அங்கே இங்கேன்னு விசாரிச்சுப்போயும் கூட ஐயப்பனைக் காணோம்.... கண்டுபிடிக்க முடியலை. யாரோ கை காட்டுன திசையில் போய்க்கிட்டு இருக்கும்போது பெரிய கலசம் ஒன்னு கண்ணில் பட்டது. இது புதுசு. இதே ரோடில் போன பயணத்தில் வந்துருக்கோம். அப்ப இதைப்போல ஒன்னு இல்லவே இல்லை. அடிச்சுச் சொன்னேன்!
கண்ணில் படாமப் போக ச்சான்ஸே இல்லை! அப்படி பெரூசு..... அதைக் கடந்து வண்டி போன விநாடியில் உள்ளே பெருமாள். ருக் ருக் தான். முகேஷ் ருக்கோ....
அப்புறம் போன பயணப்படங்களைத் தேடுனதில் அப்ப இந்த வாசல் வேற டிஸைனில் இருந்துருக்குன்னு தெரிஞ்சுருச்சு.... அப்பாடா நிம்மதி. ஆனா அப்போ இதுக்குள்ளே நாம் போய்ப் பார்க்கலை :-) படம்: மேலே உள்ளது பழையது!
இறங்கிப்போய்ப் பார்த்தால் கலசம் டிஸைனில் வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சு போனால் பெருமாள் ஒய்யாரமா (உத்தான சயன போஸ்?)பாற்கடலில் படுத்திருக்க, தாயார் ஸ்டைலா சாய்ஞ்சு காலை அமுக்கி விடறாங்க. நாபிக் கமலத்தில் ப்ரம்மா! கொள்ளை அழகு!
அப்படியே தலையைத் தூக்கிப் பார்த்தால்.... பாய்ந்து இறங்கும் கங்கையைத் தலையில் தாங்கும் சிவன், பார்வதி, பகீரதன் இப்படி. ஆனால் அந்த ரிஷபம்தான் சூப்பர். என்னமா தலையைத் தூக்கி ப் பார்க்குது பாருங்க!
இடது வலது பக்கங்களில் அசுரனோடு போர் புரியும் சிம்ம வாஹினி, தக்ஷயாகத்தில் இறந்துபோன மனைவி சதியைத் தூக்கிட்டு கோபத்தோடு இருக்கும் சிவன் .... (மொத்தமும் ஒரே ஃப்ரேமுக்குள்ளே அடங்காது!)
இதையெல்லாம் க்ளிக்கினதோடு வெளியே வந்துருக்கலாம்.... ஆனால்....
பக்கத்துலே இருந்த ஹாலுக்குள் போனால்... அதுதான் பூமா நிகேதன் ஆஷ்ரம் ஆஃபீஸ். இருவது ரூபாய் கட்டணம் உள்ளே போய் பார்க்க. பெருமாளின் அழகில் மயங்கிப்போய் கொஞ்சம் கூடுதலா ஒரு டொனேஷன் கொடுத்துட்டு அவர் சொன்ன வழிக்குள் நுழைஞ்சோம்!
மாடியேறிப்போனதும் அங்கே ஒரு குகைக்குள் பயணம் ! உள்ளே நுழைஞ்சால் ஒன்வே மாதிரிதான்....
கோவிலுன்னு சொன்னாலும்.... இது சம்ப்ரதாயக் கோவிலாட்டமில்லை. ஆனா சின்னப்புள்ளைகளைக் கூட்டி வந்து கட்டாயம் காமிக்க வேண்டிய இடம்தான். பசங்க்ளுக்கும் போரடிக்காது. புராண கதைகளையெல்லாம் ஸீன் காட்டி விளக்குனா சட்னு புரிஞ்சுக்குவாங்க. சின்ன வயசுலே காதுலே, கண்ணுலே விழுந்ததெல்லாம் கல்லில் பொறிச்சாப்ல. மூளை மடிப்புலே போயிருச்சுன்னா, அழியாம அதுபாட்டுக்குக் கிடக்கும் ஒரு பக்கம்:-)
சாமி சந்நிதிகளை விட்டுட்டு, மற்ற 'கதை'சொல்லும்சித்திரங்கள் எல்லாம் ஜெயிலுக்குள்ளே :-( இதனால் க்ளிக்கிய படங்களும் தெளிவாக இல்லை:-(
கிருஷ்ணரின், ராமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் அதிகம்.
குகன் குடும்பத்தோடு ராமரை வணங்குவதும், கம்ஸன் எட்டாவது குழந்தையைக் கொல்லும்போது கல்காதேவி தோன்றுவதும் கூட நல்லாவே புரிஞ்சது.
இடைக்கு இடையே பிள்ளையார், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண், கருடர், சந்தோஷி மாதா, காளி, க்ருஷ்ணா, காலபைரவர், பாதரஸ லிங்கம், ஸித்தேஷ்வர் மஹாதேவ், பக்தவத்ஸலா மா துர்கா தேவி, இப்படி சாமிச் சந்நிதிகளும் இருக்கு.
மாதா ராஜராஜேஸ்வரி த்ரிபுரசுந்தரி, ஸ்படிகலிங்கம் சந்நிதிகளுக்கு விசேஷ கவனிப்பும் அலங்காரமும்!
ஒரு இடத்தில் பண்டிட் ஒருத்தர் பிரஸாதத் தட்டோடு உக்கார்ந்துருக்கார். நம்மவர் குனிஞ்சு பத்து ரூபாயை தக்ஷிணையாக பக்கத்தில் இருந்த தட்டில் போட்டதும், நாங்க எதிர்பாராத விதமாக, அரைக்கால் நொடியில் மடியில் இருந்து எடுத்த ஒரு தண்டத்தால் போட்டாரே ஒரு போடு... நம்மவர் முதுகில்!
க்ளிக்க மறந்துபோய் நின்ன என்னிடத்தில் தக்ஷிணைத் தட்டைக் கையால் காமிச்சார். நான் நின்னவாக்கிலேயே கும்பிடு போட்டுட்டு நகர்ந்துட்டேன். அடி வாங்கிக்கிட்டு முன்னாலே போனவரைப் பார்த்தாக் கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சு. .....
பாருங்க, எனக்கும் அடி விழுதான்னு பார்த்துக்கிட்டு நிக்கறதை :-)
இந்த அடி....யால் நம்முடைய கெட்ட காலங்கள் எல்லாம் போயே போச்ன்னு ஒரு நம்பிக்கையாம். வலிச்சதான்னு நம்மவரிடம் கேட்டேன். வெறும் பஞ்சு மூட்டை தண்டம்தான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் 'தட்'னு முதுகில் பட்டதும் கொஞ்சம் திக் னு ஆகிடுச்சுன்னார். எனக்கும்தான்... 'தட்'டுக்கும் 'திக்'குக்கும் சரியாப் போயிருச்சு :-)
அப்ப அங்கே வேற பக்தர்கள் இருந்துருந்தால் என்ன நடக்குதுன்னு புரிஞ்சுருக்கும். நாமும் கொஞ்சம் உஷாரா இருந்துருப்போம் :-) அங்கங்கே மூட்டை தண்டம் வச்சுருக்காங்க :-) இங்கே பண்டிட் இலை :-) இருந்துருந்தாலும்....
இந்த பூமா நிகேதன் ஆஷ்ரம் ஸ்வாமி அச்யுதானந்த் தீர்த் என்றவரால் ஆரம்பிக்கப்பட்டு இப்ப ஏகத்துக்கும் வளர்ந்து இருக்கு!
2009 வது வருசம் ஒரு பெரிய ஆஸ்பத்ரி கட்டி இருக்காங்க. ஏழை எளியவர்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைதான்.
இப்பெல்லாம் ஆஷ்ரமங்கள் மாடர்னா செயல்படறதால் வெப்சைட், ஃபேஸ்புக் எல்லாம் கூட இவுங்க சேவைகளைச் சொல்லிக்கிட்டு இருக்கு.
இந்த சாமியார்களிடம் எனக்குப் பிடிக்காத ஒன்னு சாமி சிலைகளில் சாமிக்குப் பதிலா தங்கள் முகத்தை வச்சுக்கறது,. .. பக்தர்கள் விருப்பப்பட்டாங்கன்னு சொல்லிருவாங்க. அவுங்க ஆயிரம் விருப்பப்படட்டுமே..... சாமி சாமிதான். நான் ஆசாமி. அந்த சாமியின் செய்தியைச் சொல்ல வந்தவன்னு வாயைத் திறந்து சொல்லக்கூடாதா?
இதுலே இன்னொரு சாமியார் ரொம்பவே வயசானவர், தலையில் க்ரீடம் வச்சுக்கிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்குப் போஸ் கொடுக்கறார். க்ருஷ்ணனைக் கிழவனாப் பார்க்க எனக்குச் சகிக்கலை போங்க.... இங்கே இல்லை ... வேறொரு தோழியின் குரு அவர். என்னவோ போங்க...... எல்லாத்தையும் துறந்துதானே சந்நியாசம் வாங்கிக்கறாங்க.... அப்புறம் என்னத்துக்கு இந்த வேஷக்கெட்டெல்லாம்....
இப்பவே மணி ஒன்னரையாகப்போகுது. இனியும் ஐயப்பனைத் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு நாங்க ரிஷிகேஷுக்கு மெயின்ரோடு வழியாவே வந்துட்டோம். நம்ம ஷுப் யாத்ரா ட்ராவல் ஆஃபீஸ் கிட்டே வந்ததும், மறுநாள் பயணத்துக்கான ஐட்டினரியை வாங்கிக்கலாமுன்னு அங்கே போனால்... ட்ராவல் கம்பெனி ஓனர் நவீனுடன், அவர் மனைவியும் மகனும் இருந்தாங்க.
ஐயப்பன் கோவில் தேடிக் கிடைக்கலைன்னு சொன்னதும், நவீனின் மனைவி மாயா, ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம் இருக்குன்னு சொன்னதுதான் ஜோர்! மாயா கொல்லத்து ஆளாக்கும், கேட்டோ! இத்திரி மலையாளத்துலே ஸம்சாரிச்சு, ஞெங்கள் இப்போ பந்துக்களாயி :-)
மகனுக்கு நாளைக்குப் பொறந்தநாளாம். வாழ்த்திட்டுப் போன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்பும்போது, 'மத்ராஸ் ஹொட்டலில் நம்மட ஊணு கிட்டும்'னு உபரித்தகவல். ஹே.... அதொக்க இந்நளெதன்னே கண்டு வச்சுட்டுண்டல்லோ :-)
நேராப் போனது மெட்ராஸ் ஹொட்டேலுக்குத்தான். தாலி மீல்ஸ் சொல்லிட்டுக் கொஞ்சம் காத்திருந்தோம். முகேஷ் வேறெங்கியோ சாப்பிட்டு வரேன்னுட்டுப் போனார்.
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கங்காவியூவுக்கு வந்துட்டோம். மூணு மணி வெயில். கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாயங்காலம் ரிஷிகேஷை இன்னொரு ரவுண்டு வரலாம். ஓக்கே...
PINகுறிப்பு: மங்கள் கலஷில் எடுத்த படங்களை முக்கியமா சாமிகளை தனி ஆல்பத்தில்போட்டு வச்சுருக்கேன். விருப்பமிருப்பவர்கள் பாருங்க.
தொடரும்.... :-)
![]()
கண்ணில் படாமப் போக ச்சான்ஸே இல்லை! அப்படி பெரூசு..... அதைக் கடந்து வண்டி போன விநாடியில் உள்ளே பெருமாள். ருக் ருக் தான். முகேஷ் ருக்கோ....
அப்புறம் போன பயணப்படங்களைத் தேடுனதில் அப்ப இந்த வாசல் வேற டிஸைனில் இருந்துருக்குன்னு தெரிஞ்சுருச்சு.... அப்பாடா நிம்மதி. ஆனா அப்போ இதுக்குள்ளே நாம் போய்ப் பார்க்கலை :-) படம்: மேலே உள்ளது பழையது!
இறங்கிப்போய்ப் பார்த்தால் கலசம் டிஸைனில் வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சு போனால் பெருமாள் ஒய்யாரமா (உத்தான சயன போஸ்?)பாற்கடலில் படுத்திருக்க, தாயார் ஸ்டைலா சாய்ஞ்சு காலை அமுக்கி விடறாங்க. நாபிக் கமலத்தில் ப்ரம்மா! கொள்ளை அழகு!
அப்படியே தலையைத் தூக்கிப் பார்த்தால்.... பாய்ந்து இறங்கும் கங்கையைத் தலையில் தாங்கும் சிவன், பார்வதி, பகீரதன் இப்படி. ஆனால் அந்த ரிஷபம்தான் சூப்பர். என்னமா தலையைத் தூக்கி ப் பார்க்குது பாருங்க!
இடது வலது பக்கங்களில் அசுரனோடு போர் புரியும் சிம்ம வாஹினி, தக்ஷயாகத்தில் இறந்துபோன மனைவி சதியைத் தூக்கிட்டு கோபத்தோடு இருக்கும் சிவன் .... (மொத்தமும் ஒரே ஃப்ரேமுக்குள்ளே அடங்காது!)
இதையெல்லாம் க்ளிக்கினதோடு வெளியே வந்துருக்கலாம்.... ஆனால்....
பக்கத்துலே இருந்த ஹாலுக்குள் போனால்... அதுதான் பூமா நிகேதன் ஆஷ்ரம் ஆஃபீஸ். இருவது ரூபாய் கட்டணம் உள்ளே போய் பார்க்க. பெருமாளின் அழகில் மயங்கிப்போய் கொஞ்சம் கூடுதலா ஒரு டொனேஷன் கொடுத்துட்டு அவர் சொன்ன வழிக்குள் நுழைஞ்சோம்!
மாடியேறிப்போனதும் அங்கே ஒரு குகைக்குள் பயணம் ! உள்ளே நுழைஞ்சால் ஒன்வே மாதிரிதான்....
கோவிலுன்னு சொன்னாலும்.... இது சம்ப்ரதாயக் கோவிலாட்டமில்லை. ஆனா சின்னப்புள்ளைகளைக் கூட்டி வந்து கட்டாயம் காமிக்க வேண்டிய இடம்தான். பசங்க்ளுக்கும் போரடிக்காது. புராண கதைகளையெல்லாம் ஸீன் காட்டி விளக்குனா சட்னு புரிஞ்சுக்குவாங்க. சின்ன வயசுலே காதுலே, கண்ணுலே விழுந்ததெல்லாம் கல்லில் பொறிச்சாப்ல. மூளை மடிப்புலே போயிருச்சுன்னா, அழியாம அதுபாட்டுக்குக் கிடக்கும் ஒரு பக்கம்:-)
சாமி சந்நிதிகளை விட்டுட்டு, மற்ற 'கதை'சொல்லும்சித்திரங்கள் எல்லாம் ஜெயிலுக்குள்ளே :-( இதனால் க்ளிக்கிய படங்களும் தெளிவாக இல்லை:-(
கிருஷ்ணரின், ராமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் அதிகம்.
குகன் குடும்பத்தோடு ராமரை வணங்குவதும், கம்ஸன் எட்டாவது குழந்தையைக் கொல்லும்போது கல்காதேவி தோன்றுவதும் கூட நல்லாவே புரிஞ்சது.
மாதா ராஜராஜேஸ்வரி த்ரிபுரசுந்தரி, ஸ்படிகலிங்கம் சந்நிதிகளுக்கு விசேஷ கவனிப்பும் அலங்காரமும்!
ஒரு இடத்தில் பண்டிட் ஒருத்தர் பிரஸாதத் தட்டோடு உக்கார்ந்துருக்கார். நம்மவர் குனிஞ்சு பத்து ரூபாயை தக்ஷிணையாக பக்கத்தில் இருந்த தட்டில் போட்டதும், நாங்க எதிர்பாராத விதமாக, அரைக்கால் நொடியில் மடியில் இருந்து எடுத்த ஒரு தண்டத்தால் போட்டாரே ஒரு போடு... நம்மவர் முதுகில்!
க்ளிக்க மறந்துபோய் நின்ன என்னிடத்தில் தக்ஷிணைத் தட்டைக் கையால் காமிச்சார். நான் நின்னவாக்கிலேயே கும்பிடு போட்டுட்டு நகர்ந்துட்டேன். அடி வாங்கிக்கிட்டு முன்னாலே போனவரைப் பார்த்தாக் கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சு. .....
பாருங்க, எனக்கும் அடி விழுதான்னு பார்த்துக்கிட்டு நிக்கறதை :-)
இந்த அடி....யால் நம்முடைய கெட்ட காலங்கள் எல்லாம் போயே போச்ன்னு ஒரு நம்பிக்கையாம். வலிச்சதான்னு நம்மவரிடம் கேட்டேன். வெறும் பஞ்சு மூட்டை தண்டம்தான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் 'தட்'னு முதுகில் பட்டதும் கொஞ்சம் திக் னு ஆகிடுச்சுன்னார். எனக்கும்தான்... 'தட்'டுக்கும் 'திக்'குக்கும் சரியாப் போயிருச்சு :-)
அப்ப அங்கே வேற பக்தர்கள் இருந்துருந்தால் என்ன நடக்குதுன்னு புரிஞ்சுருக்கும். நாமும் கொஞ்சம் உஷாரா இருந்துருப்போம் :-) அங்கங்கே மூட்டை தண்டம் வச்சுருக்காங்க :-) இங்கே பண்டிட் இலை :-) இருந்துருந்தாலும்....
இந்த பூமா நிகேதன் ஆஷ்ரம் ஸ்வாமி அச்யுதானந்த் தீர்த் என்றவரால் ஆரம்பிக்கப்பட்டு இப்ப ஏகத்துக்கும் வளர்ந்து இருக்கு!
2009 வது வருசம் ஒரு பெரிய ஆஸ்பத்ரி கட்டி இருக்காங்க. ஏழை எளியவர்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைதான்.
இப்பெல்லாம் ஆஷ்ரமங்கள் மாடர்னா செயல்படறதால் வெப்சைட், ஃபேஸ்புக் எல்லாம் கூட இவுங்க சேவைகளைச் சொல்லிக்கிட்டு இருக்கு.
இந்த சாமியார்களிடம் எனக்குப் பிடிக்காத ஒன்னு சாமி சிலைகளில் சாமிக்குப் பதிலா தங்கள் முகத்தை வச்சுக்கறது,. .. பக்தர்கள் விருப்பப்பட்டாங்கன்னு சொல்லிருவாங்க. அவுங்க ஆயிரம் விருப்பப்படட்டுமே..... சாமி சாமிதான். நான் ஆசாமி. அந்த சாமியின் செய்தியைச் சொல்ல வந்தவன்னு வாயைத் திறந்து சொல்லக்கூடாதா?
இதுலே இன்னொரு சாமியார் ரொம்பவே வயசானவர், தலையில் க்ரீடம் வச்சுக்கிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்குப் போஸ் கொடுக்கறார். க்ருஷ்ணனைக் கிழவனாப் பார்க்க எனக்குச் சகிக்கலை போங்க.... இங்கே இல்லை ... வேறொரு தோழியின் குரு அவர். என்னவோ போங்க...... எல்லாத்தையும் துறந்துதானே சந்நியாசம் வாங்கிக்கறாங்க.... அப்புறம் என்னத்துக்கு இந்த வேஷக்கெட்டெல்லாம்....
இப்பவே மணி ஒன்னரையாகப்போகுது. இனியும் ஐயப்பனைத் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு நாங்க ரிஷிகேஷுக்கு மெயின்ரோடு வழியாவே வந்துட்டோம். நம்ம ஷுப் யாத்ரா ட்ராவல் ஆஃபீஸ் கிட்டே வந்ததும், மறுநாள் பயணத்துக்கான ஐட்டினரியை வாங்கிக்கலாமுன்னு அங்கே போனால்... ட்ராவல் கம்பெனி ஓனர் நவீனுடன், அவர் மனைவியும் மகனும் இருந்தாங்க.
ஐயப்பன் கோவில் தேடிக் கிடைக்கலைன்னு சொன்னதும், நவீனின் மனைவி மாயா, ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம் இருக்குன்னு சொன்னதுதான் ஜோர்! மாயா கொல்லத்து ஆளாக்கும், கேட்டோ! இத்திரி மலையாளத்துலே ஸம்சாரிச்சு, ஞெங்கள் இப்போ பந்துக்களாயி :-)
மகனுக்கு நாளைக்குப் பொறந்தநாளாம். வாழ்த்திட்டுப் போன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்பும்போது, 'மத்ராஸ் ஹொட்டலில் நம்மட ஊணு கிட்டும்'னு உபரித்தகவல். ஹே.... அதொக்க இந்நளெதன்னே கண்டு வச்சுட்டுண்டல்லோ :-)
நேராப் போனது மெட்ராஸ் ஹொட்டேலுக்குத்தான். தாலி மீல்ஸ் சொல்லிட்டுக் கொஞ்சம் காத்திருந்தோம். முகேஷ் வேறெங்கியோ சாப்பிட்டு வரேன்னுட்டுப் போனார்.
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கங்காவியூவுக்கு வந்துட்டோம். மூணு மணி வெயில். கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாயங்காலம் ரிஷிகேஷை இன்னொரு ரவுண்டு வரலாம். ஓக்கே...
PINகுறிப்பு: மங்கள் கலஷில் எடுத்த படங்களை முக்கியமா சாமிகளை தனி ஆல்பத்தில்போட்டு வச்சுருக்கேன். விருப்பமிருப்பவர்கள் பாருங்க.
தொடரும்.... :-)
