Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1440

கோபாலபுரம் விஸிட்!

$
0
0
பொழுது விடிஞ்சதும் இன்னும் எத்தனைநாள் இங்கே இருக்கப்போறோம்னு மனசு கணக்குப் போட்டது. எண்ணி ஆறே நாட்கள். முதலில் கண்ணாடியைச் சரி செஞ்சுக்கணும். கடைகள் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க என்று நினைச்சதால், ஸ்ரீ வேணுகோபாலனைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துடலாமேன்னு கிளம்பினோம். கிளம்பி ஒரு அஞ்சு நிமிசத்தில், இவர் கடைக்குப் போன் போட்டுப் பார்க்கிறேன்னார். அட! கடை திறந்துருக்காம். சட்னு வண்டியைத் திருப்பச்சொல்லி கடைக்குப்போயிட்டோம். இது நம்ம தி. நகர் ராகவேந்த்ரா மடத்தின் கோவிலுக்கு அடுத்தது.

 கண்ணாடியை வாங்கிப் பார்த்தவர், உள்ளே கொண்டு போய், ரெண்டாம் நிமிசம் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்தார்! ஃப்ரேமை சரி செஞ்சுட்டாங்க. வில்லாதி வில்லர்கள்! வந்ததுதான் வந்தோம், பக்கத்து மடத்தில் ஒரு நிமிட் கண்ணனைப் பார்த்துட்டு போயிடலாம். வழக்கம்போல் அழகா நிக்கறான், கையில் குழலோடு! நல்லா இருடா. நான் கோபாலைப் பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு கோபாலபுரம் பறந்தோம்.

 மார்கழி மாசம் காலை ஒன்பதுக்குக் கோவிலை மூடிருவாங்க. அதான் இந்தப் பயணத்தின் ஆரம்பத்தில், வருசக் கடைசி (2013 டிசம்பர் 31 )நாள் போய் மூடுன கோவிலைப் பார்த்துட்டு வந்தோமே:( இன்றைக்கு(ம்) விடக்கூடாதுன்னு தான்...... ஒன்பதடிக்கப் பத்து நிமிசம் கோவிலுக்குள்ளே போயிட்டோம். அதுக்குள்ளே கோபுரவாசல் கதவுகளில் ஒன்னு மூடிக்கிடக்கு.


 சின்னக்கோவில்தான். ஆனால் அழகோ அழகு! கருவறையில் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி, பின்புலத்தில் பசு நின்னுருக்க, குழல் ஊதிக்கிட்டு இருக்கார். உத்துப் பார்த்தேன். கைகள் நாலு!!! சதுர்புஜம். பின் கைகள் சக்கரம், சங்கு ஏந்தி இருக்கின்றன. முன் கைகள் வாசிப்புக்கு. பிரகாரம் முழுசும் சின்னச்சின்னதா சந்நிதிகள். சட்னு கைகளில் எடுத்து விளையாடலாம் போல குட்டியான சிலைகள்.

 பெருமாள் கோவில் என்றாலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், காமாக்ஷி அம்மன், நந்தி இருக்காங்க. அந்தப் பக்கம் மரத்தடியில் ஒரு புள்ளையார். அவருக்கு அடுத்ததா முருகன், தன் துணைவி &இணைவியுடன்! .

ஆதிசங்கரருக்கும் ஒரு இடம். ராமர் கூட்டம் ஹனுமனோடு ஒரு சந்நிதியில். இன்னொரு வராந்தா போலுள்ள இடத்தில் மஹாவிஷ்ணு, லக்ஷ்மிநரசிம்ஹன், லக்ஷ்மிவராஹமூர்த்தி ன்னு சின்னச் சிலைகளும் அய்யப்பனும்!

 இன்னும் விஷ்ணுதுர்கை, இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தின்னு முப்பெரும் சக்திகள், தக்ஷிணாமூர்த்தி!!! போதாக்குறைக்கு நவக்ரஹங்கள் வேற!!!!

 அடடா.... எல்லோரும் ஒருசேர வந்துருக்காங்களேன்னு அதிசயம்தான்:-)

 இந்தக் கோவிலால்தான் இந்தப்பகுதிக்கு கோபாலபுரம் என்ற பெயரே வந்துருக்கு. கோவிலுக்கு வயசு 94!!!! 1920 வது வருசம் தான் கோவிலின் ஆரம்பம். கோவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தனியார் கோவில் கமிட்டி வசம்.

 மார்கழி தவிர, மற்ற மாதங்களில் காலை அஞ்சரை முதல் பத்து, மாலை அஞ்சு முதல் ஒன்பது. மார்கழி மாசத்தில் காலை நாலரை முதல் ஒன்பது. மாலை அஞ்சு முதல் எட்டு. இவைதான் கோவில் திறந்திருக்கும் நேரங்கள். ஆஃபீஸ் டைமில் சாமிக்கு வேற வேலை இருக்கோ! அவரும் ஆஃபீஸ் போயிட்டு டாண்னு அஞ்சு மணிக்கு வந்திருவார். நமக்கும் காலை பத்துமணிக்குப்பின் வெயிலில் அலைய வேணாம்.

 ஒரு ஹிந்துப் பண்டிகை விடாமல் கோவிலில் கொண்டாடறாங்க. அதான் எல்லா சாமிகளும் ஒன்னாவே இருக்கே! மார்கழி உற்சவத்தையும் விடுவதில்லையாம்!

 மனம் நிறைஞ்ச தரிசனம். இன்னிக்கு வேற ஏதோ வேலையாக் கோவிலுள்ளே என்னமோ செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நமக்கு அடிச்சது ச்சான்ஸ். யாரும் யாரையும் விரட்டலை. நின்னு நிதானமா ஒவ்வொரு சந்நிதியா தரிசனம் ஆச்சு. உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் வெளியே வந்து கோபுரத்தைக் க்ளிக்கிட்டு அப்படியே தலையைத் திருப்பினால்......... முன்னால் ஒரு வெள்ளை மாளிகை. அதுதான் திமுக தலைவர்/முன்னாள் முதலமைச்சர் வீடாம். கிளிக்கிட்டு வண்டியில் ஏறி உக்கார்ந்தோம். கையைக் காட்டியபடி பறந்து வந்தார் செக்யூரிட்டி. வீட்டைப் படம் எடுக்கக்கூடாதாம். ஓக்கேன்னேன். ஆசுபத்திரியாகப் போவது இந்த வீடுதானே? 

சின்னதா அழகான மூணுநிலைக் கோபுரம். பெருமாள் கோவில் திருமண் சின்னம் இல்லாமல் சிவன் கோவில் போல 'ஓம்'இருக்கு! ஓம் ஓம் !


மேலே: சுட்டது.


விரும்பியோ விரும்பாமலோ தினம் தினம் கோபுரதரிசனம் கிடைக்குது பாருங்க, அவருக்கு! அதான் பெருமாளின் அனுக்ரஹத்தால் நீண்ட ஆயுள் கிடைச்சுருக்கு. நேத்து பொறந்த நாளாமே! நல்லா இருக்கட்டும். இன்னும் பத்து வருசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தால் ஆயுசு நூறு!

 அங்கிருந்து கிளம்பி, உயிர்த்தோழி வீட்டில் இருக்கும் 'எனக்கு'ஒரு வணக்கம் போட்டுட்டு கபாலியை தரிசிக்கப் போனோம். தோழி ஊரிலில்லை:( தோட்டம், சுத்தமான பராமரிப்பில்!

 மயிலை திருக்குளம் பரவாயில்லைன்னு சுத்தமா இருக்கு. தெப்பத் திருவிழா வருதாம். பெரிய ட்ரம்களைக் கயிறுகளாலும் சவுக்குமரக் கட்டைகளாலும் பிணைத்து தெப்பம் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. இது ஒன்னும் சுலபமான வேலை இல்லையாக்கும். சரியாக் கட்டலைன்னா...சாமிக்குக் கஷ்டம்:(














மணி மதியம் பனிரெண்டேகால்.  கயிலையாம் மயிலைக் கோவிலை மூடிட்டாங்க. பலமுறை வந்துருந்தாலும் ஆனாலும் இந்தக் கதவு இன்றுதான் கண்ணில் பட்டது. அழகா இருக்கே!!!


சரவணபவனில் போய் லஞ்சை முடிச்சுக்கிட்டு நிதானமா கிரி ட்ரேடர்ஸ்க்குப் போனோம். சின்னதா ஒரு பர்ச்சேஸ். சாமி புத்தகங்கள்.

 அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு. இன்னிக்கு மாலை ஒரு விசேஷ நிகழ்ச்சி இருக்கு. வாங்க எல்லோருமாப் போய் அரங்கை நிறைப்போம்:-))))

 தொடரும்...........:-)

Viewing all articles
Browse latest Browse all 1440

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>