே ரெண்டு பேரும் வருகை தந்தாங்க! இன்றைக்கு ஏ ஜி எம் நடத்தனுமுன்னு ஏற்பாடு! கிழிஞ்சது போ:(
மூணு வாரத்தில் எல்லா அங்கத்தினருக்கும் தகவல் அனுப்பி இன்னொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கன்னு ஃபாதர் சொல்லிட்டார். அங்கத்தினர் லிஸ்ட் எங்கேன்னு கேட்டால்..... ஊழலோடு சேர்த்து அதையும் ஸ்வாஹா பண்ணி இருக்காங்க:(
நண்பர்கள் லிஸ்ட் அவுங்கவுங்ககிட்டே இருக்கும் பாருங்க அதை வச்சு எல்லோருக்கும் தகவல் அனுப்பி மூணு வாரம் முன்னறிவிப்பெல்லாம் விதிப்படி கொடுத்து இன்னொரு ஏ ஜி எம் கூட்டம் ஏற்பாடாச்சு. கொஞ்சம் முன்னேற்றம்!!! கடந்த ஆண்டுகளில் கிடைச்ச மரியாதையை நினைச்சு பழைய அங்கத்தினர் யாரும் தலை காட்டலை:( ஆனால் புதுசா நாலு பேர் வேடிக்கை பார்க்க வந்துருந்தாங்க.
சட்ன்னு அவுங்களைப்பிடிச்சுப்போட்டு பழைய இந்தியப் பெருச்சாளிகளை உள்ளே வரவிடாமல் சங்கத்தைக் காப்பாத்த ஃபிஜி இண்டியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கினோம்:-) அப்படியும் ஒரு பெருச்சாளி வேற ஒரு போஸ்ட்டில் இடம் பிடிச்சாச்சு. சரி. போகட்டும் திருந்துமான்னு பொறுத்துப் பார்க்கலாம். வழக்கமா ஏழு பேர் நிர்வாகிகள். ஆனால்..... நாலு பேர் இருக்கும் க்ளப்புக்கு ஏழு நியாயமா? மூணே ஜாஸ்தி இல்லையோ?
1997 சுதந்திர தின பொன்விழா ஆண்டுதான் நம்ம க்ளப் ஆரம்பிச்சு முதல் விழாவைக் கொண்டாடுச்சு. 15 வருசத்துக்குப்பின் இந்த சுதந்திர தின விழாவில் மறு உயிர். புது ஜனாதிபதி நல்லா ஊக்கத்தோடு உழைச்சு ஆட்களைச் சேர்த்துருந்தாங்க. பயந்துக்கிட்டேதான் போனேன்...... தனியா உக்கார்ந்து சாப்பிடும்படி ஆகிருமோன்னு!
இந்த வருசத்தின் முதல் ஒன்று கூடல் என்பதால் இதையே புது அங்கத்தினர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியா வச்சுக்கணும். நம்மாட்களுக்கு இலவசமாக் கிடைச்சால்தான் வரவும் செய்வாங்க. இன்றைக்கு மெம்பர்ஷிப் எடுத்தால் எல்லாம் இலவசம். நல்லா ஒர்க்கவுட் ஆகிருச்சு:-))))
நாங்களும் ஒரு அஞ்சு பேரைப்பிடிச்சுப் போட்டோமுன்னு வையுங்க:-)))))
கூடியவரை மேடையை அலங்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போதைக்கு இது யதேஷ்டம்:-)
கடவுள் வணக்கம், கஸல் பாடல்கள். ஃபாதரின் சிறப்புரை, எத்னிக் கவுன்ஸில் அங்கத்தினரின் பேச்சு, ரெண்டு நடனம் இப்படி நிகழ்ச்சிகள். மேடை நிகழ்ச்சியின் கடைசியில் இந்திய தேசிய கீதம், கஸல் குழுவினரால் பாடப்பட்டது. ராகம் வேற ஒரு வர்ஷன்னு வச்சுக்கலாம். இசைக்குழு முழுசும் ஃபிஜி மக்கள்ஸ்.
நம்மூர் ஹரே க்ரிஷ்ணாவில் சாமி பாட்டுகளையெல்லாம் வழவழா கொழகொழான்னு பாடுவது நினைவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கார நாவில் பெங்காலிமொழி படும் பாடு:-)
எனெக்கென்னவோ...வந்தேமாதரம் பாட்டுதான் தேசிய கீதமா இருக்கணும் என்ற விருப்பம்.
அப்புறம் டான்ஸ் ஆரம்பிச்சது. தாண்டியா! ஆக மொத்தம் இங்கே ரெண்டே வகைதான். பஞ்சாபிகள் ஆக்ரமிச்சால் பல்லே பல்லே பாங்க்ரா இருக்கும். குஜராத்திகள் என்றால் தாண்டியா.
நமக்கு ஒரு விரோதமும் இல்லை. எப்படியோ ஜனங்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியா இருந்தாச் சரி.
அனைவருக்கும் இந்திய சுதந்திர நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.