போனவருஷம் எத்தனை பதிவுன்னு போய்ப் பார்த்தால் வெறும் பத்து :-(
என்ன நடந்துச்சுன்னு சொல்லாமலேயே வருஷம் போனால் நல்லாவா இருக்கு ? அதான் முக்கியமா என்னென்ன நடந்துச்சுன்னு ( நிலநடுக்கம் & கோவிட் தவிர) கோடி காமிச்சுட்டு நடப்புக்கு வரலாமுன்னு.....
வீட்டுக்குள் அலங்காரம் பண்ணலாமுன்னு ஆரம்பிச்சு ஜனவரியில் பொங்கலாச்சு. அதுக்கு ரெண்டுநாள் முதலே நம்ம ஆஞ்சிக்குப் பொறந்தநாள் கொண்டாட்டம். அப்புறம் பொங்கல் சிறப்பு உடையலங்காரம் நம்ம பசங்களுக்கு!
நம்ம பதிவர் சங்கீதா ராமசாமிதான் உடைகளை அனுப்புனாங்க. ஜன்னுவுக்கு மட்டும்தான். கிச்சாவுக்கு ரெடிமேட் கிடைக்காது. குட்டியூண்டா இருக்கானே ! (வளரவே இல்லை பாருங்க ! ) நானே தைச்சுப்போடறதுதான் வழக்கம். அப்படியே ஆச்சு .
வீக் எண்ட் வரட்டுமுன்னு காத்திருந்து நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்துப் பொங்கல் விழாவில் பெரியவளா லட்சணமா அடுப்பைப் பத்தவச்சுப் பாலை ஊத்தினேன். அரிசியும் சேர்த்தேன். கூடவே வெல்லமும் நெய்யும் :-)
மாசக்கடைசியில் தைப்பூசத்திருவிழா!
பால்குடமும் காவடியுமா அமர்க்களம்தான் போங்க ! முக்கிய விருந்தினராக நம்ம நியூஸி நாட்டு அமைச்சர் (நம்ம தொகுதிதான் ) வந்துருந்தாங்க. கொஞ்சம் பொங்கல் பற்றித் தனியா விளக்கம் சொன்னதும், அவுங்க பேச்சில் பொங்கலின் சிறப்பைப் பற்றிச் சொன்னாங்க. (என்ன இருந்தாலும் அரசியல் வியாதி இல்லையோ ! )
ஃபிப்ரவரியிலே இன்னொரு சமாச்சாரமா மகளின் திருமணநாள் & நம்ம பொறந்தநாள். அடுத்தடுத்த தினங்களில் என்பதால் மகளுக்கு முன்னுரிமை கொடுத்தேன். இங்கே புதுசா ஆரம்பிச்சுருந்த Catnap Cafe வில் போய் அங்கிருக்கும் பூனைக்குட்டிகளைக் கொஞ்சிட்டு அங்கேயே காஃபி & கேக் சாப்ட்டுட்டு, இன்னொரு இடத்தில் போய் ஐஸ்க்ரீம்னு ...........
ஒரு அம்பதறுபது பூனைக்குட்டிகள் ! ஜாலியோ ஜாலி :-)
பரிசு ஒன்னும் இல்லைன்னு சொல்லக்கூடாது..... ஒரு கார் வாங்கினோம். பஸ்ஸுலே போய் கார் டெலிவரி எடுத்துக்கிட்டு வந்தோம். நமக்கு சீனியர் சிட்டிஸன் கார்டு கொடுத்துருக்காங்க. இதைக் காமிச்சு பேருந்துப் பயணம் இலவசமாப் போகலாம்.
இங்கே எங்கூரில் வருஷாவருஷம் Culture Galore என்ற விழா நடக்கும். ஏகப்பட்ட Ethnic Communities இருக்கும் நாடு என்பதால் பலவிதமான கலைகலாச்சார நிகழ்ச்சிகளை ஒருக்கிணைச்சு நடத்துது நம்ம சிட்டிக் கவுன்ஸில். அங்கே நாம் போனப்ப, அவுங்கவுங்க மொழியில் எப்படி வரவேற்பீங்கன்னு எழுதச் சொன்னாங்களா..... நான் தமிழ் மொழியை அறிமுகப்படுத்திட்டு வந்தேன்.
ஒன்னுமே நடக்கலைன்னு நினைச்சு இப்போப் பார்த்தால் ஏகப்பட்டவை நடந்துருக்கே !
மீதி இன்னொரு பதிவில் பார்க்கலாம் !
