Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1446 articles
Browse latest View live

ஆளாளுக்கு விதியை மாத்தறேன்னு கூப்ட்டா எப்படி? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 102)

$
0
0
கோவில் திருப்பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. சின்னக்கோவில்தான். வரம் தரும் வரதராஜர்! கோபுரவாசலைத் தாண்டி உள்ளே போனதும்  பலிபீடம் கொடிமரம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவடி.  கண்ணுக்கு நேரா இருக்கும் வாசலில் நுழைஞ்சால்   சின்ன  முன்மண்டபத்தோடு  கருவறை!  அம்பூட்டுதான்.
பட்டாச்சாரியார், ஜாதகம் கொடுங்கன்னு கை நீட்டுனார். எனக்கு ஒன்னும் புரியலை. எதுக்கு? மொதல்லே எனக்கு ஜாதகமே இல்லையே.....  நம்மவருக்கு இருக்குன்னாலும் அதெல்லாம் ஊருலே மாமியார் வச்சுருந்தாங்க. அவுங்க டைம் முடிஞ்சாட்டு, இப்ப யார்கிட்டே இருக்கோ?
நமக்குப் பின்னாலேயே வந்த இன்னொரு குடும்பம்  பையில் இருந்து  ஒரு  காகிதம் எடுத்து நீட்டுனாங்க.  ஜாதகம் ! அதை வாங்குன பட்டர் சாமியின் காலடியில் கொண்டு போய் வச்சுட்டு,  அவுங்க கொண்டு வந்துருந்த தேங்காய் பழம் பூ  எல்லாத்தையும் ஒரு தாம்பாளத்துலே வாங்கிப்போய் தேங்காயை உடைச்சுட்டு, அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார்.  கற்பூர ஆரத்தி ஆச்சு. நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.

ஜாதகத்தைத் திரும்ப அவுங்களிடம் கொடுத்த பட்டரிடம், என்ன ஏதுன்னு விவரம் கேட்டேன்.  'இவர் வரம்தரும் வரதராஜர். அதனால் நமக்கு நம்ம விதிப்படி என்ன கஷ்டம் இருந்தாலும், நம்ம ஜாதகத்தை இங்கே பெருமாள் காலடியில் வச்சு வணங்கினால்  அதை நல்லபடியா மாத்தி நாம் கேட்கும் வரத்தை அருள்வார். எண்ணி நாப்பத்தியஞ்சு நாளில் நல்லது நடக்கும். ஆனால்....  நாம் கேட்கும்  வரம் நியாயமானதா இருக்கணும்' என்றார்.
  கோவில் மதில்சுவரில்கூட வரம்தரும் பெருமாள்னுதான் போட்டுருக்காங்க.
வெளியே படம் எடுத்துக்க அனுமதி வாங்கிக்கிட்டு வலம் ஆரம்பிச்சோம்.
பின்பக்கம்  ஒரு பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கார்.  தலைக்கு மேல் ஒரு தென்ன ஓலையில் தட்டுப் பந்தல்!

ஐயோ.... என்னத்துக்கு இப்படிப் பெருமாள்,  கோவிலின் பின்புறம் தனியா நிக்கறார்?  அதுவும் ஓலைப் பந்தலுக்கடியில்?

இப்போ  தலைக்கு மேலே  ஒரு கூரையாவது இருக்கு. ரொம்ப நாளுக்கு முன்னால்   வானமே கூரையாத்தான்  இருந்தாராம்.......   அதான்... ஏன் இப்படி?

கோவில் சங்ககாலத்துலே இருந்தே  இருக்கு. பெருமாளும் அப்போதே இருந்துருக்கார். பிறகு எட்டாம் நூற்றாண்டுலே இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கோவிலை நல்லபடியாகக் கட்டிக் கொடுத்துருக்கார்.  எல்லாம் சில நூற்றாண்டுகள்தான்.....  பிறகு  சிதிலமடைய ஆரம்பிச்சது.  சடையவர்மன் வீரபாண்டியன்  சரி செஞ்சு கொடுத்துருக்கார்.  அப்பெல்லாம் சாமி புருஷோத்தமன் தானாம்.

அதுக்கப்புறம்  நாயக்கர்   ஆட்சி காலத்தில்   வரதராஜரா திரும்பப் பிரதிஷ்டை ஆகி இருக்கு.  அட! அப்ப புருஷோத்தமன் என்ன ஆனார்? இப்போ எங்கே?
காலப்போக்கில் என்னென்னமோ ஆகிப்போய்  வரம் தரும் வரதராஜர் இங்கே ஸ்திரம் ஆனார்.

நான் நினைக்கிறேன்...  அப்பெல்லாம் சிவ வைணவ பேதங்களும் சண்டைகளும் அதிகமா இருந்துருக்கலாம். பக்கத்துக் கோவிலில் சைவர்களுக்காக,   பிரம்மனின் தலை விதி மாத்திய ப்ரம்மபுரீஸ்வரர், ப்ரம்மனிடம் பொறுப்பை  ஒப்படைச்சுட்டு இருக்கும்போது,    வைணவர்கள் மட்டும்  தங்கள் தலை விதியை மாத்திக்க எங்கே போவாங்களாம்?
அதுக்குத்தான்  உங்களுக்கு உங்க சாமின்னா எங்களுக்கு  எங்க சாமின்னு  வரதராஜர் எண்ட்ரி ஆனது!    அங்கே வெறுமனே விதியை மாத்திதான் எழுதுவாங்க.  என்ன எழுதறாங்களோ அது ப்ரம்மனின் இஷ்டம்.  ஆனால் இங்கே  .....  நாம் எப்படி இருக்க ஆசைப்பட்டு வரம் கேக்கறமோ  அதை  உடனே  நாப்பத்தியஞ்சு நாட்களில் நிறைவேத்தி வைக்கும் வரம் தரும் பெருமாள். த சாய்ஸ் இஸ் அவர்ஸ்!
இருக்கட்டும்... இருக்கட்டும்  அந்த புருஷோத்தமர் அப்புறம் என்ன ஆனார்?  அடடா.... அவர்தாங்க இங்கே வெளியே நிக்கறார்!
அடப்பாவமே....  அவரையும் கருவறையிலேயே வச்சுருக்கக்கூடாதா?  அது எப்படி?

கோவில் ஒருமுறை சிதிலமாப்போய் இடிஞ்சு விழுந்ததில்  மூலவர் சிலை பின்னப்பட்டுப் போயிருச்சு.    பின்னமான சிலையை  கும்பிடக்கூடாதுன்னு   அதை எடுத்துட்டுப் புதுப்பெருமாளை வச்சுருக்காங்க. பெயர் மாற்றமும் அப்போதான் வந்துச்சோ என்னவோ?

எனக்குப் பெருமாள் வெளியே அம்போன்னு நிக்கறதைப் பார்த்து மனசுக்கு ஆறலை. சாமி நம்ம குழந்தை மாதிரி. குடும்பத்தில் ஒருவர். அப்படி நினைச்சுதானே அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம் எல்லாம் செய்யறோம். காலையில் எழுப்பி விட்டு, விஸ்வரூபம்னு ஆரம்பிச்சு  பகலெல்லாம் உச்சி பூஜை, சாயரக்ஷைன்னு கொண்டாடி,  ராத்ரியில் அர்த்தஜாம பூஜை நடத்தி, அதன்பின்  பள்ளியறையில் தூங்க வச்சுன்னு  என்னெல்லாம் செய்யறோம்! குடும்ப நபராக் கொண்டாடறோமா  இல்லையா?

நம்ம குடும்பத்தில் நம்ம  நெருங்கிய சொந்தத்துக்கு  எதோ விபத்தில் எதாவது அங்கம் பழுதாகிப்போனால்.... அப்படியே வீட்டை விட்டு விரட்டிடறோமா?  இல்லே வயசாகிப்போய் படுக்கையில் விழுந்துட்டா, தூக்கி எறிஞ்சுடறோமா?  அவுங்க காலம் முடியும்வரை கூடவே வச்சுக் காப்பத்தறோமா  இல்லையா?  அப்படி மனுசருக்கே செய்யும்போது, பின்னமான சிலைன்னு வெளியே போட எப்படி மனசு வருது?
திரும்ப ஓடிப்போய்ப் பெருமாளைப் பார்த்தேன்.....  என் ஊனக்கண்களுக்கு ஒரு பின்னமும் தெரியலை!  இருந்தாலும் பொருட்படுத்த மாட்டேன்றது.....  வேற.  'இருக்க இடமில்லை. ஆனால் அலங்காரம் பண்றேன்னு,  எனக்கு லிப்ஸ்டிக் போட்டுட்டா பாரேன்'என்றார் :-)

 'எனக்கு ஒரு கோவில் கூட தனியா   வேணாம். ஒரு சந்நிதி மட்டும் கிடைச்சாலும் போதுமுன்னு  நீர்  உள்ளே இருப்பவரிடம் வரம் கேட்டுக்கிட்டால் நல்லது'ன்னு  அவர்கிட்டே சொல்லிட்டு, நானும்  உள்ளே இருப்பவரிடம் என் விண்ணப்பத்தை கொடுத்தேன்.

இத்தனை களேபரத்திலும் நம்மை பற்றிக் கொஞ்சம் உயர்வாச் சொல்லி ஒரு போர்டு(ம்)  வச்சுருந்தாங்க!
 கூடவே  வரம் தரும் வரதராஜருக்கும் தேவிகளுக்குமா ஒரு அஷ்டோத்ர  நாமாவளி  எழுதி வச்ச போர்டும்!
ஆலயத் திருப்பணிக்கு  தாராளமா கைங்கரியம் பண்ணச்சொல்லி  ஒரு விண்ணப்பம். அதையடுத்து, 'எங்கிட்டே ஒத்தைப் பைஸா கிடையாது!  பெருமாளே கதி'ன்னு ரெண்டு உயிர்கள்.  க்ளிக்கினபோது  சின்னது  லேசா ஒரு கண்ணைத் திறந்து பார்த்தது :-)

உள்ளே கோவில் வாசலை  ஒட்டி ஒரு மேஜையில் அரிசி, பருப்பு  வகைகள், கொஞ்சம் மளிகை சாமான்கள் எல்லாம் ஒரு கிலோ, அரைக்கிலோ, 100 கிராம், இப்படிப் பொட்டலங்களா இருந்துச்சு. பட்டாச்சார்யார்  இதுலே எது விருப்பமோ அதைப் பெருமாளுக்குக் கொடுக்கலாம். இதோ இந்தக் கூடையில் போடுங்கோன்னார்.  அடப்பாவமே............  பெருமாளுக்கே இந்த கதியா?  ஒரு நாலைஞ்சு வகைகளை எடுத்துக் கூடையில் போட்டுட்டு, அதுக்குண்டான காசை பட்டரிடம் கொடுத்ததும் ரசீதும் கொடுத்தார்.
கூடவே  இங்கே பௌர்ணமியில் நடக்கும் சுதர்ஸன  ஹோமம் ரொம்பப் பிரசித்தம்னு அதுக்குண்டான நோட்டீஸையும் கொடுத்தார்.  வாங்கி வச்சுக்கிட்டேன்.
ரமேஷ் பட்டாச்சாரியாரின் பொறுமைக்கும், அயராமல் பக்தர்களுக்கு உதவி செய்யும் குணத்துக்கும், முக்கியமா சிரிச்ச முகத்துக்கும்,  கோவில் விவரங்களைக் கேட்டவுடன்  சலிச்சுக்காமல் சொன்ன  பண்புக்கும் நன்றி சொல்லிட்டு, நல்ல  பட்டர் கிடைச்சுருக்கார். விட்டுடாதேன்னு  'அவனுக்கும்' சொல்லிட்டுக் கிளம்பினேன்.
வரம்தரும் பெருமாளுக்கே....  இப்படி ஒரு பட்டர் கிடைக்கலைன்னா.....   அவர் கதி இன்னும் மோசமா ஆகி இருக்கும் போல!  போகட்டும்  அவர் கொடுத்த நோட்டீஸை ஸ்கேன் செஞ்சு இங்கே போட்டுருக்கேன். யார் கண்ணிலாவது பட்டு, எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான் எனக்கும்.....
இன்னொன்னு சொல்லணும்....  பெருமாள் தனக்குத்தானே வரம் தந்துக்கப்டாதான்னு   கேக்கப்டாது, கேட்டோ! பொறத்தியாருக்குத்தான் பலிக்கும். தனக்காக வேண்டினால் பலிக்காதுன்ற நியமம் வைகுண்டத்தில் இருக்கலாம்! யார் கண்டது?
அடுத்தாப்லே ஒரு அம்மன் கோவில் இருக்கு. நமக்கு  நேரம் கொஞ்சம் டைட் இப்போ என்பதால்  வெளியே இருந்தே போறபோக்கில் ஒரு கும்பிடு .


கட்டாயம் போக வேண்டிய அடுத்த கோவிலுக்கு ஓடணும். இன்னும் பனிரெண்டாக  இருபது நிமிட் தான் இருக்கு......... கோவில்  மூடறதுக்குள்ளே..........  போயிடணும்.....

தொடரும்...........  :-)



பாம்பும் புலியும் ஃப்ரெண்ட்ஸாம்ப்பா! ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 103)

$
0
0
அஞ்சே நிமிசத்துலே   புலியாண்டை போயிட்டோம். நல்ல ரோடு போட்டு வச்சுருக்காங்க.  இந்தக் கோவில்களுக்கெல்லாம்   மந்திரிகளும், அரசியல் வியாதிகளும் வர ஆரம்பிச்சுருக்காங்களாம்.  புது வாழ்வு கிடைச்சால் இன்னும் கொஞ்சம் சுருட்டலாமே !
மூணு நிலை  ராஜகோபுரம். பெரிய மதில் சுவர்கள்.  அதையொட்டுன கோவில் கடைகள்.  காய்ச்சுத் தொங்கும் புளியமரங்கள்.  மரத்தாண்டை  பாம்புப்புத்துகளோடு ஒரு நாகர் சந்நிதி.  கேரளா ஸ்டைலில் சிகப்பு ஓடு போட்ட புள்ளையார் கோவில் சின்னதா ஒரு பக்கம். இந்தாண்டை ஒரு பெரிய ஊருணி. கூட்டம்  கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு.


திருப்பட்டூர் ஊருக்குள்ளே நுழைஞ்சு  அய்யனார் கோவிலில் ஆரம்பிச்சோமுன்னா  இது தான் கடைசிக்கோவில்.   காசி விஸ்வநாதர்  திருக்கோவில். ஊர் எல்லையில் இருக்கு. இந்தக் கோவிலுக்கு வயசு மூவாயிரத்துக்கும் அதிகமாம்.
கோபுரவாசலுக்குள் நுழைஞ்சால் கண்ணுக்கு முன்னால் கண்ணாடி தடுப்புக்குள்ளே வ்யாக்ரபாதர் ஜீவசமாதி. இவர்தான் புலிக்கால் முனிவர். பொழுது புலர்றதுக்கு முன்னேயே இருட்டில் போய் தேனீக்கள் கூட எழுந்து வர்றதுக்கு முந்தி இவர் போய் மரத்தில் இருக்கும் புத்தம்புது பூக்களை பறிச்சு வந்துறணும் என்றதுக்காக தனக்குப் புலிக்கால் வேணுமுன்னு தவமிருந்து  அதே மாதிரி புது உருவம் அடைஞ்சவர்.  ஆஹா...  இவருக்கும் புது வாழ்வு கிடைச்சுருக்கு பாருங்க!!!
இவரும், பதஞ்சலி முனிவரும் அந்தக் காலத்துலே நண்பர்கள். பதஞ்சலி முனிவர், ஆதிசேஷனின் அவதாரமாம்.  ரெண்டு பேருமாச் சேர்ந்து  தவம் செஞ்சு , தில்லை நடராஜரின் நடனத்தை நேரில் பார்த்துருக்காங்களாம்.  சிதம்பரம் கோவிலில் கூட இவுங்களுக்கு ஒரு சந்நிதி இருக்குன்னு நினைவு.


புலிக்கால் முனிவர், இந்தக் காசி விஸ்வநாதருக்கு தினமும் அபிஷேகம் பண்ணி பூஜிச்சுக்கிட்டு வந்துருக்கார். ஒரு சமயம் அபிஷேகத்துக்குத் தண்ணீர் கிடைக்காம ஊரே வறண்டுபோய் இருக்கு.  இது இப்படி இருக்க, நம்ம  திருவானைக்கால் கோவிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய இந்திரனுடைய ஐராவதம், கைலாசத்தில் இருந்து தினமும் தண்ணீர் கொண்டுக்கிட்டு ஆகாய மார்க்கமாப் போகுமாம்.
இதைக் கவனிச்சுருந்த  புலிக்கால் முனிவர்,  அந்த  வெள்ளையானை ஐராவதத்துக் கிட்டே, 'கொஞ்சம் தண்ணி எனக்குக் கொடு'ன்னு கேட்டுருக்கார். 'அதெல்லாம் முடியாது. இது  ஜம்புகேஸ்வரருக்காக,   என் எஜமான் இந்திரன் கொண்டுவரச் சொன்னது'ன்னுட்டு அதுபாட்டுக்குப் போயிருச்சு.

குடிக்கவா கேட்டேன்? அபிஷேகத்துக்குக்கூட  தண்ணீர் தரலை பாரேன்னு கோவத்தோடு  புலிக்காலால் பரபரன்னு நிலத்தைத் தோண்டுனதும், சட்னு ஊத்து கிளம்பி தண்ணீர் வெளியே வந்து குளம் கட்டி நிக்குது. அதை எடுத்து காசி விஸ்வநாதருக்கு  மனம் குளிர அபிஷேகம் பண்ணி இருக்கார்.  இந்தக் குளத்துக்குப் புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்ற பெயர் வந்துருக்கு. எப்பவும்  தண்ணி வத்தறதே இல்லையாம்.
இங்கே முனிவருடன் பேசிக்கிட்டு நின்னதால்,  தீர்த்தம் கொண்டுபோன ஐராவதத்துக்குக் கொஞ்சம் லேட் ஆகிருச்சு. ஏன் காலதாமதமுன்னு  எசமான் கேக்க,  புலிக்காலர்  தண்ணி கேட்ட  விஷயத்தைச் சொல்லி இருக்கார். அபிஷேகத்துக்குக் காத்திருந்த ஜம்புகேஸ்வரர், 'அட ராமா....   எப்பேர்ப்பட்ட மகா முனிவர் அவர்! அவருக்குக் கொஞ்சம் தண்ணி  கொடுத்துட்டு வராம வந்துட்டயே....  போ போ.... முதலில் அவருக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்துட்டு வா'ன்னு திருப்பி அனுப்பி இருக்கார்.
ஐராவதம் வந்து பார்த்தால் இங்கே  ஜாம்ஜாமுன்னு அபிஷேகம் நடந்துருக்கு. என்னடா இது ஆச்சரியமா இருக்கே!  ஆனாலும் உத்திரவுப்படி தண்ணீர் கொடுத்துட்டுப் போகலாமேன்னு முனிவராண்டை போய், 'இந்தாங்க நீங்க கேட்ட தீர்த்தம்'னு பவ்யமாச் சொல்ல,  'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்குத் தனிக்குளமே கிடைச்சாச்சு. நீ போகலாமு'ன்னு  சொல்லிட்டார்.
என்னடா இப்படி ஆகிப்போச்சே... இந்தத் தண்ணிக்குடத்தை வச்சுக்கிட்டு இப்படி இங்கேயும் அங்கேயும் அலையணுமான்னு யோசிச்ச ஐராவதம்,   குடத்துத் தண்ணியைத் தானே காசிவிஸ்வநாதருக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, கும்பிடு போட்டுட்டுத் திரும்பிப் போயிருக்கு!


பொதுவா கோவிலில் இருக்கும் குளம் போல இல்லாமல்  ஊருணி ஸ்டைலில் இருக்கு இந்த புலிப்பாய்ச்சி தீர்த்தம். ச்சும்மா ஒரு பக்கம் மட்டும் கம்பிக்கதவு போட்டு வச்சுருக்காங்க கோவில் வாசலுக்குப் பக்கம்.
மத்தபடி திறந்த வெளிதான். ஆடுமாடுகள் குளிச்சுக்கிட்டும், குடிச்சுக்கிட்டும் இருக்கும் பிஸி ஏரியா!  மாட்டைக்  குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. கங்கையிலும் புனிதமான தீர்த்தம்!  போகட்டும் அந்த ஜீவன்களும் முற்பிறவியில்  காசி விஸ்வநாதரின் பக்தர்களாக இருந்துருக்கலாம்!
கோவிலுக்குள்ளே  காசி விஸ்வநாதர் லிங்க ரூபத்தில் தனிச்சந்நிதியில்.  வெளியே  உள்முற்றத்தில்  நந்தி தேவர்,  மூலவரைப் பார்த்தபடி மண்டி போட்டுருக்கார். அம்பாள் விசாலாட்சியும் தனிச் சந்நிதியில்.   நாமும் போய் கும்பிட்டுக்கிட்டோம்.  குளத்தைப் பார்த்தபடிதான்  கருவறைக் கதவு.  பௌர்ணமி நாட்களில் சந்திரன், குளத்துத் தண்ணீர் வழியா ஈசனை  தரிசிக்கறார்னு ஐதீகம்.
 இந்தக் கோவில்  தினமும்  காலை  ஆறு முதல் பகல் ஒரு மணிவரை திறந்துருக்கும். மாலையில் நாலு முதல் ஏழு முப்பத்தியஞ்சு வரை!!!

இந்த நாலு முக்கிய கோவில்களுமே அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் வகையறா திருக்கோவில்கள்னு  எழுதிப்போட்டு வச்சுருக்காங்க, இந்து சமய   அறநிலையத்துறையினர்!
கொஞ்ச நேரம் புலிக்கால் முனிவர் சமாதியாண்டை உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம். சமாதிக்கு மேல் ருத்ராக்ஷப் பந்தல் ஒன்னு போட்டுருக்காங்க.  ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேரும் ஒரே ஏரியாவில்தான் சமாதி ஆகி இருக்காங்க!   ஒரே காலக்கட்டத்தில் போனாங்களான்னு தெரியலை......
இது ஊர்க் கடைசியில் இருக்கும் கோவில். இங்கிருந்து  வெளியேறி நெடுஞ்சாலையைப் பிடிக்க வேற வழி ஒன்னும் இல்லை. போனவழியாவே திரும்பி வரவேண்டியதுதான்.  அதேபோல திரும்பி  நெடுஞ்சாலை வழியா ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தப்ப  பகல் மணி ஒன்னு.
பகல் சாப்பாட்டை நம்ம பாலாஜி பவனில் முடிச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வு.  எப்படியும் கோவில்கள் எல்லாம்  நாலு மணிக்கு மேல்தான் திறக்கறாங்க நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தவிர... ....

நாலுமணிக்குக் கிளம்பலாம். சரியா?

தொடரும்..............  :-)


மண்டபத்துச் சிற்பங்களுக்காகவே கட்டாயம் போக வேணும்.... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 103)

$
0
0
நாலாகப்போது, நாலாகப்போதுன்ற  என் தொணத்தொணப்பையும் தாங்கிக்கிட்டு  நம்மவர்  பகல் தூக்கம்  முடிச்சுட்டுக் கிளம்பும்   சமயம்  ஒரு காஃபி கிடைச்சால் தேவலை என்ற எண்ணம்  வரும்போதே....  போறவழியில் முரளி கடையில் ஆகட்டுமேன்னும்  தோணுச்சு.  அங்கே போனால் போனஸ் ஐட்டங்களா  பஜ்ஜி வகைகள் வேற!  முரளி கடை தயாரிப்பு இல்லை. வேற யாரோ, மக்கள்ஸ்   வெறுங்காஃபி குடிக்க வேணாமேன்னு புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க.

இதைக் கவனிக்காமல் நம்மவர் போய்  மூணு காஃபிக்கு சொல்லி அதை சீனிவாசன் வாங்கிட்டும் வந்துட்டார்.  பஜ்ஜி இருக்குன்னு சொல்லி இடப்பக்கம் காமிச்சதும், கண்ணில் ஒரு மின்னல்!  போய் வாங்கிக்கச் சொன்னேன். அஞ்சு ரூபா ஒன்னு.

சம்ப்ரதாயம் அனுசரிச்சு இப்போ ஆனைக்கா போய்க்கிட்டு இருக்கோம். அகிலாவின் நினைப்புதான். அதான் எல்லோரும் கேம்ப் போயிட்டாங்களே!  மண்டபத்துச் சிற்பங்களுக்காகவே  கட்டாயம் போக வேணும்தான்......  இன்னும் முழுசாப் பார்த்து முடிக்கலை....

சந்நிதி இன்னும் திறக்கலை. ஆனா... இப்போ திறந்துருவாங்கன்னு சொன்னார் கேமெரா டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர்.  மெதுவாத்தான் திறக்கட்டும்னு கோவிலுக்குள் போனோம்.  மண்டபங்களில்  பலர், அங்கங்கே மதியத் தூக்கத்தில்!  இந்த வெயில் ஆளை அப்படியே  அசத்தி வுட்டுருது.............  ஸ்...ப்பா..........



ப்ரகாரம் சுத்திட்டு வரலாமான்னு  காலடி எடுத்து வைக்கும் நொடி,  சந்நிதி திறந்தாச்சுன்னு சொல்லிக்கிட்டே  கோவில் ஊழியர் ஒருவர் கையில் சாவி குலுங்க எதிரில் வந்தார். தரிசனம் முடிச்சுக்கிட்டே போகலாமேன்னு   ஜம்புகேஸ்வரரை நோக்கிப் போனோம்.

அர்ச்சனை டிக்கெட் வேணுமான்னு  கேட்டார் உட்பிரகாரத்துலே இருந்த  கோவில் ஊழியர். பேசாம தரிசன டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு  சொன்னேன். வெறும் பத்து ரூபாய்தான்.அங்கே பெருமாளுக்கு இருநூத்தியம்பது,  அம்பதுன்னு  கொடுத்துட்டுப்போய்  அரை நிமிசம் பார்க்கறோமே....  இங்கே பத்துலே பார்த்தால் என்னன்னுதான்....   மூலவர் சந்நிதியில்  அந்த நேரத்தில்  குருக்களைத்தவிர யாருமே இல்லைன்னாலும்,  இலவச தரிசனம் அந்த  நவத்வார ஜன்னல் வழியாத்தான்.

ஸ்பெஷல் தரிசனத்துக்குன்னு ஒரு வழி வச்சுடறாங்களே.... அதன் வழியாப்போனால்  தூரக்கே குருக்கள், சந்நிதிச் சுவர்களில் கொட்டி இருக்கும் விபூதியையெல்லாம்  விரலால் வழிச்சு அடுத்த கையில் சேகரிச்சுக்கிட்டு இருந்தார்.  நம்மைப் பார்த்துட்டு, இந்தப் பக்கம் வாங்கன்னுட்டு, தலையைக் குனிஞ்சு சந்நிதிக்குள்ளே போனவர், கையில் இருந்த  விபூதியை பூஜைத் தாம்பாளத்தில் போட்டுட்டு, உள்ளே வந்து இந்தப்பக்கம் நில்லுங்கன்னார்.  தீபாராதனை ஆச்சு.  தாம்பாளத்தில் இருந்த 'அந்த விபூதி' நம் உள்ளங்கையில் விழுந்தது.  எனெக்கென்னமோ....  அதை நெற்றியில் இட்டுக்கத் தோணலை.....    பார்க்காம இருந்தால் தெரிஞ்சுருக்காது. கண்ணாலே பார்த்துட்ட அவஸ்த்தை. என்னமோ போங்க.

முதலில் அம்மனைக் கும்பிட்டுக்கணும். வழக்கம்போல் அட்டகாசமா ஜொலிச்சுக்கிட்டு சிரிச்ச முகத்தோடு அகிலாண்டேஸ்வரி. நிம்மதியா சேவிக்க முடிஞ்சது. ஏகாந்த தரிசனம்தான். குருக்கள் கூட இல்லை!

பிரகாரம் சுத்தப் போனோம்.   போனமுறை பார்த்த சுத்தம் இப்போ இல்லை...   ப்ச்.....

108 சிவலிங்கங்கள் வரிசையில் பின்னம்பக்கத்துச் சுவர்களில்  சனம் தங்கள் பெயர், இனிஷியல்ஸ் எல்லாம் எழுதி வச்சு அசிங்கப்படுத்தி இருக்கு:-(  அந்த உயரத்தில் சுவத்துலே எழுதணுமுன்னா...  சிவலிங்கங்கள்  இருக்கும் மேடையிலேயே கால் வச்சு ஏறி நின்னால்தான் முடியும்.....   எரிச்சல் எனக்கு....    இப்படி எழுதிவச்சவங்க எல்லாம் நரகத்துக்கே  போகட்டும்...........  அசிங்கம் பண்ணவா  வேலை மெனெக்கெட்டு கோவிலுக்கு வர்றாங்க.............  ச்சே......


சுத்தல் முடிஞ்சு முன்பக்கம் வந்தால் புறப்பாடோ இல்லை நகர்வலம் முடிஞ்சதோ  தெரியலை....  புள்ளையாரும், முருகனும்  குடும்பத்துடன் அவரவர் வாகனங்கள் உக்கார்ந்துருந்தாங்க.


மண்டபத்துத் தூண்களில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கிட்டே அங்கங்கே க்ளிக்ஸ்.  விஸ்வாமித்திரர்....  கையில் குழந்தையுடன்  மேனகை!

 உள்ளே இன்னும் நல்ல சிற்பங்கள் இருக்கலாம். சனம்  இன்னும் தூணைச்சுத்தித்     தூங்கிக்கிட்டு இருக்கே....

இந்த மூணுகால் உருவம் யாருன்னு தெரியலை.....  :-(  வால் வேற இருக்கு!!!
இந்த மாதிரி குழப்பம் வேணாமுன்னு  ஒருசில சிற்பங்களில் யாரோ பெயர் எழுதி வச்சுட்டுப்போயிருக்காங்க........  


சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கைன்னு முப்பெரும்தேவிகள்  தனித்தனியாக....


கோவிலைப்பத்தி இந்த முறை அதிகம் எழுதலை. போனமுறை எழுதுன  அதே கோவில் கதைதான் இப்பவும் என்பதால்...........



ஆனைக்கோவில் அகிலாவை இங்கே வாசிக்கலாம்.




இடுப்புக்கூடையிலெ  சின்னப்புள்ளையை  வச்சுக்கிட்டு, வலக்கையிலே மூத்தவனைப் பிடிச்சுக்கிட்டு எங்கே கிளம்பிட்டாங்க? 


இன்னும் கொஞ்சம் படங்களை  ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். அதுக்கான  சுட்டி இது .

திருவானைக்கா


இன்னொரு கோவிலுக்கும் போய்வரணுமுன்னு நினைச்சு அங்கே போனால்.... கொஞ்சம்கூட எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி !!!

தொடரும்................  :-)


அம்மா சொன்னதுதான் சட்டம் இங்கே..... இந்தியப் பயணத்தொடர். பகுதி 104)

$
0
0
"அந்த வீட்டுலே நடக்கறது  ஒன்னுவிடாம இந்த வீட்டுலேயும் நடந்தாகணும். இங்கே நான் வச்சதுதான் சட்டம்....... "

வீட்டு மாப்பிள்ளையா வந்தவர் வாயைத் திறந்து   மென்னு முழுங்கி .........

 "அப்படியேவா?"

"ஆமாம்....."

ஐயோ....  ஊரு உலகம் என்னா சொல்லும்... (மைண்ட் வாய்ஸ்)

"ஏம்மா  என்னதான் இது உன் வீடுன்னாலும்  பெரிய வீட்டுலே நடப்பதைப்போல இங்கேயும் நடத்த முடியுமா?  கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்......."

"ம்ம்ம்   சரி. போனாப்போட்டும் அதுலே பாதிக்குப் பாதியாவது இங்கே நடந்தாகணும். ஆமா..." நியாயஸ்த்தி இல்லையோ!!!

"ஆகட்டும்... அப்படியே பண்ணினால் ஆச்சு.  கோச்சுக்காதே என் கமலவல்லி...."

 பெரிய வீட்டில் பகல்பத்து, ராப்பத்துன்னு  ஜேஜேன்னு இருக்கும்போது....  இங்கே பகல் அஞ்சு ரா அஞ்சுன்னு ஆச்சு. ஆனால் ஒன்னு... அங்கே நடக்கும் சமயம் இங்கேயுமுன்னு கூட்டத்தில் 'கோவிந்தா'போட மாட்டேன். என் வழி தனி வழின்னாங்க தாயார் :-)

வைகுண்ட ஏகாதசிக்குப் பெரிய கோவிலில் விழா!  சொர்கவாசல் திறந்து பெருமாள் வருவார்!  வரட்டுமே.....  இங்கே?

மார்கழிக்கு அங்கேன்னா மாசிக்கு இங்கே!  அதே ஏகாதசிக்கு...

சொர்கவாசல் திறந்து  கமலவல்லித்தாயார்  அதன் வழியா வெளியே வர்றாங்க!  அடடா....  கூடவே பெருமாளும் வரப்டாதோ?  ஊஹூம்....  பெருமாளின் உற்சவர்கூட  இங்கே கிடையாதாக்கும்!   திருமஞ்சனம் மொதக்கொண்டு அங்கே பெரிய பெருமாளுக்கு நடக்கும் எல்லா விசேஷமும் இங்கே தாயாருக்குத்தான் என்பது இன்னுமொரு விசேஷம்!

அங்கெல்லாம்  வருசம் ஒருநாள் சொர்கவாசல் திறப்புன்னா... இங்கே ஏகாதசிக்குத் திறந்ததோடு  அடுத்த நாலுநாளைக்கும் சொர்கமே சொர்கம்தான்!

மாசி மாசம் விழான்னு  ஏற்பாடுகள் இருந்தாலும் சில சமயம் தை மாசமே கொண்டாடுவதும் உண்டு. நமக்குக்கிடைச்ச அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்....   இந்த வருசத்து விழா  தை யில்!  இன்றைக்கு தை மாசம் 25 ஆம்தேதி.  விழா இன்றோடு கடைசி(யாம்!)
இந்த விவரம் ஒன்னுமே தெரியாமல் இதோ தாயார் வீட்டுக்குன்னு கிளம்பி வந்துருக்கோம்! வாசலில் வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம்! அடன்னு கண்ணைத் திருப்பினால்..........  விழா விவரம்!
'அடிச்சேன் ப்ரைஸ்'ன்னு  உள்ளே காலடி எடுத்து வைக்கிறேன்....  கோபுர வாசலிலேயே   கூட்டம்!   அரையர்கள் முன்செல்ல இதோ  ஆழ்வார்கள்  கண்ணெதிரில் வந்துக்கிட்டு இருக்காங்க. ஹைய்யோ!!!!





பிரகாரம் வலம் வந்து  அவுங்களுக்குன்னு போட்டு வச்சுருக்கும் இடத்தில் உக்கார்ந்தாங்க. நேரெதிரா  மண்டபத்துத் திண்ணை!  ஓடிப்போய் அங்கே உக்கார்ந்தேன்:-)
 உள்ளூர் மக்கள்ஸிடம் விழாவைப் பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது மகிழ்ச்சிதான்!
மங்கள இசையா தவிலும் நாதஸ்வரமும் இழைய  நமக்கு இடப்பக்கம் இருக்கும்  திருவாய்மொழி மண்டபம் கடந்து தாயார் கமலவல்லி நாச்சியார் தங்கக்குடையின் கீழ் உக்கார்ந்து  ஜாம்ஜாமுன்னு  கிளம்பி வர்றாங்க.  பரமபதவாசல் வழியா வர்றாங்களாம்! ஹைய்யோ....  என்ன கம்பீரம்!

அடடா!  நமக்குத் தெரியாமப் போச்சேன்ற ஆதங்கம்தான்....

ஆழ்வார்களை சந்திச்சு, அவுங்களுக்கு அனுக்ரகம் செஞ்சுட்டு, பிரகாரத்துக்குள்ளேயே கோபுரவாசல் வரை போய் திரும்பி வந்தாங்க. ஒருமாதிரி மேளம் ஒன்னு இடைக்கா இசைபோல டுகு டுகுன்னு  லேசா இசைக்க  சிலவிதமான நடைகள் போட்டாங்க ஸ்ரீபாதம் தாங்கும் இளைஞர்கள்!

முதல்முறையா இதெல்லாம் நமக்கு(ம்) லபிச்சுருக்கே !  திருவாய்மொழி மண்டபத்துக்குத் தாயார் திரும்பி  தமக்கான ஆசனத்தில் போய் உக்கார்ந்தாங்க. திரைபோட்டுட்டு மற்ற ஏற்பாடுகள் நடக்குது. அதுவரை ச்சும்மா அங்கே ஏன் நிக்கணுமுன்னு நாங்க மூலவரை தரிசனம் செய்யப்போனோம்.
அழகியமணவாளப்பெருமாள், முத்தங்கியில் ரொம்ப கம்பீரமாகவும் அதே  சமயம் கொஞ்சூண்டு பவ்யமாகவும் நிக்கறாரோ!!!! அவருக்கு வலப்பக்கம் அதே கம்பீரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் தன் சொந்தவீட்டுலே உக்கார்ந்திருக்கும் மதிப்போடு தாயார்!
மேலே : சுட்ட படம்.

சந்நிதியில் கூட்டமே இல்லை. நாலைஞ்சு பேர்தான். மொத்தக் கூட்டமும் விழா நடக்கும் பிரகாரத்தில்!

மொத்தக் கோவிலுமே தாயாருக்கானது என்பதால்  வழக்கமாப் பெருமாள் கோவில்களில் இருக்கும் தாயார் சந்நிதி இங்கே கிடையாது!  அதானே....  கோவிலேகூட தாயார் பெயரில்தானே இருக்கு, இல்லையோ!  கமலவல்லி நாச்சியார் திருக்கோவில்!
நிம்மதியா தரிசனம் முடிச்சுக்கிட்டு,  கோவிலை வலம் வர்றோம்.  பிரகாரத்தில் நடக்கும்போது இடதுபக்க வெளியில் கோவில் திருக்குளம்.  நிறையப் படிகள் இறங்கிப்போக வேணும். இருக்கட்டுமுன்னு மேலே இருந்தே க்ளிக்ஸ்.
விழாக்கால சந்தடி எதுவும் காதுக்கெட்டாத இடம்! நிம்மதியா ஒருவர்  வாசிப்பில் இருந்தார்!  கேமெரா க்ளிக் சப்தம் அவர் கவனத்தைக் கலைச்சுருச்சே.....   :-(
 இங்கேருந்து, விமான தரிசனம் கிடைக்கும். ஆச்சு நமக்கும்.  திரும்பப் பிரகாரத்துக்குள் வந்து வலம் தொடர்கிறோம்.  சேர்த்தி மண்டபம்  பிரகாரங்கள் சேரும் ஒரு  மூலையில். ஸ்ரீரங்கத்துலே நம்ம ரங்கநாயகித் தாயாரின் சேர்த்தி சேவைக்கு முந்தினநாள் (முந்தினநாளே!) நம்பெருமாள்  இங்கே  எழுந்தருளி இங்கத்து சேர்த்தி சேவையை முடிச்சுக்கிட்டு,  நடுநிசிக்கு முன்னே அரக்கப்பரக்க சீரங்கம் போய்ச் சேர்ந்துருவாராம்:-)

இந்தக் கோவிலைப்பற்றி முந்தி  எழுதியது  இங்கே. நேரம் இருந்தால் பாருங்கள்.


 திடீர்னு கண்முன்னே திறந்து கிடக்கும் சொர்கவாசல்!  ஹைய்யோன்னு பாய்ஞ்சு போனேன்.  இதைத் தொட்டடுத்து இருக்கும் யாகசாலையில்  யாகம் நடந்துக்கிட்டு இருந்தது.  எனக்கு அதுவா முக்கியம்?

'அதென்னடீயம்மா கமலவல்லி,  நீ மாத்திரம்  சொர்கவாசல் கடந்து போறது?  நான் அப்படி இல்லேம்மா....   கோபாலோடு சேர்ந்தேதான் கடப்பேன்'னு பூலோகத்துக்கும் வைகுண்டத்துக்குமா  அஞ்சாறுமுறை போய் வந்தேன்.  போய்வந்ததுக்கு சாட்சி? இதோ இந்த க்ளிக்ஸ்தான்:-)



முதலில் கூட்டம்போட்டு நின்ன சனம்  அந்தாண்டை திருவாய்மொழி மண்டபத்தாண்டை போனதும் இங்கே  மூவரும் ஏகாந்தமா விஸ்ராந்தியா இருந்தாங்க.

நம்மாழ்வார் திருப்பாணாழ்வார் திருமங்கை ஆழ்வார்

அங்கே போட்டுருந்த திரை விலகி, நம்ம தாயாருக்குத் திருமஞ்சனம் ஆரம்பிச்சது!  அதென்னவோ   வாட்டர்ப்ரூஃப் போல ஒரு சமாச்சாரம் போர்த்திட்டு ஆரம்பிச்சாங்க. அண்டா அண்டாவா   குண்டா குண்டாவா.....
 சாம்பிராணிப் புகை, தேவலோக ஸீன் காட்ட........ வரிசையா   சீர்வரிசைகள் தாயாருக்குச் சமர்ப்பிச்சு..... தாம்பாளம் தாம்பாளமா இந்தப் பக்கம்  வர.......  எல்லாமே எனக்குப் புதுமை!

பார்க்கக் கிடைச்சதே பாக்கியம்! சின்னச் சின்னதா ஒரு நாலு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன். அவைகளை ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கேன்.
 இங்கேயும்  சேர்த்தாச்சு.  பார்க்கமுடியுதான்னு  பார்த்துச் சொல்லுங்க.

மணி எட்டானதும் நம்மவர் ஆரம்பிச்சுட்டார்.

  "எல்லாம் முடிய பத்துமணி ஆகிருமாம். அதுவரைக்குமா இருக்கப்போறே?"

"காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருக்கோம்.  இப்படி அலைஞ்சால் உடம்புக்கு ஆகாது."

" ரொம்ப டயர்டா இருக்கு. போய் சாப்பிடணும். நேரமானா  அங்கே ஒன்னும் கிடைக்காது  "

அஸ்திரத்துக்கு மேலே அஸ்திரம் போட்டுக்கிட்டே இருந்தால்  எப்படி?

சரின்னு முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டுக் கிளம்பினதைப் பார்த்ததும்....  'வா. மூலவரை இன்னொருமுறை போய் கும்பிட்டுக்கலாம்'என்றார்.  அங்கே போனால் அழகு சொட்டச் சொட்ட ரெண்டுபேரும்!  என் கோபமெல்லாம் போயே போச்சு. :-)

'மாசிமாசத் திருவிழாவைத் தை மாசம் நடத்தி என் கண்ணுலே காமிச்சதுக்கு  எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறேண்டா.....   போயிட்டு வரேன்'னு கும்பிட்டு முடிச்சு வெளியே வந்தால்  புதுசா ஒரு  முழுப் பலாப்பழத்தை நறுக்கிக்கிட்டு இருக்கார் ஒருத்தர்.  முதல் துண்டு எனக்குன்னு  கொஞ்சம் வாங்கிக்கிட்டேன்.  இப்படி ஃப்ரெஷா தின்னுதான் எவ்ளோ வருஷம் ஆச்சு!
வாசலில் வச்சுருந்த  கோவில் விழா நிகழ்ச்சியை இன்னொருக்கா க்ளிக்கலாமுன்னு போய்ப் பார்த்தால்  அறிவிப்பின்படி  நேத்து  ஏழாம்தேதியோட சொர்கவாசல் திறப்பு முடியுது. அப்புறம் இன்றைக்கு (எட்டாம் தேதி) எப்படி?  நமக்கான ஸ்பெஷலோ!
பெருமாளே.... பெருமாளே....

ஹயக்ரீவா வந்து சேர்ந்தப்ப மணி எட்டே முக்கால். ரூம் சர்வீஸா  அதே ரெண்டு இட்லி.

தொடரும்............  :-)


சாது மிரண்டால்.............. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 105)

$
0
0
எப்பவுமே ரொம்பப் பக்கத்துலே இருக்கும் சமாச்சாரங்களுக்கு அவ்வளவா மதிப்பு கொடுப்பதில்லை நாம் என்பது(ம்) உண்மைதானே?  அதிலும் கண்ணுக்கு முன்னால் கனகம்பீரமா ஓங்கி உயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துக்கு முன்னால் இதெல்லாம் எம்மாத்ரம்?
அம்மா மண்டபம் ரோடில் நம்ம ஹயக்ரீவாவில் இருந்து நாலெட்டில் ஸ்ரீநிவாசப்பெருமாள் இருக்கார். ஒவ்வொருமுறை   அந்தப் பக்கமாப் போகும்போதும் வரும்போதும்  ஒருக்காப் போய்ப் பார்க்கணுமுன்னு  தோணிக்கிட்டேதான் இருந்துச்சு.  வண்டியில் உக்கார்ந்தவுடன்,  அடுத்த நிமிட்டே  விர்னு இந்த இடத்தைத் தாண்டிப் போகும்படியா ஆகுதேன்னு...  காலையில் ஒருமுடிவுக்கு வந்தேன்.
'இட்ஸ் கோயிங் டுபீ அ லாங் டே'ன்னு என் காதுலே ஓதிக்கிட்டே இருந்தார் நம்மவர்.

சீனிவாசன் நிதானமாகக் கிளம்பட்டும்.  வண்டி ஓட்டிக்கிட்டு வரப்போறவர் இல்லையா?  நாம் அதுக்குள்ளே ரெண்டு எட்டு  இந்த ஸ்ரீநிவாசனை  தரிசனம் பண்ணிக்கிட்டு வந்துடலாமுன்னு கீழே  வந்ததும், பாலாஜி பவன் கூப்பிட்டமாதிரி இருந்துச்சு :-)  ஒரு காஃபி  இப்போதைக்குன்னு போனால் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாம் என்றார் நம்மவர்.  ஒருத்தர் பொங்கல் வடை, இன்னொருத்தர் தோசை வடைன்னு  காஃபியோடு முடிச்சோம்.


அடுத்த ரெண்டாவது நிமிட்டில் கோவிலுக்குள் நுழைஞ்சாச்சு. 'தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை 'ஏற்று நடத்தும் கோவிலாம்!  என்னத்தை ஏற்று நடத்துறது?  உண்டியல் வசூலில் பாகம் கேட்டு வாங்கிக்கறதுதான்  பொதுவா இந்த  ஏற்று  நடத்துதல், இல்லையோ? ஒரு அசட்டையோடு எப்படின்னு விசாரிச்சால்.........


இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததுக்குக்கூட ஒரு 'கதை'இருக்கு!

உண்மையில் இது ஒரு தனியார் மடமும் அதைச் சார்ந்த கோவிலுமாகத்தான் கடந்த 100 வருசங்களா இருந்துருக்கு.  பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம். இந்த மடத்தின் நாலாவது பட்டம்  லக்ஷ்மண  ராமானுஜ ஜீயர் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னே (2009) காணாமப் போயிட்டார்.


அவரைக் காணோமுன்னு போலிஸில் புகார் கொடுத்துருக்காங்க. மடத்துக்கு சொத்து வேற ஒரு அம்பது கோடிக்கு இருக்கு என்பதால்....  யாரோ என்னமோ பண்ணிட்டாங்கன்னு  ஒரு பயம்.  ஆளைக் காணோமுன்னதும்  சிபிசிஐடிக்கு  இவரைத்  தேடிக் கொண்டுவரச்சொல்லி கோர்ட்டில் உத்தரவாகி  இருக்கு.
தேடோதேடோன்னு தேடி  ஒரு மூணு மாசம் கழிச்சு  இவர் கொல்கத்தாவில் இருப்பதைக் கண்டுபிடிச்சுக் கூட்டி வந்து கோர்ட்டில் ஒப்படைச்சுருக்காங்க.
என்ன ஆச்சுன்னு இவராண்டை விசாரிச்சால்....  'எனக்கு  வரவரத் தள்ளலை. வயசு 87 ஆகுது. மடமும் வேணாம் ஒன்னும் வேணாம்.... நான் சொந்த ஊருக்குப் போயி அங்கேயே இருக்கப்போறேன்'னு சொல்லிட்டார்.

 போறவங்களை இழுத்து நிறுத்தவா முடியும்?

இப்படித்தான் தனியார் மடங்கள்  ஏகப்பட்டவை  இந்தியா முழுக்க இருக்கு. நானும் சிலபல மடங்களுக்கு ஐ மீன் மடங்கள் நடத்தும் கோவில்களுக்குப் போயிருக்கேன். சிலது  ஏகப்பட்ட சொத்துக்களோடு பெரிய அளவில் நடக்குதுன்னாலும்.... பல மடங்கள் கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பதையும் பார்த்துருக்கேன்.  சொத்து இருக்கும்  மடங்களில் வாரிசுகள்தான் அடுத்த தலைமை!   வாரிசு அரசியல் மாதிரி     வாரிசு மடங்கள்........   ஒன்னும் சொல்றதுக்கில்லை போங்க :-(
  
ஜீயர் புறப்பட்டுப் போனதும் சிஷ்யர்களே மடத்தைத் தொடர்ந்து நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க. ஆனா....   நிர்வகிக்க முடியலையோ.... இல்லை நடத்தத்    தெரியலையோ...    ஒன்னும் சரியா நடக்காம...  கோவில் பூஜைகள் எல்லாம் முடங்கி இருந்துருக்கு.
எல்லாக்  கோவில்களுக்கும் அததுக்குரிய பக்தர்கள்  இருப்பாங்கதானே....   அவுங்க புகார் கொடுத்துருக்காங்க. பக்தர்களுக்காகக் கோவிலைத் திறக்கச் சொல்லிருச்சு கோர்ட்.  அப்புறம் சரியாச்சோ  என்னமோ.......  அடுத்த மூணவது வருசம்  தமிழ் நாடு அரசின் அறநிலையத்துறை கோவிலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கிட்டு, மடத்தை நிர்வாகம் பண்ண  ஒரு அதிகாரியையும் நியமிச்சுருக்காங்க.
மடத்துலே சமையல் பொறுப்பில் இருந்தவருக்கு இதெல்லாம் பிடிக்கலை. அவர் பெயர் பத்ரி நாராயணன் என்று செய்தியில் தெரிந்தது. அதிகாரியோடு தகராறு செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். கொலை மிரட்டல் விட்டாருன்னு ஜெயிலிலும் பிடிச்சுப் போட்டாங்களாம்.

ஒரு மூணுநாலு மாசம் கழிச்சு ஒரு நாள்  ஒரு ஆம்புலன்ஸ்லே  ஜீயருடைய உடலோடு மடத்துக்கு வந்து,  இங்கே  உடலை பக்தர்கள் பார்வைக்கு வைக்கணுமுன்னு  சொல்ல, அதிகாரி அதை மறுத்துருக்கார்.  கோவிலுக்குள் வைக்கப்டாதுன்னதும்,  இது   இப்ப மடம் என்றாலும்கூட, ஜீயருடைய சொந்த வீடுதான். இங்கேதான்  வைக்கணுமுன்னு  இவர்    சொல்ல...     முடியாதுன்னு பழையபடி தகராறு......


கொல்கத்தாவில் இறந்த ஜீயரை,  திருச்சிவரை விமானத்தில் கொண்டு வந்துருந்தாராம் பத்ரி நாராயணன். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன்!   அனுமதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்னு பத்ரி தன் வீட்டுக்கு    எதிரில்   நடுத்தெருவில்  ஆம்புலன்ஸை நிறுத்தி வச்சு போராட்டம். போலிஸ் கமிஷனர், கலெக்டர் வரை விவகாரம் போய் பேச்சு வார்த்தை நடத்தி,  மடத்து வாசலில் ஆம்புலன்ஸிலேயே ஜீயர்  உடலை வச்சு  அஞ்சு நிமிசம் மரியாதை செஞ்சுக்கலாமுன்னு சொல்லி அதுபோல ஆச்சாம்.  பாவம்.... அந்த ஜீயர்....  இந்தப் போராட்டங்களால் முப்பது மணி நேரம் நடுத்தெருவில் இருக்கும்படியா  அவருக்கு  விதி.....  கர்மா விடறதில்லை..........

அப்புறம் கொள்ளிடக் கரையில் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் சமாதி ஆச்சு.
ச்சும்மா தரிசனத்துக்குப் போனவளுக்கு  த்ரில்லர் கதை  கிடைச்சது பாருங்க.......
பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  வீடு போலத்தான் இருக்கு ....   ஒரு இடத்தில் விளக்குகள் வச்சுருக்காங்க.  நெய்விளக்குகள். வாங்கி ஏத்திக்கலாம். விளக்குப் போடுவதன் பயன்கள், என்றைக்கு,  எதுக்குன்னெல்லாம்  விவரிக்கும் தகவல்கள்  வேற!  விளக்கு எண்ணிக்கையும் பலனும்தான் இதுவரை வேற கோவில்களில் பார்த்துருக்கேன். இப்பப் புதுசா இது!
தினம்  சாயங்காலம்  அஞ்சே காலுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் இருக்காம். தெரியாமப்போச்சு. ஒருநாளாவது  வந்து  கலந்துக்கிட்டு இருக்கலாம்........  போகட்டும்... அடுத்த முறைக்கு நினைவில் வச்சுக்கணும்.
காலை 6 முதல் 12, மாலை 4 முதல் எட்டு வரை கோவில் திறந்துருக்கும். இப்படி ஒரு இடத்திலும்  காலை 10.30க்கு நடை அடைப்புன்னு இன்னொரு இடத்திலும் இருக்கு. மடத்தின் பொறுப்பில் இருந்தப்ப  சீக்கிரம் நடை அடைப்பாக இருந்திருக்கலாம்.

தினந்தோறும் நடக்கும் ஸேவைகள்ன்னு  கரும்பலகையில் எழுதிப்போட்டுருந்தாங்க. வெள்ளிக்கவசம்   , முத்தங்கி, ஸ்ரீநிவாச அலங்காரம், நேத்ர ஸேவா, நிஜபாத தரிசன ஸேவான்னு.....    திருப்பதியின் தள்ளு முள்ளு இல்லாம நிம்மதியா ஸேவிக்க முடியும் இங்கே!
ஆகட்டும்.... அடுத்த முறை கிடைக்கணும் பெருமாளே!

சரி வாங்க கொள்ளிடக்கரை  போகலாம்.......

தொடரும்......  :-)


யாத்திரைக்காரர்களுக்கு ஒரு வரப்ரசாதம் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 106)

$
0
0
ரொம்பப் பக்கத்துலேதான்... கோவிலுக்குப் பின்னாடி...  ரெண்டே கிமீன்னு சொல்லிக்கிட்டாலும்....  பெரியதிருவடி போல பறந்து போனால்தான்....  கிட்டக்க....  இருக்கும் ஒருவழிப்பாதை மூலம் மேலூர் ரோடு வழியாப்போய் வலதுபக்கம் ரைட் (!)எடுத்து  கொள்ளிடக்கரைக்கு ஒட்டியே போகும் ரயில்பாதைக்குப் பக்கமாப் போனால்....  புதுக்கருக்கோடு நிக்குது யாத்ரி நிவாஸ்!  பக்தர்களுக்கான விடுதி!
ரெங்கனின் நிர்வாகத்தின் கீழ்  நடக்கும் தங்குமிடம். போனவருசமே  கோவிலாண்டை ஹொட்டேல்ஸ் ஏதும் நல்லதா இருக்கான்னு  நண்பர் வெங்கட் நாகராஜிடம் விசாரிச்சப்ப,  இதைப் பற்றிச் சொல்லி, கட்டி முடிச்சுட்டாங்கன்னு  நினைக்கிறேன். இன்னும் திறக்கலைன்னு சொல்லி இருந்தார். அதுக்கப்புறம்தான் நாம் ஹயக்ரீவாவைப் பிடிச்சுக்கிட்டோம்:-)

நேத்தைக்கு  அண்ணனிடம் செல்லில் பேசி கமலவல்லி சமாச்சாரம் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, 'புதுசா யாத்ரி நிவாஸ் இருக்கே அங்கே போய் தங்கி இருக்கக்கூடாதா'ன்னு  கேட்டாங்க. ரொம்ப மலிவு. நல்லாவே இருக்குன்னதும், விவரம் வாங்கிக்கிட்டேன். ஜஸ்ட் போய்த்தான்  எப்படி இருக்குன்னு பார்க்கலாமே.............

ஹயக்ரீவாவில் இருந்து சுமார் மூணரை கிமீ தூரம். கால்மணியில்  போய்ச் சேர்ந்தோம். முதல் பார்வைக்கு அட்டகாசமா இருக்கு! பார்க்கிங் இடம் கூடப் பெருசுதான்.

வரவேற்பில் போய் விசாரிச்சதுக்கு  இடம் இருக்குன்னாங்க. அறையைப் பார்க்கலாமான்னு  கேட்டதும், உடனே ஒருத்தரைக் கூப்பிட்டு, நம்மை அழைச்சுக்கிட்டுப்போய்க் காட்டச் சொன்னாங்க.
புது டவுன்ஷிப் மாதிரி தெருக்கள் பெயர், கட்டடங்களுக்குப் பெயர் எல்லாம்  வச்சுருக்காங்க. எல்லாமே ரங்கன் சம்பந்தப்பட்டப் பெயர்கள்! வரவேற்புக் கூடத்துக்கே ராமானுஜர் பெயர்தான்!

வாடகை கூட ரொம்பவே மலிவு!   அதுவும் ஒரு குழுவாப் போனா  ஆளுக்கு நூறு ரூபாயில் தங்க இடம் கிடைச்சுருது!   என்ன ஒன்னு  குழுவில்  எட்டுப்பேர் இருக்கணும்:-)

8, 10 ன்னு கட்டில்கள் போட்ட  கூடங்கள் குளியலறைகளுடன் இருக்கு.  சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட் ரூம், ஏஸி வசதியுடனோ, இல்லை ஏஸி இல்லாமலோகூட இருக்கு. நாலு படுக்கை (ரெண்டு அறைகள்)உள்ள காட்டேஜ் கூட இருக்கு. அதுக்கான வாடகை 1750 ரூதான்! ரொம்பவே மலிவு !!!

2011 ஆம் ஆண்டு  ஜூன் மாசம்,  மறைந்த முதல்வர் 'அம்மா'அடிக்கல் நாட்டி இருக்காங்க. 2014  ஜூன் மாசம்  திறந்துருக்காங்க.  செலவு 47 கோடி ரூ. தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுனதாம்.

ஒரே சமயத்துலே ஆயிரம் நபர்கள் தங்கும் வசதி!  செக்கவுட் கூட 24 மணி நேரக் கணக்கு.  ஒரு முழுநாள்!  இந்தியாவில் பல ஊர்களில் இப்படி 24 மணி நேரம் முழுசாக் கிடைக்கறதைப் பார்த்துட்டு,  மற்ற நாடுகளில்  நாளுக்கு 20  மணிதான் கணக்கு என்னும்போது கொஞ்சம் கோவம் வரத்தான் செய்யுது.

இங்கே நியூஸியில் செக்கின் சமயம் எப்படும் பகல் 2 மணி. செக்கவுட்  மறுநாள் காலை 10.  பயணத்தில் இருக்கும்போது  எப்பவும் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ஊர் சுத்திக்கிட்டே அடுத்த இடத்துக்குப் போறாதாலே  அவ்வளவா ப்ரச்சனை இல்லை. ஆனால்... நாட்டை விட்டுக் கிளம்பும் கடைசி நாள் என்றால்  கஷ்டம்தான்..... இன்னொரு புலம்பல் இருக்கு....   பதிவில் அப்புறம் அந்த இடத்துக்கு வரும்போது புலம்பி வைப்பேன்:-)

ஒரு டபுள் பெட்ரூமுக்குக் கூட்டிப்போய் காமிச்சார் நிவாஸின் பணியாளர்.  எனெக்கென்னமோ சுமாராத்தான் தோணுச்சு. சுவர்களில் விரிசல் விட்டுருக்கு. சரியா காங்ரீட் பூசலை போல. ஒரு  ஒன்னேகால் வருசத்துலேயே இப்படி இருந்தால் எப்படி?  அவரிடம் சுட்டிக் காமிச்சுக் கேட்டதுக்கு  சனம் பாழ் பண்ணிருதுன்னு சொன்னார். சுவரில் ஏறிக்குதிச்சா?   'பார்த்துச் சரி பண்ணுங்க.  கட்டடம் கட்டுறது பெருசுல்லெ.... மெயின்டெய்ன் பண்ணி நல்லா வச்சுக்கணுமு'ன்னு  ரெண்டு வரி சொல்லிட்டுத்தான் வந்தேன்.

ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... வெளியே  இருக்கும் தோட்டங்கள், புல்தரைகள், பூச்செடிகள் எல்லாம் அருமையா இருக்கு. நல்ல பராமரிப்புதான். இதுலே ஆட்டையைப் போட்டாச் சட்னு தெரிஞ்சுருமே :-)


பயணிகள் வசதிக்காக ஒரு கடையும் இருக்குன்னு விளம்பரம் சொல்லுது, சூப்பர் மார்கெட்டாம்!  கடை வாசலில் ஜெனரல் ஸ்டோர்னு போட்டுருந்தாங்க.

இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கு ரெங்கவிலாஸ்னு பெயர்!  பேஷ் பேஷ்!  இதுக்கான மஞ்சள் விளம்பரம்தான் கண்ணைக் கடிச்சது:-(
கோவிலிலே இருந்து ரொம்பத் தள்ளி இருக்கோன்னு  தோணுச்சு. அப்படிப் பார்த்தால்....  திருமலையில்  எங்கெங்கெயோ  கட்டி வுட்டுட்டு,  இடம் கிடைச்சால் போதுமுன்னு  நாம் போறதை  நினைச்சுக்கிட்டேன்.  வாசலில் ஆட்டோ எப்பவும் கிடைக்குமாம். மினி பஸ் கூட இருக்குன்னாங்க. நமக்கு வாகன வசதி இருந்தால் பிரச்சனை இல்லை.  ஆனாலும்....  பொடிநடையில் கோவிலுக்கு  விடிகாலையில் போகமுடியாது. இடையில்  அப்பப்ப  அறைக்கு வந்துட்டு, உடனே திரும்பப் போகணுமுன்னு நினைக்காமல் இருந்தால் சரி.

எதுக்கும் இருக்கட்டும், தேவைப்பட்டால் பயன்படுத்திக்கலாம்.  மற்ற நண்பர்களுக்கு ஒரு தகவலாக இருக்கட்டுமேன்னுதான் எழுதி வச்சேன்.  ஆன்லைனில் அறை  புக் பண்ணிக்கலாம்.  www.srirangam.org என்ற சுட்டியில் போய் பாருங்க.
குழுவா நண்பர்கள் போனால் இதைவிடச் சிறந்த இடம் கிடைக்காது, ஆமாம்:-)

நம்மிடம் வாகனம் இருந்தால் அவ்வளவாகப் பிரச்சனை இல்லை. ஆனால்....  வாகனமில்லாதவர்களுக்கு...   இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடுக்கலாம். ஆட்டோ கிடைக்குதுன்னாலும் கொள்ளைக்கூட்டம் அந்த ரூபத்தில் இருக்கு. கூசாமல் 60, 70 கேக்கறாங்களாம்.  தேவஸ்தானமே ஆட்டோக்கள் வாங்கி மீட்டர் போட்டு ஓட்டலாம். இல்லைன்னா இருக்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்  போட்டு ஓட்டச் சொல்லலாம்.

மினிபஸ் எண்ணிக்கைகளையும் கூட்டலாம்.  கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களைக் கஷ்டப்படுத்தணுமான்னு ..... என்னென்னவோ  தோணல்...

இவ்ளோ சொல்றயே.... அடுத்தமுறை  நீ  இங்கே தங்குவாயான்னு  கேட்ட மனசாட்சியிடம்.... மாட்டேன்னு உண்மையைச் சொன்னேன்:-)  அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் , தேர்வு இருக்கே.........  

அடுத்த காமணியில் பெரிய கோவிலுக்கே திரும்ப வந்தோம்.  இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாம். எனக்கு மூணு மணி நேரம் கெடு வச்சுட்டார் நம்மவர்:-)

தொடரும்...........:-)


ஒரு கோபுர தரிசனம் ஒரு கோடி புண்ணியம். அப்ப 21 கோபுரதரிசனத்துக்கு எத்தனை கோடியோ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 107)

$
0
0
தளதளன்னு கீரைக்கட்டு!   வாங்கிட்டு போம்மான்னு  கீரைக்காரம்மா  சொன்னாலும்....  ஹயக்ரீவாவில் சமைக்க விடுவாங்களான்னு  தெரியாதே....  கண்ணால் தின்னுட்டுக் கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனேன்.


ஒவ்வொரு கோபுரவாசலைக் கடக்கும்போதும் உள்ளே இருக்கும் சிற்பவேலைகளை நின்னு ரசிக்க முடியாத நிலை. எதோ சாதாரண வாசலைப்போல தாண்டி வரணும்:-(  நிக்க முடியாதபடி ரெண்டு பக்கமும்  தரையில் சாக்கை விரிச்சு எதோ ஒரு வியாபாரம் .........  இதுலே டு வீலர்களின் போக்குவரத்து வேற.  போதாததுக்கு வண்டிகளை அங்கேயே நிறுத்தி வச்சுக்கறாங்க.    :-(



 முதல்வேலை முதலில்னு நேராப்போய் கேமெரா டிக்கெட்  ஒன்னு.  தினமும் இப்படித்தான்.  பசி அடங்கலையாமே அதுக்கு :-) மேலே போய் கோபுர தரிசனம் பார்த்தாச்சான்னு கேட்டாங்க கவுண்டரில் இருந்தவங்க. தினமும்  கெமெரா டிக்கெட் மூலம்,  அவுங்களோடு ஒரு பழக்கம் உண்டாகி இருந்துச்சு. போனமுறை பார்த்ததுதான். இந்த முறை  வேணுமான்னு யோசிக்குமுன் நம்மவர் ரெண்டு டிக்கெட் வாங்கிட்டார். மேலே போனோம்!
கோபுரதரிசனம் கோடி புண்ணியமாம். ஒரு கோபுரத்துக்கே  கோடின்னா....  இங்கே  ரங்க விமானத்தையும் சேர்த்து  இருபத்தியொரு கோடி  நமக்கெல்லாம் கிடைச்சுருச்சு:-)
எப்படி ஒரு வரிசையில்  கூட்டல்  குறி போலக் கட்டி இருக்காங்க பாருங்க.  அதிலும் ரங்கவிமானம் நடுநாயகமா  இருக்கு!!


போனமுறை  நகர்ந்தும், உடைஞ்சும் போயிருந்த  டைல்ஸ் எல்லாம் மாற்றி  ரிப்பேர் வேலை நடந்துருக்கு!  போன வருச கும்பாபிஷேகத்துக்கு வேலையை முடிச்சுட்டாங்களாம். சேதி சொன்னது ராணி! மேல்தளத்தைக் கூட்டிப்பெருக்கி சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ராணியம்மாள். எனக்கும் அறுபத்தியோரு க்ளிக்ஸ் ஆச்சு :-)


அங்கங்கே போட்டு வச்சுருக்கும் ஒயர்களையும், கேபிள்களையும்  ஒரு ஒழுங்குமுறையில் வச்சுப் 'பிடிப்பிச்சு இருந்தால்  கொள்ளாம்'என்று எனக்கொரு தோணல்.   தளத்தில்  இன்னும் மேலேறிப் பார்க்கும் படிகள் அஞ்சாறு என்றாலுமே  ஒரு   கைப்பிடி வச்சுருக்கலாம். சின்னப்பிள்ளைகள் பாதுகாப்பு முக்கியமில்லையோ!  காத்துதான் அப்படித் தள்ளுதே!


 மேலே இருந்து  உள் ஆண்டாள்  சந்நிதி, ரெங்கவிலாஸ் மண்டப முற்றம் எல்லாம் பார்க்கும்போது  வித்யாசமா ஒரு தோற்றம். இந்தாண்டை புதுசா ஒரு  கட்டடம் முளைச்சுருக்கு. என்னன்னு போய்ப் பார்க்கணும்....


கீழே  போய்ப் பார்த்தால் இது புது சாப்பாட்டுக்கூடம்!  இப்பதான்  ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னால்(15-9-2015) 'அம்மா'திறந்து வச்சுருக்காங்க 'அண்ணா'வின் பிறந்த தினத்துலே!!!!



நல்ல வசதியான பெரிய கூடம். பந்தி ஆரம்பிக்குமுன் காத்திருக்க ஒரு இடம், சாப்பிடும் கூடமுன்னு ரெண்டு பகுதிகளா  நல்லாவே இருக்கு!  பகல் பத்து  மணியில் இருந்து  பந்தி ஆரம்பிக்குமாம். ஒரே சமயத்தில் 250 பேர் சாப்பிடலாம், இன்னொரு 250 பேர் அடுத்த பந்திக்குக் காத்திருக்கும் வசதின்னு அருமையாக் கட்டி இருக்காங்க. காத்திருப்போருக்குப் பொழுது போகணுமேன்னு  டிவி வச்சுருக்காங்க அந்த வெயிட்டிங் ஹாலில்!  சாமி சமாச்சாரமான படங்கள் கோவில் விஷயங்கள் இப்படி அதுலே ஓடும். எதானா என்ன.... நம்ம மக்களுக்கு டிவின்னு ஒன்னு இருந்தால் போதாதா  என்ன?  நானும் பல இடங்களில் பார்த்துருக்கேன்.... ஆள் இருக்கோ இல்லையோ   டிவி மட்டும்  ஓடிக்கிட்டே இருக்கும் !  சில வீடுகளிலும் இப்படித்தான்....  :-(

இந்தப் புதுக் கட்டடம் கட்ட 1.6 கோடி செலவாம்.  பழைய அன்னதானக்கூடத்தை வேற எதாவது அலுவலுக்கு மாத்தப்போறதாப் பேச்சு.  பழைய அன்னதானக்கூடம்  கோவிலின்  கிழக்குப் பகுதியில், வெள்ளைக்கோபுரம் இருக்கே அந்தப் பக்கம்தான் இருந்துச்சு. அவ்வளவா வெளிச்சம் போதாத இடம்தான்.  அப்போ 2012 இல்  எடுத்த படம் ஒன்னு கீழே இருக்கு பாருங்க!

அடுத்து  இந்தப்பக்கம் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதிக்குப்போய்  தூமணி மாடத்து பாடி (மனசுக்குள்ளில்தான்!)ஆண்டாளை ஸேவிச்சுக்கிட்டு  அடுத்தாப்லே இருக்கும் கலைப்பொக்கிஷங்களையும் க்ளிக்கி முடிச்சேன்:-)உடைஞ்சு போன (உடைக்கப்பட்ட) சிலைகளை சீர்படுத்தறோமுன்னு  சிமெண்டைப்பூசி வச்சுருக்காங்க.  இதுக்கு அப்படியே விட்டுருந்தால் கூட நலம்.......  ப்ச்....
வேணுகோபாலனின் சந்நிதி இதுக்குள்ளே! உள்ளே போய்  கும்பிட்டோம். சீரங்கத்துக்கோவிலுக்குள்ளே கலைநயம் அதிகமா உள்ள சிற்பங்கள் இருக்குமிடம் இந்த வேணுகோபாலன் சந்நிதியும், சேஷராயர் மண்டபமும்தான்!  எத்தனை முறை பார்த்தாலும் புதுமை! நம்ம கெமெராவுக்கோ  ஆசை அடங்கறதில்லை...........
குழலூதும் வேணுகோபாலன் சங்கு சக்ரங்களுடன்!
அடுத்த பக்க வழியா வெளியேறினதும் சக்கரத்தாழ்வார் சந்நிதியாண்டை  வந்துட்டோம்.

கோபுரதரிசனங்களையும்,  வேணுகோபாலன் சந்நிதியையும் தனித்தனி ஆல்பமா ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுட்டு  இங்கே லிங்க் கொடுக்கப்போறேன்.  ஹம்மா..... என்ன  அழகு.... என்ன  அழகு!  கொடுத்தாச்!  எல்லாம் அப்படிக்கப்படியே....  அன் எடிட்டட் !!!

கோபுரதரிசனம்....  நம் பார்வையில் :-)


வேணுகோபாலன் சந்நிதி  !!!

 அங்கிருந்து நேரா நடந்தால் ஆர்யபடாள் வாசல்.  விடுவிடுன்னு நேராப்போய்க் கொடிமரத்தாண்டை ஆரம்பிக்கும் வரிசையில் போய் நின்னுட்டார்  நம்மவர்.  எதுக்குன்னதுக்கு,  மத்யானம் கிளம்பிடப்போறோம். இன்னொருக்காப் பெருமாளைப் பார்த்துடலாமாம். இது இருநூத்தியம்பது ரூ வரிசைன்னால்....  'போயிட்டுப்போறது போ...... ஏன் இப்படிக்  கஞ்சத்தனமா  இருக்கே?'ன்னு எதிர் கேள்வி.

ஒருமணி நேரம் வரிசையில் நின்னு பெருமாளை  கால் நிமிசம் கண்டு  வெளியே வந்தோம். போயிட்டு வரேன்டான்னு  சொல்ல மறக்கலை.  இன்னும் ஒரு சுத்துன்னு  மேலப்பட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார்கள் சந்நிதி, தன்வந்த்ரி, பரமபத வாசல், சந்திரப்புஷ்கரணி, வாசுதேவப்பெருமாள், உக்ரநரசிம்மர், கம்பர் மண்டபமுன்னு  இப்படியும் அப்படியுமா இலக்கு இல்லாமல் போனேன். பேய்க்கு வாழ்க்கைப்பட்ட    நம்மவர் ஒன்னும் சொல்லலை....  கூடவே வந்தார் :-)
தாயார் சந்நிதியில் கட்டணமில்லா தரிசனத்துலே 'நம்ம  அம்மா 'வைக் கும்பிட்டோம். ஹஸ்பெண்ட் பண்ணும் அடாவடியைக் கேக்கமாட்டாளாமே!
அஞ்சுகுழி மூணுவாசலில் இன்னொரு ட்ரை :-)

இன்றே இப்படம் கடைசின்ற நினைப்பு வந்ததும் சும்மானாச்சுக்கும் இன்னொருக்கா இன்னொருக்கான்னு  திறந்துருந்த சந்நிதிகளுக்குள்ளில்  போய் வந்தேன்.  இவர் அங்கங்கே  உக்கார்ந்து  செல்லை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துட்டு நான் திரும்பினதும் என்னோடு கிளம்பிருவார்.

அரங்கனின் பிரசாதவகைகளைப் படிச்சுட்டு அப்படியே ரெங்கவிலாஸ் மண்டபத்தின் கடைசியில் இருக்கும் பிரஸாத ஸ்டாலுக்கு  வந்துருந்தோம். மணி பனிரெண்டேகால் ஆச்சு. இங்கேயே எதாவது பிரசாதம் வாங்கி லஞ்ச் முடிச்சுக்கலாமான்னு  கேட்டவருக்கு  ஓக்கே சொல்லிட்டு, என்ன இருக்குன்னு ஆராய்ந்ததில்  தோசை, மிளகுவடைன்னு இருந்தாலுமே எனக்கொன்னும் சரி வரலை.

ஹயக்ரீவா திரும்பி, பாலாஜி பவனில்  அதே தயிர் சாதம்.  ஆச்சு. ஒரு மணிக்குக் கிளம்பறோம். பைபை ஸ்ரீரங்கம்தான்.

 மூணு மணி நேரப் பயணத்தில் இன்னொரு திவ்யதேசம் போக ரெடியா இருங்க:-)

தொடரும்...........  :-)

ஓங்கி உலகளந்த உத்தமனைத் தேடி..... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

$
0
0
கரும்பு இனிக்குதா?  ஆலைக்குப் போகும் கரும்பு வண்டி......யில்....
போகும் வழியில் எதாவது சாவு எதிரில் வந்தால் சகுனம் ரொம்ப நல்லதாமே! அதுக்காக யாராவது  செத்து எதிரில் வரணுமா?    சொர்க ரதம்  ஆளில்லாம எதிரில்   வந்தாலும்  சகுனம் நல்லதுன்னு  நினைச்சுக்கிட்டா என்ன தப்பு?
காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் கடந்து மூணாவது நிமிட்லே கண்ணில் பட்ட சொர்கரதம்..........  அட...  போகட்டும்.....    திருவெண்ணைநல்லூர் என்ற பெயர்  ரொம்பத் தெரிஞ்சமாதிரி இருக்கே......
எங்கே கேட்டோமுன்னு  கொஞ்சநஞ்சம் இருக்கும் மூளையைக் கசக்கிக்கிட்டே இருந்ததில்....   கொஞ்சம்  மனசுக்குள் வெளிச்சம் வந்துச்சு....  பித்தா பிறை சூடி.... திருவருட்செல்வர்  படத்தில்  சிவாஜி பாடும் ஸீன் ஒன்னு  இருக்கே....  உண்மையைச் சொன்னால்  இது தேவாரப்பாடல். அதென்னவோ சினிமாவில் வந்துட்டால்தான் மனசில் படியுதோ?  எப்பப் பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு....  

இப்படி வேண்டாத நினைவுகளில் இருந்தப்ப.... திருக்கோவிலூர் நேராப் போ. 25 கிமீ என்ற நெடுஞ்சாலை போர்டுலே  இடதுபக்கம் 600 மீட்டரில் திருவெண்ணெய்நல்லூர் இருக்குன்னும் போட்டுருக்கு.   வெறும் அறுநூறுன்னால்  அங்கே  போயிட்டுப் போகலாமேன்னு சொன்னப்ப, 'நாம் திரும்பி இதே பாதையில்தான்  ஹைவேயில் போய்ச் சேர்ந்துக்கணும். அதனால் அங்கே முடிச்சுட்டு இங்கே வரலாமு'ன்னு சொன்னார் நம்மவர்.

ஒவ்வொருமுறையும் இந்தப் பக்கம் விழுப்புரம் வழியாகப் போகும்போதும்   வரும்போதும் தவறவிட்ட கோவில் இது. 108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்னு  என்பதால் கட்டாயம் போகணும்தான். ஆனால் வேளை இப்பதான் வாய்த்தது.  விழுப்புரத்தில் இருந்து உள்ளே ஒரு 37 கிமீ போகணும் என்பதால்.... தள்ளிப்போய்க்கிட்டு இருந்தது.....

மாலையில் கோவில் திறக்கும் நேரம் நாலு மணி என்பதால், அதுக்கேத்தமாதிரி  ஸ்ரீரங்கத்தில் இருந்து மதியம் ஒருமணிக்குக் கிளம்பி வரலாம்னு பக்கவா திட்டம் போட்டுருந்தார் நம்மவர். அதே போல   ரொம்ப தூரத்தில் கோவில் கோபுரம் கண்ணில் பட்டபோது மணி 3.51 !


தமிழ்நாட்டில் இருக்கும் வைஷ்ணவக் கோவில்களின்     உயரமான கோபுர வரிசையில் இதுக்கு மூணாவது இடம்! 192 அடி உசரம்! ( நம்பர் 1 ஸ்ரீரங்கம் 236 அடி.    அடுத்து ரெண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர், 193.5  அடி)
பதினொரு நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே போறோம்.  அடுத்த பிரகாரமே தெருவாட்டம்தான் இருக்கு.   இது தெரியாமல் வழக்கம்போல காருக்குள் காலணிகளைக் கழ்ட்டிப்போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சது  கொஞ்சம் கஷ்டம்தான்.   நீளமண்டபத்தின் ஆரம்பத்துலே  'கட்டி'க் கற்பூரம் திகுதிகுன்னு எரியும் சட்டி வழியில் உக்கார்ந்துருக்கு!



அடுத்த கோபுரவாசல் வழியா கோவிலுக்குள் போறோம்.
பெரிய மேடையுடன் கொடிமரமும்  பலிபீடமும்!   கருவறை நோக்கிப் பாயறேன்....  ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் உள்ளே இருக்கானே!

விக்ரமனும் 20 அடி உயரம். மரச்சிற்பம்!   வலது காலை சரியா இடுப்புவரை உசத்தி நீட்டி நிக்கறார்.  அளந்து பார்த்தால் ஒரு கோணம்தான்,  110 டிகிரி வரும் !  பாதம் மட்டும் உசத்திக் காமிக்க, பிரம்மன்  கங்கையை எடுத்து அபிஷேகம் பண்ணறார். வழக்கமான சங்கு சக்ரம் இடம்மாறி இருக்கு.  வலது கையில் சங்கு!  பூம்...............பூம்..........
'நின்ற, இருந்த, கிடந்த'ன்னு மூணு கோலங்களில்  பொதுவா சேவை சாதிக்கும் பெருமாள் இங்கே நடந்த கோலம் என்றும் சொன்னாங்க.  இப்படிக் கால் தூக்கி எப்படி நடக்க முடியும்?  ராணுவ வீரர்களில் ஒரு பிரிவு  இப்படித்தான் லெஃப்ட் ரைட் போட்டு நடப்பாங்கன்றது நாம் முந்தி அம்ருத்ஸர் பயணத்தில்  வாகா பார்டர் போயிருந்தப்ப, பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நடத்தும் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் பார்த்தமே!  அதைப்போலவா? ஹாஹா.....
இதைப்போல நின்றபடி நடந்த பெருமாள் சிலை ரொம்பவே அபூர்வமுன்னும் ஒரு பேச்சு.  காஞ்சிபுரம் உலகளந்தார் கோவிலில் பார்த்துருக்கோம்.  அங்கே சிலையின் உயரம் 30 அடி!  ஆனால் கற்சிலைதான்.   மரசிலை என்ற கணக்கில் இதுதான்  உலகிலேயே  நடந்த கோலங்களில் பெருசுன்னு ஒரு பெருமையும் லபிச்சுருக்கு!  ஆகக்கூடி ரெண்டு இடங்களில்தான்   தனிப்பட்ட கோவில்கள் என்று சொன்னாலும்....  நம்ம திருநீர்மலையில் நடந்த கோலம் காமிக்கும் சிலை இருக்கே!  அங்கே 'நின்ற கிடந்த  இருந்த நடந்த'ன்னு நாலு வகைகளையும் ஒரே கோவிலில் பார்க்கலாம் என்பது இன்னும் விசேஷம் இல்லையோ!

அது இருக்கட்டும்.... இப்ப எதுக்காக இந்த நடந்த கோலமாம்?   கதைக்குள் போகலாமா?  மஹாபலி ஆட்சி காலத்துக்குப் போகணும் இப்போ!

 ஏற்கெனவே  நம்ம துளசிதளத்தில் சொன்ன கதைதான். அதில் ஒரு மாற்றமும் இதுவரை இல்லை என்பதால்  அங்கே இருந்தே எடுத்துக்கலாம்.
புது வாசகர்களுக்குக் கொஞ்சம் சுலபமா இருந்துட்டுப் போகட்டும் :-)

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்கவழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டுஇருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோடகணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்'சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னாஎனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார். ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ'ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி (தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்) தண்ணி ஊத்த கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார். ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச்சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! 

அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்தவளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது.திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?

மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜாமகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார். 

( வீடுங்களிலேஎப்பவாவது, சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம கைவேலையா இருக்கறப்ப யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னேகேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்             ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது. ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர்தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு. 

அப்படி அவர் வர்ற  தினம்தான் நாம் ஓணப்பண்டிகை கொண்டாடும் நாள்!   மேலே போட்டுருக்கும் கதை   கிபி 2005 வது வருசம் ஓணப்பண்டிகைக்கு எழுதுன பதிவில் இருந்து  காப்பி அண்ட் பேஸ்ட், கேட்டோ!

அந்த சம்பவம் நடந்த ஸீன்தான் இங்கே கருவறையில்!  ஆமாம்.... எப்பவோ வாமன அவதாரக் கதையை, 'நடந்தது என்ன?'ன்னு  இப்போ காமிக்கவேண்டிய அவசியம் என்ன?

மிருகண்டு மகரிஷிக்கு,  வாமனர் எப்படி விஸ்வரூபம் எடுத்து த்ரிவிக்ரமனா ஆகி  மூவுலகத்தை அளந்தார்னு  பார்க்கணுமாம். அதுக்காகத்  தவம் இருக்கார்  மனைவியோடு!   பலகாலம் இப்படித் தவம் இருந்தபின்  பெருமாள் உலகளந்த கோலத்தில் இப்படி காட்சி கொடுத்துருக்கார். முனிவரின் விருப்பப்படி,  அப்படியே இருந்து நமக்கும் அருள் செய்கிறார்!

வலதுகால் இடுப்புயரத்துக்குமேல்  தூக்கி நீட்டிக்கிட்டு இருக்க, இடதுகால் ஒரு தலையை அழுத்திக்கிட்டு நிக்குது.  யாரோட தலை?  மஹாபலியின் தலைதான்...  பூமிக்கு அடியில் இருக்கும் பாதாளலோகத்துக்கு  அனுப்பிக்கிட்டு இருக்கார். பக்கத்துலே ஒரு உருவம் கைகூப்பி நிற்குதேன்னு பார்த்தால் மஹாபலியின் மகன்  நமுசி !  பெரியபிராட்டி, அசுரகுரு சுக்ராச்சாரியார், மிருகண்டுமுனிவரும், அவர் மனைவியும், மற்றும் முதலாழ்வார்கள் என்னும் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் என்னும் மூவர்னு கருவறைக்குள்ளே ஒரே கூட்டம்!

இந்த முதலாழ்வார் மூவரும்  இங்கே இதே ஊரில்தான் கடைசி காலத்தில் ஒன்னாகவே வாழ்ந்து, பரமபதத்துக்குப் போயிருக்காங்க. இவுங்க மூணுபேரும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில், அடுத்தடுத்த கிழமைகளில் பிறந்துருக்காங்க. திருவோணம், அவிட்டம், சதயம். செவ்வாய் புதன் வியாழன் இப்படி. ஒரே வருஷமா இல்லை வெவ்வேற வருஷமான்னு தெரியலை. ஆனா வெவ்வேற ஊரில் பிறந்துருக்கணும். ஏன்னா இங்கே திருக்கோவிலூரில்தான் முதல்முதலா சந்திச்சாங்களாம் இந்த மூணு பேரும்!

பெரிய மழை நாளில் பொய்கை ஆழ்வார், இந்தப்பக்கம் பயணம் செஞ்சு வந்தவர் தங்க இடம் கேட்டு மிருகண்டு மஹரிஷியின் ஆஸ்ரமத்துக்குப் போயிருக்கார். இந்தக் கால ஆஸ்ரமங்களா என்ன....  அரண்மனை மாதிரி இருக்க?   இத்துனூண்டு இடைக்கழியில் இடம் கிடைச்சது. ஜஸ்ட் ஒருத்தர் கால்நீட்டிப் படுக்கலாம். ராத்திரி என்பதால் இருட்டு  வேற!

 கொஞ்சநேரத்துலே இன்னொருத்தர் வர்றார்.வந்தவர் பூதத்தாழ்வார்.   அவருக்கும் தங்க இடம் வேணுமாம். வேற இடம் ஏது? இங்கேயே ரெண்டுபேருமா உக்கார்ந்துகலாமுன்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க. அப்ப வர்றார் பேயாழ்வார்.  மூணு பேர் உக்கார இடம் போதாது. அப்படியே நின்னுக்கலாம்னு நெருக்கியடிச்சு நிக்கறாங்க.  யாரு என்னன்னு பேசிக்கிட்டு இருந்துருக்கலாம்.... அப்பப் பார்த்து  இன்னொரு ஆள்  அதே இடத்துக்குள்ளே நுழைஞ்சு நெருக்கறமாதிரி மூணுபேருக்குமே தோணுச்சு.
 கும்மிருட்டில் யார் ஓசைப்படாம உள்ளே நுழைஞ்சான்னு  தெரியலையே....ன்னு யோசிக்கும்போதே  பேரொளியோடு பளிச்னு பெருமாள் காட்சி கொடுக்கறார்!  பிரமிச்சுப்போன மூவரும்  அப்பவே பெருமாளைப் போற்றிப் பாடறாங்க!  ஆளாளுக்கு  நூறு என்ற கணக்கு!

 இந்த  முன்னூறு பாடல்களுடன் ஆரம்பிச்சதுதான் நாலாயிரப் பிரபந்தமுன்னு இப்ப நம்ம கொண்டாடுற திவ்யப் பிரபந்தங்கள்.  மொதமொதல்லே பாடின இடமுன்னு  திருக்கோவிலூருக்கு இன்னும்  ஒரு பெருமை கிடைச்சது!
இடைக்கழியை தேஹளின்னும் சொல்வாங்களாம். அதனால் இங்கே  காட்சி கொடுத்த பெருமாளுக்கு  தேஹளீசப் பெருமாள் என்ற பெயரும்  அமைஞ்சு போச்சு.   இங்கத்து உற்சவமூர்த்திக்கு  இந்தப் பெயர்தான்!  உற்சவத்தாயார் புஷ்பவல்லி!  முதலாழ்வார்களான இந்த மூவரும் கடைசி காலம்வரை இங்கேயே இருந்துட்டாங்க. அதான் கருவறையிலும் நிக்கறாங்களே!
தீபாராதனையில் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். கூடவே குழுமி இருக்கும் மற்றவர்களையும் பட்டர்ஸ்வாமிகள் விளக்கினார்.

 முகம் பச்சை வண்ணத்தில் இருக்கு. சட்னு பார்க்கும்போது கதகளி அலங்காரம் போல இருந்தது.  அப்புறம் விசாரித்ததில்  பெருமாள் சிலை, மரச்சிலையாம். தாரு மரம்.  இதைத்தான் தேவதாரு மரம்னு சொல்றோமோ!  முந்தியெல்லாம் கலர் இல்லாமல் இருந்துருக்கார்.
இப்ப சில வருசங்களாத்தான்  கேரளாவில் இருந்து பச்சிலை மூலிகைகள் கொண்டுவந்து  பூசி வச்சுருக்காங்களாம்.  ஓ.... கேரளாவா? அப்ப நான் கதகளி  மேக்கப்ன்னு நினைச்சது  உண்மை :-)
அஞ்சு ஏக்கரில் இருக்கும் கோவில் இது. தாயார் சந்நிதிக்குப்போய் ஸேவித்தோம். பூங்கோவல் நாச்சியார்!  பிரகாரம் சுற்றி வந்தோம். லக்ஷ்மிநாராயணர், சேத்ரபாலனா நிற்கும் ஸ்ரீவேணுகோபாலன், அப்புறம் பெருமாள் கோவில்களில் வழக்கமா இருக்கும் மற்ற சந்நிதிகள்னு போய்க் கும்பிட்டாச்சு. ஆனால் ஆண்டாள் சந்நிதியைப் பார்த்த ஞாபகம் இப்போ இல்லையே.......  ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரைப் பாடியவளாச்சே  நம்ம ஆண்டாள்!

ஆமாம். ஆனால் அது  இவரைப்பற்றி இல்லையாமே!  காஞ்சிபுரத்து உலகளந்தானையாமே!  நெசமாவா?  இப்பதான் ஞாபகத்துக்கு வருது , காஞ்சியில் இடக்காலை தூக்கி நிற்கிறார்.  இடுப்பில் இருக்கும் வஸ்த்திரம்  மடிப்பு மடிப்பா   என்ன அழகா இருந்தது தெரியுமோ?  மொதல்முறை பார்க்கும்போது எண்ணெய்க்காப்பு முடிஞ்சு  மூலவரின் திரையைத் திறந்தநாளா அமைஞ்சு போயிருந்தது.   மினுமினுன்னு என்ன ஒரு  ஜொலிப்பு! இப்ப நினைச்சாலும் அது மனக்கண்ணில் வந்து நிக்குதே!  அதுக்கப்புறம்  போன பயணங்களில் அந்த ஜொலிப்போடு பார்க்கவே இல்லை :-(

ஹ.....ங்....  சொல்ல வந்ததை விட்டுப்புட்டேன் பாருங்க.....  உண்மையா நடந்த எபிஸோடில்  தூக்கின கால்    வலதா இடதா?
யோசிச்சுக்கிட்டே நின்னால்....   இருட்டிரும்.....   வாங்க   வழியில் போகணுமுன்னு நினைச்ச  டிவி நல்லூர் போகலாம் :-)

 தொடரும்...........  :-)




உன்னைத் தாலி கட்ட விடமாட்டேன்....(இந்தியப் பயணத்தொடர். பகுதி 108)

$
0
0
திருக்கோவிலூரில் இருந்து கிளம்பி போனவழியிலேயே  இருபத்தியஞ்சு கிமீ தூரம் போய்  திருவெண்ணெய்நல்லூர் 600 மீட்டர் என்ற போர்டு பார்த்ததும் ரைட் எடுத்து, ஊருக்குள் போனோம்.  வர்றவழியில்  மினிப் பாலைவனம் மாதிரி மணல் இருக்கும் பகுதியில் கொஞ்சூண்டு தண்ணீர் சின்ன வாய்க்காலாட்டம் தெரிஞ்சது. இந்தப் பாலைவனம்தான்  பெண்ணை ஆறாம்!  தென்பெண்ணை !

காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ்கண்டதோர் வைகை பொருநை நதி....  மேவிய ஆறு பல ஓடுன காலம் எல்லாம் போச்சு. வறண்டு போய்க்கிடக்கும் ஆற்றைப் பார்த்தால் நமக்குத்தான் கண்ணில் கங்கை....
அஞ்சு நிலை இருக்கும் ராஜகோபுரம் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள் போறோம். வெளிப்பிரகாரம் ஹோன்னு கிடக்கு. மொத்தக் கோவிலும் பத்து ஏக்கர் நிலத்தில் கட்டி இருக்காங்க. நமக்கு வலது பக்கம் நிறையத் தூண்களோடு   ஒரு பெரிய மண்டபம். ஓரத்தில் கம்பித்தடுப்பு போட்டு சின்ன கேட். முகப்பில் சின்ன மாடம். அதுலே நடுவாந்தரமா மூணு பேர் உக்கார்ந்திருக்க பக்கத்துக்கொன்னா ரெண்டு பேர் நிக்கறாங்க. ஒருத்தர் கிழவர் இன்னொருத்தர் குமரர்!  ரெண்டுபக்கமும் ஊர்சனம் கொஞ்சம் பேர்!


அது ஒன்னுமில்லை.... பஞ்சாயத்து நடக்குது.  வாதியும் பிரதிவாதியுமா முன்னால் நிக்கறாங்க.  கிழவனார்  முகத்தில் தாடியும் கையில் தடியும், கழுத்து நிறைய ருத்ராட்சமாலையுமா நிக்க,  குமரன் மாலையும் கழுத்துமா நிக்கறார்.  கல்யாணமணவறையில் இருந்து எழுப்பிக் கூட்டிட்டு வந்தால்.....  மாலையைக் கழட்ட ஏது நேரம்?
இவர் பேர் நம்பியாரூரன். செல்லமா ஆரூரன்னு கூப்புடுவாங்க. பொடியன் பார்க்க ரொம்ப அழகாவும்,  புத்திசாலியாவும் இருந்ததால்,  அந்த ஊர் ராஜா பார்த்துட்டு, அரண்மனைக்குக் கூட்டிப்போய்  எல்லாக் கலைகளையும் கத்துக்கொடுக்க ஏற்பாடு செஞ்சுருக்கார்.  ராஜா வூட்டுப்பிள்ளை மாதிரி இருந்த  ஆரூரனுக்குக் கல்யாண வயசு வந்துச்சு. பெத்த தகப்பன் ஒரு பொண்ணு பார்த்து, கல்யாண ஏற்பாடு செஞ்சு  அன்றைக்குத்தான் கல்யாணம்.   சாஸ்த்திரப்படி மாப்பிள்ளை செய்ய வேண்டிய பூஜைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது  அந்த ருத்ராட்சமாலைக் கிழவனார் விடுவிடுன்னு கல்யாண மண்டபத்துக்குள் வந்தார். கையில் ஒரு ஓலை!
புதுசா வந்தவர் கிட்டே என்ன ஏதுன்னு விசாரிச்சால்.....  இந்தக் கல்யாணப்பையனுக்கும் எனக்கும் ஒரு வழக்கு இருக்கு.  அதைத் தீர்த்தபிறகுதான்  தாலி கட்ட விடுவேன்னு  சொல்ல,  'ஐயோ... இந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது. முன்னேபின்னே பார்த்ததே இல்லைன்னு மாப்பிள்ளை அலற .... அங்கேயே ஒரு  குழப்பம். நல்லவேளை... கல்யாணப்பொண்ணு இன்னும் மணவறைக்கு வரலை.
சட்டுப்புட்டுன்னு  விசாரிச்சுட்டுக் கிழவரை வெளியே அனுப்பலாமுன்னு பார்த்தால் எங்கே?  'என்ன வழக்குன்னு சொல்லும்'னு கேக்க,  'நீ எனக்கு அடிமை.  எஜமானரின் அனுமதி இல்லாம அடிமைகள் கல்யாணம் காட்சி சொத்து சுகம்னு ஒன்னையும் அனுபவிக்க முடியாது.  வந்து எனக்கு சேவகம் செய்.  கல்யாணமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்'னு  சொல்றார் கிழவர்.

"வயசான கிழவருன்னு மரியாதை கொடுத்தா... இப்படி அடிமை கிடிமைன்னு  ஒளறுனா எப்படி? பைத்தியமா உமக்கு?  என்ன அத்தாட்சி இருக்கு?"

'இருக்கே!  உன் முப்பாட்டன் எழுதிக்கொடுத்த அடிமைசாஸனம். தானும் தன் பரம்பரையும் என் அடிமைகள் னு எழுதி இருக்கு பாரு'ன்னு ஓலைக் கையை நீட்டுனதும், சட்னு அதைப் பிடுங்கி அங்கே ஹோமம் செய்ய வளர்த்துக்கிட்டு  இருந்த தீயில் போட்டுட்டார் மாப்பிள்ளை.

"இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?"

"யோவ் மாப்பிள்ளை....  நான் என்ன அவ்வளவுக்கு அறிவில்லாதவனா என்ன?  இப்படிநடக்குமுன்னு தெரிஞ்சுதான் ஒரிஜினல் ஓலையைக்  கொண்டு வராம அதோட ஜெராக்ஸ் காபியைக் கொண்டுவந்தேன்!  இப்ப என்ன செய்யப்போறே? இப்ப என்ன செய்யப்போறே?"

'எனக்கு நியாயம் கிடைக்காமத் தாலி கட்ட விடமாட்டேன்'னு  அங்கே தர்ணா செய்ய ஆரம்பிச்ச கிழவர்கிட்டே, 'பஞ்சாயத்துலே தீர்த்துக்கலாம். அதுக்கு ஒரிஜினல் ஓலை வேணுமே'ன்னதுக்கு, 'அதை வீட்டுலே வச்சுருக்கேன். வாங்க எங்க ஊருக்கு'ன்னு மாப்பிள்ளை கழுத்துலே துண்டைப்  போட்டு  இழுத்துக்கிட்டுப் போறார்.   லபோ திபோன்னு ஊர்சனம் பின்னாலேயே ஓடுது.
எனக்கு அந்தக் கல்யாணப்பொண்ணை நினைச்சால்தான் ஐயோன்னு இருக்கு. தாலி கட்டும் நேரம் கல்யாணம் நின்னு போச்சுன்னா..... எப்படி இருக்கும்? ப்ச்.... பாவம்....

திருவெண்ணைநல்லூர் கோவிலுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அங்கே இருக்கும் மண்டபத்துலே பஞ்சாயத்தார்கள் வந்து உக்கார்ந்ததும் விசாரணை ஆரம்பிக்குது. ஒரிஜினல் டாக்குமென்ட் எங்கேன்னு கேட்டதும் இதோ கொண்டு வரேன்னு  கிழவர் கோவிலுக்குள் போறார். சனம் பின்னாலேயே போகுது.
கருவறைவரை போனவர், அங்கே வாசலில் செருப்பைக் கழட்டிட்டு உள்ளே நுழையறார். அம்புட்டுதான்........  காணாமப் போயிட்டார்! ஐயோ இதென்ன மாயமுன்னு  எல்லோரும் திகைச்சுப்போய் நிக்கும்போது   மேலே விமானத்தில் ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியுமா காட்சி கொடுக்கறாங்க.  கிழவனா வந்து, தன்னுடைய கல்யாணத்தை தடை செஞ்சது  சிவன்னு தெரிஞ்சுபோய் அதிர்ச்சியில் நிற்கும் ஆரூரனைப்  பார்த்து, 'நீ அழகாக இருக்கிறாய். எனக்கு பயமாக இல்லை'ன்னு சொல்லாம, 'சுந்தரரே.... என்னைப் பற்றிப் பாடும்'என்றாராம்!

(அப்ப இருந்துதான் நம்பியாரூரனுக்கு சுந்தரர் என்ற பெயர் அமைஞ்சது!)

நான் என்னன்னு பாடுவேன்னு  சுந்தரர் தயங்க, அதான் என்னை பைத்தியமுன்னு சொல்லிட்டயே!  பித்தனாட்டமா இருக்கேன்? 'பித்தா'ன்னே ஆரம்பிச்சுப் பாடுன்னதும்.......

'பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்அருள்துறையுள் 
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே'  
என்று முதல் பாட்டை எடுத்துவிட்டார்!


வைத்தாய் பெண்ணைத் தென்பால் என்ற வரிக்கு............  பெண்ணை ஏன்  தெற்குப் பக்கம் வைக்கணும்னு மக்குப்போல நினைச்சுருக்கேன். அதான் ஏற்கெனவே  உமையவளுக்கு  இடப்பக்கம் கொடுத்தாச்சே....

அப்புறம்தான் இந்தப் பயணத்தில் புரிஞ்சது... அந்தப் பெண்ணை.... இந்தப் பெண்ணை ஆறுன்னு!  ஆத்துக்குத் தென்பக்கம் இருக்கு திருவெண்ணை நல்லூர்! 
அசுரனோடு  போர் செஞ்சு அவனை வதம் செஞ்சதும், சக்தியின் முகம் கோபத்தால் விகாரமாகி இருந்துச்சாம். அப்போ.... திரும்ப சாந்த  குணமும் முகமும் கிடைக்கணுமுன்னு  வெண்ணையாலேயே கோட்டை ஒன்னு கட்டி அதுக்குள்ளே இருந்து தவம் செஞ்சு அருள் உருவைத் திரும்ப அடைஞ்ச இடமாம் இது. அதுதான் வெண்ணெய்நல்லூருக்கான பெயர்க் காரணம்!
இதுக்கு இன்னொரு வெர்ஷனும் இருக்கு! பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகாலவிஷத்தை சிவன் விழுங்கிட்டது நினைவிருக்கோ? அப்ப அந்த நஞ்சு ரொம்பவும் படுத்தாமல் இருக்க பசுவெண்ணையால் கோட்டை கட்டி, அதில் பஞ்சாக்னி வளர்த்து  தவம் செஞ்சாங்களாம் பார்வதி!  அந்த இடம் இதுதான். அதான் இந்தப்பெயர்ன்னு............  கோவில்களில் கதைக்கா பஞ்சம்?

இப்படி  நடக்கவிருந்தக் கல்யாணத்தை நிறுத்தி  சுந்தரரை ஆட்கொண்ட சிவன், அப்புறம் எப்படி  சுந்தரரின் காதலுக்காகத் தூது போனார்?  வேணுமா எனக்கு இந்த மண்டைக் குடைச்சல்? எல்லாத்துக்கும் கதை ஒன்னு இருக்கே!  வாங்க ஃப்ளாஷ்பேக் இதோ:-)

இந்த ஆரூரன் என்னும் சுந்தரர்,  கையிலாயத்துலே சிவனுக்கு அணுக்கத் தொண்டனா இருந்தவர். அப்ப இவர் பெயர் ஆலாலசுந்தரர்.  தினமும்  நந்தவனத்தில் போய் பூக்களைப் பறித்துவந்து  சிவபூஜைக்கு எல்லாம் ரெடியாக்க வேண்டியது இவருடைய ட்யூட்டி.
ஒருநாள் நந்தவனத்துக்குப் பூப்பறிக்கப் போறார். அன்றைக்குன்னு பார்த்து அங்கே பார்வதியின் சேடிகள் ரெண்டுபேர் (கமலினி,  அநிந்திதை என்ற பெயர்)அதே நந்தவனத்துக்கு  வர்றாங்க. தினமும் வெவ்வேற  நேரத்துலே வந்துக்கிட்டு இருந்தவங்களுக்கு அன்றைக்கு டைமிங் தவறிப்போயிருச்சு போல !

ரெண்டு சைடுலேயும் கண்டதும் காதல் ஆகி இருக்கு! காதல் வந்தவுடன் முகத்தில் ஜொலிப்பு வந்துருக்குமோ  என்னவோ....   சிவன் கண்டுபிடிச்சுட்டார்!  பூலோகத்தில் போய் பிறந்து காதல் நிறைவேறட்டுமுன்னு நேரா பாரதநாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வச்சுட்டார். திருநாவலூரில் பிறந்து நம்பியாரூரன் என்ற பெயர் கிடைச்சது அப்பதான்! குறிப்பிட்ட காலத்துக்குப் பின் திரும்பவும் கைலாயத்துக்குக் கூப்பிட்டுக்கற மாதிரி  ஒரு அக்ரீமெண்ட் போட்டாச்சு.


அவருக்குக் கல்யாணம் பண்ணும் சமயத்தில் நடந்த கலாட்டாதான்  மேலே நீங்க வாசிச்ச வழக்காடுமன்ற சம்பவங்கள். அதுக்குப்பின்?


திருவாரூரில்  இருக்கும் பரவையார் என்ற பெண்ணைப் பார்த்ததும் சுந்தரருக்குக் காதல் வந்துருச்சு. ஆசையில் ஓடிப்போய்  நண்பர் மொதக்கொண்டு தன்னுடைய எல்லாமுமாக இருக்கும் சிவபெருமானிடம் போய்ச் சொல்லி அவர் உதவியால் அந்தப் பரவையைக் கல்யாணம் முடிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கும் சமயம் இன்னொரு ஊரில் இன்னொரு பொண்ணைப் பார்த்ததும் இன்னொருமுறை காதல் வந்துருச்சு.

 அந்தப்பொண் பெயர் சங்கிலியார்.  அந்தக் கல்யாணமும்  நடந்தது.  விவரம் முதல் மனையாளுக்குத் தெரிஞ்சதும்..... அந்தம்மா மனம் நொந்துட்டாங்க. அவுங்களை சமாதானப்படுத்த  மீண்டும் நண்பரின் உதவி கேட்க, சிவனும் தூது போய் சமாதானம் செஞ்சு வைக்கிறார்.

மொதல்மொதலில் நிச்சயமான கல்யாணத்தை நடக்கவிடாமல் தடுத்தவர் இப்படி  வேற ரெண்டு கல்யாணத்துக்கு எப்படித் துணை போயிருக்கார் பாருங்க!  ஏன்னா  இந்த பரவையும் சங்கிலியும்தான் கைலாயத்தில் பார்வதியின் சேடிகளா இருந்த  கமலினியும், அநிந்தையுமாம்!  எல்லாம் முன் ஜென்ம வாசனை.....


இவ்வளவும் நடந்து ரெண்டு மனைவியருடன் வாழ்ந்து இறைவனைப் பாடி ஊர் ஊராப் போய்க்கிட்டு இருந்த சுந்தரமூர்த்தி நாயனார்,  தன்னுடைய  பதினெட்டாவது  வயசுலேயே.... இறைவனால் திரும்பக் கைலாயத்துக்கே போயிட்டார். வெள்ளையானையை அனுப்பி,  கூட்டிட்டு  வரச்சொல்லிட்டாராம்!  எல்லாம் சிவனின் திருவிளையாடல்! He was just  18  !!!     :-(  

 
இன்னும்  இவர் ரொம்பநாள் பூலோகத்தில் இருந்தால்....   காதல்தூது போயே தன்னுடைய கால்கள் தேய்ஞ்சுருமுன்னு நினைச்சுக்கிட்டாரோ நண்பர் சிவன்? சட்னு கூப்புட்டுக்கிட்டார், பாருங்களேன்!  மனைவியரும் கர்ம வினை முடிஞ்சு  பார்வதி தேவிகிட்டேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம்!
சுந்தரர், இறைவனை நினைச்சு முப்பத்தியொன்னாயிரம் பாடல்கள் பாடி இருக்காராம். அதுலே செல் அரிச்சது போக மீதிதான் நமக்குக் கிடைச்சுருக்கு.  இது ஒரு தனிக்கதை. அப்பாலிக்காப் பார்க்கலாம்.

இப்பவும் எனக்கு அந்த  மொதப்பொண்ணை நினைச்சால் மனவருத்தம்தான். அவுங்க,  தன் கல்யாணம் நின்னுபோன பிறகும் கூட இவரையே நினைச்சு வேற யாரையும் கட்டாம துறவிபோல வாழ்ந்து..........  போயே போயிட்டாங்க. ப்ச்.... 

கோவிலுக்குள்ளே நுழைஞ்சவ, மண்டபத்துக்கிட்டேயே நின்னு  கதை சொல்லப்போய் ரொம்பவே நீண்டு போயிருச்சு. .............  வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.

பலிபீடம், கொடிமரம் சேவிக்கறோம். தொட்டடுத்தாப்லே புள்ளையார்! (பெருமாள் கோவிலில் இங்கே பெரிய திருவடி இருப்பார் பாருங்க அதே போல!)கலிதீர்த்த கணபதி இவர்.
கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் மூலவர் லிங்க வடிவில்! அருட்துறைன்னு  இந்த ஊருக்கு ஒரு பெயர் இருந்துருக்கு. அந்தப்படி  அருள் செய்யும் ஈஸ்வரர்! கிருபை புரிகின்றவர்!

மங்களாம்பிகை என்ற பெயரில் அம்மன் தனிச்சந்நிதியில் தனிக் கோபுரவாசலுடன்! சங்கநிதி, பதுமநிதி, ஸ்ரீசக்கரம் அம்மனுக்கருகில்! நந்தி வாகனத்துக்கு பதில் சிம்மவாஹனம் சந்நிதிக்கு முன்னால் இருக்கு!


பெரிய மண்டபங்களும், பிள்ளையார் முருகன் சந்நிதிகளுடனும்  பெரிய கோவிலாத்தான்  இருக்கு. பத்து ஏக்கர் விஸ்தீரணம் ஆச்சே! சுந்தரருக்கும்  ஒரு தனிச்சந்நிதி. கையில் ஒரு ஓலையை பிடிச்சபடி இருக்கார்:-)
இந்தத் தனிச்சந்நிதிப் பிள்ளையார், பொல்லாப்பிள்ளையார் என்று கேள்வி. கோவிலில் பொள்ளாப்பிள்ளையார்னு எழுதி வச்சுருக்காங்க.  சுயம்புவோ? உளியினால் பொள்ளாத.....  
பொல்லாப்பிள்ளையாருக்குத் தனிக்  கதை இருக்கு. பொல்லாத குறும்பு குணம் கொண்டவருக்கான செல்லப்பெயர். அர்ச்சகர், தனக்கு உடம்பு சரி இல்லைன்னு  நைவேத்யத்துடன் தன் மகனை புள்ளையார் பூஜை முடிச்சுவர அனுப்பறார். சின்னக்குழந்தை, சாமி உண்மையாவே சாப்பிடுமுன்னு நினைச்சு  நைவேத்யத்தை சாமிகிட்டே வச்சுட்டு, தின்னு தின்னுன்னு வற்புறுத்துனதும்  குழந்தைமனம் நோகக்கூடாதேன்னு  புள்ளையார் சாப்பிட்டார். பொல்லாத பிள்ளையார்:-)

வெறும் பாத்திரத்தோடு வீட்டுக்குப்போன குழந்தைப்பையன், புள்ளையார் சாப்பிட்டுட்டார்னு சொல்ல .........  ஊரெல்லாம்  புரளியாயிருச்சு. 

(கொஞ்ச வருசத்துக்குமுன்னே புள்ளையார் பால்குடிச்ச கலாட்டாவை நினைச்சுக்குங்க)

சமாச்சாரம் கேள்விப்பட்ட, உள்ளுர் அரசர்  புள்ளையார் சாப்பிடறதுக்காக  விதவிதமான பலகாரங்கள் செஞ்சு  பத்து காத தூரத்துக்கு  வரிசை வச்சுட்டார்!  குழந்தைப்பையனை, பொய்காரன் ஆக்க விரும்பாத புள்ளையார், அத்தனை சாப்பாட்டு வகைகளையும் நிமிஷத்துலே கபளீகரம் செஞ்சுட்டார்னு  ஒரு கதை!  பொல்லாத பிள்ளையார்  :-)
கோஷ்டத்தில் விஷ்ணு, பிட்சாண்டவர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, துர்கைன்னு  சிவன் கோவில்களின் வழக்கம்போல்  இருக்கு. சண்டிகேஸ்வரர் சந்நிதி அருமை!  வாகனமண்டபங்களில்  வரிசையா வாகனங்களை நிறுத்தி  பாதுகாப்பா வச்சுருக்காங்க.
கோவில் படு சுத்தம்!  உள்பிரகாரத்தில் துளிக் குப்பை இல்லாமல் பார்க்கவே அருமை!
கோவிலின் தலவிருட்சம் மூங்கில். அதனால்  மூலவருக்கு வேணுபுரீஸ்வரர் என்ற பெயரும் இருக்கு!

நம்ம அருணகிரி நாதருக்கு, மயில்வாகனத்தில் முருகன் தரிசனம் கொடுத்தது இங்கேதானாம்!  திருப்புகழில் இந்த சம்பவம் பற்றிப் பாடி இருக்காராம்.

இங்கே இருக்கும் நந்தீஸ்வரர் அதிக சக்தி உள்ளவர் என்பதால் பிரதோஷம் ரொம்பவே விசேஷமாம்!

இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம் என்ற ஆசை இருந்தாலும்....  ரொம்ப இருட்டுமுன்   விழுப்புரம் போய் சென்னை ஹைவே பிடிச்சுடணும் என்பதால் கிளம்பிட்டோம்.

ராத்திரி ஒன்பதே காலுக்கு லோட்டஸ் வந்து சேர்ந்தாச். ரூம் சர்வீஸில் ஒரு தோசையுடன்  இந்த நாள் முடிஞ்சது!

தொடரும்..........  :-)

படங்களை இங்கே தனி ஆல்பத்தில் பார்க்கலாம் :-)


கணக்கு எல்லாம் சரியா எழுதி வச்சுட்டுத்தான் அப்பல்லோ போயிருக்கார்......... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 109)

$
0
0
ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறோமுன்னு நாமே நினைச்சு, நாமே போட்டு வைக்கும் கணக்கு சிலசமயம் தப்பாப் போயிருதுல்லே! இந்தக் கோவில் பயணத்தில் இருந்து  ஃபிப்ரவரி 9 ஆம் தேதிக்கு சென்னை திரும்புவதாகத்தான் நம்ம திட்டம்.  அதேபோலத்தான் திரும்பினோம். ஆனால்..... இது எப்படி பேக்ஃபயர் ஆச்சுன்னா....
ஒரு சில நகைகள் செய்ய நம்ம சீனிவாச ஆசாரியிடம் (தி நகர் மங்கேஷ் தெரு. இவரைப்பற்றி ஏற்கெனவே பலமுறை எழுதி இருக்கேன் ) சொல்லி ஆர்டர், டிஸைன் எல்லாம் கொடுத்துட்டு,  தெற்கத்திப் பயணம் முடிஞ்சு வந்ததும் வாங்கிக்கலாம்னு பக்கா ப்ளான்.  என்ன ஒன்னுன்னால்....  சொன்னால் சொன்ன தேதிக்கு வேலையை முடிக்காம நாளைக்கு வாங்க, மறுநாளைக்கு வாங்கன்னு இழுத்தடிக்கும் தொழிலாளிகள் பட்டியலில் தையல்காரரும், நகை செய்யும் ஆசாரிமாரும் ஏற்கெனவே நம் முன்னோர்களால் சேர்க்கப்பட்டுருப்பதால்....  அதையே நானும்  ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். 'மூத்தோர் சொல் கேட்காதவள்'என்ற அவப்பெயர் வந்துறக்கூடாது பாருங்க :-)

ஓ... அதனாலே.....

ஒருநாள் முன்னாலே வர்றதாச் சொல்லலாமேன்னு  8 ஆம் தேதி வந்துருவோம். வந்தவுடன் நேராக் கடைக்கு வந்து நகையை வாங்கிப்போமுன்னு சொல்லி வச்சேன்.  இன்றைக்குத் தேதி 10. காலையில் ஒரு ஒன்பது மணிக்கு  செல்லில் ஃபோன் செஞ்சு   கடை திறந்தாச்சான்னு கேட்டால்......  பதில் வருது ஆஸ்பத்திரியில் இருந்து!  அதே அப்பல்லோதான் !!!!
நம்ம சீனிவாச ஆசாரிக்கு ஆஞ்சியோ  நடந்துருக்கு மொதநாள்.   ஆர்கனைஸ்டு ஸர்ஜரிதான். நாம் எட்டாம்தேதி வர்றோமுன்னு சொல்லி இருந்ததால்.... இவர் ஒன்பதுக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருந்தாராம்.

இப்ப எப்படி இருக்கார்னு விசாரிச்சதுக்கு, பரவாயில்லை.  இன்னும்  ரெண்டு மூணு நாள் அங்கே வச்சுருந்து பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு சொன்ன பாபு,  ஒரு ரெண்டு மணிக்குக் கடையாண்டை வந்துருங்க. நான் வந்து  கணக்கு செட்டில் பண்றேன்னார்.  சரி. அப்படியே ஆகட்டும்.....

இன்றைக்கு நமக்கு வண்டி  இல்லை. நம்ம சீனிவாசனுக்கு லீவ் கொடுத்துருந்தோம்.  பத்துப்பனிரெண்டு நாளா அவரும்தானே வீட்டை விட்டுட்டு நம்மோடு சுத்திக்கிட்டு இருந்தார்.

இன்றைக்கு ஒரு நாள் ஆட்டோ வச்சுக்கிட்டால் ஆச்சுன்னு  கிளம்பினோம். கலெக்‌ஷன் டே!  டெய்லர் கடைக்குப்போய்  தைச்ச துணிகள் வாங்கறது,  நம்மவர்  கேரளா  ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ்லே போய் முடிவெட்டிக்கிறதுன்னு  சம்ப்ரதாயங்கள் இருக்கே!  ஆனால் மொதல்லே கோவிலுக்குப் போகணும். ஜிஎன் ரோடிலே இருக்கும் ஜெயின் கோவில்தான். தொட்டடுத்தாப்லே நம்ம பேங்க் இருக்கு என்பதால்  போகும்போதும் வரும்போதும்  காரில் இருந்தே ஒரு கும்பிடு.  சென்னைப் பயணத்தில் ஒரு முறையாவது  இங்கே   போய் வரணும் என்பதும் ஒரு சம்ப்ரதாயம்:-)
கோவிலில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு!  பெரிய வெள்ளை யானைகள் வரவேற்க, உள்ளே போய்  சாந்திநாதரைக் கும்பிட்டுக்கிட்டு, அப்படியே பத்மாவதி தாயாரையும் வலம் வந்தோம். எந்த ஆரவாரமும் இல்லாம அமைதியா உக்கார்ந்து தியானம் செய்ய இதைவிட அருமையான இடம் இருக்கான்னு  தெரியலை !
செய்ய வேண்டிய சடங்குகளை ஒவ்வொன்னாச் செஞ்சுக்கிட்டே பாண்டிபஸார் க்ளிக்ஸ் :-)  பாத்திரக்கடையில் அம்மி, நல்லாத்தான் இருக்கு.





நடந்துக்கிட்டே குமார் கடை வாசலுக்குப் போயிருந்தோம். எப்பக்கா வந்தீங்கன்னு ஆரவாரமான வரவேற்பு :-)  கடையை விரிவுபடுத்தி  இப்போ சொந்த வியாபாரம்!  நல்லா இருக்கட்டும்!   மகளுக்கு  சில அலங்கார நகைகள். ( எல்லாம் போதும். இந்த ஊருக்கு இதுவே அதிகம்! மேலும் இங்கத்துக் காலநிலைக்குக் கருக்கறதில்லை!)சும்மா சொல்லக்கூடாது....  சில நகைகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு!  முக்காலே மூணுவீசம் நார்த் இண்டியன் ஸ்டைல்ஸ் !!!  டீ குடிச்சுட்டுத்தான் போகணும்னு கண்டிப்பாச் சொல்லிட்டதால் ஒரு டீயும் ஆச்சு. குட்டியூண்டு கப்பில் டீ விளம்பல் கூட நல்லாத்தான் இருக்கு!

 அங்கிருந்தே   துணிகள் தைச்சாச்சான்னு  செல் விசாரிப்பு.
"இன்னும் ஒரு மணி நேரத்துலே   வாங்க மேடம். இப்போதான் அயர்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க"

ஹாஹா.... நான் சொல்லலே....  ரெண்டு நாளைக்கு முன்னாலே ரெடியாகி இருக்கவேண்டியதுன்னு...........

அறைக்கு வந்துட்டோம். ச்சும்மாச்சும்மா என்ன சுத்தல் வேண்டிக்கிடக்கு? :-) அதானே.... இன்னும் கொஞ்சம் நேரம் கடைவீதியில் இருந்தால் என்னத்தையெல்லாம் வாங்கிருவாளோன்னு ஒரு பயம் மனுசருக்கு   உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யுது  :-)

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்கேயும் போக வேணாம்.  அடுத்தாப்லே இருக்கும் சுஸ்வாதில் ஒரு எலுமிச்சம்பழ சேவையும்,  பழமுதிர்ச்சோலையில் பழங்களும், தயிரும்  வாங்கினால் ஆச்சு.

ரெண்டு மணி போல ஒரு ஆட்டோ பிடிச்சு முதலில் தையல் கடை கலெக்‌ஷன் முடிச்சுட்டு, அடுத்து  நகைக்கடைன்னு போனால்..... கடை மூடிக்கிடக்கு. நல்லவேளையா செல்ஃபோன்னு ஒரு சமாச்சாரம் கையிலே இருக்கே. ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டாராம். வந்துக்கிட்டே இருக்கேன்னார் பாபு.
அதுக்குள்ளே அந்தக் கடையில் வேலைசெய்பவர் ஒருவர் (எல்லாம் சொந்தக் காரர்கள்தான்)வந்து, எதுத்த கடையில் இருந்து ரெண்டு ப்ளாஸ்டிக் ஸ்டூல் கொண்டுவந்து கடைக்கு எதுத்தாப்லே நிழல் இருக்கும் இடத்தில்  போட்டு உபசரிச்சார்.

ஒரு  இருபது நிமிட் போல காத்திருப்பு. நம்ம சீனிவாச ஆசாரி மகள், கடைச்சாவியோடு வந்து சேர்ந்தாங்க. அதே சமயம் பாபுவும் வந்து சேர்ந்தார். கடை திறந்து எல்லோருமா  அங்கே போனோம்.

ஆர்டர் செஞ்சவைகளை நல்லபடியாச் செஞ்சு வச்சு, அதுக்கான கணக்கெல்லாம்  கச்சிதமா எழுதி வச்சுட்டுத்தான் ஆசாரி, அப்பல்லோ போயிருந்தார்.  எல்லாம் சரிபார்த்தபின் நாம்தான் பாக்கி வச்சுருக்கோம். அதைத் தங்கமாகவோ இல்லை காசாகவோ திருப்பித் தரலாம்.  காசுன்னா இவ்ளோ, தங்கமுன்னா இவ்ளோன்னும் எழுதிவச்சுட்டுப் போயிருக்கார். கணக்கு சரியா இருந்தாக் குழப்பமே வராதில்லையா!

அப்பதான்  சட்னு நம்மவர்  நான் எதிர்பாராத காரியம் ஒன்னு செஞ்சார். நான் திகைச்சுப் போயிட்டேன். 'தங்கமாத் தரோம்'னுட்டுக் கையில் இருந்த ப்ரேஸ்லெட்டைக்  கழட்டி பாபு கிட்டே கொடுத்துட்டார். வேணாம் வேணாமுன்னு  நான் சொன்னதைக் கேக்கவே இல்லை. ப்ச்...   ஆம்புளைங்க 100 கிராம் தங்கத்துக்கு மேலே போடக்கூடாதுன்ற சட்டம் வரப்போகுதுன்னு இவருக்கு  எப்படித்தான் தெரிஞ்சதோ?

அதை எடை போட்டு, அவுங்களுக்குச் சேரவேண்டிய தங்கத்தை வெட்டி எடுத்துக்கிட்டு மீதியை  நம்மகிட்டே கொடுத்துட்டாங்க. சரி. இருக்கட்டும் அடுத்தமுறை  அதைக்கொண்டு எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம்:-)
நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் என்பதால் ஒரு பதக்கம் செய்யச் சொல்லி இருந்தேன்.  நல்லாவே செஞ்சுருக்காங்கன்னு தோணுது :-)


இப்பெல்லாம் அநேகமா எல்லோருமே  நகைக்கடையில்  ரெடிமேடா செஞ்சு வச்சுருக்கும் நகைகளை வாங்கிக்கறோம்.  இப்படியே போனால் இந்தக் கலை  என்ன ஆகுமோன்னு எனக்கு உள்ளுக்குள் ஒரு கவலை.

  'அப்படியெல்லாம் ஆகாது. கையால மட்டுமே செய்யப்பட வேண்டிய நகைகள் இருக்கே. முக்கியமா திருமாங்கல்யம்'னு நெருங்கிய தோழி சொன்னாங்க!   ஆனாலும்  அதுவுமே  ரெடிமேடாக் கிடைக்குதே..........  அவரவர் சடங்கு முறைகள் அனுசரிச்சு....... இல்லையோ! 

இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு வந்துட்டு, கொஞ்சநேரம் ஓய்வு. பாக்கிங் கொஞ்சம் செஞ்சோம். அஞ்சு மணி ஆனதும் மச்சினர் வீட்டுக்குப் போகணும். கீழே  நம்ம லோடஸில் டாக்ஸி ஏற்பாடு செய்யறோமுன்னு NTL க்கு  சொல்லிட்டாங்க. ரெகுலரா அந்த சர்வீஸ்தான் பயன்படுத்தறாங்களாம். சொன்ன நேரத்துக்கு வராமல் அரைமணி நேரம் லேட்டா வந்து சேர்ந்தது வண்டி. இடம் தெரியாம சுத்துனாராம் ட்ரைவர். இதுவா ரெகுலர்  சர்வீஸ்?
அதுலே வேளச்சேரிக்குப் போறோம். ட்ரைவர் கொஞ்சம்  முறைச்சுக்கிட்டு ஓட்டுனார். பணிவு காட்டவேண்டியதில்லை. ஆனா... பயணிகளிடம்  முறைப்பு என்ன வேண்டிக்கிடக்கு? நம்ம சீனிவாசன் இல்லாதது  கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.  அட்ரெஸ் சொல்லி, கூடவே  லெஃப்ட், ரைட்டு வழியும் சொல்லிக்கிட்டே வந்தார் நம்மவர். கடைசிவரை முறைப்பு மாறவே இல்லை....  :-(

மச்சினர் குடும்பத்துடன்  பேசிச்சிரிச்சு அங்கேயே  ராச்சாப்பாட்டையும் (தோசை) முடிச்சுக்கிட்டு, அவுங்க பரிந்துரையின் பேரில் ஓலா டாக்ஸியில் அறைக்கு வந்தோம். சர்வீஸ் ஓக்கே! மறுநாளைக்கும் சீனிவாசனுக்கு லீவு கொடுத்தாச்.  ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் வேலை .............  காரணம்.
நாளைக்கும் டாக்ஸி எடுத்தால் ஆச்சு!

தொடரும்........  :-)

அன்பெனும் மழையிலே....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 110)

$
0
0
I never like mixing  business with pleasure என்றாலும் கூட,  ஒரு நாள், ஒரே ஒருநாள்  மிக்ஸ் பண்ணிக்கிட்டால் தப்பான்னு  கேட்டால்.....    சரி போயிட்டுப் போகுதுன்னு  விட்டுரும்படி ஆகிருது.  அதுக்காக மூலையில் உக்கார்ந்து பிலாக்கணம் வைக்கணுமா?  நோ நோ....    நமக்கான வேற ஒரு முக்கியமான சமாச்சாரத்தை  இன்று வச்சுக்கிட்டால் ஆச்சு.  இன்று அவரவருக்குத் தனிவழி!
நெருங்கிய தோழி வீட்டில் கெட் டுகெதர்.  'பேசாமக்கிளம்பி வாங்க எல்லோரும். சமையல்  நான் செஞ்சுருவேன்'னு  சொல்லிட்டாங்க. அது  சரி இல்லைன்னு வாதாடி,  எதாவது கொண்டு வரோமுன்னு மற்ற தோழிகள்  அடிச்சுச் சொல்லி  அருமையான ஐட்டங்களைக்  கொண்டு வந்துருந்தாங்க. நமக்கேது அடுப்பு? இருக்கவே இருக்கு சுஸ்வாத்:-)
காலையில் இவரை  தொழிலதிபநண்பர் வந்து கூட்டிட்டுப் போயிட்டார். எனக்கு ஒரு ஓலா டாக்ஸி புக் பண்ணி இருந்தோம்.  சரியான நேரத்துக்கு  வந்துருச்சு வண்டி.  ஓட்டுனர் 'நல்ல முகம்' காட்டினார்.  போற இடத்துக்கு எனக்கு வழி சரியாத் தெரியாதுன்னு முதலிலேயே சொல்லிட்டேன்.  கடைசியில் ஒரு சிக்னலில் நிக்கும்போது  வலமா இடமான்னு கேட்டதுக்கு, யாருக்குத் தெரியும்? வலமே போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன்.  வலம் திரும்பும்போதுதான் நான் போக வேண்டிய கட்டிடம்   நேரெதிரா இருக்குன்னு கண்டுபிடிச்சேன்:-)  அதுக்குள்ளே ஒரு  இருவது முப்பது மீட்டர் வண்டி ஓடிருச்சு.  அப்புறம்  ரிவர்ஸ் எடுத்தே சரியான கட்டிடத்துக்குள்ளே கொண்டு வந்துட்டார். பிரச்சனை இல்லைன்னு  அவரே சொல்லிட்டு மீட்டருக்கான வாடகையையும் வாங்கிக்கிட்டு, சர்வீஸ் நல்லா இருந்தா ஒரு  மெஸேஜ் அனுப்பறீங்களான்னு கேட்டார்.  அதுக்கென்ன?  பின்னூட்டம் அனுப்ப நமக்குத் தெரியாதா என்ன?  அதே போல் ஆச்சு :-)இப்ப எதுக்கு விஸ்தரிச்சுச் சொல்றேன்னா.....  நேத்து  வந்த முறைப்பாளர் மாதிரி இல்லை என்பதற்கு!  மனிதரில் எத்தனை வகை!!!
தோழிகள் வந்து சேர்ந்து, அரட்டைக் கச்சேரி, அப்பப்ப தீனி, சாப்பாடுன்னு நேரம் ஓடியே போச்சு. மெட்ரோவில்  போயிட்டு வரலாமுன்னு நினைச்சது  நடக்கலை.  ஒரு இளம்தோழியின் குழந்தை  பள்ளியில் இருந்து திரும்பிவரும்  நேரமாச்சுன்னதும் அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பினாங்க. அப்புறம் தொடர்ந்த  அரட்டை அடுத்த  ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுருச்சு. எனக்கும் தோழியே ஒரு  ஓலா கேப் புக் பண்ணிக் கொடுத்தாங்க.

கோபால் வந்து சேரும்போது மணி எட்டு.  ராச்சாப்பாட்டுக்கு வெளியே  போகவேணாமுன்னு  இருந்துச்சு. பகல் சாப்பாடு ரெண்டுவித வடைகளுடன் பாயஸம், இன்னபிற வகைகளுமா அமர்க்களமா இருந்ததுன்னு சொல்லி, படங்களை இவருக்குக் காமிச்சு கொஞ்சம் தீ வளர்த்தேன்:-)

ஏற்கெனவே அறையில் இருக்கும் ஃப்ரிட்ஜில்  தயிர் வாங்கி வச்சுருக்கோம். பழங்களும் பாக்கி இருக்கு. போதாதா என்ன?

மறுநாள் பிறந்ததும் காலில் கொஞ்சம் கஞ்சியைக் கொட்டிக்கிட்டாப்லெ ஒரு வேகம் வந்துருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் சென்னையில்.  அதுக்குள்ளே  சந்திக்க வேண்டியவர்களைச் சந்திச்சே ஆகணும்!
கவிதாயினிக்குச் சேரவேண்டிய புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கணும். அவுங்க ஊரில் இல்லை. அதனால் பக்கத்து ஃப்ளாட் தோழி வீட்டில் கொடுத்தால் ஆச்சு. ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமானவங்கதான்!  அங்கே போனால்....   ஹைய்யோ ஹைய்யோ அச்சச்சோ....   தத்தைக் குட்டி!  கொஞ்சநேரம்  கொஞ்சிட்டுத்தான்  கிளம்பினேன்:-)
ரொம்பநாளாக நண்பர்/வாசகர் வரச்சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கார்.  அடுத்தபயணத்தில்னு சொல்லியே ஆறேழு பயணங்களைத் தள்ளிப் போயிருக்கு. இன்றைக்கு ரெண்டாவது வேலையா அங்கேதான்!

 நண்பருக்குப் பகல் 1 மணி  ஷிஃப்ட் என்பதால் காலை நேரம் ஓக்கே!
தகவல் தெரிவிச்சதும்.....  எப்படி வழி,  எங்கே வண்டியை நிறுத்தணும்,  அவர் இருக்கும் தெருவின் அகலம் உட்பட சகலமும்.  கூடவே ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி அங்கே நமக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.  இது  போதாதுன்னு  நம்ம சீனிவாசனிடமும் வழியெல்லாம் விஸ்தரிச்சும் ஆச்சு.
எல்லாம் சொன்னது சொன்னபடியெ!   அனந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்!
ஹைய்யோ.....  என்ன ஒரு அன்பான வரவேற்பு! அவர் மடலில் சொன்னதைப்போல குடும்பமே ஆர்வமாக் காத்துக்கிட்டு இருக்கு!!   அனந்துவின் அம்மா....
சொந்தப் பொண்ணை வரவேற்பதுபோல்  காட்டிய  புன்முறுவலை ஆயுசுக்கும் மறக்க முடியாது! எல்லாத்தையும்விட அடுத்தமுறை வரும்போது நாலைஞ்சுநாள் கூடவே தங்கி, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்குப் போய்வரலாமுன்னு சொன்னது ரொம்பவே பிடிச்சுருந்தது! உடன்பிறந்தான் வீடு கிடைச்சுருச்சு!


மகன் விவேக் படிப்பில் கெட்டி!  பெண் சின்னவள். பள்ளிக்கூடம் போயிருந்தாள்.  மகன் இப்போ ஸி ஏ படிப்புக்குச் சேர்ந்துருக்கார்!
அன்றைக்குத் தை வெள்ளிக்கிழமை!  அதுவும்  தை மாசக் கடைசி வெள்ளி என்பதால் விசேஷ பூஜை எல்லாம் ஸ்பெஷல் நைவேத்தியங்களோடு நடந்து, நமக்கு இனிப்போ இனிப்புதான்:-) கூடவே மஞ்சள்குங்குமம் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கோடு வச்சுக்கொடுக்கும் சம்ப்ரதாயத்தின்படி  ஜாக்கெட் பீஸ்.

நம்முடைய பூனா எபிஸோடில் நமக்கு வாய்த்த நண்பர் குருசாமியை நினைவுபடுத்தும் நண்பரும் குடும்பமும்.....  இந்த அன்பை எழுத்தில் சொல்ல முடியாது.... உணரத்தான் முடியும்!
பக்கத்துத் தெருவில் நிறுத்தியிருந்த வண்டிவரை கொண்டுவிட்ட  தம்பித் தம்பதிகளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பி தங்கக்கூட்டில் இருக்கும் தகப்பனைப் பார்க்கப் போனோம்!

தொடரும்..........  :-)


உள்ளே இளைஞன், வெளியே கிழவன் !!!! எல்லாம் வேஷம்................ :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 111)

$
0
0
கோல்டன்நெஸ்டைத் தேடி தெருவின் ரெண்டு பக்கமும் கண்ணை நட்டுக்கிட்டுப்போயிருக்கோம்..... கண்ணுலே அகப்படலை....  ஆனால் தெருமுழுக்க இவர் புகழ் பரவி இருப்பது கடைசி விநாடியில் தெருமுடியும் இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் தெரிஞ்சது....  பெயரைச் சொன்னவுடன்,  'அடடா.... தெரு ஆரம்பத்துலேயே   ரைட் எடுத்துருக்கணும்'   என்றதோடு விடாமல்....  'போங்க. மாடியில் உக்கார்ந்துருப்பார்'னும் சொன்னார்,  கடைக்கு எதோ வாங்க வந்த நபர்:-)

அதே மாதிரிப்போறோம். வாசலில் புள்ளையார்!  மாடியில்  தகப்பனார்!
வயசாச்சுன்னு சொல்றதெல்லாம் ச்சும்மா.....  ஒரு பாவ்லா!  இளைஞருக்குரிய.... இன்னும் சொல்லப்போனால் சின்னப் பையனுக்குரிய ஒரு லாகவத்தோடு சட்னு  நாற்காலியில்  உக்கார்ந்து காலை  மடிச்சுச் சம்மணம் போட்டுக்கறதைப் பார்த்து, இந்த மூட்டு வலிக்காரிக்கு மூச்சு நிக்காதது, உங்க பாக்கியம்!
சினிமாவிலும் நாடகத்திலும் வேஷம் போட்டுப்போட்டு.... இப்படிக் கிழவர் வேஷம் பழக்கமாகிருச்சு போல!!
ஒன் புக் ஒன்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பவர் இப்ப டு புக் ஒன்டரா ஆகி இருக்கார். புள்ளிகள், கோடுகள், கோலங்கள்! நானும்  புத்தகத்தை வாங்கி வச்சுருந்து, அதைத் தூக்கிக்கிட்டுப் போயிருந்தேன்.... கையெழுத்து வாங்கிக்க:-)புத்தகம் வாங்குன கையோடு ஃபோன் செஞ்சு 'வரட்டா'ன்னு கேட்டதுக்கு,  'நான் இப்போ பெண்களூரில் இருக்கேன்.  அடுத்த வாரம் சென்னைக்கு வந்துருவேன். ஆனால்.... என்னப் பார்க்காம நீ ஊருக்குப் போயிடக்கூடாது'ன்னு ஒரு மிரட்டல் வேற :-)

விசுவாசம் என்ற மணிபாரதியின் குறும்படம் ஒன்றைத் தேடி எடுத்து நமக்காகப் போட்டுட்டு, அடுக்களைக்குப் போனார்.  அடுத்த பத்து நிமிசத்தில் சுடச்சுட அருமையான காஃபியுடன்,  கேஸரியும், மொறுமொறுன்னு வடாமும்!  சமையலில் மன்னனாக்கும்!  உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப்போறேன் :-)
அந்தக் குறும்படத்தில் கூட இவர் சமையல்காரர்தான்!  எஜமான விசுவாசம்  சொல்லி மாளாது....  உடலைச் சாய்ச்சுக் காலைத்தாங்கி மகனோடு  கிராமத்துப் பாதையில் நடந்துபோகும்போது ஐயோன்னு இருந்துச்சு எனக்கு..........

இந்தக் குறும்படம், போட்டியில் முதலிடம் வந்து பதினைஞ்சாயிரம் ரூபாய் ரொக்கப்  பரிசைத் தட்டிக்கிட்டுப் போயிருக்கு என்பது  கூடுதல் தகவல்! அந்தக் குறுந்தகட்டைத் தேடி எடுக்க சட்னு தரையில் காலை மடிச்சுப்போட்டு அதே ஆஸனத்தில் (பத்மாஸனமோ?  இல்லை.....  இது ஸ்வஸ்திக் ஆஸனம் !!!)உக்காருவதைப் பாருங்க!   அதே மாதிரிதான் தரையில் இருந்து எழுந்துருக்கறதும்..... !!!

 நாந்தான் பக்கவாட்டில் உருண்டு புரண்டு,  ராமனை எல்லாம் துணைக்குக் கூப்பிட்டபடி எழுந்துருப்பேன் :-)

இன்றைக்கு இவ்ளோ மழையில் நனைஞ்சும்  எனக்கு ஒரு தோஷமும் பிடிக்கலை!  என்ன தவம், எந்த ஜென்மத்துலே செஞ்சேனோ.............
மாடிப்படிகள் இறங்கி ஏறக் கொஞ்சம் கஷ்டமோன்னு எனக்கொரு தோணல்.... ஹேய்.... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும்......... கேட்டோ!  
 நான்  ஆசைப் பட்டுக்  கேட்டதும் சட்னு ஊஞ்சலில் தாவி உக்கார்ந்து ஒரு போஸ்.....  அச்சனு கொள்ளாம்!  இதொக்க ஜூஜுபி...... யா :-)
எனக்கு  ஒரு அன்பளிப்பும் கிடைச்சது.......  ஈராக்.....
எல்லாம் அன்பே அன்புன்னு இருக்கும்போது........

கொஞ்சம் ஓரவஞ்சனை காட்டுனதுதான் எனக்குப் பிடிக்கலை. மகள் நான் குத்துக்கல்லு போல முன்னாடி நிக்கிறேன்..... மருமகனிடம் அப்படிப் பாசம் இழையோடிக்கிட்டு இருக்கு!!  இத்தைப் பார்றா..............

பேச உக்கார்ந்தோம்............. போச்சு....   நேரம் ஓடியே போச்சு!

சுவாரஸியமான சம்பவங்களின் சுரங்கம் ! பேச்சு வாக்கில் பல சமாச்சாரங்கள் வந்து விழுந்துக்கிட்டே இருக்கே!  பலதும் ஆஃப் த ரெக்கார்ட் என்பதால் நான் மனப்பெட்டகத்தில் போட்டுப் பூட்டி வச்சேன்.


மனசில்லா மனசோடு அங்கிருந்து கிளம்பி, வர்ற வழியில் ............. இன்னொரு இன்ப அதிர்ச்சி !!!!

தொடரும்............... :-)



பொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)

$
0
0
"உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்" இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே!  உள்ளூர்க்கணக்குக்கு அக்கவுண்ட் இல்லை.  காசாக் கண்ணுலே காட்டினால் நல்லது. ம்ம்ம்ம்ம்....   நாளைக்கு உங்க அறைக்கு அனுப்பிடறேன்னார் பப்ளிஷர்.


வெளிவந்த, வரப்போகும் புத்தகங்கள் பற்றிக் கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் புத்தகங்கள் வாங்குவது, கொஞ்சம் க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.  அறைக்குத் திரும்பினோம்.
ரங்கனை எப்படிக் கொண்டு போவது.........   ஒரு கஷ்டமும் இல்லை. பேசாம நான் கேபின் பேகில் வச்சுக்கறேன். சேஷன் மட்டும் சரியா அடங்கமாட்டான். எட்டிப் பார்த்தால்  பயமா இருக்குமோ?
சரி. இந்த வேலையை இன்றைக்கே முடிச்சாகணும். கிளம்புன்னு  தோழி வீட்டுக்குப் போனோம். அங்கேதான்  பாக்கிங் பிரச்சனையே இல்லை.  ஒரு இடம் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. ஊறுகாய் எல்லாம் அட்டகாசமா பேக் பண்ணிக் கொடுத்துடறாங்களாம்!  ஹங்...........  அப்படியா?  ஆனா  இவன்.....  ஊறாத காய் இல்லையோ :-)

முதல் கேள்வி 'சாப்டாச்சா' ?   சாப்பாடுன்னு உக்காரலை. ஆனால்  விஸிட்டுகளால் பசி அவ்வளவா இல்லைன்னு தள்ளிப்போட்டுருக்கு.
இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடமும், சம்புடமும் இந்த வீட்டில் மாறித்தான் போயிருக்கு!  இப்ப இந்தமாதிரி!!!  சூப்பர் :-)

கூடவே காஃபி. முடிச்சுக்கிட்டு  கையோடு கொண்டுபோயிருந்த  கேபின்பேகில் ரங்கனை  வச்சால்....   பாம்பு எட்டித்தான் பார்க்குது :-)

கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேக்கிங் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். நீள அகலத்துக்குத் தகுந்த அட்டைப்பொட்டி கிடைக்கலை. பெட்டி மட்டும் கிடைச்சுட்டால்....  நீட்டாப் பேக் பண்ணிடலாமாம்.  ஹாஹாஹாஹா...

பெட்டி வாங்கிக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் எங்கே கிடைக்கும்? ஆர்.கே. மட் ரோடில் ஒரு இடத்தில் கிடைக்குமாம். சரி கிளம்பு.   போற வழியில் அடையாறில் ஒரு ஸ்டேஷனரிக் கடை கண்ணில் பட்டதும் விசாரிச்சோம். பபிள் ராப் வச்சுருக்காங்களாம்.  அஞ்சு மீட்டர் கொடுங்க.



ராமகிருஷ்ணாமடம் சாலை.  போய்க்கிட்டே இருக்கோம். அடையாளம் வோடஃபோன் கடையாம்:-)  அதுக்குப்பக்கம் நின்னு  கண்ணால் மேய்ஞ்சப்ப,  ஒரு இடம் ஆப்ட்டது. மாடிக்குக்  கூட்டிப்போனாங்க. பெரிய சாமான்களின் ஒரிஜினல் பேக்குகளாக வந்த அட்டைப்பொட்டிகளின் அடுக்குகள்.  நீள அகலம் பார்த்து ஒரு வாஷிங் மெஷீன் அட்டைப்பொட்டி வாங்கிக்கிட்டு மறுபடியும் பேக்கிங் கடைக்குப்போனோம்.  பபுள்ராப்பைச் சுத்தோ சுத்துன்னு சுத்திப் பாம்பையும் பெருமாளையும் பொதிஞ்சு  பொட்டிக்குள் வச்சாச்சு. காலி இடம் நிறைய இருக்கு. அதுலே  துணிகளை அடைச்சுடலாமுன்னு திட்டம்.

மறுநாள் பொழுது விடியும்போதே ரெண்டுபேருக்கும் ஒரே எண்ணம்.  கோவிலுக்குப்போய் வந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்!  சீனிவாசனைக் கொஞ்சம் லேட்டாத்தான் வரச் சொல்லி இருக்கு. உள்ளூர் என்பதால் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் கார் எடுத்துருக்கோம். பனிரெண்டு மணி நேரமும் கார் ஓட்ட வேணாம். ஆனால் வாசலில் வண்டி ரெடியா இருந்தால்.... சட்னு எங்கியாவது போய் வர வசதியாத்தான் இருக்கு. இன்றைய நேரம் பத்து மணி.  அண்ணன் வீட்டுக்குப் போறோம். சமையல் செய்ய வேணாமுன்னு சொல்லி வச்சுட்டேன்:-)

காலை ஏழே காலுக்கு ரெடியாகி  வெங்கடநாராயணா ரோடுக்கு  ஆட்டோ. நாப்பது, அம்பது என்ற கணக்கில்  எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.  கெஸ்ட்ஹவுஸ் வாசலில் ஏறினால்  அதுக்கு தண்டனையாக கூட ஒரு பத்து கொடுக்கணுமுன்னு எழுதப்படாத ஒரு விதி ! பாண்டிபஸார், வெங்கடநாராயணா ரோடு,  சென்னை ஸில்க் போதீஸ் ஏரியா, பனகல் பார்க்னு  திநகர் உள்வட்டத்துக்கு  இதுதான் ரேட்டு. மீட்டர் போட்டா ஒரு இருவதுதான் வரும். ஆனா...............

ஆட்டோவை விட்டு இறங்கும்போதே.... யம்மா.... எப்பம்மா வந்தீங்கன்னு  ஒரு உற்சாகமான குரல்.  தலையைத் திருப்பிப் பார்த்தால்.... அட! நம்ம சாமுண்டி!
பார்த்தே சில வருசங்களாச்சு.  கோவிலில் துளசியைக் கடாசிக் கொண்டிருந்த காலத்தில்  முடிவு செஞ்சதுதான்.... பெரும் ஆளைப் பார்க்க வெறுங்கையால்தான் போகணுமுன்னு!  அப்புறம் கோவிலே போர்டு எழுதிப்போட்டு வச்சுருச்சு.... 'துளசியைக்  கொண்டுவர வேணாம்'........  சுத்தம்...........
அதனால் கோவில் வாசலில் இருக்கும் பூக்கடைகளை ஏறெடுத்துப் பார்ப்பதும் பொதுவாக இல்லை.  இப்பதான் கவனிக்கிறேன்.....  திருப்பதி தேவஸ்தான கோவிலின் ரெண்டு கேட்டுக்கும் நடுவில் இருந்த கடைகளை   கோவிலின் வலதுபக்கமா ஒதுக்கிட்டாங்கன்னு!
சாமுண்டி , முன்னைக்கு இப்போ  இன்னும் கம்பீரமா இருக்காங்க. வியாபாரம் நல்லா இருக்காம். பசங்க வளர்ந்துட்டாங்க. பள்ளிக்கூடம் போறாங்கன்னு ஒரு பெருமிதம்!  நல்லா இருக்கணும். முரளி, (சாமுண்டியின் கணவர்) அப்போ பார்த்த அதே மாதிரி. வயசாகுதுல்லே எல்லோருக்கும்.  கொஞ்சம் மெலிஞ்சாப்லெ.....
"சாமிக்குப் பூ  அஞ்சு மொழம் தரவா?"
 
" வேணாம்.  சாமிக்கு ஒன்னும் வேணாம். எனக்குதான் வேணும். வர்றப்ப வாங்கிக்கறேன்"
தரிசனம் முடிக்குமுன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பெருமாள் தன்னைத்தான் முதலில் கவனிச்சு அருள் செய்ய வேணுமுன்னு கூட்டமில்லாத அந்த நிமிசத்தில்கூட முன்னே நிற்கும் மக்களை இடிச்சுத் தள்ளி  தன் உடம்பை நெருக்கி முன்னால் கொண்டு போகும் சனத்தைப் பார்க்கும்போது....  பெருமாளுக்குக் கிட்டப் பார்வையோன்னு சம்ஸயம்  :-)
தரிசனம் முடிச்சு, சாமுண்டியிடம்  ரெண்டு முழம் மல்லிகை வாங்கினேன். ஒரு முழம்போல் வரும் ரோஜாச் சரத்தைக் கிள்ளி கூடவே  அன்பளிப்பாய்க் கொடுத்த நல்ல மனசு!

அறைக்கு வந்துட்டுக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும்  கொஞ்சநேரம் வலை மேய்ச்சல். போகும்போதும் வரும்போதும் பெருமாள் பொட்டி கண்ணுலே படுது.  செக்கின் பண்ணப்போகும் பெட்டி பூதாகாரமா இருக்கே!  அதுலே துணிகளை அடைச்சால்....  கனம் தாங்குமோ....   பொட்டியைச் சின்னது பண்ணால் ஆச்சு.  கைவசம் இருந்த  கத்தியும், பேக்கிங் டேப்பும் கைகொடுத்துச்சு:-)

 அண்ணன் வீட்டுக்குப்போய் அரட்டை ஆரம்பிச்சது.  காஃபி ஒன்னு ஆச்சு!  கிளம்பி எக்ஸ்ப்ரெஸ் மாலுக்கு வந்தோம்.   போன பயணங்களில் பார்த்த  ஆன்ட்டிக் கடை  காணாமப் போயிருந்துச்சு. தேடும்போது  கண்ணில்பட்ட    ஒரு  கலைப்பொருட்கள் கடையில்    கோபால் ஒரு ராதாக்ருஷ்ணா வாங்கினார்.  நான் ஆசைப்பட்ட நான்முகத்துக்குத் தடா போட்டார் :-( கனம் கூடுதலாம்..........


 க்ரீம்செண்டருக்குப்போய் பகல் சாப்பாடு. ப்ரியாணி ஸ்பெஷலாம்.  பனீர் டிக்கா,  பாப்டிசாட், ஃப்ரைய்ட்  ஐஸ்க்ரீம்.....  கூடவே ச்சனா பட்டூரா!


கிளம்பி அறைக்கு வந்து மிச்சம் மீதி இருந்த அரட்டையைத் தொடரும்போது,  வரவேற்பில் இருந்து ஒரு கவர். ஆஹா......    வந்தே வந்துருச்சு சந்தியாவில் இருந்து :-)
ட்ராஃபிக் ஆரம்பிக்குமுன்  வீட்டுக்குக் கிளம்பிப்போனால் நல்லதுன்னு அண்ணன் சொன்னார். அப்படியே ஆகட்டும்.

 தொடரும்..........  :-)




குண்டு வச்சுருக்கோமுன்னு........ குழப்பம் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 113)

$
0
0
'காலையில் வர்றோம். லஞ்ச் உங்களோடு. சாப்பிட்டு முடிச்சதும்  கிளம்பிப் போயிருவோம். அப்படித்தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கு'ன்னார் பெங்களூர் மைத்துனர்!  இன்றைய ஸ்பெஷலாக ஞாயிறு. கூடவே காதலர் தினமாம். கல்யாணமானால் காதலிக்கக்கூடாதா என்ன?  ஜாலியா அவுட்டிங் கிளம்பி வாங்கன்னோம்.
நாங்கள் சென்னை மச்சினர் வீட்டுக்குப்போய்ச் சேரும்போது, காலையில் வந்திறங்கிய  பெண்களூரு மச்சினர் ப்ரேக்ஃபாஸ்ட்டில் பிஸி. நமக்கு ஏற்கெனவே லோட்டஸில் ஆச்சு  என்பதால்  பிள்ளைகளுடன் பேசிக்கிட்டு இருந்தோம்.  அப்புறம் அண்ணன் தம்பிகள் பேசிக்கட்டுமுன்னு விட்டுட்டு லேடீஸ் எல்லோரும் கிளம்பி  கடை விஸிட்.  வேளச்சேரியில்  தண்டீஸ்வரம் நகர் கடைகள்.  பெரிய கோபுரத்துடன் ஒரு கோவில் இருக்கு அங்கே.  ஒருநாள் போகணும்.....

 அவுங்களுக்கு இஷ்டப்பட்ட புடவை, சுடிதார் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு,  வீட்டுக்கு வந்தால்  பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு  பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு. அவர்கள் விருப்பமென்று சொல்லி விட்டதால்  புஹாரியைத் தெரிவு செஞ்சாங்க.  சாப்பாடு அவரவர் விருப்பம். எனக்குப் புதினா பரோட்டாவும் தயிரும்.

வீட்டுவாசலில் ஸ்போர்ட்ஸ்! 
அஞ்சு மணிக்கு  ரயில் என்பதால் நாலரைக்கு மச்சினர் குடும்பத்தை சென்ட்ரலில் விட்டுட்டுத் திரும்பி வரும் வழியில் எதாவது வாங்கணுமுன்னா சொல்லும்மா. ரூமுக்குப்போய் பைனல் பேக்கிங் செஞ்சுரணும் என்றார் நம்மவர்.  'ஒன்னும் வேண்டாம். நீங்க கேட்டதால சொல்றேன். நேத்துப் பார்த்த நான்முகம் வாங்கலாமுன்னா  .............. '   சரின்னுட்டார். அதே எக்ஸ்பிரஸ் அவென்யூ. அதே கடை.  நான்முகம் தலையை வாங்கியாச்.


அன்றைக்கு மாலை ராஜ் டிவி செய்தியாளர்  நம்மைச் சந்திக்க வர்றார் என்பதால் வேறெங்கும் போகலை.  சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்துட்டார்! தமிழ்ச் செய்திகள் வாசிக்கிறாராம். தமிழ் ஆர்வம் உள்ளவர் என்பதால் உச்சரிப்பு எல்லாம் ரொம்பச் சரியாக இருக்கும். இது புது உத்யோகம். ஒருநாள் செய்தி வரும் நேரம் பார்க்கணும்.  நியூஸியில்  பார்க்கச் சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை. அப்படியே  கிடைச்சாலும் நேரங்கெட்ட நேரத்தில் முழிச்சுருந்து   பார்த்தால் உண்டு..... நம்மவர் ஒருநாள் பார்த்துட்டு, ரொம்ப நல்லா வாசிக்கிறார்.  கோட்டும் ஸூட்டுமா  மிடுக்கான உருவம் என்றார்! 
 
 கொஞ்ச நேரம் பழங்கதைகளில்  முழுகினோம்.   டிவிக்காரர் எப்படி நமக்குப் பரிச்சயமானார்?   ஹைய்யோ.....   இவர்  நம்ம பதிவுலக நண்பர்தான். நாங்கெல்லாம் ஜிரான்னு  சொல்லும்  நம்மராகவன் கோபாலசாமி!   மாணிக்க மாதுளை முத்துகள் என்ற வலைப்பக்கத்துக்கு உரிமையாளர்!
டீச்சரைப் பார்க்க  வரும்போது வெறுங்கையா வரலாமோ?   தானே எழுதுன   நாலுவரி நோட்டு  கொண்டுவந்துருந்தார்.  நூத்துக்கு நூறுன்னு மார்க் போட்டேன்னு தனியாச் சொல்லணுமா?  :-)
பள்ளிக்கூடத்துக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டு வர்ற மாதிரி,     கூடவே   பேக்கரி ஐட்டம் வாங்கி வந்துருந்தார். டீச்சர் வேலை நல்லாதான் இருக்கு:-)

ராச்சாப்பாடுக்கு  ரொட்டியும் பாலும் இன்றைக்கு!
பேக்கிங் எல்லாம் முடிச்சுட்டுத்தான் தூங்கினோம்.  ஆச்சு   நாளைக்கு  இந்தியாவுக்கு டாடா சொல்ல வேண்டியநாள்.
காலையில் வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்ட். இந்தப் பயணத்தின் கட்டக் கடைசி. முதலில்  பாண்டிபஸாரில்  நம்ம அனுமனுக்காக  ஒரு மாலை வாங்கிக்கிட்டுப்போய்      அடையார் அனந்தபதுமநாபனை தரிசனம் செஞ்சுக்கிட்டு, போயிட்டு வரேன் பைபைன்னு  சொல்லியாச்.
கோவில் கோலாகலமா இருக்கு. ப்ரம்மோத்ஸவம் ஆரம்பிச்சு இன்றைக்கு நாலாவது நாள்.  புள்ளையார் கல்வச்ச கவசத்தில் ஜொலிக்கிறார். பெருமாளோ....   கேக்கவெ வேணாம். தகதக தகதக.....  உற்சவர் காலையும் மாலையும் வீதிவலம் போவதால் நாளுக்கு ரெண்டு அலங்காரத்தில்  மின்னறார்.


ஒரு தோழியின் பெற்றோர்  அந்த ஏரியாவில் இருக்காங்க. அங்கேயும் போய் ஒரு பத்து நிமிசம் நலம் விசாரிப்பு.  மயிலை சரவணபவனில் பகல் சாப்பாடு.  அறைக்குத் திரும்பியதும், பெரிய வண்டி கொண்டு வரேன்னு  சொல்லி, சீனிவாசன் போனார்.

அவர் திரும்பியதும்,  மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு,  லோட்டஸ் பில்லை செட்டில் செஞ்சுச்சுட்டு, அண்ணன் வீட்டுக்குப் போயிட்டோம்.  விட்டுப்போன பாக்கிப் பேச்சுடன்  காஃபி டிஃபன் ஆச்சு.


 ஒன்பது மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்.  வீட்டில் இருந்து கிளம்புமுன் ராச்சாப்பாட்டுக்கு ஆப்பம்! துளசிக்கான ஸ்பெஷல்.  அண்ணி மனம் நோகக்கூடாதேன்னு நல்லா வெளுத்துக் கட்டிட்டு ஏர்ப்போர்ட் வந்து செக்கின் ஆச்சு.  ஏர் இண்டியா லவுஞ்சுக்கு  போனோம். அது ஒரு மூலையில் கிடக்கு.


அங்கே ஒன்னும்  சரி இல்லைன்னு கிளம்பி வர்றோம்.  பயணிகளுக்கு எதோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதில் என் மாமனார் பெயர் அடிபடுது.  உங்க அப்பா பெயர் ரொம்ப பிரபலமோன்னு  இவரைக் கிண்டல் செஞ்சுக்கிட்டே  போர்டிங் கேட் வந்தால்....    போர்டிங் பாஸைப் பார்த்ததும்  இவரை கப் னு புடிச்சுக்கிட்டாங்க.  அவ்ளோ நேரம்  அனௌன்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தது  நம்மவருக்காகத்தான்! அட ராமா......

'நீ  விமானத்துக்குள்ளே  போயிரும்மா. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்'னு  சொல்லிட்டு, ரெண்டு செக்யூரிட்டிகளோடு  இவர் போயிட்டார்.  எதாவது  பிரச்சனைன்னா......  உள்ளே போயிட்டால் என்னால் திரும்பிவர முடியாமப்போச்சுன்னா என்ன செய்யறதுன்னு நான் அங்கேயே இருந்தேன்.
அன்றைக்கு அந்த விமானத்துக்குள்ளே போன  மொத்தப் பயணிகளையும் பார்த்துட்டேன். என்னக் கடந்துதான் ஒவ்வொருத்தராப் போய்க்கிட்டு இருந்தாங்க.  நம்மவரைக் காணோம்.  ரொம்ப நேரத்துக்குப்பிறகு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தார்.  காத்துக்கிட்டு இருந்த விமானப் பணியாளர்கள் எங்களைச் சட்னு  உள்ளே இழுத்துக்கிட்டாங்க.  அடுத்த அஞ்சாவது நிமிட் விமானம் கிளம்பத் தயாராகிருச்சு.

எல்லாம் நான்முகம் பண்ண கலாட்டாதான் :-) இவர் நல்ல பபுள் ராப்பரில் சுத்தி செக்கின் பெட்டிக்குள் வச்சுருந்தார்.  விமானத்தில் பொட்டிகளை ஏற்றுமுன், ஸ்கேன் செஞ்சப்ப,  மெடல் குண்டு  இருக்குன்னு தெரிஞ்சுருக்கு. அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான்.... இப்படி.  மேல்தளத்துலே பெட்டிகளை செக்கின் செஞ்சு உள்ளெ அனுப்பும்போதே ஸ்கேன் செய்யும் வசதி இல்லையாம்.  விமானத்துக்குள் ஏத்துமுன் ஸ்கேன் செய்யறாங்களாம்.   பாதுகாப்பு சரியா இருக்குன்ற திருப்தி நமக்கு இப்போ :-)
பொட்டியைத் திறந்து, நான்முகத்தைக் காமிச்சதும்  எல்லோரும் சிரிச்சாங்களாமே:-)

'கீழே இறங்கி அங்கே திரும்பி, இங்கே திரும்பி, மாடிப்படிகளில் ஏறின்னு ரொம்பதூரம், அந்த  செக்யூரிட்டி ஸ்டாஃப் கூட  நடக்கவேண்டியதாப் போச்சு. எனக்குதான் கஷ்டமா இருந்ததே தவிர  அவுங்க  ரொம்ப வேகமா நடக்கறாங்க'ன்னு  சொன்னார்.  ஆஸ்பத்ரி போல  இது ஒரு தனி உலகம்,  இல்லை!  வேலை செய்யும் மக்கள் நடையோ நடைன்னு  உள்ளேயே பத்து கிமீ நடந்துருவாங்க போல!

பலபலன்னு பொழுது விடியும் நேரம் சிங்கையில் வந்து இறங்கியாச்சு.


தொடரும்.............  :-)

சிங்கை சந்திப்புகள் :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 114)

$
0
0
ஆறடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே  வந்துட்டோம்.  மற்ற பெட்டிகள் எல்லாம் நேரடியா நியூஸிக்கே போகும்படி புக் பண்ணியாச்சு என்பதால்  கையில் இருக்கும் அவரவர் கேபின் பேகுடன் பரபரன்னு குடிநுழைவுக்குப்போய்  கடவுச்சீட்டில்  ஸ்டாம்ப் அடிச்சவுடன்  நேரா ரயிலைப் பிடிக்கப் போனோம். ரெண்டு இடத்தில் வண்டி மாறணும் என்றாலும்  காலை நேரத்தில் அவ்வளவாக் கூட்டம் இருக்காது. நிதானமாகப் போனால் ஆச்சு. ஃபேரர்பார்க் ஸ்டேஷனில் இறங்கி  பார்க் ராயல் ஹொட்டெலுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

இங்கே என்ன ஒரு அநியாயமுன்னா..........  மதியம் மூணு மணிக்குத்தான் செக்கின்.  காலை 6 முதல் பகல் மூணுவரை ஒன்பது மணி நேரம்   அறை எடுத்துருந்தும்கூட தேவுடு காக்கணும் :-(

 முந்தியெல்லாம் டே ரூம்னு ஒரு புக்கிங்  இருந்துச்சு. காலையில் வந்து அறைக்குப் போனோமா.... சட்னு குளிச்சுட்டுச் சீனுவைப்போய் தரிசனம் பண்ணிக்கிட்டு, அப்படியே பொடி நடையில்  நெரிசலே இல்லாத செராங்கூன் சாலையில்  காலாற நடந்து கோமளவிலாஸ் போனோமான்னு  இருக்கும்.  கடைகள் எல்லாம் பத்துமணிக்குத்தான் திறப்பாங்க என்றதால்  நடைபாதை எல்லாம் காலியோ காலிதான். ஹொட்டேலுக்குப் பக்கத்துலேயே கோமளவிலாஸ் ஃபாஸ்ட் ஃபுட் இருந்தாலும், பழைய  இடம்தான் எனக்குப் பிடிக்கும்.  அருமையான காஃபியுடன் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு  இட்லி வடையை உள்ளே தள்ளிட்டு, நிதானமா நியூபார்க் (அப்ப அதுதான் பெயர்) ஹொட்டேலுக்கு  நடந்து வந்து அறைக்குப்போய்  நிம்மதியா ஒரு தூக்கம். இதுக்கே எப்படியும் காலை  ஒன்பதரை,  பத்து மணி ஆகிரும். 

 சென்னையில் முதல்நாள்  ராத்திரி பனிரெண்டு மணிக்குப்பக்கம் விமானம் ஏறணும். விமானத்திலும் தூங்க முடியாது. சிங்கை ஃப்ளைட்டு சத்தத்துக்குப் பேர் போனது.  அன்றைக்கு  இரவு ஒன்பதுக்கு நியூஸி ஃப்ளைட் எடுப்பதால்   ரெண்டு ராத்திரிகள் தூக்கமில்லாமல்  போயிரும் என்றது கஷ்டம்.
சுமார் நாலு இல்லை அஞ்சு மணி நேரம் தூங்கி எழுந்தால்  கொஞ்சம்  உறக்கச்சடைவு போய் உற்சாகம் திரும்பிரும்.  மூணு மணிக்குக் கிளம்பி தோழிகள் யாரையாவது  சந்திக்கலாம். பல சமயங்களில்  அவுங்களே அறைக்கு வந்துருவாங்க.  மாலை ஆறுவரை பேசிச்சிரிச்சு,  கீழே போய் எதாவது சாப்பிட்டுன்னு  பொழுதே ஓடிப்போகும். அப்புறம் டாக்ஸி எடுத்தால் நேரே சாங்கி.  அப்படியே போய்  எதாவது ட்யூட்டிஃப்ரீ வாங்கணுமுன்னால் வாங்கிக்கிட்டு நேரா நியூஸி ப்ளேன்தான்.

இப்ப அந்த டே ரூம் வசதியையே எடுத்துட்டாங்க........   காலை நேரத்தில் அறை வேணுமுன்னால் முதல்நாளுக்கும் சேர்த்து ரெண்டுநாளா புக் பண்ணினால்தான் உண்டு.  அறைவாடகை ஒரே கொள்ளை என்பதால்.......  ரெண்டுநாளுக்கு  எடுக்க மனசு வர்றதில்லை.

 வரவேற்பில்  இப்போதைய  வழக்கம்போல் மூணு மணிக்குத்தான் செக்கின். நீச்சல் குளம் இருக்கும் தளத்தில் நீங்க போய் குளிச்சுக்கலாம்.  பெட்டிகளை எல்லாம் நாங்க  பார்த்துக்குவோம்.  நீங்க எங்கியாவது  வெளியே போயிட்டு மூணு மணிக்கு வந்தால் உங்கள் அறை தயாரா இருக்குமுன்னு இனிப்பாச் சொன்னாங்க.
நாங்க முணுமுணுத்துக்கிட்டே  நீச்சல்குளம் இருக்கும் தளத்துக்குப்போய்  குளிச்சுட்டு உடை மாத்திக்கிட்டு, எங்கள் கேபின் பைகளை கீழே ஒப்படைச்சுட்டு  நம்ம சீனுவைப் பார்க்கப்போனோம். காலை மணி  ஒன்பதரை. காலை  பூஜைகள் முடிஞ்ச சமயம். பெருமாள் ரிலாக்ஸ்டா இருந்தார். நமக்குத் தெரிஞ்ச ஸ்ரீனிவாச பட்டர் ஸ்வாமிகளும்  அங்கே உக்கார்ந்து  என்னமோ வாசிச்சுட்டுக்கிட்டு இருந்தார்.   தரிசனம் பண்ணி  வச்சுக் குசல விசாரிப்புகள் முடிஞ்சதும்  வழக்கமான தூண் அருகில் உக்கார்ந்து கையோடு கொண்டுபோயிருக்கும்  ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம் புத்தகம் எடுத்து(பெரிய எழுத்து)வாசிச்சோம்.

பிறகு கோவிலை வலம்வந்துக்கிட்டே க்ளிக்கோ க்ளிக்ஸ்தான்:-)  எத்தனைமுறை படங்கள் எடுத்தாலும் அலுக்கறதே இல்லை. இங்கே மூலவரைக்கூடப் படம் எடுத்துக்கலாம். முதல்முதலில் இங்கே வந்தப்ப.....  (அது ஆச்சு  முப்பத்திரெண்டு வருசம்)  மூலவரைப் படம் எடுக்க ரொம்பவே தயக்கமா இருந்துச்சு.  மற்றவர்கள் படம் எடுப்பதை 'ஆ'ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.  அப்போ ஃப்ல்ம்ரோல் போடும் கெமெராதான்.  ப்ளாஷ் போட்டுக்காம எடுத்ததெல்லாம் இருட்டடிப்பு பண்ணிட்டார் பெருமாள் :-)  இப்போதான் இந்த டிஜிட்டல் வந்தபின் .....  நம்ம  காட்டுலே மட்டுமில்லை நாட்டுலேயும் மழையோ மழை!



பதினொரு மணி வெயில் ரொம்பவே உக்ரம்:-(  கோமளவிலாஸ் வரை நடந்துபோக சோம்பல். கோவிலுக்கு எதிர்வாடையில்  திறந்துருக்கும் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நுழைஞ்சாச்சு. முந்தி இதுக்குப்பெயர் நளன்.  முகமில்லாத பெண்களின் ஓவியங்கள் வச்சுருப்பாங்க.  இப்ப வியாபாரம் கை மாறி இருக்கு. வேற எதோ பெயர்  பார்த்த நினைவு.  உள்ளே மொத்த கடையும் பெண்களால் நடத்தப்படுதுன்னு புரிஞ்சது.  ஆளுக்கு ரெண்டு இட்லி, ஒரே ஒரு காஃபின்னு  முடிச்சுக்கிட்டோம்.  சிங்கை வந்துட்டால் எனக்கு இளநீரை விட மனசே ஆகாது.   சாலை சந்திப்பு முனையில் இருக்கும் கடையில் இளநீர். அருமை. பெரூசா வேற இருக்கு!  என் விருப்பத்திற்கேற்றபடி  கொஞ்சம் நிறையவே தேங்காயும்!  குடிச்சு முடிச்சுட்டு      ஹொட்டேலுக்கு வந்து,  வரவேற்பில்  'கொஞ்சம் எங்களைக் கவனிம்மா'ன்னு அழுதுட்டு நீச்சல்குளம் இருக்கும் தளம் போனோம். அதுவரை போக  நமக்கு  ஆக்ஸெஸ் கார்ட் சாவி கொடுத்துருந்தாங்க:-)
அங்கே போனால்  கூட்டமான கூட்டம். எல்லாம் இந்தியர்கள்தான்.  பிள்ளைக்குட்டிகளுடன் பெரிய பெரிய  குழுவா வந்துருக்காங்க. ஷாப்பிங்தான்  முக்கியமாம். வேணாமுன்னாலும் பேச்சு காதில் விழுதே!  தில்லி, மும்பை, ஹைதராபாத்னு  ஒரே கலகல.  இதுலே  தில்லிக்குழுவில் ஒரு தேன் நிலவு  ஜோடி.  கையில் இருக்கும்  பளிச் மெஹெந்தியும்  முழங்கை வரை இருக்கும் வளைகளும்,  நொடிக்கொருமுறை   வெட்கம் கலந்த புன்னகையுமா  இருக்கும்  முகங்களும்  ஜோரு!

மும்பைக்குழு ஏற்கெனவே வந்து பழக்கப்பட்டவங்க போல.  ஏகப்பட்ட பிள்ளைகள். ஏராளமான  டப்பர் வேர்  டப்பிகளில் விதவிதமான சாப்பாடு கொண்டு வந்துருக்காங்க.  முழு லக்கேஜும் சாப்பாடுதான். பொட்டி காலியானதும்.....  இங்கே ஷாப்பிங் பண்ணி, பொட்டிகளை நிரப்பிக்கிட்டுப் போவாங்க போல!

நெருங்கிய தோழிக்கு ஏற்கெனவே தகவல் அனுப்பி இருந்ததால் அவுங்க இன்றைக்கு வாரவிடுமுறையை மாற்றி வச்சுருந்தாங்க.  இங்கே வந்திறங்கியதும்  செல்லில் கூப்பிட்டு,  வந்தாச்சு. அறைக்குப் போனதும் தகவல் சொல்றேன்னு  சொல்லி வச்சதுதான். இப்ப மூணு மணி வரை அவுங்களை சந்திக்க  முடியாது.  அறை  ரெடியானதும்  சொல்றேன்னு  வரவேற்பில்  சொல்லி இருக்காங்களே....

ரெண்டுங்கெட்டானாப் போச்சேன்னு  நீச்சல் குளத்தாண்டை கூடாரம் அடிச்சு, உள்ளே போட்டுருக்கும்  லவுஞ்சரில் படுத்துத் தூங்க முயற்சி செய்யறேன்.  மேலே ஓடும் மூங்கில் விசிறிகூட சூடான காத்துதான் வீசுது.  இவர் ஏற்கெனவே தூங்கிட்டார். கொஞ்ச நேரத்தில் எப்படியோ தூங்கிப்போயிட்டேன் போல!
நம்மவர் எழுப்பி, வா அறைக்குப் போகலாமுன்னார்.  பூர்வஜன்ம புண்ணியத்தால்  ஒன்னே முக்காலுக்கு அறை கிடைச்சுருச்சு.  தோழிக்கு சேதி அனுப்பிட்டு அறைக்குப்போய்  செட்டில் ஆனோம்.  அறை ஜன்னலில் எட்டிப்பார்த்தால் அதே நீச்சல் குளம் வியூதான் நமக்கு:-)
ஒருமணி நேரத்தில் தோழி சிங்கை  எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்துட்டாங்க. வீட்டுக்கு   ஏன் சாப்பிட வரலைன்னு  கோவிச்சுக்கிட்டாங்க.   'அறை கிடைக்கும்வரை  வேறெங்கும் போக முடியாதே....   அக்கம்பக்கத்துலே இருந்தாத்தானே  நல்லது'ன்னு சமாளிச்சார் நம்மவர் :-) பேசாம நேரா நம்ம வீட்டுக்கு வந்து குளிச்சு சாப்ட்டுத் தூங்கிட்டு, மூணு மணிக்கு இங்கே வந்துருக்கலாமேன்னு சொன்னது ரொம்பச் சரி.  ஆனால்... சீனு விடலையே :-)

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு,  எதாவது சாப்பிடலாமேன்னு கீழே இறங்கிப்போனோம்.  நேரங்கெட்ட நேரமா இருக்கு......   தோழி ஏற்கெனவே சாப்புட்டாங்களாம்.  சையத் ஆல்வி ரோடில் எதோ ஒரு கடை.  ராஜ் ரெஸ்டாரண்ட்ன்னு நினைவு.  எனக்கொரு தோசை, நம்மவருக்கு ஒரு சப்பாத்தி.
செராங்கூன்  சாலை சந்திப்புவரை  பேசிக்கிட்டே நடந்து வந்து இளநீர் ஆச்சு.  அறைக்குத் திரும்பி இன்னும் கொஞ்சநேரம் பழங்கதைகளையும் புதுக்கதைகளையும் முடிஞ்சவரை பேசிட்டு,  ரெஸ்ட் எடுங்கன்னுட்டு,   ஜெயந்தி கிளம்பிட்டாங்க.
அடுத்து இன்னொரு குட்டித்தூக்கம் ஆனதும்....   பதிவுலக நண்பர், உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சவர் வீட்டுக்குக் கிளம்பினோம்.  புங்கோல் ஸ்டேஷன்  ( பொங்கோல்னு தமிழில் எழுதி இருக்கு!) போகணும்.  அங்கே காத்திருந்தார் நம்ம கோவி கண்ணன்.  ரொம்பக் கிட்டக்க வீடு!  ஆத்து வாசலில் ஸ்டேஷன் :-)


புது வீட்டுக்கு மாறி இருக்காங்க.  ஹாலில் இருந்து பார்க்கும்போது அட்டகாசமான மில்லியன் டாலர் வ்யூ!   குடும்பமே நமக்கு நட்பு என்பதால் மகனோடும் மகளோடும்  பேசிச் சிரிச்சுன்னு  நேரம் ஓடுனதே தெரியலை!

இடையிடையே பேச்சில்  கலந்துக்கிட்ட கண்ணனின் மனைவி, சமையலில் பிஸி.  நமக்கு  அங்கேயே ராச்சாப்பாடு!    அட்டகாசமா விருந்தே வச்சுட்டாங்கப்பா!!!

சிவச்செங்கதிர் வளர்ந்துட்டார். ஆறுமாசக் குழந்தையா இருந்தப்ப  இருந்து  பார்த்துக்கிட்டு இருக்கோம்:-) அப்பா அம்மா கூடவே ரயிலடி வரை வந்து  டாடா, பை பை சொன்னது அழகு!



சிங்கையில் நமக்கு ஏராளமான நண்பர்கள் இருக்காங்க என்றாலும், அவுங்களோட   வேலைநாளில்  நாம் இங்கே  வந்தால்  சந்திக்க முடியாமல்தான் போயிருது.   இப்படிப் பயணங்களில் பல சமயங்களில் ஒரு சிலரைத்தான் சந்திக்கிறோம் என்றாலும் அவ்வளவாவது பார்த்தோமேன்னுதான் இருக்கவேண்டி இருக்கு.   வீக் எண்ட் என்றால் அதிலும் ஞாயிறுன்னா   டபுள் ஓக்கே!  போனமுறை அதிக நண்பர்களுடன் சந்திப்பு  நடந்தே நாலு வருசமாச்சு. ஹூம்.......

அறைக்குத் திரும்பி  தூக்கமோ தூக்கம்.  நீங்களும் ஓய்வெடுங்க. நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஊர் சுத்தலாம் :-)

தொடரும்....  :-)



நம்ம குபேரன், இவுங்களுக்கு Caishen !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 115)

$
0
0
பயணங்களில் ஒரு சௌகரியம் என்னன்னா.... காலையில் கண்ணைப்பிட்டுக்கும்போதே.....  மூளையில்  இன்றைக்கு என்ன சமைக்கணும் என்ற கவலை வர்றதே இல்லை.  எழுந்தோமா, குளிச்சு ரெடி ஆனோமாதான்.  எப்பப் பார்த்தாலும் போன இடத்துக்கே ஏன் திரும்பத்திரும்பப்  போறோமுன்னு கூட நினைச்சுக்குவேன்.  அதுக்கு பதிலும் கூடவே வந்துரும்......   இனி எப்போ இதெல்லாம் வாய்க்கப்போகுதோ..... இப்பக் கிடைக்கும்போது  வுட்டுறக்கூடாது.  பார்த்துக்கோ.....  அதுவும் கோயில்ன்னா......   ஊஹூம்... இங்கே சான்ஸே இல்லை.....
சென்னைன்னாக் கூட  கார் வேணும், இல்லே ஆட்டோ பிடிக்கணும் .... இந்தக் கவலை  ஒன்னுமில்லாமல்  காலாற நடந்தே கோவிலுக்குப் போகலாம். நடைபாதை என்பது நடக்க மட்டுமே!  கண்டமாதிரி  கூட்டமா  வண்டிகள் மோதித் தள்ளறமாதிரி  வராது.  பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது  தைரியமாக் கடந்து போகலாம். சாலைவிதிகளை எல்லோரும் கடைப்பிடிப்பதால் பிரச்சனையே இல்லை.
எதானாலும்  முதலில் சீனுன்னு போனப்பக் கோவிலில் கூட்டமே இல்லை. புன்முறுவலுடன் சீனூஸ் இருவரும்:-) தரிசனம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்தல், வலம் வருதல், கூடவே க்ளிக்ஸ்ன்னு எல்லாமே  ஆச்சு. அலுக்கவே அலுக்காத ருட்டீன்:-)

சாயந்திரம் கிளம்பும்போது  வந்து சொல்லிக்க முடியுமான்னு தெரியலை. அதனால் இப்பவே டாடா, பைபை எல்லாம்  பெருமாள் அண்ட் கோ வுக்குச்   சொல்லிக்கிட்டு வெளியே வந்து  சாலையைக்கடக்கும்போது நேத்து காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட இடம் நம்ம ராஜ்யலக்ஷ்மியோடது....ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மன் ரெஸ்ட்டாரண்டுன்னு தெரிஞ்சது.  இன்றைக்கு லீவோ என்னவோ....  ஒருவேளை எட்டுமணிக்குத் திறக்கறாங்க போல.....  ஆனால் ஒன்னு ராஜ்யலக்ஷ்மின்ற பெயரைப் பார்த்ததும் 'நம்ம ரஜ்ஜு எப்படி இருக்கோ.. குழந்தை'ன்னு  மனசுக்குள் பரிதாபம் வரத்தான் செஞ்சது.  ரஜ்ஜுவின் முழுப்பெயர் தெரியுமோ? ராஜலக்ஷ்மி !
மூடி இருக்கும் கடைகளின் முன் காலியா இருக்கு நடைபாதையில் கால்வீசி நடந்து போய்  செராங்கூன் சாலையின்  ஆரம்பத்துலே இருக்கும் கோமளவிலாஸ் போய்ச் சேர்ந்தோம். எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மனுக்கு  இந்தாண்டை இருந்தே ஒரு கும்பிடு. "அம்மா....  எஞ்சினுக்குப் பெட்ரோல் போட்டுட்டு வரேன்...."
வடைகள் வாவான்னு கூப்பிட்டதே. அதே ரெண்டு இட்லி. ஆனா மசால்வடை, மெதுவடைன்னு ரெண்டு வாங்கி  நமக்குள் பாகம் பிரிச்சுக்கிட்டோம். விலைவாசி இங்கேயும் ஏறிக்கிட்டே போகுது. அதே மெனுதானே.....  வேற வேலை இல்லை போ.... பக்கத்துலே புது விலைகளை மட்டும் புதுப்பிச்சு இருக்காங்க. காஃபி ஆனதும்... வெயில் ஏறுமுன் வேணுகோபாலனைக் கண்டுக்கலாமான்னு  தோணல்.  அப்படியே  ஸிம்லிம்  ஸ்கொயர் வழியா நீண்ட நடை போகலாமுன்னு  மெயின் ரோடு வழியாப் போகாம கேம்பெல் லேன் வழியாப்  போறோம். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு!  கண்ணால் திங்கணுமே.....
தெருமுனையில் இருக்கும் காய்கறிக் கடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, காய்கறிகளைக் கண்ணால் தின்னு, நமக்கு இதெல்லாம் கிடைக்கலை பாருன்னு ....  கொஞ்சம் பொறாமைப் பட்டுட்டு, போகட்டும். இவுங்களாவது நல்லா இருக்கட்டுமுன்னு  பெருமாளை வேண்டிக்கிட்டே  நடந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
ஹைய்யோ.... முருங்கைக்கீரை! இது நான்.  ஆஹா.... பாவக்காய் .... இது நம்மவர் :-)
 பசுமாடும் கன்னுகளுமா நமக்காகக் காத்திருந்தாங்க:-) இப்படிப் பார்த்தால்தான் உண்டு.... தெருவில் குறுக்கே நெடுக்கே நடந்து போக இதுகளுக்கு ரைட் இல்லை ....
அடுத்துள்ள புஷ்பக்கடையில் எனக்கு ஒரு  டாலருக்கு மல்லிப்பூ:-)

சுத்தமா இருக்கும் ஊரில் நடையின் அலுப்பு தெரியறதில்லை. நியூஸியும் சுத்தம்தான் ஆனால்.... எப்பப்பார்த்தாலும் ஒரு குளிர்....  ஸ்வெட்டரோ, ஜாக்கெட்டோ இல்லாம  நடக்கக்கிடைக்கும் நாள் அபூர்வம். அதுவுமில்லாமல்.... வீட்டுக்கடமைகள் காலையில் நடக்க விடுதா என்ன? ஒன்னு மாத்தி ஒன்னு.....
மெயின்ரோடுலே போய்ச் சேர்ந்து...     ஆல்பர்ட் கோர்ட்  வழியா ஷார்ட் கட். .
வெளியே  ட்ரிஷா அங்கிள் தனிப்பகுதி. டூரிஸ்ட்  அட்ராக்‌ஷன்!


சீனர்களின்  காசுக்கடவுள் Caishen  சிலையில்  மேடையைச் சுத்தி  பனிரெண்டு சீன ராசிகளுக்கான பலன்கள் எழுதிவச்சுருக்காங்க. இப்பதானே அவுங்க புத்தாண்டு வந்துபோச்சு ஃபிப்ரவரி 8 (2016 இல்) நம்ம தை அமாவாசைதான் இவுங்களுக்கு புது வருசம், தெரியுமோ!

நம்ம குபேரன்  சீனர்களுக்கு Caishen !  கேசவனைச் சுருக்கிக் கூப்புடறமாதிரி இருக்கே!

ஒவ்வொரு   பனிரெண்டு வருசத்து  இடைவெளியில் பிறந்த  எல்லோருக்குமே ஒரே பலன்தான். குரங்கில் பிறந்தவங்க இப்படி இருப்பாங்களாம். எப்பவும் இப்படி என்றதால்  அவ்வளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்:-)

ஆச்சு...  வரப்போகும் புது வருச விழா அவுங்களுக்கு ஜனவரி 28 , 2017 !  இன்னும்   மூணு  வாரம்தான் இருக்கு......குரங்கிலிருந்து சேவலுக்குப் போறாங்க :-)

அடக்கடவுளே....  நம்ம பதிவு  இந்தப் பயணத்துக்கானது  வருசம் பூராவும் இழுத்துக்கிட்டுப் போயிருக்கே.... இதுக்கிடையில் இன்னொரு பயணமும் போயிட்டு வந்துருக்கோம். எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறேன்?  நினைச்சாலே மலைப்பா இருக்கே!

சீன அம்மன் கோவிலும் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலும்  அடுத்தடுத்து இருக்கு. இங்கேயும் அங்கேயுமாப் போய்க் கும்பிட்டுக்கிட்டோம். கோவில்களுக்கு வெளியே நிறைய ஊதுபத்திகளும் வச்சுருக்காங்க. நாமே எடுத்துப் பக்கத்தில் இருக்கும் விளக்கில் கொளுத்தி  சாமிக்கு ஆராதனை செஞ்சுக்கலாம். இதுலே இந்தியர் சீனர்னு ஒரு  பாகுபாடும் இல்லே....  அந்தக் கோவிலுக்குப் போறவங்க இந்தக் கோவிலுக்கும் வர்றாங்க. இங்கத்து சனம் அங்கெயும் போகுது!


தாய்லாந்துக்காரர்கள் தனியா  ஒரு கூடாரத்தில் பிரம்மனுக்குக் கோவில் வச்சுட்டாங்க. பஞ்சமுகப் புள்ளையார் , எரவான் கோவில் ப்ரம்மான்னு சூப்பர்! பெரிய பிள்ளையாருக்குத் தங்க ரேக் வாங்கி ஒட்டிட்டுப்போகுது சனம். புத்தரும் ஒரு கையை உயர்த்தி ஒன்னுன்னு காமிச்சுக்கிட்டு இருக்கார். நாம் அபிஷேகம் செய்யும் வகையில்  புள்ளையாரும், புத்தரும்  பாத்டப்பில் நிக்கறாங்க. கரண்டியில் தண்ணீரை மொண்டு தலையில் அபிஷேகம் செய்யலாம்.


வெளியே  சதுக்கத்தில் கோலாகலம்! என்ன விதவிதமான சாமான்கள்!  அதிலும் பூச்செடிகள் விற்கும் கடைகள்தான் பிடிச்சு இழுக்குது.  ஒன்னும் இங்கே நாட்டுக்குள் கொண்டு வரமுடியாதே....   கண்ணால் அனுபவிச்சதோடு சரி.   என்னமோ புதுசா பழவகை ஒன்னு  பார்த்தேன். எப்படி இருக்குமுன்னு  தெரியாதே....  ப்ச்.  ஒன்னு வாங்கியிருக்கலாம்.  பெயர் என்னன்னுகூடக் கேட்டு வச்சுக்கலை. இப்ப கூகுளில் கேட்டால்....   வெஜிடபுள்னு சொல்லுச்சு :-)))))
அப்படியே  நடந்து போய் பூகி ஜங்ஷன். மாலுக்குள் நுழைஞ்சு ஒரு சுத்து. சம்ப்ரதாயம் அனுசரிக்கலைன்னா... சாமி கண்ணைக்  குத்திரும், ஆமா:-)

மெது நடையில் திரும்பி  செராங்கூன் ரோடில் இருக்கும் கடைகளொன்னில்  ஆளுக்கொரு இளநீர். சிங்கப்பூர் சூடு, பகல் நேரத்தில் உக்ரம்தான்.  ஹொட்டேலுக்கு வந்து சேரும்போது மணி பனிரெண்டரை. நமக்கு  செக்கவுட் செஞ்சுக்க ஒரு மணி நேரம் கூடுதலாக் கொடுத்துருந்தாங்க.
கொஞ்சம் ப்ரெஷப் பண்ணி உடை மாற்றிக்கிட்டு எங்க கேபின் பைகளைக் கீழே கொடுத்துட்டு, ஒரு டாக்ஸி பிடிச்சோம். இது,  இதுவரை நாம் போகாத இடம்!

தொடரும்........:-)

PIN குறிப்பு:  235 படங்களை  ஜஸ்டிஃபை செய்யணுமுன்னா ஆல்பம் போட்டுத்தானே ஆகணும்!   இதுதான் சுட்டி கொடுக்கலாமுன்னா...  ஆல்பத்தையே இங்கே காமிக்குதே கூகுள்!  உரிச்ச சாத்துக்குடி. அப்படியே திங்கலாம் :-)


சிப்பிக்குள்ளே என்ன இருக்கும் ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 116)

$
0
0
கிட்டத்தட்ட 250 ஏக்கர் இடம்!   நிலப்பகுதி ரொம்ப இல்லாத சின்ன நாட்டுக்கு இது பெரிய சமாச்சாரம் இல்லையோ!   கார்டன்ஸ் பை த பே (Gardens by the Bay) என்று பெயர்! இதைக் கட்டிக்கிட்டு இருந்த சமயம் ( 2011 வது வருசம்) ஸான்ட்ஸ் ஹொட்டேல்    மொட்டை மாடியில் இருந்து பார்த்துருக்கோம்.
பெரிய கிளிஞ்சல்களைத் திறந்து கவுத்து வச்சதுமாதிரி இருந்தது.   அடுத்த வருசமே  வேலை முடிச்சுத் திறந்துட்டாங்க. இந்த சுறுசுறுப்பில் மட்டும்  சிங்கையை யாருமே அடிச்சுக்கமுடியாது!  அரசு  நிர்வாகம் சரியா இருந்தால் எல்லாம் சௌக்கியம்தான்!
நாமும் கடந்த ஆறேழு வருசமா, வருசத்துக்கு ரெண்டு முறையாவது சிங்கை  வந்துக்கிட்டுத்தான் இருக்கோம் என்றாலும்  எதுக்கும் ஒரு வேளைன்னு ஒன்னு வரணுமுல்லே?  இன்றைக்கு வந்தது.  ஒரு டாக்ஸி பிடிச்சு  அங்கே போய் இறங்குனோம்.
வெளிப்புறம் இருக்கும் தோட்டத்துக்கு அனுமதி இலவசம். புதுவிதமான மரங்கள்  ஏராளம். எப்படி முளைச்சுருக்குன்னு பார்த்தால்..... சூப்பர்!  சூப்பர் ட்ரீன்னே பெயரும் வச்சுட்டாங்க:-) சின்னதும் பெருசுமா அங்கங்கே!  சின்னது 25 மீட்டர், பெருசு 50 மீட்டர் உசரமா 'வளர்ந்துருக்கு'!  ராத்திரியில் விளக்கு அலங்காரம் இருக்காம்.  நாம்தான் பகலில் போயிருக்கோமே.....  மரத்துக்கு ரொம்பக்கிட்டத்தில் மேலே போய் பார்த்துக்கிட்டே நடக்க ஒரு பாலம் போட்டுருக்காங்க.  இதுக்குத் தனி டிக்கெட் உண்டு.  எட்டு டாலர் கொடுக்கணும்.
வெளியே சுத்திப் பார்க்க ஷட்டில் வசதி உண்டு. மூணு வெள்ளிக்கு டிக்கெட் வாங்கினால் அங்கங்கே இறங்கி வேடிக்கை பார்த்துட்டு அடுத்து வரும் வண்டியில் ஏறிக்கலாம். பப்பத்து நிமிட்டுக்கு ஒரு வண்டி.  பேசாமக்   கூட்டிப்போனால் மூணு. அங்கங்கே என்ன ஏது இருக்குன்னு நமக்குச் சொல்லிக்கிட்டே கூட்டிப்போக இன்னொரு வகை வண்டி இருக்கு. நம்மாண்டை பேசிக்கிட்டே கூட்டிப்போக கூட ரெண்டு வெள்ளி சேர்த்துக் கொடுக்கணும். அஞ்சு.
101 ஹெக்டர் நிலம். உள்ளே வெளியேன்னு முழுசும் சுத்திப் பார்க்க ஒரு நாள் போதாது.  நம்மால்தான் போனேன் வந்தேன்னு இருக்க முடியாதே..... ஒவ்வொன்னையும் நின்னு நிதானிச்சுக்   கெமெராக் கண்ணால் விழுங்கணுமோ இல்லையோ?  கவுந்துகிடக்கும் சிப்பிக்குள்தான் முக்கியமான சமாச்சாரங்கள்!  டூரிஸ்டுகளுக்கு  டிக்கெட் ஒரு ஆளுக்கு 28 சிங்கப்பூர் டாலர்.  அதிகமோன்னு ஒரு நிமிட் நினைச்சுட்டு, 'வாங்கிடுங்க'ன்னேன். ரெண்டு கன்ஸர்வேட்டரிகளுக்குள் போக இது செல்லுபடியாகும்.
ஃப்ளவர் டோம், க்ளௌட் ஃபாரஸ்ட்ன்னு இது ரெண்டும்தான் இன்னைக்கு நாம் பார்க்கப் போறோம். சில சமாச்சாரங்கள் எல்லாம் சொல்லில்  எழுதமுடியாது என்றது உண்மை. பார்க்கணும். அப்பதான் நம்புவோம்!

பூக்களான பூக்கள்.  இதுலே  ஏறக்கொறைய பாதிக்கு மேல் நியூஸியில் இருக்கு. ஆனால் ட்ராப்பிகல் செடிகளுக்கும் பூக்களுக்கும் நாங்க எங்கே போறது?  எங்கூர் தோட்டத்துலே  கொஞ்சம் செடிகளை கண்ணே கண்ணு பொன்னே பொன்னுன்னு க்ளாஸ் ஹவுஸில் காப்பாத்தி வச்சுருக்கோம். அனுமதி  இலவசம்தான்:-) கண்ணு நிறைய நிறைய பார்த்துக்கிட்டே போனோம். ஆயிரம் வயசான ஆலிவ் மரத்தைக் கூட அப்படியே கொண்டு வந்து வச்சுருக்காங்கபா!

( பேசாம ஆல்பம் போட்டு வச்சுத்தான் ஆகணும்.  ரெண்டு இடத்துக்கும் தனித்தனியாப் போட்டு வைக்கிறேன். சரியா?)

குரங்கு வருசம் என்றதால் எங்கெ பார்த்தாலும் குரங்குகள்தான்:-) குரங்கு ராஜா இருந்தாராமே!   அபூர்வ சக்தி படைச்சவர். 72 விதமா உருமாறுவாராம்.  பறக்கறதுலேயும், கனம் தூக்குறதுலேயும், இவரை யாராலும் வெல்ல முடியாது.  ஸ்பீடோ ஸ்பீடுதான்!  ஆஹா....    நம்ம ஆஞ்சியா இருக்குமோ!  புத்தர்தான்  குரங்கு ராஜாவை  அடக்கி ஆண்டு,  ஒரு ஐநூறு வருசத்துக்கப்புறம்  ரிலீஸ் பண்ணாராம். இப்படிப் போகுது சீனர்களின் பழங்கதை ஒன்னு!
தோட்டமும் காடுமா இப்படி இம்மாம் பெரிய கண்ணாடிச் சிப்பிக்குள் இருக்கறதே ஒரு அதிசயமுன்னுதான் சொல்லணும். சவுத் அமெரிகா, சவுத் ஆஃப்ரிகா, கலிஃபோர்னியா, அஸ்ட்ராலியா, மெடிட்டரேனியன் இப்படி உலகின் பல பகுதிகளில் இருக்கும் செடிகொடிகளின் வகைகளும் தோட்டமான தோட்டங்கள்!  கால் வலிச்சா  உக்கார்ந்துக்க அங்கங்கே இருக்கைகள்!
சொன்னா நம்பமாட்டீங்க....  தீ பிடிச்சா எரியாத மரம் கூட இருக்காமே! தீ பிடிச்சு அணைஞ்சபிறகுதான் இந்த விதைகளே முளைக்குமாம்.... தகவல்கள் கொட்டிக்கிடக்கு!


முடிஞ்சவரை சுத்திட்டு வெளியே வரும் வழியில் வழக்கமா இருக்கும் நினைவுப் பொருட்கள் கடை. ப்ரூச் எல்லாம் அழகுதான். ஆனால்  வாங்குற விலையில் இல்லை.... நீங்களே பாருங்க.......

சிங்கக்கூட்டம் இருக்கும் இடத்தில் போய் உக்கார்ந்து  ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கினோம்.  நமக்கென்ன பயமா? சிங்கத்தின் வாயிலெ கை  நுழைக்கமாட்டோமா என்ன? அங்கேயே உக்கார்ந்து தின்னுட்டு அடுத்த பகுதியான க்ளைட் ஃபாரஸ்ட்டுக்குள் நுழைஞ்சோம். ஹைய்யோ!!!!!
இதுதான் எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது!  முப்பத்தியஞ்சு மீட்டர் உசரத்துலே இருந்து  விழும் நீர்வீழ்ச்சி!  தண்ணீர் திவலைகளை தெளிச்சுக்கிட்டே இருப்பதால்  குளுமையா இருக்கு அந்த இடமே!  ரொம்பக் கிட்டப்போனால் நனைஞ்சுருவோமேன்னு  கவனமா இருந்தேன். தரையெல்லாம் ஈரம்.

ஒரு மலையையே கொண்டு வந்து உள்ளே வச்சுருக்காங்க.  மலைக்குள்ளே ஏழு மாடிகள். கால் திடமா இருக்கும் மக்கள் படியேறிப்போகலாம்.  நமக்கு இருக்கவே இருக்கு லிஃப்ட்.  உச்சிக்குப் போனா, மலையை வெளியே போய் சுத்திப் பார்க்கும் வகையில் மலையைச் சுத்தி நடை பாதை! க்ளௌடு வாக் !



நாலாவது மாடியில் இருக்கும் க்றிஸ்டல் மலை பார்த்தப்ப மகள் நினைவு வந்துச்சு. கல் ப்ரேமி அவள் :-)


வெயிலுக்குப் பஞ்சம் இல்லாத நாடு என்பதால்  கூடியவரை  அங்கங்கே ஸோலார் பேனல்கள் வச்சுருக்காங்க.  பலவிதமான கருவிகளின் இயக்கம்  இதனால் ! தடை இல்லாத மின்சாரம்!
கீழ் தளத்துக்கு சின்ன எஸ்கலேட்டர் போட்டுருக்காங்க.  அங்கே Earth Check! உலகத்தின் வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகிக்கிட்டே போகுதாம். உண்மைதானே.... என்னா சூடு என்னா சூடு..... அரை டிகிரி அதிகமானாக் கூடத் தாங்கமுடியாமப் போயிருமுன்னு  எச்சரிக்கை.  சனம் வேற கூடிக்கிட்டே போகுது.  பூமா தேவி பாரம் தாங்கமுடியாமல் கஷ்டப்படப்போறாள்....  2050க்குள்ளே உலகின் சில பகுதிகளில் ஜனத்தொகை இப்போ இருப்பதை விட மூணு மடங்காகிருமாம்....
சுதந்திரம் கிடைக்குமுன்  முப்பது கோடி சனம்தான் பாரதத்தில். தேவர்கள் அப்போ மனுசனை பீட் பண்ணிட்டு முப்பத்து முக்கோடியா  இருந்தாங்க.  இப்ப அவுங்க அப்படியேதான் எண்ணிக்கையைக் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  ஆனா நாம இந்த  எழுபது வருசத்துலே  அந்த   முப்பது சொச்சத்தை,   கிட்டத்தட்ட நூத்திமுப்பது சொச்சமா ஆக்கிட்டோம் பார்த்தீங்களா?  எங்கெ போய் முடியப் போகுதோ.....  கடைசியில் கல்கி வந்தே வந்துரும் போல !  அதுவும் வெள்ளைக்குதிரையிலே.....

வெளியேறும் வழி ஒரு ரகசிய தோட்டத்துக்குள்ளே!  ரொம்பவே பழைய காலத்துலே, வரலாறே எழுதப்படாதக் காலக்கட்டத்துலே  உலகம்  எந்த மாதிரி இருந்துருக்கும், அப்போ எப்படிப்பட்ட சூழல் இருந்துருக்குமுன்னு  கோடி காமிப்பது போல  அமைச்சுருக்காங்க. யார் கண்டா....  நெசமாவே இப்படித்தானோ என்னவோ.....  ஆராய்ச்சியளர்கள்  கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காங்களாமே....
இந்த வழியூடே போனால்....  முதலைகளையும் மீன்களையும் கடந்து  ஆரம்பத்துலே பார்த்த நீர்வீழ்ச்சியின் அடிப்பாகத்துக்கு வந்துடறோம்!  கால் வலி ஆரம்பிக்குதேன்னு  கொஞ்ச நேரம் உக்கார்ந்து  தூரக்கே தெரியும்  ஊரைக் க்ளிக்கும் சமயம் கேமெரா பேட்டரி  உசுரை விட்டுருச்சு. ....  எக்ஸ்ட்ரா பேட்டரி இப்போ கைவசம் இல்லை....  போகட்டும்போன்னுட்டு  செல் கேமெராவில் சில க்ளிக்ஸ்.

வெளியே வந்தால் சூப்பர் மரங்கள் வாவான்னு கூப்பிட்டன.  இன்னொருக்கா வரேன்னுட்டு  ஒரு டாக்ஸி பிடிச்சு செராங்கூன் சாலை , டெகா மாலாண்டை இறங்கிட்டோம். இன்றைக்கு மதிய சாப்பாட்டை விட்டுருந்தோமேன்னு கோமளவிலாஸுக்குள் போய்  பஜ்ஜியும் காஃபியுமா முடிச்சுட்டு எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போனோம்.  காலையில்  காஃபி குடிச்சுட்டு வரேன்னு  சொன்ன சொல்லை  இப்பக் காப்பாத்திட்டேன்.

தொடரும்..........:-)

ஃப்ளவர் டோம்  இங்கே!

க்ளௌட்  ஃபாரஸ்ட்   இங்கே!

கழுத்துலே ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 117 கடைசிப்பகுதி)

$
0
0
கோவிலில் விசேஷம்!  உற்சவர் அம்மன்  கஜ வாகனத்தில்! அப்படிப்போடு!    அலங்காரம் நடந்து கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான். பூசாரி ஐயா மாலைகளைச் சரிப்படுத்திக்கிட்டு இருந்தார். மூலவர் வீரமாகாளியை  கம்பிக் கதவினூடாகப் பார்த்துக் கும்பிட்டுக்கிட்டோம்.


மாசிமகம் ப்ரம்மோத்ஸவம்  ஆரம்பிச்சு இன்றைக்கு அஞ்சாம்நாள். தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் அலங்காரம்!  நேத்து சிம்மமாம். நாளை ரிஷபம். எல்லா வாகனங்களும் வெள்ளியில்தான்!  அம்மனுக்கென்ன குறை?
அமோகமா இருக்காள். கோவில் காசு கோவிலுக்கு மட்டுமே செலவாகுது. தட்டில் போடும்   தக்ஷிணையைப் பார்த்துட்டுப் பிரஸாதம் தர்றதில்லை பூசாரி ஐயா.  யாரும் தட்டில் போடறதில்லைன்றது வேற!  எதா இருந்தாலும் உண்டியலுக்குள்ளேதான்.  அயல்நாட்டுக்காரர்களும் வந்து அம்மனை 'தரிசனம்'செஞ்சுக்கிட்டு, கேமெராவில் க்ளிக்கிட்டுப் போறாங்க. ஒவ்வொரு க்ளிக்கிற்கும் அவள் சக்தி ஏறிக்கிட்டேதான் போகுது!
இந்த ப்ரம்மோத்ஸவம்  23 தேதிக்கு முடிஞ்சதும் ரெண்டு நாள் அம்மனுக்கு ரெஸ்ட். 26க்கு மஹாசிவராத்ரி விழா ஆரம்பிச்சு பதினொரு நாட்கள்  நடக்கப்போகுது!  அன்னதானமும் அலங்காரமுமா அமர்க்களம்தான்  இங்கே!  என்னதான் கூட்டம் இருந்தாலும் சாமியை நிம்மதியா தரிசிக்க முடியும் என்பது சிங்கை ஸ்பெஷல்!
ரொம்பநாளா நான் தேடிக்கிட்டு இருந்த டிஸைனில் சாமிக்கு தீபாராதனை காட்டும்     வால்கரண்டி அங்கே பூஜைக்கு ரெடியா ஒரு தட்டில்.  இதைத்தான் விவரிச்சு விவரிச்சு ஒவ்வொரு பாத்திரக் கடைகளிலும் சொல்லித் தேடிக்கிட்டு இருந்தேன். எங்கேயுமே கிடைக்கலை..:-(  இப்பப் படம் காமிச்சுத் தேடலாம்.....
படத்தைப் பார்த்த தம்பி மகர்  ஸ்ரீதர், 'நகைக்கடையில் வெள்ளிப் பாத்திரப் பிரிவில் கிடைக்குது'ன்னார்.  நான் ஒருத்தி..... வெங்கலக் கடையில் தேடிக்கிட்டு இருந்தேன்.....

பொடிநடையில் பார்க் ராயல் வந்து சேர்ந்து, கொடுத்துவச்சதை வாங்கிக்கிட்டு டாக்ஸி பிடிச்சு நேரா சாங்கிதான்!   லவுஞ்சுக்குப் போய்  செல்போனை சார்ஜரில் போட்டுட்டுக் கேமெரா  பேட்டரியை மாத்தினதும்தான் நிம்மதி ஆச்சு. லேப்டாப்பில் கொஞ்சநேரம் மேய்ஞ்சுட்டு நேரம் ஆச்சுன்னு  நமக்கான கேட்டுக்குப் போயிட்டோம்.

சரியான நேரத்துக்குக் கிளம்பி அதே பத்துமணி நேரப் பயணம் ஆரம்பிச்சது. இரவுப்பயணம் என்பதால் நோ வேடிக்கை. நூத்துக்கணக்கான கப்பல்களின்  துணையோடு  கார்த்திகை கொண்டாடிக்கிட்டு இருக்கு கடல் !
ஃப்ளைட் பாத்தின் துணையோடு பொழுது போச்சு எனக்கு. நம்மவர்? அதான் இருக்கவே இருக்கெ.... சினிமா..சினிமா.... சினிமா.... இடைக்கிடை கொஞ்சம் தூக்கம்.   கண்டம் தாண்டிருச்சுன்னா (அஸ்ட்ராலியா ) ஆசுவாசம்தான் எனக்கு. ஊர் நெருங்க நெருங்க, வீட்டில் காத்திருக்கும் கடமைகளின் பட்டியல் போட ஆரம்பிச்சது மனசு.

சதர்ன் ஆல்ப்ஸில் பனியைக் காணோம். உருகி ஓடியிருக்கு! இந்த வருசம் நல்ல வெயில் போல!  அதான் க்ளோபல் வார்மிங்னு  சிங்கையில் படம் காட்டுனாங்களே...
வண்டி நின்னதும் நம்ம பொட்டிகளை எடுத்துக்கிட்டு, 'நாட்டுக்குள் கொண்டு வந்த  சாமான்களை'டிக்ளேர் செஞ்சுடணும்.  இந்த முறை  சுண்டைக்காய் வத்தல் பறிபோனது:-(  இது போனாப் போகட்டும்.... கோபாலின் ஃபேவரிட். ஆனால் போனமுறை உப்பு நார்த்தங்காய் குப்பையில் போனதுதான்.... இன்னும் மனசு ஆறலை:-(




வீட்டுக்கு வந்ததும், சாமி விளக்கேத்தி, கும்பிடு போட்டுட்டுத் தோட்டத்துக்குப் போனேன். மகளின் பொறுப்பில் விட்டுப்போனதில்    ஓரளவுக்குச் செடிகள் தப்பிப் பிழைச்சுருந்தது.  காய்ஞ்சு போகத்தொடங்கிய  மிளகாய்ச்செடியில் ஏகப்பட்ட  மிளகாய்கள்!  நல்ல வெயிலுதான் போல!  நான் இல்லைன்னா சூரியனுக்குக் கூடக் கொண்டாட்டம்,பாருங்க !
அடுக்களை மேடையில் எனக்கு ஒரு பரிசு வச்சுட்டுப் போயிருக்காள் மகள். பெர்ஃப்யூம். ஹேப்பி பர்த்டே அம்மா!

சுருக்கமா ஒரு சமையல் . நாலு மணி ஆனதும் போய் நம்ம ரஜ்ஜுவை ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்குக் கூட்டியாந்தோம். வீட்டுக்கு வந்ததும் கோச்சுக்கிட்டுத் தோட்டத்தில் போய்  சுத்திக்கிட்டு இருந்தான் அவன்:-)

ஆத்திரத்தோடு போனவன் கையில்  அகப்பட்டு உசுரை விட்டுருந்ததை அப்புறமாப் பார்த்தேன்.....பாவம்....  குட்டி... கெட்ட ரஜ்ஜு....
பொட்டிகளைத் தொறந்து  அன்பேக் பண்ணிட்டு இருக்கும்போது சந்தேகக்கண்ணுடன் பக்கத்தில் வந்து  பார்த்துக்கிட்டு இருந்தான். இன்னும் மனசு சமாதானமாகலை.....


அதை முடிச்சுட்டு, ரங்கனின் அட்டைப்பெட்டியைத் திறந்தார் நம்மவர்.  உள்ளே பொதியே என்னமோ போல் இருக்கு. ரொம்பவே கவனமாப் பிடிச்சு எடுத்தால்...... கட் கட்....  கழுத்து கட் :-(  சேஷன் கழுத்து வெட்டப்பட்டது!

கெட்டதுலே ஒரு நல்லது என்னன்னா இது க்ளீன் கட்.  ஏற்கெனவே  ஆதிசேஷனை ரங்கனுடன் சேர்க்கும்போது  தலைகளைத் தனியாச் செய்துதான் இணைச்சுருக்காங்க போல.  அடடான்னு  கவனமாத் திரும்பத் தலைகளைச் சேர்த்து வச்சுட்டேன்.  ஆனாலும் இதை ரிப்பேர் செஞ்சாகணும்.   கழுத்தாண்டை  ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் இருக்கு. 
என்ன செய்யலாமுன்னு யோசிச்சு  ஒரு ப்ளாக் நெயில் பாலிஷ் வாங்கியாந்தேன்.  சரியான இடத்தில் பொருத்தி  கறுப்புப் பாலீஷ் போட்டவுடன்  சரியான மாதிரி இருந்தது.  இன்னும் காயவச்சுக் காயவச்சு மூணு கோட்டிங் கொடுத்ததும்  வெற்றி!  படமெடுக்கும் தலைகளுக்கு மட்டும்  தங்க நிறம் பூசி இருந்தது கொஞ்சம்  பழசா டல்லா இருக்குன்னு  அந்த இடங்கள் மட்டும் வெளியே தெரியறதுமாதிரி  மூடிட்டு, கோல்ட் ஸ்ப்ரே செஞ்சேன்.

இப்பப் புதுத்தலைகள்  &  புதுப்பாம்பு!

ரங்கனும் தனக்கான இடத்தைப் பிடிச்சுக்கிட்டான்!  நியூஸி வரணுமுன்னு பிடிவாதம் பிடிச்சவன் அவந்தானே!
ஒவ்வொரு பயணங்களும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள்தான். அனுபவங்களால் நிறைந்ததுதானே வாழ்க்கை!   வாழ்க்கையை முழுசுமா அனுபவிக்கணும்.

 பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....


ஆதலினால் பயணம் செய்வீர்! 



PIN குறிப்பு:  இந்தத் தொடர் ஒருவழியா முடிவுக்கு வந்ததேன்னு  யாரும் கொண்டாட வேண்டாம். அடுத்த பயணமும்  இது முடியுமுன் அதுன்னு  ஆச்சு.

 வேற  துணிமணிகளை அடுக்கி வச்சுப் பொட்டியை ரெடி பண்ணுங்க.  நடுவில் ஒருநாள்  ரெஸ்ட் எடுத்துக்கிட்டு பயணத்தைத் தொடங்குவோம்!

நமக்கு முற்றிலும் புதிய இடம் இப்போ போகப்போறது.  எங்கேன்னு எனி ஐடியா? :-)


பறக்கும் சிறையில் பத்தரை மணி நேரம் ( பயணப் பதிவு 1)

$
0
0
எங்கூரில் இருந்து  சிங்கைக்குப் போறோம்.  இந்த மாதிரி ஒரு மஹா போரிங் ஃப்ளைட் உலகத்தில் இருக்குமா என்ன?
ரெட்டைஸீட் வேணுமுன்னு சொல்லிக் கிடைச்சுருச்சுன்னு என்ற மகிழ்ச்சி  ஜன்னலாண்டைபோய் உக்கார்ந்ததும்  பொசுக்ன்னு போயிருச்சு. நீங்களே பாருங்க...  இந்த றெக்கையை பார்த்துக்கிட்டே பத்தரை மணி நேரம் உக்கார்ந்துருக்கணும் என்றால் எப்படி?
நான் கேட்ட ரெட்டை வாலாண்டை. கிடைச்சது  இடுப்பாண்டை....
இந்த அழகில் நாட்டை விட்டு வெளியேற அரைமணி. எங்க சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும், மூக்கு முறிஞ்சு போன  மவுண்ட் குக்கும், இன்னும் படர்ந்திருக்கும் பனித் துகள்களுமா கண்ணில் ரொம்ப தூரத்தில் பட்டு,  உடனே கோஸ்ட் லைன் வந்துருச்சு.  பஸிபிக் சமுத்திரத்துக்கு மேலே  மூணு மணி நேரம், அஸ்ட்ராலியாவின் மேலே வறண்ட செம்மண் பூமியை அஞ்சு மணி நேரம் 'வேடிக்கை'பார்த்துக்கிட்டுப் போனபின்,  இன்னும் ரெண்டு மணி நேரம் கடலும் தீவுகளுமா கலந்து கட்டி வந்தபிறகு சிங்கை சாங்கியில் இறங்கணும்.
எனக்கு சினிமா பார்க்கும் வழக்கம் ஒழிஞ்சு போனதால்  'ஃப்ளைட் பாத் சினிமா'வைப் பார்த்துக்கிட்டேப் பொழுதை விரட்டினேன். நம்மவர்.... சினிமாவோ சினிமாதான். க்ரிமினல் என்றொரு படத்தை  அனுபவிச்சுப் பார்க்கிறார்.  'இனம் இனத்தை.... '  சொல்லப்டாதோ :-)
தமிழ்ப் படங்களில்  ரெண்டு.  இறுதிச்சுற்று, தூங்கவனம். (அப்படித்தான் போட்டுருக்காங்க. தமிழ்,  ஆட்சிமொழிகளில் ஒன்று இங்கே!  )
தூங்கவனத்தை  ஏற்கெனவே பார்த்தாச். மலையாளமும் ஒன்னும் சரி இல்லை.  'இதுதாண்டா போலீஸ்....' போட்டே....

ஃப்ளைட்டிலும் வழக்கத்துக்கு மாறா  ரொம்ப சீக்கிரம் சோத்தைப் போட்டுட்டாங்க. ஸ்பெஷல் மீல்ஸ் என்பதால் ஊருக்கு முன்னே வரும் என்றாலும் கூட    இது  ரொம்பவே முன்னே! பத்து அம்பதுக்குக் கிளம்புன  விமானத்தில்  பன்னெண்டுக்கு சோறு வந்துருச்சு. இதுக்கிடையில் வழக்கமாக் கொடுக்கும் தீர்த்தங்களும்,  குரங்நட்ஸும் கொடுத்தாச்.
 மேற்கே பயணமென்பதால் வெயில் பளிச். றெக்கையில் பட்டுக் கண் கூசுது. பந்த் நமக்கும்.

சிங்கையில் போய் இறங்குனதும், கேபின் பேக்ஸை, லாக்கரில் போட்டுட்டுப் பெருமாளைத் தேடி ஓடணும். நெருங்கிய தோழி எப்போ சந்திக்கலாமுன்னு கேட்டாங்க.  இன்றைக்கு கிழமை ஞாயிறு. பெருமாள் இருக்கும் ஏரியாவில் 'சிங்கையில் உழைக்கும் நம்மக்கள் செராங்கூன் ரோடுக்குக்   கடல்மணல் என்ற கணக்கில் திரண்டு வருகை தர்றது தெரியும்'என்பதால் , முடிஞ்சா பெருமாள் கோவிலில் ஏழு மணி வாக்கில் சந்திக்கலாம். ஆனால்  தொழிலாளர் ஞாயிறு என்பதை நினைவில் வச்சால்  கூட்டத்தில் மாட்டிக்கிட்டு அவஸ்தைப் படவேண்டாம். திரும்பி வரும் பயணத்தில் சந்திக்கலாமென்று சொல்ல வேண்டியதாப் போச்சு.  அவுங்களும் 'அதுதான் சரி'ன்னாங்க.

வாரத்தில் ஆறு நாட்கள் உழைப்பு. ஏழாம்நாள் குட்டி இந்தியாவில் வந்து கூடுவது ஒன்னுதான் பாலைவனப் பசுஞ்சோலை. நண்பர்களை சந்திக்க, கோவிலுக்குப் போக, நம்ம சாப்பாடை ரசிச்சுச் சாப்பிட,  முக்கியமா   சம்பளப் பணத்தை  வெஸ்டர்ன் யூனியன் மூலம்  ஊரில் காத்திருக்கும் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கன்னு எல்லாத்துக்கும் ஞாயிறு மட்டுமே அவுங்களுக்கு.  வேலை செய்யும் கம்பெனிகளே  இங்கே பகல் 10 மணி போலக் கொண்டு வந்து விட்டுட்டு, ராத்திரி  மறுபடியும் இவுங்களைப் பிக்கப் செஞ்சுக்கிட்டுப் போறாங்க.

இப்பெல்லாம்  நாங்க ஊருக்குப் போகும்போது  சிங்கையில் தங்கிட்டுப் போகாம, கனெக்டிங் ஃப்ளைட் புடிச்சுப் போயிடறோம். அதான் எல்லா  சீனப்பொருட்களும் இந்தியாவிலேயே கிடைக்குதே! இங்கிருந்து வாரிக்கிட்டுப் போகணுமா என்ன? முந்தி மாதிரி, இங்கே ஷாப்பிங் ஒன்னும் அவ்வளவு மஜா இல்லை. முஸ்தஃபா சென்ட்டர்  24 மணி நேரம் திறந்து வச்சுருந்தாலும் நமக்கு வாங்கிப்போகும் பொருட்கள்  ஒன்னும்தான் இல்லை.

தங்கிப் போகலாமுன்னா ஹொட்டேல் அடிக்கும் கொள்ளை, சொல்லி மாளலை.  கொள்ளைன்னதும்  இன்னொன்னும் சொல்லிக்கறேன்.  இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏஸியா கிட்டே இருந்து சில  கெட்ட  சமாச்சாரங்களைக் கத்துக்கிட்டு இருக்கு. நாம் முந்தி காசிக்குப்போனபோது, ஸ்பைஸ் ஜெட்டில் காலை நீட்டிக்க  ஆளுக்கு 500 ரூ வாங்குனாங்கன்னு சொன்னேன் பாருங்க அதுவே தேவலைன்னு ஆகி இருக்கு.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸில்  'கொஞ்சம் வசதியாக் காலை நீட்டி  உக்கார்ந்துக்க, வெறும் 75 யூஎஸ் டாலர் மட்டும்தான், துளசி. உனக்கும் உங்கூட்டுக்காரருக்கும் ரெண்டு இடம் போட்டுறவா'ன்னு அன்பா மெயில் அனுப்பி இருந்தாங்க போனவாரம். அந்த 500க்கே  (அப்ப அதுக்கு வெறும் 10$தான்)  அழுதுக்கிட்டுக் கொடுத்தவள் நான்.   எங்கிருந்துதான் இப்படி அல்ப்பமா  விலையை ஏத்திக்கிட்டுப் போக ஐடியா புடிக்கிறாங்களோ.....   போதாக்குறைக்கு எங்கூரில்( கிறைஸ்ட்சர்ச்) இருந்து டைரக்ட்டா சிங்கை போறதுக்கு வேற எந்த ஏர்லைனும்  கிடையாது என்பதால் ஏகபோக உரிமை வேற...

இந்தக் காசுக்கு இப்ப நாம் போகுமிடத்தில் ரெண்டு நாளைக்கு ஹொட்டேலில் தங்கிக்கலாம். எங்கே போறோம் இப்ப?  நேபாள்.  காத்மண்டுவில் காலு குத்தணும்.  'சிங்கையில் இருந்து  நேபாள் போக கனெக்டிங் ஃப்ளைட்  காலை 9 மணிக்குத்தான்.  காசு போகட்டுமுன்னு செராங்கூன் ரோடில் ஹொட்டேல் எடுத்தாலும் காலை ஏழுக்குக் கிளம்பினால்தான்  சரியாக இருக்கும். அப்போ அஞ்சரை,ஆறுக்கு எழுந்துக்கணும். பேசாம ஏர்ப்போர்ட் ட்ரான்ஸிட் ஹொட்டேலில் தங்கிக்கலாமா'ன்னு கேட்ட கோபாலிடம்,  வாதமே  பண்ணாம  'எஸ்'என்றேன்!  பாவம்...  நம்மவருக்கு ஒரே ஷாக். :-)

முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒரு சார்ஜ். அதுக்குப்பிறகு ஒவ்வொரு மணிக்கும் கூடுதல் சார்ஜ் என்ற கணக்கில் ஏழு மணி நேரத்துக்கு  புக் பண்ணிட்டார்.  கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே  முஸ்தாஃபா நகைக்கடையில் மகளுக்காக ஒரு சமாச்சாரம் தேடணும். நின்னு நிதானமாப் பார்த்தாலும் ஏர்ப்போர்டில் இருந்து  செராங்கூன் ரோடுவரை போய்,  பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு, நமக்கு வேண்டிய விவரங்களைத் தேடிப்  பார்த்து, மறுபடி ஏர்ப்போர்ட்  திரும்பிவர மூணு மணி நேரம் வேணும்தான்.  பத்து மணிக்கு ஒரு டாக்ஸி பிடிச்சோ, இல்லை ரயில் எடுத்தோ ஏர்ப்போர்ட் வந்துட்டோமுன்னா  படுத்துத் தூங்கிட்டுக் காலையில் எழுந்து ரெடியாகி அப்படியே  நேபாள் போகும் விமானத்தில் ஏறிக் குந்திக்கலாம்.  திட்டம் ஓக்கே!
இந்தப் பதிவை விமானத்தில் உக்கார்ந்துதான் எழுதிக்கிட்டு இருக்கேன்.  மெல்பெர்ன் தாண்டி அடிலெய்ட்  பக்கமாப் போகுதாம். ஃப்ளைட் பாத்  சொல்லும் சேதி. இன்னும் ஆறரை மணி நேரம் பறக்கணும் :-(

பதிவுலக நண்பர் விஸ்வநாத்,  குறுநாவல் ஒன்னு எழுதி அனுப்பி வச்சுருந்தார். 47 பக்கங்கள்.  பெயர்  'காதல்மழை.' கவிதையும் காதலுமா இருக்கு.  எப்படி இருந்ததுன்னு  அவருக்கு ஒரு மெயில் அனுப்பணும். இதுலே நான் வேற கவிதை விரும்பா ஜென்மம்! ஆனாலும் கஷ்டப்பட்டு இந்தக் காலத்துக் காதலைக் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சேன் என்பதையும்  சொல்லிக்கறேன்.  பதினோராயிரம் மீட்டர் உசரத்துலே பறந்துக்கிட்டே படிச்ச  கதை இது!!
இதுக்குள்ளே...  கேரமல் ஆல்மண்ட் மஃப்பின்னும்  சிப்ஸும், ஜூஸும்  வந்துருச்சு. வாங்கிவச்சுட்டுக் கொஞ்சநேரம் தூங்கிப் பார்க்கலாமுன்னு இருக்கேன். ஓக்கே?

கண்டம் தாண்டுவதே  ஒரு கண்டமா இருக்கே. அஸ்ட்ராலியாவின் மேல் பறந்துக்கிட்டே இருக்கோம். ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் இப்பதான். செம்மண்பூமி. பாலைவனம்....  தூங்கலாமுன்னு நினைச்சாத் தூக்கம் வர்றதுல்லேபா.....
ஜகர்த்தா, பாலி கடந்து சிங்கையில்  இறங்கும்போது அஞ்சரை.
டெர்மினல் மூணில் இருந்து டெர்மினல் இரண்டுக்கு சின்ன  ரயில். கேபின் பைகளை  லக்கேஜ் ரூமில் வச்சுட்டு ($ 6) சாங்கி ச்சும்மாக் கொடுக்கும்  $ 80 வாங்கிக்கிட்டு, இமிகிரேஷன் முடிச்சுட்டு வெளியில் வந்து டாக்ஸி எடுக்கலாமுன்னு பார்த்தால் இப்ப டாக்ஸி வாடகை எல்லாம் தறுமாறா  ஏறிக்கிடக்கு. 35$ நகரத்துக்குள் வர அதிகமா இருக்கே:-( பேசாம ரயிலு எடுக்கலாம். சாங்கியில் இருந்து ஃபேரர் பார்க் ஸ்டேஷனுக்கு $10.20தான் ரெண்டு பேருக்குமான ரிட்டர்ன் டிக்கெட்.

தனமேர, ஊட்ரம் பார்க்ன்னு  ரெண்டு இடங்களில் ரயில் மாறி   ஃபேர்ரர் பார்க்கில் இறங்கி , பெருமாள் கோவிலுக்குப் போறோம். செராங்கூன் சாலை முழுசும் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்குது!  தீபாவளிக்கு ரெடியா இருக்காங்க.

 கோவிலுக்குள்  நுழைஞ்சால்  ஊஞ்சலில் பெருமாள்  தாயார்களுடன் கல்யாண மாப்பிள்ளை வேஷங்கட்டி இருக்கார்.  ஹோமம் வளர்த்துத் தாலி கட்டும் நேரத்துக்கு டான்னு  போயிருக்கோம். சாஸ்த்திரப்படி நடக்குது எல்லாமும். தேங்காய் உருட்டி விளையாடுவது உட்பட. ஆன்னு நிக்கறேன் என் கெமராவை மறந்துட்டு! நம்மவர்தான் நினைவு படுத்தினார். அப்புறம் க்ளிக்கோ க்ளிக்ஸ்தான்.
ஹோமம் வளர்த்துக்கிட்டு இருந்த நம்ம சீனிவாசன் பட்டர் ஸ்வாமிகளுக்கு, என்னைக் கண்டதும் கண்ணில் ஒரு சின்ன வியப்பு :-)
  கல்யாணம் முடிஞ்சு ஊர்வலம் சிவிகையில். பிரகாரத்தில் ஒவ்வொரு சந்நிதியாப்போய் புள்ளையார்  முருகர் சுதர்ஸனர் மஹாலக்ஷ்மித் தாயார்     ( புருஷன் புதுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து காமிச்சால் எப்படி இருக்கும்!  ) அப்படியே வலம் தொடர்ந்து  நம்ம ஆண்டாளுக்கு நேரெதிரே இல்லாமல் பக்கவாட்டில் நின்னு கொஞ்சநேரம் நாதஸ்வரக் கச்சேரி நடக்க ('ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்'பாட்டு, அட்டகாசம் போங்க!) நடுவில் சந்நிதிச் சுவர்  தடுப்பு இருக்கே!   அவளுக்கு நடக்கும் சமாச்சாரங்கள் தெரிய வாய்ப்பில்லை. அதுக்காக நான் சும்மா இருக்கலாமா? கொஞ்சம் போட்டுக் கொடுத்துட்டு தூமணி பாடி வச்சேன்.



ஆஞ்சிக்குக் கல்யாணக்கோலம் காமிச்சபின் முன்மண்டபத்தில்  மூலவருக்கு முகம் காட்டி தீபாரதனைகள் நடத்தி,  அங்கிருந்து  மணமக்களைத் தோளில் சுமந்து போய் அர்த்தமண்டபத்தில் கொஞ்சம் ஆடிமுடிச்சு திரும்ப ஊஞ்சலில் உக்கார்த்தியதும் முகமெல்லாம் சிரிப்பு. மணி  ஒன்பதே கால். பிரஸாதம் ரெடி!





சுடசுட கேஸரி, சாம்பார் சாதம், ததியன்னம். நான் போய் வரிசையில் நிக்கும்போது ஆஞ்சி சந்நிதியில் உக்கார்ந்துருந்த நம்மவர் ரெண்டுன்னு  கை காமிக்கிறார்.  ரெண்டு தட்டுகளை வாங்கினவள், தட்டில் விளம்பிய சாம்பார் சாதத்தின் அளவைப் பார்த்துட்டு ஒரு தட்டே போதுமுன்னுட்டு, ததியன்னம் கொஞ்சமா வாங்கிக்கிட்டேன்.
மெள்ள சாப்பிட்டு முடிச்சு, நமக்குத் தெரிஞ்ச 'சீனிவாசன் பட்டர் ஸ்வாமி'களிடம் ரெண்டு நிமிட் பேச்சு..  என்னைப் பார்த்ததும்   கண்களில் சின்னக் கேள்வி.

"நீர் எப்படி இங்கே !!!!!"

"இப்பதான் வந்திறங்கினோம். முதல்  வேலை பெருமாள் தரிசனம்.  பெருமாள் திருக்கல்யாணம் பார்த்தது மன நிறைவு.  என்ன விசேஷம்? "

'புரட்டாசி'என்றார்.

 '
"இந்தியாவுக்குப் போறேளா?"

"இல்லை. நேபாள் போறோம். முக்திநாத். "

"டில்லி போய்த்தானே போகணும்?"

'இங்கிருந்தேயும் போகலாம். திரும்பிவரும்போது பார்க்கலாம்'னு சொல்லிட்டுப் பெருமாளிடமும் பயணவிவரம் சொல்லிக் 'கூடவே வந்து காப்பாத்தணும்'என்ற கோரிக்கையையும் வச்சேன்.

தொடரும்............:-)




நண்பர்கள் அனைவருக்கும் போகிப் பண்டிகைக்கான வாழ்த்து(க்)கள்! 

ஆஞ்சிக்கும் அலகு! ( பயணப் பதிவு 2 )

$
0
0
பெருமாள்  தரிசனமும் ஆச்சு,   ப்ரஸாதம் என்ற பெயரில் ராச்சாப்பாடும் ஆச்சு. இனி முஸ்தாஃபாவுக்குப் போகலாமுன்னு கோவிலைவிட்டு வெளியில் வந்தால் கிச்சனர் சாலை சந்திப்பில் ஒரு பெரிய ஊர்வலம் ஜிலுஜிலுன்னு விளக்குகளுடன் நகருது.  ஊர்வலமா இருந்தாலும் சாலை விதிகளை மீறக்கூடாது என்ற மக்கள்.   போறவர்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் இல்லாம இடதுபக்க ஓரமா  வரிசை கலையாமல் போறாங்க. 'மாப் மென்ட்டாலிட்டி'ன்னு  சொல்லிக்கிட்டு அட்டகாசம் செய்யலை!





 சிகப்பு விளக்கு வந்தவுடன்  பாதி ஊர்வலம்  செராங்கூன் சாலை கடந்து அந்தாண்டை, மீதி இந்தாண்டை. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். மங்கி காட் பொறந்தநாள்!   ஓ மை காட்!!!  வீரதீர பராக்ரமன்!  இந்த வீரத்தைப் போற்றும் விதமா  முதுகுலே அலகு குத்திக்கிட்டு சாமி இருக்கும் தேரை (!) இழுத்துக்கிட்டுப் போறார் பக்தர்!





சீனர்களின்  பாரம்பரியக் கொண்டாட்டத்தில் இருக்கும் ஏகப்பட்ட பண்டிகைகளில் இதுவும் ஒன்னு! சீன ட்ராகன் ஊர்வலத்தில் போகுது!  லயன் டான்ஸ் எல்லாம்  அங்கங்கே  நின்னு ஆடிக்கிட்டு  ஏற்கெனவே போயிருச்சாம்.  அடடா....  மிஸ் பண்ணிட்டேனே....  நடந்துபோகும்  சிங்கங்களைப் பார்த்தேன்....
பழக்கூடைக் காவடிகளுடன் பெண்பக்தர்கள்! முட்டாய் எல்லாம் கொடுத்துக்கிட்டே போனாங்க.

சீன ஆஞ்சி, நினைத்தால் எழுபத்தியிரண்டு  வகைத் தோற்றம் எடுக்கக்கூடியவர்!  பலவான்!  மலையையே பெயர்த்து எடுத்துக்கிட்டுப் பறக்கும் ஆற்றல் உடையவர்!  ஒரே தாவு தாவினால் அம்பத்திநாலாயிரம் கிமீ  போயிருவார்! (நாஞ்சொல்லலை.... நமக்கும் சீனங்களுக்கும் ஏகப்பட்ட  ஒத்துமை இருக்குன்னு!)

ஊர்வலம் நம்மைக் கடந்தபின் கிளம்பலாமுன்னு பார்த்தால்.... எங்கே.... அதுபாட்டுக்கு 'அனுமார் வால்'போல  நீளமா வந்துக்கிட்டே இருக்கே....  பார்த்தவரை  போதுமுன்னு நம்மவர் அவசரப்படுத்தியதால்   முஸ்தாஃபா சென்ட்டர் நகைக்கடை பிரிவுக்குப் போனோம். மகள் கேட்ட மாதிரி ஒன்னும் சரியா அமையலை.  இந்தியாவில் தேடலாம். அங்கேயும் சரியாகலைன்னா... திரும்ப இதே வழியாத்தானே ஊர் திரும்பணும். அப்பப் பார்த்துக்கலாமுன்னு முடிவு.
ஃபேரர்பார்க் ஸ்டேஷனுக்கு வந்து ரயில் பிடிச்சு  ரெண்டு இடத்தில் மாறி ஏர்ப்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். மணி பனிரெண்டாகப்போகுது.  அம்பாஸிடர் லவுஞ்சுக்குப்போய் அறைச்சாவியை வாங்கிக்கிட்டுப் போய் அலார்ம் கால் சொல்லிட்டு படுத்தாச்சு. காலை ஆறுமணிக்கு எழுந்தால் போதும்.

இந்த பாடி க்ளாக் இருக்கே...  அது தன் வழக்கத்தை சட்னு மாத்திக்காது, பாருங்க. ராத்திரி மூணரைக்கு விழிப்பு வந்துருச்சு. எங்கூரு  ஏழரை அப்போ! வைஃபை இருக்கேன்னு கொஞ்ச நேரம் வலை மேயல். சின்னதா ஒரு குட்டித்தூக்கம்..... இப்படி நேரம் போக்கிட்டு ஆறுமணிக்கு  எழுந்து  குளிச்சு ரெடியாகி  ஏழு மணி ஆகுமுன் அறையைக் காலி செஞ்சுட்டு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லவுஞ்சுக்குப் போனோம். கோபாலின் உபயத்தால் இதெல்லாம் எனக்கும் லபிக்குது :-)
காலை ப்ரேக்ஃபாஸ்ட்டா உப்புமா, வடை &  காஃபி கிடைச்சது. கொஞ்சநேரம்  கீழே போய் ட்யூட்டிஃப்ரீ கடைகளை வேடிக்கை பார்த்துட்டு எட்டு மணி  ஆகும்போது நம்ம கேட்டுக்குப் போயிட்டோம்.



கூட்டமான கூட்டம். மூணு வெவ்வேற ஃப்ளைட்டுக்கு  ஒரே கேட் வச்சுருக்காங்க. சரியா ஒன்பதுக்கு நம்ம  ஃப்ளைட் கிளம்புச்சு. ஸில்க் ஏர்!  முதல்முறையா இதுலே போறேன்.  காத்மாண்டு  போறோம். ஆமாம்.... நேப்பாளத்துலே என்ன ஆடுது?  இப்ப என்னத்துக்கு இங்கே?
ஒரு ஆறேழு வருஷமா, ஒவ்வொருமுறை இந்தியா போகும்போதும்,  இந்த 108 திவ்யதேசக்கோவில்களைத் தேடிப்போய் தரிசனம் பண்ணிக்கிட்டு வர்றோமில்லையா? போனோம் கும்பிட்டோமுன்னு இருக்காம நம்ம துளசிதளத்துலேயும் விலாவரியா கோவில் விஸிட்களை எழுதிக்கிட்டு இருக்கேன்னுதான் உங்களுக்குத் தெரியுமே!

நண்பர்களும் இன்னும் எத்தனை கோவில் பாக்கி? எத்தனை பார்த்தாச்சுன்னு அப்பப்பக் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆரம்பத்துலே நம்ம பயணங்களில்  அதுவா அமையும் திவ்ய தேசங்கள்னு ஆரம்பிச்சது, அப்புறம்  காஞ்சிபுரம், சீர்காழி, கேரளான்னு பகுதி பகுதியாப் போய் அங்கிருக்கும் திவ்யதேசக் கோவில்கள் தரிசனமுன்னு மாறி இருந்தது.

நூத்தியெட்டுன்னு சொல்றோமே தவிர கடைசி ரெண்டு இந்த மண்ணுலகில் இல்லை. மேலோகத்தில்  இருக்கு. அங்கே நாம் போனபிறகுதான் அது நமக்குன்னு சொல்றாங்க. நாந்தான் இடும்பி ஆச்சே. எனக்கொரு தனி வழி இருக்குல்லையா?  எப்ப நூத்தியெட்டு தரிசிக்கலாமுன்னு வீட்டை விட்டு  அடியெடுத்து வைக்கிறோமோ... அப்பவே  நம்ம பெருமாள் அந்த கடைசி ரெண்டை, போனஸா முதல்லேயே கொடுத்துருவார், படியில் அளக்கும்போது லாபம்னு சொல்லி அளக்கறதைப்போல :-) அதனால் மண்ணுலகில் நாம் போகும்   நூத்துயெட்டு பட்டியலில் இருக்கும் முதல் கோவில் மூணாவதுன்னு என் கணக்கு:-)

ஒருநாள் இதுவரை என்னென்ன கோவில்களை தரிசனம் செஞ்சோம், என்னென்ன போகலைன்னு கணக்கு எடுத்தப்ப, இன்னும் ஒன்பது கோவில்கள் பாக்கின்னு  தெரியவந்தது.  அதுலே ஒரண்ணம் நேப்பாள நாட்டில் இருக்கும் முக்திநாத். பாக்கி எட்டு, என்னவோ பாகம் பிரிச்சாப்லெ வட இந்தியா நாலு, தென்னிந்தியா நாலுன்னு  இருக்கே!

ஒன்னு ரெண்டு   தென்னிந்தியக் கோவில்கள்  அந்த வழியில் போயும்கூட ஜஸ்ட் மிஸ்டு:-(    இன்னொன்னு... படியேறப் பயந்துக்கிட்டுத் தள்ளிப்போட்டுக்கிட்டே வர்றது....

வட இந்தியக்கோவில்களில் ஒன்னு ரெண்டு சீஸன் அனுசரிச்சுப் போக வேண்டியவை. முக்திநாத் கோவிலும்,  குளிர் பனி ஆரம்பிக்குமுன் போய் வரணும். போக்கு வரத்து வசதிகள் அவ்வளவாகப் போறாது.

நம்ம லதானந்த் ஸார் இருக்காரே... அவர் 108 திவ்யதரிசனங்களை முடிச்சு ஒரு புத்தகம் கூட வெளியிட்டு இருக்கார்.  பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை என்று பெயர். அனுபவப்பட்டவரிடம் கேட்டுக்கலாமேன்னு  அவருக்கு மடல் அனுப்பி விசாரிச்சேன்.  நாம் போக வேண்டிய கோவில்களுக்கான பகுதிகளை எடுத்து அனுப்பினார். படிக்கும்போது  ஐயோ... கொஞ்சம் கஷ்டப்படுவோம் போலிருக்கேன்னு தோணுச்சு.

இன்னும் கொஞ்சம் அவரிடம் விளக்கங்கள் எல்லாம் கேட்டுக்கிட்டேன்.  கூடுதலா சில நாட்களை இதுக்குன்னு ஒதுக்கி வச்சுக்குங்க. போனோம் வந்தோமுன்னு  இருக்கமுடியாது. போறதுக்கே நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்து  ஒரு ரெண்டு நாளோ, இல்லை  நாலைஞ்சு நாளோ கூட ஆகலாமுன்னு சொல்லி இருந்தார்.

ரொம்பச்சரி. முக்திநாத் பயணம்  அந்தக் காலத்துலே இன்னும் ஆபத்தானதாத்தான் இருந்து இருக்கணும். அதனாலேயே போனாப் போனதுதான், முக்தி கிடைச்சுருமுன்னு  இப்படிப் பெயர் வச்சுட்டாங்க போல!  நம்ம திருமங்கை ஆழ்வார் போய், பெருமாளை தரிசனம் செஞ்சு , பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்ச கோவில்களில்  இதுவும் ஒன்னு.  இப்படி ஆழ்வார்கள்  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்த கோவில்கள்தான்  இந்த திவ்யதேசக் கோவில்கள் என்னும் பட்டியலில் இருக்கு.  இப்படியாப் பட்ட கோவில்களில்  இங்கே முக்திநாத் மட்டும் அவர் கிளம்பி வந்தும் கடைசியில் கோவில்வரைபோக முடியாமல், சாளக்ராமம் என்னும் இடத்தில் இருந்து பெருமாளை மனக்கண்ணால் தரிசனம் செஞ்சு  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்ய வேண்டியதாப் போயிருக்கு! ப்ச்.... பாவம்...நம்ம திருமங்கை.

முக்தி முக்தின்றாங்களே.... ஒரேடியா  போயிட்டா....   என்ற நினைப்பும் வரத்தான் செஞ்சது.  போற இடம் கடல் மட்டத்தில் இருந்து உசரம் கூடுதல். காலநிலை வேற சரி இருக்காது. நமக்கோ ஆஸ்த்மா.....  அதுபாட்டுக்கு இழுத்துக்கிட்டுக் கிடந்தால்..... பாவம் நம்மவர் என்ன ஆவார்?

பயணத்திட்டங்கள் உருவாகி வரும்போதே மனசு பலகணக்குகளைப் போட்டுக்கிட்டு இருந்தது உண்மை.  முதலில் கொஞ்சம் விலை உயர்ந்த (!) நகை நட்டுகளை பயணத்துலே பயன்படுத்த வேணாம் என்ற ஞானம் பிறந்தது. அதுக்காக மூளியாப் போகவும் முடியாதுல்லையா?  சுமாரான, மகளுக்குப் பிற்காலத்துலே பயனில்லாதவைகளாப் பார்த்து ஒன்னு ரெண்டு எடுத்துப் போட்டுக்கிட்டேன்! மறக்காமல்  சங்கும் சக்கரமும் கைகளில்  ஆச்சு :-)

லாக்கர், உயில் விவரங்களை மகளுக்குச் சொல்லியாச்சு.  செடிகொடிகளை எப்படிப் பார்த்து என்னென்ன நாளுக்கு தண்ணீர் ஊத்தணும், ரஜ்ஜுவை எப்பப்பப்போய் பார்த்துட்டு வரணும் என்றெல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தேன்.

இங்கே போய்வர காலநிலை நமக்கு சாதகமா இருப்பது செப்டம்பர் அக்டோபர் மாதங்கள்னு சொல்லி இருந்தாங்க. அதிலும் தீபாவளிக்கு முன்னால் போய்வரணும். நாம் தனிப்பட்ட முறையில் போறோம்.  அதனால் டூரிஸ்ட்கள் கூட்டம் அதிகம் இல்லாத காலமாகவும் இருக்கணும் என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் பயணத்திட்டம் போட்டுக்கிட்டு இருந்தார் நம்மவர்.

2016 ஜனவரியில்தான் ஊருக்குப் போயிருந்தோம். இப்ப செப்டம்பரிலேயே போகணுமா.... பேசாம வர்ற செப்டம்பருக்குப் போனால் என்னன்னு ஒரு யோசனை.

 "வேணாம்.  இன்னும் வயசாகிரும்."

"ஒரு வருசத்துலேயா? "

'ஒரு வருசமுன்னா ஒரு வருசம். கொஞ்சம் கையும் காலும் நல்லா (!) இருக்கும்போதே போயிட்டு வரணும் 'என்றார். அதுவும் உண்மைதான். உடல்நிலை ஓரளவு நல்லா இருக்கும்போதே பயணம் செய்வதுதான் நல்லது.
இப்ப ரெண்டு மாசத்துப் பயணத்திட்டம். முதலில் நம்ம டாக்டரைப் பார்த்து,  வழக்கமா எடுத்துக்கும் மருந்து வகைகளை  மூணு மாச ஸ்டாக் எழுதி வாங்கிக்கிட்டோம். அப்பதான்,   உயரம் அதிகமாவும், பிராணவாயு கம்மியாகவும் இருக்கும் இடத்துக்குப் போறதால் ஆஸ்த்துமாகாரிக்கு எதாவது ஆகிட்டால் என்ன செய்யறதுன்னு  அதுக்கான  விசேஷ மருந்து எடுத்துக்கணுமான்னு கேட்டார் நம்மவர்.  'அது என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டுச் சொல்றேன்'னு  சொன்னாங்க டாக்டரம்மா.  நாட்டை விட்டுக் கிளம்பும் வரை  ஒன்னுமே சொல்லலைங்கறது வேற விஷயம்....  :-(

இங்கே நியூஸியில் டாக்டருங்க அப்படி சட்னு மருந்து எழுதிக் கொடுத்துறமாட்டாங்க. கூடியவரை மருந்து தர்றதையே தவிர்ப்பாங்க. நம்மூர்போல டாக்டர் க்ளினிக் போனால் ஊசி போட்டுக்கறது என்றதெல்லாம் இங்கே இல்லை.  எங்க மாமியாருக்கு  டாக்டர்னா ஊசி போடணும். வெறும் மருந்து எழுதிக்கொடுத்தா.... நல்ல டாக்டரே இல்லைன்னு சொல்லிருவாங்க :-)

அப்புறம்... குளிருக்கான ஆடைகள், ஜாக்கெட்டுகள் பொதி தயாராச்சு.  லைஃப் ஸேவர்னு நான் பெயர் சூட்டியிருக்கும் தெர்மல் உள்ளாடைகள் கொஞ்சம் கட்டாயம் கொண்டு போகத்தான் வேணுமுன்னார் நம்மவர். அவர் கவலை அவருக்குன்னா என் கவலை எனக்கு.....   போன பயணப்பதிவே இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருக்கு. இதுலே நடுவுலே ப்ரேக் போட்டால் எப்படி?  தொடரும் வரணும். ஆனால் தொடரே வேலையாக இருக்கவும் முடியாது.  வாரம் மூணுன்னு இருப்பதைக் குறைந்தபட்சம் வாரம் ஒன்னுன்னு  வெளியிடலாமேன்னு ஒரு பத்துப் பதிவுகளை எழுதி,  படங்களோடு   ட்ராஃப்ட்டில் போட்டு வச்சேன். எல்லாம்  அங்கங்கே கிடைக்கப்போகும்  நெட் கனெக்‌ஷனைப் பொறுத்துத்தான்... க்ருஷ்ணார்ப்பணம்.......

சொல்ல மறந்துட்டேனே....  காலணி?  மலை மேல் ஏற (!)  பொருத்தமான ஷூஸ் கொண்டு போகணுமாம். சரியாப் போச்சு.  என்னோட வாக்கிங் ஷூ போதாதா? தாராளம். ஆனால் இது கொஞ்சம் விலை கூடியது. சமீபத்துலே வாங்குனது. அதுக்கென்னன்னால்....   மலைப்பகுதிப் பயணம் முடிச்சதும் தூக்கிப்போட்டுட்டு வந்துடணுமாம். அது வேற கனமா ஏன் தூக்கிக்கிட்டுன்னு வாதம் பண்ணறார். கஞ்சத்தனம் எனக்கு.... மனசே வரலை.

பேசாமக் கொஞ்சம் (!) மலிவானது ஒரு ஜோடி வாங்கிக்கிட்டுப் பயன் முடிஞ்சதும் தூக்கிப் போட்டுடலாமுன்னு  இங்கே  ஒன்னு வாங்கினேன். காலுக்குப் பழகட்டும். கடிச்சு வைக்கப்போகுதுன்னு  ஒரு மாசமா வீட்டுக்குள்ளே போட்டு நடந்தேன். புதுசு அதனால் பாதகமில்லை :-)  நம்மவர்  அவருடைய ஷூவையே  கொண்டு வருவாராம்.

நேப்பாள் முடிச்சுட்டு இந்தியாவில் உள்ளூர் விமானங்களில் போகும்போது,  எடைப்பிரச்சனை உண்டு என்பதால்  சின்னப்பொட்டிகள் மட்டும் கொண்டு போகணும் என்ற முடிவு. அதுலேயும்  கொஞ்சநஞ்ச எடை அதிகமானால்  நிறைய பணம் கட்டணுமாமே.... அதுக்காக ஒரு அஞ்சு கிலோ கூடுதல் எடைக்கான காசை இப்பவே கட்டிட்டால்  மலிவு (?) என்று பார்த்து அதே போல முழுப்பயணத்துக்கும் இந்தியாவில் உள்ளூர் விமானங்களுக்கு டிக்கெட் புக் பண்ணி பணமும் கட்டினார்.

நேப்பாளத்துக்குத் தனி ஏற்பாடு. இதோ இவ்வளவும் சொல்லி முடிக்கறதுக்குள்ளே விமானம் தரை இறங்கற நேரம் வந்துருக்கு.  தூரத்தே இமயமலைத் தொடர்கள்.  என்னென்ன சிகரங்கள் தெரியுதுன்னு  விமானி சொல்வார்னு எதிர்பார்த்தேன்.  ஊஹூம்.... கப்சுப்.  விமானப்பயணங்கள் அபூர்வமா இருந்த காலங்களில்  கண்ணில் தெரியும் காட்சிகளை பைலட் விவரிப்பதைப் பார்த்துருக்கேன். இப்போ... விமானப்பயணம்  பஸ்பயணம் போலவும், விமான நிலையங்கள் பஸ் ஸ்டாண்டு போலவும் ஆகிக்கிடப்பதால்...  யாரும் எதையும் சட்டையே செய்யறதில்லை.....
ஆனாலும் கண்ணில்பட்ட சிகரங்களை விடாமல் க்ளிக்கினேன்.  அப்புறம்தான் தெரியவந்தது  எவெரெஸ்ட் நம்ம கெமெராவில் விழுந்துருக்குன்னு!  அடுத்த பத்தாவது நிமிட்டில் பொட்டிபொட்டியா வீடுகள். மலைச்சரிவில் இருக்கோ?
அப்புறம்   மேலே இருந்து பார்க்கும்போது  சரியான ரோடெல்லாம் இல்லாமல் வீடுகளோ வீடுகளைக் கொட்டி வச்சுருக்காங்க..  எல்லாம் அநேகமா நாலுமாடிக் கட்டிடங்கள்.  ஊருக்கு நடுவில் ஓடும் ஆறுடன் காத்மாண்டு நகரம் !


சிங்கையில் இருந்து அஞ்சேகால் மணி நேரப்பயணம் இது.

தொடரும்..........:-)


Viewing all 1446 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>