Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1438

மில்லியன் டாலர் வ்யூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 58)

$
0
0
இங்கெதானே அவுங்க இருக்காங்க. ஒரு பத்து நிமிசம் பார்த்துட்டுப் போயிறலாமான்னு ஆரம்பிச்சவர் கோபால்தான்.  நேரங்கெட்ட நேரத்துலே போவதான்னு  மனசு கேட்டாலும்,  போனமுறை கூட அவுங்களைப் பார்க்கமுடியாமல் போச்சு. அதனால் எட்டிப் பார்த்துட்டே போகலாமுன்னு துணிஞ்சு  அவுங்களுக்குப் ஃபோனைப்போட்டேன். அதுக்குள்ளே நாம் சொன்ன  அடையாளத்துலே கொண்டுபோய் வண்டியை நிறுத்திட்டார் நம்ம சீனிவாசன்.

"எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்க்க வரலாமா?"

"நல்லா இருக்கோம் துளசி. எப்ப வர்றதா இருக்கீங்க? "

"இப்பதான். வசதிப்படுமா?"

"இப்பவா.............   சாயங்காலம்  வந்தீங்கன்னா..........  "

அதுக்குள்ளே பிள்ளையைக் கிள்ளியவர்  தொட்டிலை ஆட்ட ஆரம்பிச்சிருந்தார்.  "அவுங்களுக்கு  வசதிப்படலைன்னா  அடுத்தமுறை பார்க்கலாம்மா."

அதை அப்படியே ஒப்பிச்சேன்.

'இன்னும் மூணு கோவில்கள் பாக்கி இருக்கே அதுக்கு நேரம் வேணாமா....  பார்க்கலாம் அடுத்த பயணத்தில்'பக்கத்தில் இருந்து  பிரசங்கம்  ஆரம்பிச்சுருக்கு.

"அடடா...   இப்ப எங்கே இருக்கீங்க? "

  "உங்க பில்டிங் வாசலில்தாம்ப்பா..."

வீட்டு எண்ணைச் சொன்னதும்  லிஃப்டில் மாடிக்குப்போய்ச் சேர்ந்தோம். கடைசியா பார்த்தது  ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னே!

தங்க்ஸ்ம், ரங்க்ஸ்மா  வரவேற்று உள்ளே கூட்டிப்போனாங்க.


கயிலை தரிசனம் கண்டு வந்தவங்களைப் பார்த்தாலே   நமக்குப் புண்ணியம் கொஞ்சம் சேருமாம்!  என்னால் எல்லாம் கயிலைவரை போக முடியாது.  இங்கேயே இப்படிச் சேர்த்தால்தான் உண்டு.

ரெண்டுபேருக்கும் ஒரு அஞ்சு வயசு கூடி இருக்கே தவிர வேற மாற்றம் ஒன்னும் இல்லை முகத்தில் இருக்கும் களைப்பைத் தவிர.

'எதுக்குச் சாயங்காலம் பார்க்கலாமுன்னா  எதாவது  டிஃபன் செஞ்சு  வைக்கத்தான்'னு சொல்லிக்கிட்டே   பெரிய  அடுக்கு ஒன்னில் இருந்து லட்டுகளை எடுத்துத் தட்டில் வச்சு விளம்புனாங்க  நம்ம கீதா.

நமக்கு டிஃபனாங்க முக்கியம்? (லட்டு போதுமே!ஹிஹி)

வீடு மாறிப் போகப் போறாங்க. சிலநாட்களுக்கு முன்னேதான் க்ரஹப்ரவேசம் நடந்துருக்கு.  இன்னும் அந்த வீட்டில் வுட் ஒர்க் முடியலை.

கொஞ்ச நேரம் மற்றவிஷயங்களை (!) விவரிச்சுக்கிட்டு இருந்தோம்.  முக்கியமா நம்ம பயணம் & அவுங்க புது வீடு.

புதுவீடு ரொம்ப தூரமோன்னு கேட்டதுக்கு  ஜன்னல்கிட்டே கூட்டிப்போய்  அதோன்னு  காமிச்சாங்க.  இதே பில்டிங்கில்  இப்ப இருக்கும் ஃப்ளாட்டுக்கு நேர் எதிரா  அடுத்த பகுதியில் இருக்கு:-)


பிறகு அங்கே போய் வீட்டைப் பார்த்தோம்.  அறைக் கதவுகளைத்  திறந்ததும் (மாடி என்பதால் )காத்து அப்படியே  இதமா பிய்ச்சுக்கிட்டு போகுது:-) மரவேலைகள்  செஞ்சு முடிக்க  சரிவர ஆட்கள்  கிடைப்பதில்லையாம்:(   வேலையை ஆரம்பிச்சு வச்சுட்டு இதோ அதோன்னு  சாக்குச் சொல்றாங்களாம்.

மொட்டை மாடிக்குப்போனோம்.   மில்லியன் டாலர் வ்யூ அங்கேதான்!  ஒருபுறம்  தென்னைமரக்கூட்டங்களுக்குப் பின்னே ரெங்கனின் ராஜகோபுரம். இன்னொரு புறம் காவிரி, அடுத்தபக்கம் தாயுமானவர். மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்  இப்படி அட்டகாசமா  இருக்கு!  புது டிஸைன் 'இரும்பு மரங்கள்'வேற அங்கங்கே தென்னைகளுக்கிடையில்.:( பேசணுமே.... பேசணுமே....

'வேலையில் இருந்து ரிட்டயர் ஆனதும் இந்தியாவில் போய் செட்டில் ஆகணும் 'என்று எப்போதும் மனசின் மூலையில் ஒளிஞ்சிருக்கும் ஆசை மெல்லத் தலை தூக்கியது நிஜம். ஒரு விநாடிதான்.  சமாளிச்சுக்கிட்டேன்.  தலையில் ஒரே போடு!  ஆசையே துன்பத்திற்குக் காரணமாமே!



ஶ்ரீரங்கத்தில் தங்கினால் அலைச்சல் இல்லாமல் இருக்குமே, ரெங்கனைச்சுத்த  நேரமும் கிடைக்குமேன்னு பயணம்  ஆரம்பிக்கும்  முன்னாலேயே  நம்ம வெங்கட் நாகராஜிடம்  தங்க நல்ல ஹொட்டேல்ஸ் விவரம் கிடைக்குமான்னு கேட்டுருந்தேன்.  அவரும் தமிழக அரசு  கொள்ளிடக்கரையில் ஒரு  பெரிய தங்கும்விடுதி  அமைத்திருப்பதைச்  சொல்லிட்டு,  தனியார்  விடுதிகளைப் பற்றி  நம்ம ரிஷபன் சாரிடம்கேட்டுச் சொல்றேன்னார்.  உள்ளூர்க்காரருக்கு இன்னும் விவரம் அதிகம் இருக்குமில்லையா?




நம்ம ரிஷபன் சாரும்  ராமானுஜகூடம் என்பதையும், வாமனா ராயல்ஸ் என்பதையும் குறிப்பிட்டு மடல் அனுப்பினார்.  ஹொட்டேல் ரிவ்யூ பார்த்தபோது,  ராமானுஜகூடம் பற்றி ஒன்னும் இல்லை.  வாமனா ராயல்ஸ் ரிவ்யூ பார்த்துட்டுக் கதி கலங்கிட்டார் நம்ம கோபால்.  'எதுக்கு இப்படி ரெங்கன் ரெங்கன்னு படுத்தறே.  திருச்சியிலேயே தங்கலாம்.   உனக்குக் காலையில்  அஞ்சுமணிக்குக் கோவிலில் இருக்கணுமுன்னா  நான் கூட்டிப்போறேன். அதான் காரும் ட்ரைவரும் நம்மோடு இருக்காங்களே'ன்னு என் வாயை  அடைச்சுட்டார்:(

அதே மாதிரி கூட்டிப்போனாரோ?  ஊஹும்.....  தேர்  எங்கே காலையில்  நகருது? காலையில் நம்ம ஆண்டாள் காவிரியில் இருந்து அபிஷேகத்துக்கு நீர்  கொண்டுவரும் அழகைப் பார்க்கணுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கேன்.
இதைப்பற்றி ஒரு பாட்டம் கீதாவிடமும் புலம்பினேன். இன்னும் ரெண்டொரு நாளில் நம்ம வல்லியம்மா  ஸ்ரீரங்கம் வர்றாங்கன்னு பேசிக்கிட்டு இருக்குபோது அவுங்க தங்கப்போகும்  ஹொட்டேல் ஹயக்ரீவா இங்கே பக்கத்தில்தான் இருக்குன்னதும்  எப்படி இருக்குமுன்னு நேரில்பார்த்துத் தெரிஞ்சுக்கலாமேன்னு தோணுச்சு.


பாவம்   கீதா வேற அன்றைய சமையலையே செஞ்சு முடிக்கலை. நாங்க வேற பத்து நிமிட்ன்னு சொல்லி கிட்டத்தட்ட  முக்கால்மணிவரை ப்ளேடு போட்டுட்டோம்.   அங்கிருந்து கிளம்பி  ஹயக்ரீவா போய்ப் பார்த்தோம்.
பேஸிக்கா இருந்தாலும்  நல்லாவே இருக்கு.

அடுத்த பயணத்தில் இங்கேதான் தங்கப்போறேன்.  கோபால் வேணுமுன்னா திருச்சியில் தங்கிக்கட்டும்!  அதிகாலையில் ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு நேராக் கோவில்தான்.  ஹைய்யோ....  நினைக்கும்போதே இனிக்குது.


பனிரெண்டே முக்காலுக்குச்  சங்கம் வந்து சேர்ந்தோம். கலெக்ட்டர் ஆஃபீஸ் ரோடுலே  இருக்கு நம்ம ஹொட்டேல். கார்கில் போரில் உயிரிழந்த மேஜர் சரவணன் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்  அமைச்சுருக்காங்க.  இதைச் சுற்றித்தான் சாலையில் போறதும் வாரதுமா  இருந்தோம். இவருக்கு  வீர்சக்ரா விருது அளித்து பெருமைப்படுத்தி இருக்கு இந்திய அரசு. வெறும் இருபத்தியேழே வயசு. பெற்றோர்களை நினைச்சால்  மனசே கலங்கிப்போகுது.



வரவேற்பு வாசலில் இருந்த  சங்கம் பணியாளர்  சிரித்தமுகமா  'தரிசனம் நல்லாக் கிடைச்சதா?'ன்னு விசாரிச்சார். காலையில் அவரிடம்தான் நம்ம் சீனிவாசன் வழி எல்லாம் கேட்டு வச்சுருந்தாராம்.  அவரிடம் இன்னும் சில கோவில்களுக்கு வழி கேட்டுக்குங்கன்னு  சொல்லிட்டோம். கோபாலும் அவரிடம்  தெளிவுபடுத்திக்கிட்டார்.  அறைக்குப்போனோம்.  அடுத்த அறை அரசியல் வியாதிகள் காலி செஞ்சுட்டாங்க போல....  படைகளைக் காணோம்!

இவருடைய பெயரைத்தான்  எப்படியோ மறந்துட்டேன்....  சக்திவேல் என்று லேசா நினைவு.  மனசில் எங்காவது ஒளிந்திருக்கும் பெயர் ஞாபகம் வரும்வரை  அவர் சக்திவேலாகவே இருக்கட்டும்!


பகல் சாப்பாடு ரூம் சர்வீஸில்.  ஒரு தாலி மீல்ஸ் போதுமுன்னு சொன்னேன்.  கூடவே ரெண்டுலஸ்ஸி. ஒரு மூணு ஆள் சாப்பிடும்  அளவுக்கு சோறு அனுப்பி வச்சுடறாங்கப்பா.  எல்லாம்  கடைசில் வீணாகுது:(

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  மதியம்  மணி மூணுக்குக் கிளம்பிட்டோம். காவிரிப்பாலம் கடந்து கிழக்கு நோக்கி ஒருமணி நேரப்பயணம். கிட்டத்தட்ட 35  கிமீ.  ஒரு கல்யாண நிச்சியதார்த்தம் !

தொடரும்.........:-)




Viewing all articles
Browse latest Browse all 1438

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>