பயணங்களில் ஒரு சௌகரியம் என்னன்னா.... காலையில் கண்ணைப்பிட்டுக்கும்போதே..... மூளையில் இன்றைக்கு என்ன சமைக்கணும் என்ற கவலை வர்றதே இல்லை. எழுந்தோமா, குளிச்சு ரெடி ஆனோமாதான். எப்பப் பார்த்தாலும் போன இடத்துக்கே ஏன் திரும்பத்திரும்பப் போறோமுன்னு கூட நினைச்சுக்குவேன். அதுக்கு பதிலும் கூடவே வந்துரும்...... இனி எப்போ இதெல்லாம் வாய்க்கப்போகுதோ..... இப்பக் கிடைக்கும்போது வுட்டுறக்கூடாது. பார்த்துக்கோ..... அதுவும் கோயில்ன்னா...... ஊஹூம்... இங்கே சான்ஸே இல்லை.....
சென்னைன்னாக் கூட கார் வேணும், இல்லே ஆட்டோ பிடிக்கணும் .... இந்தக் கவலை ஒன்னுமில்லாமல் காலாற நடந்தே கோவிலுக்குப் போகலாம். நடைபாதை என்பது நடக்க மட்டுமே! கண்டமாதிரி கூட்டமா வண்டிகள் மோதித் தள்ளறமாதிரி வராது. பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது தைரியமாக் கடந்து போகலாம். சாலைவிதிகளை எல்லோரும் கடைப்பிடிப்பதால் பிரச்சனையே இல்லை.
எதானாலும் முதலில் சீனுன்னு போனப்பக் கோவிலில் கூட்டமே இல்லை. புன்முறுவலுடன் சீனூஸ் இருவரும்:-) தரிசனம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்தல், வலம் வருதல், கூடவே க்ளிக்ஸ்ன்னு எல்லாமே ஆச்சு. அலுக்கவே அலுக்காத ருட்டீன்:-)
சாயந்திரம் கிளம்பும்போது வந்து சொல்லிக்க முடியுமான்னு தெரியலை. அதனால் இப்பவே டாடா, பைபை எல்லாம் பெருமாள் அண்ட் கோ வுக்குச் சொல்லிக்கிட்டு வெளியே வந்து சாலையைக்கடக்கும்போது நேத்து காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட இடம் நம்ம ராஜ்யலக்ஷ்மியோடது....ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மன் ரெஸ்ட்டாரண்டுன்னு தெரிஞ்சது. இன்றைக்கு லீவோ என்னவோ.... ஒருவேளை எட்டுமணிக்குத் திறக்கறாங்க போல..... ஆனால் ஒன்னு ராஜ்யலக்ஷ்மின்ற பெயரைப் பார்த்ததும் 'நம்ம ரஜ்ஜு எப்படி இருக்கோ.. குழந்தை'ன்னு மனசுக்குள் பரிதாபம் வரத்தான் செஞ்சது. ரஜ்ஜுவின் முழுப்பெயர் தெரியுமோ? ராஜலக்ஷ்மி !
மூடி இருக்கும் கடைகளின் முன் காலியா இருக்கு நடைபாதையில் கால்வீசி நடந்து போய் செராங்கூன் சாலையின் ஆரம்பத்துலே இருக்கும் கோமளவிலாஸ் போய்ச் சேர்ந்தோம். எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மனுக்கு இந்தாண்டை இருந்தே ஒரு கும்பிடு. "அம்மா.... எஞ்சினுக்குப் பெட்ரோல் போட்டுட்டு வரேன்...."
வடைகள் வாவான்னு கூப்பிட்டதே. அதே ரெண்டு இட்லி. ஆனா மசால்வடை, மெதுவடைன்னு ரெண்டு வாங்கி நமக்குள் பாகம் பிரிச்சுக்கிட்டோம். விலைவாசி இங்கேயும் ஏறிக்கிட்டே போகுது. அதே மெனுதானே..... வேற வேலை இல்லை போ.... பக்கத்துலே புது விலைகளை மட்டும் புதுப்பிச்சு இருக்காங்க. காஃபி ஆனதும்... வெயில் ஏறுமுன் வேணுகோபாலனைக் கண்டுக்கலாமான்னு தோணல். அப்படியே ஸிம்லிம் ஸ்கொயர் வழியா நீண்ட நடை போகலாமுன்னு மெயின் ரோடு வழியாப் போகாம கேம்பெல் லேன் வழியாப் போறோம். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு! கண்ணால் திங்கணுமே.....
தெருமுனையில் இருக்கும் காய்கறிக் கடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, காய்கறிகளைக் கண்ணால் தின்னு, நமக்கு இதெல்லாம் கிடைக்கலை பாருன்னு .... கொஞ்சம் பொறாமைப் பட்டுட்டு, போகட்டும். இவுங்களாவது நல்லா இருக்கட்டுமுன்னு பெருமாளை வேண்டிக்கிட்டே நடந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
ஹைய்யோ.... முருங்கைக்கீரை! இது நான். ஆஹா.... பாவக்காய் .... இது நம்மவர் :-)
பசுமாடும் கன்னுகளுமா நமக்காகக் காத்திருந்தாங்க:-) இப்படிப் பார்த்தால்தான் உண்டு.... தெருவில் குறுக்கே நெடுக்கே நடந்து போக இதுகளுக்கு ரைட் இல்லை ....
அடுத்துள்ள புஷ்பக்கடையில் எனக்கு ஒரு டாலருக்கு மல்லிப்பூ:-)
சுத்தமா இருக்கும் ஊரில் நடையின் அலுப்பு தெரியறதில்லை. நியூஸியும் சுத்தம்தான் ஆனால்.... எப்பப்பார்த்தாலும் ஒரு குளிர்.... ஸ்வெட்டரோ, ஜாக்கெட்டோ இல்லாம நடக்கக்கிடைக்கும் நாள் அபூர்வம். அதுவுமில்லாமல்.... வீட்டுக்கடமைகள் காலையில் நடக்க விடுதா என்ன? ஒன்னு மாத்தி ஒன்னு.....
மெயின்ரோடுலே போய்ச் சேர்ந்து... ஆல்பர்ட் கோர்ட் வழியா ஷார்ட் கட். .
வெளியே ட்ரிஷா அங்கிள் தனிப்பகுதி. டூரிஸ்ட் அட்ராக்ஷன்!
சீனர்களின் காசுக்கடவுள் Caishen சிலையில் மேடையைச் சுத்தி பனிரெண்டு சீன ராசிகளுக்கான பலன்கள் எழுதிவச்சுருக்காங்க. இப்பதானே அவுங்க புத்தாண்டு வந்துபோச்சு ஃபிப்ரவரி 8 (2016 இல்) நம்ம தை அமாவாசைதான் இவுங்களுக்கு புது வருசம், தெரியுமோ!
நம்ம குபேரன் சீனர்களுக்கு Caishen ! கேசவனைச் சுருக்கிக் கூப்புடறமாதிரி இருக்கே!
ஒவ்வொரு பனிரெண்டு வருசத்து இடைவெளியில் பிறந்த எல்லோருக்குமே ஒரே பலன்தான். குரங்கில் பிறந்தவங்க இப்படி இருப்பாங்களாம். எப்பவும் இப்படி என்றதால் அவ்வளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்:-)
ஆச்சு... வரப்போகும் புது வருச விழா அவுங்களுக்கு ஜனவரி 28 , 2017 ! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு......குரங்கிலிருந்து சேவலுக்குப் போறாங்க :-)
அடக்கடவுளே.... நம்ம பதிவு இந்தப் பயணத்துக்கானது வருசம் பூராவும் இழுத்துக்கிட்டுப் போயிருக்கே.... இதுக்கிடையில் இன்னொரு பயணமும் போயிட்டு வந்துருக்கோம். எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறேன்? நினைச்சாலே மலைப்பா இருக்கே!
சீன அம்மன் கோவிலும் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலும் அடுத்தடுத்து இருக்கு. இங்கேயும் அங்கேயுமாப் போய்க் கும்பிட்டுக்கிட்டோம். கோவில்களுக்கு வெளியே நிறைய ஊதுபத்திகளும் வச்சுருக்காங்க. நாமே எடுத்துப் பக்கத்தில் இருக்கும் விளக்கில் கொளுத்தி சாமிக்கு ஆராதனை செஞ்சுக்கலாம். இதுலே இந்தியர் சீனர்னு ஒரு பாகுபாடும் இல்லே.... அந்தக் கோவிலுக்குப் போறவங்க இந்தக் கோவிலுக்கும் வர்றாங்க. இங்கத்து சனம் அங்கெயும் போகுது!
தாய்லாந்துக்காரர்கள் தனியா ஒரு கூடாரத்தில் பிரம்மனுக்குக் கோவில் வச்சுட்டாங்க. பஞ்சமுகப் புள்ளையார் , எரவான் கோவில் ப்ரம்மான்னு சூப்பர்! பெரிய பிள்ளையாருக்குத் தங்க ரேக் வாங்கி ஒட்டிட்டுப்போகுது சனம். புத்தரும் ஒரு கையை உயர்த்தி ஒன்னுன்னு காமிச்சுக்கிட்டு இருக்கார். நாம் அபிஷேகம் செய்யும் வகையில் புள்ளையாரும், புத்தரும் பாத்டப்பில் நிக்கறாங்க. கரண்டியில் தண்ணீரை மொண்டு தலையில் அபிஷேகம் செய்யலாம்.
வெளியே சதுக்கத்தில் கோலாகலம்! என்ன விதவிதமான சாமான்கள்! அதிலும் பூச்செடிகள் விற்கும் கடைகள்தான் பிடிச்சு இழுக்குது. ஒன்னும் இங்கே நாட்டுக்குள் கொண்டு வரமுடியாதே.... கண்ணால் அனுபவிச்சதோடு சரி. என்னமோ புதுசா பழவகை ஒன்னு பார்த்தேன். எப்படி இருக்குமுன்னு தெரியாதே.... ப்ச். ஒன்னு வாங்கியிருக்கலாம். பெயர் என்னன்னுகூடக் கேட்டு வச்சுக்கலை. இப்ப கூகுளில் கேட்டால்.... வெஜிடபுள்னு சொல்லுச்சு :-)))))
அப்படியே நடந்து போய் பூகி ஜங்ஷன். மாலுக்குள் நுழைஞ்சு ஒரு சுத்து. சம்ப்ரதாயம் அனுசரிக்கலைன்னா... சாமி கண்ணைக் குத்திரும், ஆமா:-)
மெது நடையில் திரும்பி செராங்கூன் ரோடில் இருக்கும் கடைகளொன்னில் ஆளுக்கொரு இளநீர். சிங்கப்பூர் சூடு, பகல் நேரத்தில் உக்ரம்தான். ஹொட்டேலுக்கு வந்து சேரும்போது மணி பனிரெண்டரை. நமக்கு செக்கவுட் செஞ்சுக்க ஒரு மணி நேரம் கூடுதலாக் கொடுத்துருந்தாங்க.
கொஞ்சம் ப்ரெஷப் பண்ணி உடை மாற்றிக்கிட்டு எங்க கேபின் பைகளைக் கீழே கொடுத்துட்டு, ஒரு டாக்ஸி பிடிச்சோம். இது, இதுவரை நாம் போகாத இடம்!
தொடரும்........:-)
PIN குறிப்பு: 235 படங்களை ஜஸ்டிஃபை செய்யணுமுன்னா ஆல்பம் போட்டுத்தானே ஆகணும்! இதுதான் சுட்டி கொடுக்கலாமுன்னா... ஆல்பத்தையே இங்கே காமிக்குதே கூகுள்! உரிச்ச சாத்துக்குடி. அப்படியே திங்கலாம் :-)
![]()
சென்னைன்னாக் கூட கார் வேணும், இல்லே ஆட்டோ பிடிக்கணும் .... இந்தக் கவலை ஒன்னுமில்லாமல் காலாற நடந்தே கோவிலுக்குப் போகலாம். நடைபாதை என்பது நடக்க மட்டுமே! கண்டமாதிரி கூட்டமா வண்டிகள் மோதித் தள்ளறமாதிரி வராது. பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது தைரியமாக் கடந்து போகலாம். சாலைவிதிகளை எல்லோரும் கடைப்பிடிப்பதால் பிரச்சனையே இல்லை.
எதானாலும் முதலில் சீனுன்னு போனப்பக் கோவிலில் கூட்டமே இல்லை. புன்முறுவலுடன் சீனூஸ் இருவரும்:-) தரிசனம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்தல், வலம் வருதல், கூடவே க்ளிக்ஸ்ன்னு எல்லாமே ஆச்சு. அலுக்கவே அலுக்காத ருட்டீன்:-)
மூடி இருக்கும் கடைகளின் முன் காலியா இருக்கு நடைபாதையில் கால்வீசி நடந்து போய் செராங்கூன் சாலையின் ஆரம்பத்துலே இருக்கும் கோமளவிலாஸ் போய்ச் சேர்ந்தோம். எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மனுக்கு இந்தாண்டை இருந்தே ஒரு கும்பிடு. "அம்மா.... எஞ்சினுக்குப் பெட்ரோல் போட்டுட்டு வரேன்...."
வடைகள் வாவான்னு கூப்பிட்டதே. அதே ரெண்டு இட்லி. ஆனா மசால்வடை, மெதுவடைன்னு ரெண்டு வாங்கி நமக்குள் பாகம் பிரிச்சுக்கிட்டோம். விலைவாசி இங்கேயும் ஏறிக்கிட்டே போகுது. அதே மெனுதானே..... வேற வேலை இல்லை போ.... பக்கத்துலே புது விலைகளை மட்டும் புதுப்பிச்சு இருக்காங்க. காஃபி ஆனதும்... வெயில் ஏறுமுன் வேணுகோபாலனைக் கண்டுக்கலாமான்னு தோணல். அப்படியே ஸிம்லிம் ஸ்கொயர் வழியா நீண்ட நடை போகலாமுன்னு மெயின் ரோடு வழியாப் போகாம கேம்பெல் லேன் வழியாப் போறோம். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு! கண்ணால் திங்கணுமே.....
தெருமுனையில் இருக்கும் காய்கறிக் கடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, காய்கறிகளைக் கண்ணால் தின்னு, நமக்கு இதெல்லாம் கிடைக்கலை பாருன்னு .... கொஞ்சம் பொறாமைப் பட்டுட்டு, போகட்டும். இவுங்களாவது நல்லா இருக்கட்டுமுன்னு பெருமாளை வேண்டிக்கிட்டே நடந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
ஹைய்யோ.... முருங்கைக்கீரை! இது நான். ஆஹா.... பாவக்காய் .... இது நம்மவர் :-)
பசுமாடும் கன்னுகளுமா நமக்காகக் காத்திருந்தாங்க:-) இப்படிப் பார்த்தால்தான் உண்டு.... தெருவில் குறுக்கே நெடுக்கே நடந்து போக இதுகளுக்கு ரைட் இல்லை ....
அடுத்துள்ள புஷ்பக்கடையில் எனக்கு ஒரு டாலருக்கு மல்லிப்பூ:-)
சுத்தமா இருக்கும் ஊரில் நடையின் அலுப்பு தெரியறதில்லை. நியூஸியும் சுத்தம்தான் ஆனால்.... எப்பப்பார்த்தாலும் ஒரு குளிர்.... ஸ்வெட்டரோ, ஜாக்கெட்டோ இல்லாம நடக்கக்கிடைக்கும் நாள் அபூர்வம். அதுவுமில்லாமல்.... வீட்டுக்கடமைகள் காலையில் நடக்க விடுதா என்ன? ஒன்னு மாத்தி ஒன்னு.....
மெயின்ரோடுலே போய்ச் சேர்ந்து... ஆல்பர்ட் கோர்ட் வழியா ஷார்ட் கட். .
வெளியே ட்ரிஷா அங்கிள் தனிப்பகுதி. டூரிஸ்ட் அட்ராக்ஷன்!
சீனர்களின் காசுக்கடவுள் Caishen சிலையில் மேடையைச் சுத்தி பனிரெண்டு சீன ராசிகளுக்கான பலன்கள் எழுதிவச்சுருக்காங்க. இப்பதானே அவுங்க புத்தாண்டு வந்துபோச்சு ஃபிப்ரவரி 8 (2016 இல்) நம்ம தை அமாவாசைதான் இவுங்களுக்கு புது வருசம், தெரியுமோ!
நம்ம குபேரன் சீனர்களுக்கு Caishen ! கேசவனைச் சுருக்கிக் கூப்புடறமாதிரி இருக்கே!
ஒவ்வொரு பனிரெண்டு வருசத்து இடைவெளியில் பிறந்த எல்லோருக்குமே ஒரே பலன்தான். குரங்கில் பிறந்தவங்க இப்படி இருப்பாங்களாம். எப்பவும் இப்படி என்றதால் அவ்வளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்:-)
ஆச்சு... வரப்போகும் புது வருச விழா அவுங்களுக்கு ஜனவரி 28 , 2017 ! இன்னும் மூணு வாரம்தான் இருக்கு......குரங்கிலிருந்து சேவலுக்குப் போறாங்க :-)
அடக்கடவுளே.... நம்ம பதிவு இந்தப் பயணத்துக்கானது வருசம் பூராவும் இழுத்துக்கிட்டுப் போயிருக்கே.... இதுக்கிடையில் இன்னொரு பயணமும் போயிட்டு வந்துருக்கோம். எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறேன்? நினைச்சாலே மலைப்பா இருக்கே!
சீன அம்மன் கோவிலும் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலும் அடுத்தடுத்து இருக்கு. இங்கேயும் அங்கேயுமாப் போய்க் கும்பிட்டுக்கிட்டோம். கோவில்களுக்கு வெளியே நிறைய ஊதுபத்திகளும் வச்சுருக்காங்க. நாமே எடுத்துப் பக்கத்தில் இருக்கும் விளக்கில் கொளுத்தி சாமிக்கு ஆராதனை செஞ்சுக்கலாம். இதுலே இந்தியர் சீனர்னு ஒரு பாகுபாடும் இல்லே.... அந்தக் கோவிலுக்குப் போறவங்க இந்தக் கோவிலுக்கும் வர்றாங்க. இங்கத்து சனம் அங்கெயும் போகுது!
தாய்லாந்துக்காரர்கள் தனியா ஒரு கூடாரத்தில் பிரம்மனுக்குக் கோவில் வச்சுட்டாங்க. பஞ்சமுகப் புள்ளையார் , எரவான் கோவில் ப்ரம்மான்னு சூப்பர்! பெரிய பிள்ளையாருக்குத் தங்க ரேக் வாங்கி ஒட்டிட்டுப்போகுது சனம். புத்தரும் ஒரு கையை உயர்த்தி ஒன்னுன்னு காமிச்சுக்கிட்டு இருக்கார். நாம் அபிஷேகம் செய்யும் வகையில் புள்ளையாரும், புத்தரும் பாத்டப்பில் நிக்கறாங்க. கரண்டியில் தண்ணீரை மொண்டு தலையில் அபிஷேகம் செய்யலாம்.
வெளியே சதுக்கத்தில் கோலாகலம்! என்ன விதவிதமான சாமான்கள்! அதிலும் பூச்செடிகள் விற்கும் கடைகள்தான் பிடிச்சு இழுக்குது. ஒன்னும் இங்கே நாட்டுக்குள் கொண்டு வரமுடியாதே.... கண்ணால் அனுபவிச்சதோடு சரி. என்னமோ புதுசா பழவகை ஒன்னு பார்த்தேன். எப்படி இருக்குமுன்னு தெரியாதே.... ப்ச். ஒன்னு வாங்கியிருக்கலாம். பெயர் என்னன்னுகூடக் கேட்டு வச்சுக்கலை. இப்ப கூகுளில் கேட்டால்.... வெஜிடபுள்னு சொல்லுச்சு :-)))))
அப்படியே நடந்து போய் பூகி ஜங்ஷன். மாலுக்குள் நுழைஞ்சு ஒரு சுத்து. சம்ப்ரதாயம் அனுசரிக்கலைன்னா... சாமி கண்ணைக் குத்திரும், ஆமா:-)
மெது நடையில் திரும்பி செராங்கூன் ரோடில் இருக்கும் கடைகளொன்னில் ஆளுக்கொரு இளநீர். சிங்கப்பூர் சூடு, பகல் நேரத்தில் உக்ரம்தான். ஹொட்டேலுக்கு வந்து சேரும்போது மணி பனிரெண்டரை. நமக்கு செக்கவுட் செஞ்சுக்க ஒரு மணி நேரம் கூடுதலாக் கொடுத்துருந்தாங்க.
கொஞ்சம் ப்ரெஷப் பண்ணி உடை மாற்றிக்கிட்டு எங்க கேபின் பைகளைக் கீழே கொடுத்துட்டு, ஒரு டாக்ஸி பிடிச்சோம். இது, இதுவரை நாம் போகாத இடம்!
தொடரும்........:-)
PIN குறிப்பு: 235 படங்களை ஜஸ்டிஃபை செய்யணுமுன்னா ஆல்பம் போட்டுத்தானே ஆகணும்! இதுதான் சுட்டி கொடுக்கலாமுன்னா... ஆல்பத்தையே இங்கே காமிக்குதே கூகுள்! உரிச்ச சாத்துக்குடி. அப்படியே திங்கலாம் :-)
