நம்ம சுஜாதா வாசகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயராக இருக்கும் இந்த அம்மா மண்டபத்தை எத்தனையோ முறை கடந்து போயிருந்தாலும் உள்ளே போய்ப் பார்க்க சந்தர்ப்பமேகிடைக்கலை இதுவரை.
திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வரும்போது காவிரிப்பாலம் கடந்து கொஞ்சதூரத்துலே லெஃப்ட் எடுத்தால் அது அம்மாமண்டபம் ரோடு.
காவிரியை ஒட்டியே போகும் இந்த சாலையில் ஒரு ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் லேசான ஒரு வளைவு வலதுபக்கம். மீண்டும் ஒன்னரை கிலோ மீட்டர்தான். நேரா ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போயிருது. இந்த வளைவில்தான் இருக்கு அம்மாமண்டபம்.
ஸ்ரீரங்கம் போகும்போது ரெங்கா ரெங்கான்னு ஒரே ஓட்டம் . திரும்பி வரும்போது நல்லா இருட்டிப் போயிரும். இப்பப் போய் எப்படின்னு இருந்துருவேன். இந்தமுறை வசமா நேரம் ஆப்டது.
காவிரி நதிக்குப்போகும் படித்துறைதான் இது. மண்டபம் கட்டி விட்டுருக்காங்க. ஒரு காலத்துலே திறந்த மண்டபமா இருந்த இதை, இப்போ இரும்புக்கேட் வேலி போட்டு ராத்திரிகளில் மூடி வச்சுடறாங்களாம். அந்தக் காலத்துலே எல்லாம் மக்கள் தொகை ரொம்பவே குறைவு என்றதால் எல்லா இடங்களும் நல்லா சுத்தமாத்தான் இருந்துருக்கும். உள்ளூர் மக்கள் ஆத்துலே போய் குளிச்சுத் துவைச்சுன்னு இருந்த நாட்கள். காவிரித்தாயும் வற்றாத ஜீவநதியாக இருந்துருப்பாள்!
எப்படி இதுக்கு அம்மாமண்டபம் என்ற பெயர் வந்துருக்கும்? ஒரு வேளை அந்தக் காலத்துலேயே தீர்க்கதரிசனத்தில் கண்டுபிடிச்சுட்டாங்களோ! அம்மா பெயரில் எல்லாமே வரப்போகுதுன்னு......
என் சின்ன அறிவு சொல்லுது... இது காவிரிஅம்மனுக்காகக் கட்டுனது. அம்மன்மண்டபம்.! அது அப்படியே காலப்போக்கில் அம்மா மண்டபம் என்று ஆகி இருக்கலாம். (தெரிஞ்சவுங்க சொல்லுங்க)
கங்கையிலும் மேலான காவிரி என்பதால் பித்ரு பிண்டம் வைப்பது போன்ற முன்னோர்களுக்கான தனிப்பட்ட வழிபாடுகள் ஆரம்பிச்சு இப்போ அதுவே ப்ரதானமா நடந்துக்கிட்டு இருக்கு. இதுக்கான சம்ப்ரதாய சடங்குகளுக்கான கடைகளும் இங்கேயே இருக்கு! வந்தமா, வாங்குனமா, செஞ்சமா, போனமான்னு!
இதைத் தவிர புண்ணிய நதிகளில் ஸ்நானம் என்ற வகையில் யாத்ரிகர்கள் வந்து நதியில் முங்கிக் குளிச்சுட்டு, ரெங்கனை தரிசிக்கப்போறாங்க.
உள்ளூர்க்காரர்கள் அநேகமா வர்றதே இல்லைன்னுதான் தோணுது. இடத்தைப் பார்த்தாலே குமட்டும் விதமா அழுக்கோ அழுக்கு. சுத்தமா இருப்பது குப்பைத்தொட்டி மட்டும்தான்! யாருமே பயன்படுத்துவதில்லை:(
இதுலே தோஷ பரிகாரம் அது இதுன்னு குளிச்சு முடிச்சுட்டு, அதுவரை கட்டி இருந்த ஆடைகளை அவிழ்த்து அங்கேயே கடாசிட்டுப் போறாங்க, அதுக்குன்னு ஒரு கம்பித்தொட்டி இருந்தாலும் கூட . அவுங்க செஞ்ச பாவங்கள் எல்லாம் போயே போச் என்ற நம்பிக்கை! பாவங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் எல்லாம் தீர உடையைத் துறக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போல!
நம் ஆன்மாவுக்கு இந்த உடல்தான் உடை. உடல் அழிஞ்சால்தான் செய்த வினைகள் கர்மங்கள் எல்லாம் இந்த உடலுக்குத் தீரும் இல்லையா? ( என்ன இது? எனக்குள் துளஸியானந்தமயி நெசமாவே உருவாகிக்கிட்டு வர்றது போல இருக்கே !)
உள்ளே நுழைஞ்சதும் சின்னதா மண்டபம் ஒன்னு நடுவிலே இருக்கு. நம்ம நம்பெருமாள் விஸிட் வரும் காலங்களில் அவர் வந்து அமர்ந்து அருள் பாலிப்பார்.
மண்டபத்துக்கு அடுத்த பக்கம் போனால் கொஞ்ச தூரத்தில் காவிரி. ரெண்டு பக்கங்களில் சில சந்நிதிகள்.
அட! காவிரி தாயாருக்கு ஒரு சந்நிதி இருக்கு! மாலை 6.05 மணிக்கு காவேரி ஆரத்தி எடுக்கறாங்களாம்! (அஞ்சு நிமிசம் க்ரேஸ் டைம்!)
ஒரு பக்கம் தகரக்கொட்டாய் போட்டு அதில் வரிசையா இடங்களுக்கு நம்பர் எல்லாம் போட்டு தர்ப்பணம் செய்து வைக்கும் புரோகிதர்கள் உக்கார்ந்துருக்காங்க. 32 இடங்கள் இவுங்களுக்கு! மீதி இருக்கும் இடத்தில் சலூன் சுழல்நாற்காலி போட்டு மொட்டை அடிக்கும் நாவிதர்கள் வரிசை.
இந்த சேவைகளுக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கறாங்க. சீட்டு வாங்கிக்கிட்டு அதில் குறிப்புட்டுள்ள வாத்தியாரைத் தேடிப் போகணும் போல!
சித்தி விநாயகர் ஆலயம். புள்ளையார் சந்நிதிக்குப் பக்கத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு குட்டியா ஒரு சந்நிதி.
ஸ்ரீ விஷ்ணுதுர்கை
ஜனங்க பாதுகாப்பாக் குளிக்கக் கம்பித்தடுப்பு எல்லாம் போட்டு வச்சுருக்கு திருச்சி மாநகராட்சி. ஆனால் தண்ணியே இல்லாமல் அந்தப்பகுதி வெறும் சேறாக் கிடக்கு. மக்கள் எதைபற்றியும் கவலைப்படாமல் அந்தாண்டை போய் குளிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை காவிரியில் வெள்ளம் வந்தால் கம்பித்தடுப்புக்குள் பத்திரமாக் குளிக்கலாம்.
எதிர்க் கரையில் ரொம்பதூரத்துலே மலைக்கோட்டை தெரியுது. இங்கிருந்தே பார்த்துக் கும்பிட்டுக்கலாம்.
நதியைப் பார்த்திருக்கும் பக்கம் மண்டபத்தின் முகப்பில் பெருமாள் ஹாயாத் தாய்ச்சிண்டு இருக்கார்.
இத்தனைபேர் பயன்படுத்தும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்தால் தேவலை என்று மனசு அடிச்சுக்கிட்டது தப்பா?
அதிலும் மார்கழியில் நம்ம ஆண்டாள் இங்கே வந்து ரெங்கனுக்கு அபிஷேகநீர் தங்கக்குடத்தில் எடுத்துக்கிட்டுப் போவாளாமே!
வெளியே மண்டபத்துக்கு வரும் வழியிலும் டூவீலர்களும் த்ரீ வீலர்களும் எக்கச்சக்கமா நின்னுக்கிட்டு இருக்கு. இதுலே தெருமுழுக்க டென் தௌஸண்ட் வாலாக்கள் வெடிச்ச குப்பைகள் வேற. இந்தத் தெருவிலே சில கல்யாண மண்டபங்கள் இருக்கே. மாப்பிள்ளை அழைப்பு நடந்துருக்கு போல!
ஒரு அஞ்சாறு நிமிசம்தான் அங்கே இருந்தோம். வெளிவரும்வரை அடுத்து நடக்கப்போகும் பதிவர் சந்திப்பு பற்றி எங்களுக்கே தெரியாது!
தொடரும்..........:-)
========================================================================
![]()
திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வரும்போது காவிரிப்பாலம் கடந்து கொஞ்சதூரத்துலே லெஃப்ட் எடுத்தால் அது அம்மாமண்டபம் ரோடு.
காவிரியை ஒட்டியே போகும் இந்த சாலையில் ஒரு ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் லேசான ஒரு வளைவு வலதுபக்கம். மீண்டும் ஒன்னரை கிலோ மீட்டர்தான். நேரா ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போயிருது. இந்த வளைவில்தான் இருக்கு அம்மாமண்டபம்.
ஸ்ரீரங்கம் போகும்போது ரெங்கா ரெங்கான்னு ஒரே ஓட்டம் . திரும்பி வரும்போது நல்லா இருட்டிப் போயிரும். இப்பப் போய் எப்படின்னு இருந்துருவேன். இந்தமுறை வசமா நேரம் ஆப்டது.
காவிரி நதிக்குப்போகும் படித்துறைதான் இது. மண்டபம் கட்டி விட்டுருக்காங்க. ஒரு காலத்துலே திறந்த மண்டபமா இருந்த இதை, இப்போ இரும்புக்கேட் வேலி போட்டு ராத்திரிகளில் மூடி வச்சுடறாங்களாம். அந்தக் காலத்துலே எல்லாம் மக்கள் தொகை ரொம்பவே குறைவு என்றதால் எல்லா இடங்களும் நல்லா சுத்தமாத்தான் இருந்துருக்கும். உள்ளூர் மக்கள் ஆத்துலே போய் குளிச்சுத் துவைச்சுன்னு இருந்த நாட்கள். காவிரித்தாயும் வற்றாத ஜீவநதியாக இருந்துருப்பாள்!
எப்படி இதுக்கு அம்மாமண்டபம் என்ற பெயர் வந்துருக்கும்? ஒரு வேளை அந்தக் காலத்துலேயே தீர்க்கதரிசனத்தில் கண்டுபிடிச்சுட்டாங்களோ! அம்மா பெயரில் எல்லாமே வரப்போகுதுன்னு......
என் சின்ன அறிவு சொல்லுது... இது காவிரிஅம்மனுக்காகக் கட்டுனது. அம்மன்மண்டபம்.! அது அப்படியே காலப்போக்கில் அம்மா மண்டபம் என்று ஆகி இருக்கலாம். (தெரிஞ்சவுங்க சொல்லுங்க)
கங்கையிலும் மேலான காவிரி என்பதால் பித்ரு பிண்டம் வைப்பது போன்ற முன்னோர்களுக்கான தனிப்பட்ட வழிபாடுகள் ஆரம்பிச்சு இப்போ அதுவே ப்ரதானமா நடந்துக்கிட்டு இருக்கு. இதுக்கான சம்ப்ரதாய சடங்குகளுக்கான கடைகளும் இங்கேயே இருக்கு! வந்தமா, வாங்குனமா, செஞ்சமா, போனமான்னு!
இதைத் தவிர புண்ணிய நதிகளில் ஸ்நானம் என்ற வகையில் யாத்ரிகர்கள் வந்து நதியில் முங்கிக் குளிச்சுட்டு, ரெங்கனை தரிசிக்கப்போறாங்க.
உள்ளூர்க்காரர்கள் அநேகமா வர்றதே இல்லைன்னுதான் தோணுது. இடத்தைப் பார்த்தாலே குமட்டும் விதமா அழுக்கோ அழுக்கு. சுத்தமா இருப்பது குப்பைத்தொட்டி மட்டும்தான்! யாருமே பயன்படுத்துவதில்லை:(
இதுலே தோஷ பரிகாரம் அது இதுன்னு குளிச்சு முடிச்சுட்டு, அதுவரை கட்டி இருந்த ஆடைகளை அவிழ்த்து அங்கேயே கடாசிட்டுப் போறாங்க, அதுக்குன்னு ஒரு கம்பித்தொட்டி இருந்தாலும் கூட . அவுங்க செஞ்ச பாவங்கள் எல்லாம் போயே போச் என்ற நம்பிக்கை! பாவங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் எல்லாம் தீர உடையைத் துறக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போல!
நம் ஆன்மாவுக்கு இந்த உடல்தான் உடை. உடல் அழிஞ்சால்தான் செய்த வினைகள் கர்மங்கள் எல்லாம் இந்த உடலுக்குத் தீரும் இல்லையா? ( என்ன இது? எனக்குள் துளஸியானந்தமயி நெசமாவே உருவாகிக்கிட்டு வர்றது போல இருக்கே !)
உள்ளே நுழைஞ்சதும் சின்னதா மண்டபம் ஒன்னு நடுவிலே இருக்கு. நம்ம நம்பெருமாள் விஸிட் வரும் காலங்களில் அவர் வந்து அமர்ந்து அருள் பாலிப்பார்.
மண்டபத்துக்கு அடுத்த பக்கம் போனால் கொஞ்ச தூரத்தில் காவிரி. ரெண்டு பக்கங்களில் சில சந்நிதிகள்.
அட! காவிரி தாயாருக்கு ஒரு சந்நிதி இருக்கு! மாலை 6.05 மணிக்கு காவேரி ஆரத்தி எடுக்கறாங்களாம்! (அஞ்சு நிமிசம் க்ரேஸ் டைம்!)
ஒரு பக்கம் தகரக்கொட்டாய் போட்டு அதில் வரிசையா இடங்களுக்கு நம்பர் எல்லாம் போட்டு தர்ப்பணம் செய்து வைக்கும் புரோகிதர்கள் உக்கார்ந்துருக்காங்க. 32 இடங்கள் இவுங்களுக்கு! மீதி இருக்கும் இடத்தில் சலூன் சுழல்நாற்காலி போட்டு மொட்டை அடிக்கும் நாவிதர்கள் வரிசை.
இந்த சேவைகளுக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கறாங்க. சீட்டு வாங்கிக்கிட்டு அதில் குறிப்புட்டுள்ள வாத்தியாரைத் தேடிப் போகணும் போல!
சித்தி விநாயகர் ஆலயம். புள்ளையார் சந்நிதிக்குப் பக்கத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு குட்டியா ஒரு சந்நிதி.
ஸ்ரீ விஷ்ணுதுர்கை
ஜனங்க பாதுகாப்பாக் குளிக்கக் கம்பித்தடுப்பு எல்லாம் போட்டு வச்சுருக்கு திருச்சி மாநகராட்சி. ஆனால் தண்ணியே இல்லாமல் அந்தப்பகுதி வெறும் சேறாக் கிடக்கு. மக்கள் எதைபற்றியும் கவலைப்படாமல் அந்தாண்டை போய் குளிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை காவிரியில் வெள்ளம் வந்தால் கம்பித்தடுப்புக்குள் பத்திரமாக் குளிக்கலாம்.
எதிர்க் கரையில் ரொம்பதூரத்துலே மலைக்கோட்டை தெரியுது. இங்கிருந்தே பார்த்துக் கும்பிட்டுக்கலாம்.
நதியைப் பார்த்திருக்கும் பக்கம் மண்டபத்தின் முகப்பில் பெருமாள் ஹாயாத் தாய்ச்சிண்டு இருக்கார்.
இத்தனைபேர் பயன்படுத்தும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்தால் தேவலை என்று மனசு அடிச்சுக்கிட்டது தப்பா?
அதிலும் மார்கழியில் நம்ம ஆண்டாள் இங்கே வந்து ரெங்கனுக்கு அபிஷேகநீர் தங்கக்குடத்தில் எடுத்துக்கிட்டுப் போவாளாமே!
வெளியே மண்டபத்துக்கு வரும் வழியிலும் டூவீலர்களும் த்ரீ வீலர்களும் எக்கச்சக்கமா நின்னுக்கிட்டு இருக்கு. இதுலே தெருமுழுக்க டென் தௌஸண்ட் வாலாக்கள் வெடிச்ச குப்பைகள் வேற. இந்தத் தெருவிலே சில கல்யாண மண்டபங்கள் இருக்கே. மாப்பிள்ளை அழைப்பு நடந்துருக்கு போல!
ஒரு அஞ்சாறு நிமிசம்தான் அங்கே இருந்தோம். வெளிவரும்வரை அடுத்து நடக்கப்போகும் பதிவர் சந்திப்பு பற்றி எங்களுக்கே தெரியாது!
தொடரும்..........:-)
========================================================================
